கொலிஜியம் முறை உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தங்களுக்குத் ‘தலையாட்டக்கூடிய’ நீதிபதிகளை நியமிப்பதில் இடையூறாக இருப்பதாக ஒன்றிய அரசாங்கம் கருதுகிறது. எனவேதான், கொலிஜியம் முறை மீது இத்தகைய தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
மோடி அரசாங்கம் உச்சநீதி மன்றத்தின் மீதான தன் தாக்கு தலை முடுக்கிவிட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக, ஒன்றிய சட்ட அமைச்சர், கிரண் ரிஜிஜூ, நீதிபதிகளை நியமனம் செய்திடும் கொலிஜியம் முறையானது அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்று கூறி விமர்சனம் செய்தும், நீதிபதிகளை நியமனம் செய்யும் உரிமை அர சாங்கத்திற்கு உண்டு என்பதே அரசமைப்புச் சட்டத் தின் ‘உள்ளார்ந்த உணர்வு’ (‘spirit’) என்றும் கூறி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும், தொடர்ச்சியாக அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். இதேபோன்றே, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தங்கரும், மாநிலங்களவையின் தலைவர் என்ற முறையில் மாநிலங்களவையின் முதல் அமர்வு க்குத் தலைமை தாங்கும்போது, உச்சநீதிமன்றம், 2014ஆம் ஆண்டு தேசிய நீதித்துறை நியமனங் கள் ஆணையச் சட்டத்தை செல்லாது என்று தீர்ப்ப ளித்ததை, நாடாளுமன்றத்தின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று அவர் கூறி, உச்சநீதிமன்றத் தின் மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். இவ்வாறு அரசாங்கத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கும் இருவரிடமிருந்தும் வந்துள்ள கூற்றுகளிலிருந்து, இவை அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து வந்துள்ள தாக்குதல் தொடுக்கப்பட வேண்டும் என்ப தற்கான சமிக்ஞை என்பது தெளிவாகிறது.
அச்சுறுத்தலும் எச்சரிக்கையும்
கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற கொலிஜியம் முறையை விமர்சனம் செய்ததோடு திருப்தி அடைந்து விடவில்லை. அவர் ஒருபடி மேலும் சென்று, உச்சநீதி மன்றத்தின் மீது மறைமுகமானமுறையில் அச்சுறுத் தல்களையும் விடுத்திருக்கிறார். “நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவதில் மாற்றம் கொண்டுவரப்படா விடில், அங்கே காலியாகவுள்ள பணியிடங்கள் பிரச்சனை வளர்ந்துகொண்டே இருக்கும்,” (“Unless the proced ure of appointment of judges changes, the issue of high judicial vacancies will keep cropping up”) என்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இவரின் கூற்று மிகவும் தெளிவானதாகும். அதாவது, அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப நீதிபதிகள் நிய மனம் செய்யப்படும் நிலை உருவாகும்வரை, உச்சநீதி மன்றத்தின் கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்படும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்பதேயாகும். சட்ட அமைச்சர், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு புத்திமதி சொல்லக்கூடிய அளவிற்கு மேலும் ஒருபடி சென்றிருக்கிறார். அவர்கள் பிணை மனுக்கள் மற்றும் ‘அற்பமான’ பொது நல மனுக்களையெல்லாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு நேரத்தை வீணாக்கக் கூடாது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
“உரிய நபர்களுக்கு (deserving people) நீதி வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்றும், தேவையற்ற சுமைகளை அளிப்பவர்கள்மீது கவனம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், அப்போதுதான் நீதிமன்றம் செயல்படும்போது, அல்லது நீதிமன்றம் தன் கடமைகளைச் செய்யும் போது, அவர்கள் தொந்தரவுகள் செய்ய மாட்டார்கள் என்று நாங்கள் நீதித்துறையை மேலும் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது,” என்று கூறியிருப்ப தன்மூலமாக நீதிபதிகளுக்கு இந்த வாய்த்துடுக்கு அமைச்சர் ஓர் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். இதில் உள்ள செய்தி மிகவும் தெளிவானதாகும். அதா வது, உச்சநீதிமன்றம் தனிப்பட்ட பிரஜைகளின் சுதந்திரம் சம்பந்தமான வழக்குகளை எடுத்துக் கொள்ளக் கூடாது, அல்லது, அரசாங்கம் மேற்கொண்ட தவறான செயல்களால் பாதிக்கப்பட்ட இத்தகைய தொல்லைதரும் மனுதாரர்களால் அளிக்கப்படும் மனுக்களை எடுத்துக்கொள்ளக்கூடாது.
எதேச்சதிகார அரசின் கோபம்...
