மின்கட்டண உயர்வு குறித்த சர்ச்சைகள் மின்சாரத்துறை தனியார் மயம் குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது. தற்போதைய கட்டண உயர்விற்கே திணறும் நாம் இதைவிடப் பெரிய அதிர்ச்சிகளும், சுனாமி போல் நம்மைத் தாக்கக் காத்திருக்கும் பன்மடங்கு மின்கட்டண உயர்வு அபாயங்களும் ‘மின்சார சீர்திருத்தம்’ என்ற பெயரில் வந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துள்ளோமா?. இந்த அபாயம் குறித்தும் அதுகுறித்த அனுபவங்கள் குறித்தும் சிந்திக்க இந்தக் கட்டுரை அழைக்கிறது.
சமீபகாலமாக உலகமெங்கிலும், குறிப்பாக ஐரோப்பாவில் மின்சாரக் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் கடந்த ஒரு வரு டத்தில் மின்சாரக் கட்டணம் 2 மடங்கும், கடந்த இரண்டு வருடங்களில் 10 மடங்கும் உயர்ந்துள் ளது. உக்ரைன்-ரஷ்யா போர் விளைவாக ஏற்பட்ட எரிவாயுத் தட்டுப்பாடும், அதன் காரணமாக எரிபொருள் விலையும் பன்மடங்கு உயர்ந்தன. இதன் காரணமாகவே ஐரோப்பிய நாடுகள் பல வற்றில் கடும் மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், நான்கு மடங்கு மின்சாரக் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள ஜெர்மனியில், மின்சாரம் வெறும் ஏழில் ஒரு பங்கு மட்டுமே எரிவாயுவின் மூலம் பெறப்படுகிறது என்பது செய்தி. அதே போல் மின்சார உற்பத்திக்கு எரிவாயுவை சிறு பகுதியையே பயன்படுத்தும் இங்கிலாந்திலும் மின்சாரக் கட்டணம் பல மடங்கு உயர்த் தப்பட்டுள்ளது.ஏற்கனவே ஐரோப்பாவில் மின்சா ரக் கட்டணம் வீட்டு செலவில் 20-30 சதவீதத்தை தொட்டு விட்டது. எனவே, உக்ரைன் - ரஷ்ய போரைக் காரணம் காட்டி பன்மடங்கு மின்கட்ட ணத்தை உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதிப் பது யார்? மக்களையும் தொழிலையும் பொருளா தாரத்தையும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும் இந்த மின்கட்டண உயர்வைத் தடுக்க அரசு ஏன் தலையீடு செய்ய முடியவில்லை? இதற்கான பொருளாதா ரக் காரணங்கள் என்ன என்பன முக்கியக் கேள்விகள்.
மின்சார சீர்திருத்தம்
மின்கட்டண உயர்வு, மக்களின் துயரம், அரசின் பாராமுகம் போன்றவற்றிற்கான அடிப்ப டைக் காரணம் முப்பது வருடமாக ஐரோப்பாவின் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்சாரத்துறை சீர்திருத்த நடவடிக்கைளே ஆகும். இந்தச் சீர்திருத்தங்கள் அனைத்தும் மின்துறையில் தனியார்மயத்தையும், சந்தைப்படுத்துதலையும் வற்புறுத்தும் நவீன தாராளமயக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. இந்த மின்சாரச் சந்தை சீர்திருத்தத்தின்படி மின்சார உற்பத்தி, மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கிரிட்டுகள், பயனீட்டாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் பகிர்மான நிறுவனங்கள், மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கும் முறை என அனைத்தும் படிப்படியாக தனியார் (சந்தை) மயமாக்கப்படுகின்றன. இந்த மின்சாரச் சந்தையில் மின்சாரத்தின் கட்டணம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் சந்தையின் தேவைக்கேற்ப ஏலத்தில் நிர்ணயிக்கப்படும். இதை இறுதிநிலைப் பயன்பாட்டு விலை அல்லது இறுதிநிலை முறை என்று கூறுகின்றனர். இத்தகையதொரு முறையை முதலில் சோதனை செய்தது, சிலி நாட்டின் சர்வாதிகாரி பினோசெட் தலைமையிலான அரசு தான் என்பது வரலாறு. பினோசெட்டின் பொருளாதார குரு, இன்றைய நவீன தாராளமய பொருளாதாரச் சீர்திருத்தங்க ளின் தந்தை என அழைக்கப்படும் மில்டன் ஃப்ரீட்மன் (Milton Friedman) ஆவார். ஒரு வகையில் கூறுவது என்றால் இன்றைய அதிதீவிர சந்தை அடிப்படை வாதத்தின் பிதாமகன் இவர்தான். பினோசெட் 1982-ல் அறிவித்த மின்சாரத்துறை சீர்திருத்தம் மூலம் அந்த நாட்டின் மின்சாரத்துறை முற்றிலு மாக தனியார்மயமாகியது. இந்த சிலி அரசாங்கத் தின் தனியார்மயக் கொள்கைதான் பிற்காலத்தில் இங்கிலாந்தில் மார்க்ரெட் தாட்சர் 1990-ஆம் ஆண்டு அறிவித்த மின்சாரத்துறை தனியார்ம யத்திற்கு முன்னோடியாக விளங்கியது. இதன் அடிப்படையிலேயே இங்கிலாந்தில் மத்திய மின்சார உற்பத்திக்கழகம் (CEGB - Central Electri city Generating Board) துண்டாடப்பட்டு ஒவ் வொறு பகுதியும் முற்றிலும் தனியாருக்கு விற்கப்படு வதற்கான காரணமாக அமைந்தது.
