தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்ன தாக (12.03.2024) அன்று ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019ஐ அமலாக்குவதற்கான அறி விக்கை வெளியிட்டது. தேர்தலுக்கு முன்னதாக இச்சட்ட த்தை அமலாக்கிட முடியாது என்றாலும் அவசர அவசர மாக அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன? இரண்டு காரணங்களுக்காகத்தான். 1) அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தேர்தல் நிதி பத்திர திட்டத்தை உருவாக்கி பல ஆயிரம் கோடி ரூபாய் சட்டப்பூர்வமாக ஊழல் செய்த பாஜக தலைமை அம்பலமாகி உள்ளதை திசைதிருப்புவதற்காக! 2) குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கு வதாக அறிவித்து மத ரீதியில் மக்களை பிளவுபடுத்து வதற்காக! 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளு மன்றத்தில் கொண்டுவரப்பட்டபோதே, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது.
‘மதம்’ ஒரு பொருட்டாக இல்லை
1955-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியுரிமைச் சட்டம் 11 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு கீழ்க்கண்ட அடிப்படையில் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் எனக் கூறுகிறது:
1) பிறப்பால் இந்தியக் குடியுரிமை
2) பெற்றோர் வழியாக (வம்சாவளியினர்)
3) உரிய ஆவணங்கள் பதிவு செய்வதன் மூலம்
4) இயல்பாகவே (11 ஆண்டுகள் வசித்தவர்களுக்கு)
5) இந்தியாவின் எல்லைக்குள் ஒரு பகுதியை இணைப்பதன் மூலம்
மேற்கண்டவற்றில், குடியுரிமை பெற மதம் ஒரு வழிமுறையாக சொல்லப்படவில்லை. இப்படி ஒரு சட்டம் 1955லிருந்து நடைமுறையில் உள்ளபோது 2019 ஆம் ஆண்டு ஒரு திருத்தச் சட்டம் தேவையில்லாதது. பிறகு ஏன் கொண்டு வந்தார்கள்? அவசரமாக அமலாக்கப் போவதாக ஏன் அறிவித்தார்கள்?
அடித்தளத்தை தகர்க்கும் பாகுபாடு
இச்சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா விற்கு வரக்கூடிய இஸ்லாமியர் அல்லாத இந்து, சீக்கியர் கள், பௌத்தர்கள், ஜெயினர்கள், பார்சீகள், கிறித்துவர்கள் ஆகிய ஆறு மதங்களைச் சார்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இஸ்லாமியரை விலக்கி வைப்பதன் மூலம் இச்சட்டம் இந்திய அரசிய லமைப்பின் மதச்சார்பற்ற அடித்தளத்தையே தகர்க்கிறது. 1955ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் பிரிவு 6ன் அடிப்படையில் பிற நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்களும் குடியுரிமை பெறலாம். ஆனால், 2019ம் ஆண்டு செய்யப்பட்டுள்ள திருத்த மானது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது எனக் கூறுகிறது. மத ரீதியில் ஏன் இந்தப் பாகுபாடு? குறிப்பாக, பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்குள் சில குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களை பிற பிரிவினர் துன்புறுத்துகிற போது, பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் குடியேறினால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்பது தான் 2019 திருத்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் சட்டத்திற்கு விரோதமான சரத்து. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் குடியேறினால் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்ததாக நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்று மோடி அரசு கூறியிருக்கிறது.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு குடியுரிமை இல்லையா?
மேலும், முஸ்லீம் நாடுகள் அல்லாத மியான்மர், சீனா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரக்கூடியவர்கள் குடியுரிமை பெறும் ஏன் மோடி அரசு மறுக்கிறது? குறிப்பாக, 2019-ம் ஆண்டு குடி யுரிமைத் திருத்தச் சட்டத்தை முன்மொழிவதற்கு சற்று முந்தைய ஆண்டுகளில் இலங்கையிலிருந்து வன்முறை - துன்புறுத்தலுக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள் 3 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவில் குடியேறினார்கள். ஏற்கெனவே, கடந்த 45 ஆண்டு களுக்கும் மேலாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் அகதிகளாக இலங்கைத் தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கையிலிருந்தும் இந்தியாவில் குடியேறிய தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமென்ற, எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த திருத்தத்தை பாஜக ஏற்க மறுத்தது. அதைப்போலவே, மியான்மரிலிருந்து குடியேறியவர்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டுமென்ற திருத்தத்தை பாஜக அரசு ஏற்கவில்லை. 2019 குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமை பற்றிய ஐ.நா. மன்றத்தினுடைய சர்வதேசச் சட்டத்திற்கு முரணா னது. குறிப்பாக, சர்வதேச குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் சிறப்புச் சட்டத்தின் பிரிவு 26-க்கு முரணானது. “சட்டத்தின் முன் அனைத்து மக்களும் சமமான வர்கள்; எவ்விதப் பாகுபாடுமில்லாமல் சட்டத்தின் பாது காப்பை சமமான முறையில் பெறுவதற்கு உரிமை பெற்ற வர்கள். இந்த அடிப்படையில், ஒரு நாட்டின் சட்டமானது எந்தவிதமான பாகுபாட்டையும் அனுமதிக்கக்கூடாது; தடைசெய்ய வேண்டும்; அனைவரும் சமம் என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்; பாகுபாட்டிலிருந்து உரிய பாதுகாப்பினை அளிப்பதாக இருக்க வேண்டும்; இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல் அல்லது கருத்து மாறுபாடு, தேசிய அல்லது சமூக பிறப்பிடம், சொத்து, பிறப்பு அல்லது இதர எந்த அந்தஸ்தின் அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று சர்வதேச குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சிறப்பு சட்டம் வலியுறுத்துகிறது.