இத்தகைய தேவையற்ற அறிவுரைக்குத் தலைமை நீதிபதி சரியான முறையில் பதிலடி தந்தி ருக்கிறார். “நீதிமன்றத்தைப் பொறுத்தவரை சிறிய வழக்கு என்றோ பெரிய வழக்கு என்றோ எதுவும் கிடையாது” என்று கூறியிருப்பதுடன், “தனிநபர் சுதந்தி ரம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் நாங்கள் செயல் பட்டு அவர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடாது என்றால், பின்னர் நாங்கள் இங்கே என்ன செய்ய வேண்டும்?” என்றும் கேட்டிருக்கிறார். தலைமை நீதிபதி யு.யு.லலித் காலத்திலிருந்து இப்போதுவரை, உச்ச நீதிமன்றம் வெகு காலமாக சிறையிலிருந்து வரு பவர்களின் பிணை மனுக்கள் மீது அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு சிறையிலிருந்து வருப வர்களின் பிணை மனுக்களை கீழமை நீதிமன்றங் கள் தள்ளுபடி செய்துள்ளன. நீதிபதி யு.யு.லலித், தலைமை நீதிபதியாக வந்த பின்புதான், டீஸ்டா செதல்வாட்டிற்கு (Teesta Setalvad), இடைக்கால பிணையும், சட்டவிரோத நட வடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்திக் கப்பான்க்கு, பிணையும் கிடைத்தது. இதன் பின்னர், ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ ஆசிரிய ரும், மனித உரிமைகள் போராளியுமான கவுதம் நவ்லகாவை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு கடும் ஆட்சேபணைகளை எழுப்பிய தேசியப் புலனாய்வு முகமையின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதே போன்றே, மும்பை நீதிமன்றத்தால் ஆனந்த் டெல்டும்டே பிணையில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தேசியப் புலனாய்வு முகமை மேல்முறையீடு செய்த தையும் தள்ளுபடி செய்தது.
இவ்வாறு தனிநபர்கள் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்திட உச்சநீதிமன்றம் நட வடிக்கைகள் எடுத்துவருவதுதான், எதேச்சதிகார அர சாங்கத்திற்குக் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனக்குச் சாதகமான நீதிபதிகள் சிலரைப் பெறுவ தில் ஒன்றிய அரசாங்கம் ஏற்கனவே வெற்றி பெற்றி ருக்கிறது. சமீபத்தில், நீதிபதி அருண் மிஸ்ரா (இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்), எம்.ஆர். ஷா (இவர் வெளிப்படையாகவே பிரதமர் நரேந்திர மோடியை வானளாவப் புகழ்ந்து வருகிறார்) போன்றவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனாலும், கொலிஜியம் முறை உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத் தில் தங்களுக்குத் ‘தலையாட்டக்கூடிய’ நீதிபதிக ளை நியமிப்பதில் இடையூறாக இருப்பதாக ஒன்றிய அரசாங்கம் கருதுகிறது. எனவேதான், கொலிஜி யம் முறைமீது இத்தகைய தாக்குதலைத் தொடுத்தி ருக்கிறது.
ஆட்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆணையம் கூடாது
ஆளும் பாஜக வட்டாரங்கள் நீதித்துறை நிய மனங்கள் ஆணையம் அமைப்பதற்காக மற்றுமொரு சட்டமுன்வடிவைக் கொண்டுவருவது அவசியம் என்று பேசத் தொடங்கியிருக்கின்றன. இதன்மூலம் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதி பதிகளை நியமிப்பதில் தங்கள் ஆதிக்கத்தை நிறுவிட வும், அதன்மூலம் இவற்றைத் தங்களின் கீழ் செயல் படும் அமைப்புகளாக மாற்றிடவும் அவை விரும்பு கின்றன. தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு ஜால்ரா போடும் நபர்களைப் பொறுக்கி எடுத்து, ஆணையர்களாக நியமனம் செய்திருப்பது போன்று, நீதிபதிகளையும் மாற்றுவதற்கான நடவடிக்கை என்பதே இவர்களின் நோக்கம் என்பதில் நாம் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும். நீதிபதிகள் தேர்வு மற்றும் நியமனங்கள் சம்பந்த மாக மிகவும் நன்கு வரையறுக்கப்பட்ட விதிகளுடன் வெளிப்படையான முறையில் செயல்படக்கூடிய தேசிய நீதித்துறை ஆணையம் விரிவான முறையில் அமைக்கப்பட்டுச் செயல்பட வேண்டும் என்றே இடதுசாரிகள் உட்பட ஜனநாயக எண்ணம் கொண் டோர் மிக நீண்ட காலமாகக் கோரி வருகிறார்கள். இத்தகைய ஆணையத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிக ளாலும், அரசாங்கத்தாலும் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களோடு, புகழ்பெற்ற நடுவர்கள் (jurists) மற்றும் பல்வேறு சுயேச்சையான அமைப்புகளின் பிரதிநிதி களும் அங்கம் பெற வேண்டும். ஆட்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் விதத்தில் இது அமைக்கப்படக் கூடாது. 2014இல் மோடி அரசாங்கத்தின்கீழ் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையச் சட்டம் பிழையானதாகும். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு எதிராகப் போதிய பாதுகாப்பு அம்சங்கள் அதில் இல்லை.
மேம்படுத்துவது அவசியம்
தற்சமயம், மோடி அரசாங்கம் நீதித்துறையின் சுதந்திரத்தை அரித்து வீழ்த்திடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தற்போது இருந்துவரும் கொலிஜியம் அமைப்புமுறையை, அரசாங்கம் ஆதிக்கம் செலுத்தும் விதத்தில் அமைக் கப்படும் நீதித்துறை நியமனங்கள் ஆணையம் மூலமாக மாற்றியமைத்திட மேற்கொள்ளப்படும் எந்த வொரு முயற்சியையும் எதிர்த்திட வேண்டும். அதே சம யத்தில், இப்போதுள்ள கொலிஜியம் முறை யையும், நீதிபதிகளுக்கான நபர்களைத் தேர்வு செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மையுடனும், மக்களுக்குப் பதில் கூறும் விதத்திலும் (transparent and accountable) மேலும் மேம்படுத்திட வேண்டி யதும் அவசியம்.
டிசம்பர் 21, 2022,
தமிழில்: ச.வீரமணி