இந்தநேரத்தில் தனியார்மயத்திற்காக எடுத்து வைக்கப்பட்ட நியாயங்கள் நினைவு கூரத்தக் கவை. தனியார்மயம் மின்சார உற்பத்தியை பெருக்கும், சந்தைப்போட்டி அடிப்படையிலான மின்சாரக் கட்டண (விலை) நிர்ணயம் மின்சார உற்பத்தி, விநியோகம் உள்பட ஒட்டுமொத்த மின்சா ரத் துறையை சிக்கனமானதாகவும், செயலுக்க முள்ளதாகவும் மாற்றும் எனக் கூறப்பட்டது. இதன் மூலம் அனைத்து பயனாளிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும் என்று நம்பப்பட்டது. அந்த நம்பிக்கைக்கு பலன் கிடைத்ததா?
முற்றிலும் தனியார்மயம் சரியா? சாத்தியமா?
முதலாவதாக அனைத்துத் துறையிலும் தனியார் மயம் அல்லது சந்தைமுறை சாத்தியமில்லை என்பதை முதலாளித்துவ சித்தாந்தத்தை நம்பு பவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். ஆடம் ஸ்மித் உள்ளிட்ட முதலாளித்துவத்தின் மூத்த சிந்தனையா ளர்களே சந்தைமுறைக்கு ஓர் எல்லை உண்டு என்று ஆழமாக நம்பினார்கள். அத்தகைய விதிவிலக்குத் தான் மின்சாரம் உள்ளிட்ட பொதுச்சேவைகளும். இலாப நோக்கிற்காக சந்தைமுறையை இவ்வாறு வலிந்து திணிப்பது ஒரு செயற்கையான ஏற்பாடு. வலிந்து திணிக்கப்படும் இத்தகைய சந்தை செயல் பாடுகள் சமூக நலனுக்கு உகந்ததாக இருக்காது. உதாரணத்திற்கு முழுமையான தனியார் மின்சார சந்தையில் மின்சாரக் கட்டண (விலை) நிர்ணயம் என்பது அடிப்படையில் ஏலமுறையின் மூலம் தான் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு முன்குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு (உ.ம். காலை 10 முதல் 11 மணி வரை) தேவைப்படும் மின்சா ரத்தை தனியார் மின் உற்பத்தி கம்பெனிகள் பகிரங்க மாக மின்சாரச் சந்தையில் ஏலம் விடும். விருப்பப் படும் மின்விநியோக கம்பெனிகள் உள்ளிட்ட பயனா ளர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று ஏலம் கேட்பார்கள்.
இந்த பேரமுறையில் அனைத்து கால அலகிற்கும் மின்கட்டண / விலையை நிர்ணயிப்பார்கள். போட்டி கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த கால அலகிற்கான மின்சார விலை மிக அதிகமாக பல மடங்கு உயர்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு பெறப்பட்ட மின்சாரத்திற்கான விலை மின் விநியோகக் கம்பெனிகளால் பொதுமக்களிடம் கட்டணமாகப் பெறப்படும். போட்டிகள் குறைவாக இருக்கும் நேரத்தில் மின்சாரத்தின் விலை உற்பத்திக்கு ஆகும் செலவின் அடிப்படையில் அமைந்திடும். சுருக்கமாகக் கூறினால் குறுகிய காலத்தில் தேவையும், நீண்ட காலத்தில் உற்பத்திச் செலவும் விலையை தீர்மானிக்கும் என்பது நியதி. இத்தகைய செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட மின்சார சந்தை முறை அடிப்ப டையிலான விலைநிர்ணயமுறை மின்சாரத் துறையை குறைந்த செலவுள்ள உற்பத்திமுறை யை நோக்கி உந்துமா என்பது கேள்விக்குறியே. இந்த முனைப்பு இருந்தால்தான் மின்சாரத் துறை யில் தனியார் மயம் சமூகநலனைக் காக்கும் என நம்பமுடியும். தனியார்மயமாக்கப்பட்ட மின்சாரச் சந்தையில் செலவு குறைந்த உற்பத்திமுறையல்ல; மாறாக செலவு அதிகபட்சமாக இருக்கும் உற்பத்தி முறையே நடப்பு மின்சாரக் கட்டணத்தை நிர்ண யிக்கும். அந்த அதிகபட்ச விலைதான் மின்சா ரத்தின் கட்டணமாகவும் இருக்கமுடியும் என்பது பொருளாதாரத்தின் அடிப்படைத் தத்துவம். இதை பொருளியலில் ரிக்கார்டோவின் குத்தகை விதி (Ricardian Theory of Rent) என்று அழைப் பார்கள். வெவ்வேறு உற்பத்தித் திறனும், செலவு முறையும் உள்ள தொழில் நுட்பங்கள் பங்கேற்கும் உற்பத்திச் சந்தையில் குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட உற்பத்திமுறையின் செலவுதான். (அதாவது, குறைந்த உற்பத்தித் திறன் இருந்தால் செலவு அதிகரிக்கும்) (இறுதிநிலைச் செலவு – Marginal Cost) ஒட்டுமொத்த உற்பத்தி விலையை நிர்ணயிக்கும். அதாவது, ரிக்கார்டோவின் விதிப்படி, எரிவாயுவை பயன்படுத்தி மின்சா ரத்தை உற்பத்தி செய்ய அதிகபட்சமாக செலவா கிறது என்று எடுத்துக்கொண்டால் அந்தமுறையில் ஆகும் உற்பத்திச் செலவுதான் மின்சாரத்தின் பயனீட்டாளர் கட்டணத்தை சந்தையில் நிர்ண யிக்கும்.
அதாவது, எரிவாயு மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் தேவை முற்றிலுமாக நீக்கப்படும் வரை, இந்த உற்பத்திமுறைக்கு மாற்று கண்டு பிடிக்கும் வரை இந்த நிலையே நீடிக்கும். அனைத்து விதமான பொருளாதார நடவடிக்கைகளுக்கும் மின்சாரம் அடிப்படையான உள்ளீட்டுப் பொருளாக விளங்குவதால் மின்சாரத்தின் தேவை வேகமாக அதிகரித்து வரும் பின்னணியில் செலவு அதிகம் பிடிக்கும் தொழில் நுட்பத்தை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமில்லை. மேலும் தற்போதைய சூழலில் எரிவாயு மின்சாரம் மிகக் குறைந்த அளவு புகையைக் கக்கும். எனவே பசுமை எரிபொருள் உற்பத்திக்கான முக்கிய தொழில் நுட்பமாக பார்க்கப்படுவதால், காலநிலை மாற்றத்தை தீவிரப் படுத்தாத உற்பத்தியை நோக்கிய திசைவழியில், எரிவாயு சார்ந்த மின்சார உற்பத்தி முறையை அகற்றுவது எளிதல்ல; இதன்காரணமாக, அதிக செலவுபிடிக்கும் இந்த உற்பத்திமுறையின் அடிப்ப டையிலான மின் கட்டணம் மற்ற மின் உற்பத்தி முறையில் மின்சாரம் தயாரிப்பவர்களுக்கு அபரித மான (கொள்ளை) இலாபம் அளித்துக்கொண்டே தான் இருக்கும் என்பது ரிக்கார்டோவின் அடிப்படை விதி. எனவே, தனியார்மயம் பயனீட்டாளர்களுக்கு சிக்கனமாக குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கிவிடும் என்ற வாதமே முற்றிலும் தவறானது என்பது நிரூபணமாகிறது.
சிறு பகுதி எரிவாயுவைப் பயன்படுத்தினாலும்...
இதற்கான நடைமுறை உதாரணம் தான் ஐரோப்பாவின் மின்கட்டண உயர்வு. தற்போது ஐரோப்பாவில் ஒரு சிறு பகுதி மின்சாரமே எரிவா யுவை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. ஏனெனில் எரிவாயு விலை உயர்ந்த ஒரு பொருள். இந்தச் சூழலில் ஒரு மாதத்தில் நான்கிலிருந்து ஆறு மடங்கு உயர்ந்த எரிவாயு விலை அதே அளவு தாக்கத்தை மின்சாரத்தின் விலையிலும் ஏற்படுத்தி யுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் மட்டுமல்ல; ஐரோப்பாவின் ஸ்டீல் நிறுவனங்க ளும், உரக் கம்பெனிகளும், அலுமினிய உற்பத்தி யாளர்களும், கண்ணாடி உற்பத்தியாளர்களும், உபகரண உற்பத்தியாளர்களுமே. உற்பத்தி செலவு கள் உயர்ந்ததன் காரணமாக போட்டியிட முடியா மல் மூடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே தான் கிரீக் நாட்டின் மிகப்பிரபலமான பொருளா தார அறிஞர் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வருஃபாகிஸ், சந்தைத்துவம் (தனியார் மயம்) என்ற மூடநம்பிக்கை உலகமெங்கிலும் மின்சாரத் துறையில் எத்தகைய தீங்கை விளை விக்கும் என்பதற்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நிகழ்வுகளே சிறந்த உதாரணம் என்று கூறி யுள்ளார். எனவே உலக நாடுகள் இத்தகைய சந்தைத்துவ முயற்சிகளை மின்சாரத்துறையில் அனுமதிக்கக் கூடாது என்று எச்சரிக்கிறார்.
இந்தியா விதிவிலக்கல்ல
இந்த எச்சரிக்கை இந்தியாவிற்கும் பொருந் தும்; இந்தியா விதிவிலக்கல்ல. எரிவாயுவைப் பயன் படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் வழக்கம் இந்தி யாவில் மிகவும் குறைவு; எனவே ஐரோப்பாவில் நடக்கும் உக்ரைன் போர் நம்மை தற்போது பாதிக் காது என்பது உண்மை தான். ஆனால், ஒன்றிய அரசு இன்று மாநில அரசுகளின் மீது நிர்ப்பந்திக் கும் மின்சாரத் துறை சீர்திருத்தம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவற்றின் மின்சா ரத் துறை சீர்திருத்தத்தின் வழி வந்ததே. முதன் முதலில் மின்சாரச் சட்டம் (2003) தனியார் மின் உற்பத்திக்கு வழியைத் திறந்து விட்டது. இதன் மூலம் சந்தைக்கு வந்த தனியார் மின்உற்பத்தி நிலை யங்கள் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெறப்பட்ட வங்கிக்கடன்களில் இருந்து உருவாக்கப்பட்டன. இந்த தனியார் மின்உற்பத்தி கம்பெனிகள் சந்தித்த இழப்புகள் அனைத்தும், மின்சாரத் துறை சீர்திருத்த சட்டம் என்ற பெய ரில், மின்சாரத்தை அதிக விலை கொடுத்து தனியார் கம்பெனிகளிடம் இருந்து மின்சாரத்தை வாங்க நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ்நாடு மின்வாரியம் உள்ளிட்ட மாநில மின்பகிர்மான நிறுவனங்களின் கடன்களாகவும் வங்கித்துறையின் தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடனாகவும் நிற்கின்றன. ஏனெனில் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அரசுகள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனங்களி டமிருந்து மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி விவசாயம், சிறு தொழில் உள்ளிட்ட துறை களுக்கு இலவசமாகவோ குறைந்த விலையிலோ வழங்கி வருகின்றன. மேலும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மின்கட்டண நிர்ண யத்தில் சலுகைகளை அரசாங்க வரிப்பணத்தில் மானியமாக கொடுத்து வருகிறது. தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் சந்தை விலையில் மின்சாரத்தைப் பெற்று, மாநில அரசுகள் தனது சொந்த செலவில் உருவாக்கிய மின்பகிர்மான கட்டமைப்பு மூலம் மின்சாரத்தை பகிர்ந்தளித்து வருகிறது. இதனால், கடன் சுமை யில் தத்தளித்து வருகின்றன.
இந்தச் சூழலில்தான் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனையில் இருக்கும் மின்சார சீர்திருத்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மின்சாரத்தின் விலையை நிர்ணயிக்கும் உரிமை அதனை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவ னத்திற்கு உள்ளது என பரிந்துரை செய்யப்படு கிறது. தனியார் நிர்ணயித்த விலையில் மின்சா ரத்தை பகிர்ந்தளித்து கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பு மாநில அரசாங்கத்தை சார்ந்தது என்கிறது புதிய சட்ட வரைவு. எனில் மின்சாரக் கட்டணத்தை கட்டுப்படுத்தும், சலுகை விலையில் அல்லது இலவசமாக வழங்கும் உரிமை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கப்படுவதற்கு இந்த சட்ட வரைவு வழி வகுக்கும். மேலும் இறுதி கோட் பாட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் அதிகபட்ச / நியாயமற்ற மின்கட்டணம் அனைத்து நிலை பயனாளிகளின் தலையில் சுமத்தப்படும். இத்தகையதொரு சட்டம் தான் ஐரோப்பாவில் இன்று மின்கட்டணம் பன்மடங்கு உயர்ந்ததற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது என்பதைப் பார்த்தோம்.
ஏற்கனவே ஒரு முறை ஒன்றிய அரசாங்கம் மின்சாரத்தை ஏல விற்பனைக்கு பரிட்சார்த்த ரீதியில் சோதனை செய்தபொழுது ஒரு யூனிட் விலை ரூ.20-க்கும் அதிகமாக சென்றது. பின்பு அரசாங்கம் தலையிட்டு அதிகபட்ச விலையாக ரூ.12-ஐ நிர்ண யித்தது. இத்தகைய ஆபத்தான ‘சீர்திருத்தங்கள்’ தேவைதானா?
தற்போது மின்சார உற்பத்தி மட்டுமே பெரும்பா லும் தனியார் வசம் உள்ளன. மின்பகிர்மான கட்ட மைப்பு மின் பகிர்மானமும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. விலை நிர்ணயம் உட்பட அனைத்து வகைக் கட்டுப் பாடுகளும் அரசின் வசம் இருந்து வருகின்றன. இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காற்றாலை மின்சாரம் வேண்டுமா? நீர் மின்சாரம் வேண்டு மா? அனல் மின்சாரம் வேண்டுமா? அணு மின்சா ரம் வேண்டுமா? சூரிய மின்சாரம் வேண்டுமா? என்பதனை அதற்காகும் செலவைக் கொண்டு மாநில அரசுகள் அரசின் செலவைக் குறைக்கவும், மக்களின் நலனைப் சமூக பொறுப்புடன் பேண வும் வழிமுறைகள் இருக்கின்றன. இதன் மூலம் பயனாளர்களுக்கு குறைந்தபட்ச விலைச் சுமையை நிர்ணயிப்பதற்கு அரசுக்கு நிர்ப்பந்த மும் வாய்ப்பும் இருக்கின்றன. ஆனால், வரப்போகும் முழு தனியார்மயம் உறுதியாக இந்தியாவையும் இந்திய மக்களையும் பொருளாதாரச் சிக்கல்களுக்குள் தள்ளும் என்பதில் எள்ளவும் சந்தேகமே இல்லை.
சீர்திருத்தம் சிறந்தது என்று நம்புவதற்கு ஆதா ரங்கள் இல்லை. ஆதாரம் ஏதும் இல்லாமல் சீர்திருத் தம் சிறந்தது என கண்ணை மூடிக்கொண்டு நம்பு வது ஒரு மூடநம்பிக்கையே. எனவே மாநில அரசுகள் ஒன்றிய அரசின் புதிய மின்சார வரைவு மசோதா வை தடுத்து நிறுத்தினால் தான் வரவிருக்கும் தனி யார் மின்கட்டணக் கொள்ளைக்கு கடிவாளமிட முடியும். சந்தைத்துவ மூடநம்பிக்கையின் அடிப்ப டையிலான சிந்தனையற்ற தனியார்மயம் என்னும் பெருந்தீங்கிலிருந்து மக்களையும் தொழில் களையும் பாதுகாக்க முடியும்.