அதிர்ச்சிகரமான உண்மை
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சமீபத்தில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏடு எழுதியுள்ள தலையங்கம் கவனத்தை ஈர்க்கிறது. “ஒரு நாட்டின் குடியுரிமை என்பது உணர்வு ரீதியாக பார்க்கப்படுகிறது என்ற போதிலும் இந்தியாவிலும் கூட ஏராளமான மக்கள் தங்களது குடியுரிமையை அரசிடம் சரண் செய்துவிட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்வதற்கு தயங்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 2012ல் 1.21லட்சம் இந்தியர்கள் தங்களது குடி யுரிமையை ஒப்படைத்துவிட்டு வெளியேறினார்கள் என் றால், 10 ஆண்டுகள் கழித்து 2022ல் இந்திய குடியுரிமையை ஒப்படைத்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியிருப்பவர் களின் எண்ணிக்கை 2.26 லட்சம் பேர் என்பது கவனிக்கத்தக்கது. இப்படி வெளியேறிச் செல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, பொருளாதாரப் பிரச்சனைகள்தான்; எனினும் அத்தனைபேரும் வெளி யேறுவதற்கு அது மட்டுமே காரணமல்ல; மத, இன, மொழி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பாரபட்சமும் பாகுபாடும் காட்டப்படுவதும் மிக முக்கியமான காரண மாகும்” என்று டைம்ஸ் ஆப் இந்தியா தலையங்கம் விவரிக்கிறது. அதேபோல, அகதிகளைப் பொறுத்தவரை எந்தநாடும் மிக எளிதாக குடியுரிமை வழங்கிவிடுவது இல்லை. ஆனால் இந்தியா உலகிலேயே முதன்மை யான ஒரு ஜனநாயக நாடு ஆகும். அந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் சிறப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்றும் அத்தலையங்கம் வலியுறுத்துகிறது. மோடியின் ஆட்சிக் காலத்தில்தான் பத்தாண்டுக்கு முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு இந்தியர்கள், இந்தியக் குடியுரிமையை கைவிட்டுவிட்டு சென்றி ருக்கிறார்கள் என்றால், இவர்களது ஆட்சியில் எந்தள வுக்கு பாரபட்சமும் பாகுபாடும் அதிகரித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
விவேகானந்தர் சொன்னது என்ன?
‘‘உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புக லிடம் அளித்த நாட்டை சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்’’ - 1893 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் அதிரடி யான வரிகள் இவை. விவேகானந்தரைத் தங்களது அடையாளமாக சொல்லிக் கொள்கிற மோடி-அமித்ஷா அரசு மேற்கண்ட கூற்றுக்கு நேர் விரோதமாக செயல்பட்டு வருகிறது. 2019ல் உருவாக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தி னாலும் இந்தியாவில் வசிக்கக் கூடிய 18 கோடி இஸ்லா மியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது கூறுகிறார். ஆனால், அது உண்மையா?
மதவெறிச் சட்டம்!
2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றிய போது உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது என்ன? தங்களது அரசு, அகதிகள் மற்றும் எல்லை தாண்டி வந்தவர்கள் தொடர்பாக ஒரு முறையான கொள்கையை வரிசைப்படி அமலாக்கும் என்றுதான் அமித்ஷா குறிப்பிட்டார். முதலில் நாங்கள் குடியுரிமை திருத்த மசோதாவைக் கொண்டுவருவோம்; அதன் மூலம் ஒவ்வொரு அகதியும் குடியுரிமை பெறுவார்கள்; அதன் பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) கொண்டு வருவோம்; எனவே அகதிகள் எந்த வகையிலும் கவ லைப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்டார். அது மட்டுமல்ல, எல்லைதாண்டி வந்தவர்களை ஊடுருவல் காரர்கள் என்று குறிப்பிட்டு அவர்கள் குடியுரிமை பெற அனுமதிக்க முடியாது என்று அமித்ஷா குறிப்பிட்டார். எனவே அவர் குறிப்பிட்டது சில குறிப்பிட்ட மாநிலங் களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது பொருந்தும் என்ற வகையில்தான் பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து கட்டாயம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவருவோம் என்பது தான் அவரது உரையின் சாராம்சம். கடந்த 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின்போது 1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தை திருத்தி அதில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) என்ற பிரிவை சேர்த்தார்கள். அப்பொழுதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த திருத்தத்தை எதிர்த்தது. எனவே, தற்போதைய சட்டம் முழுக்க முழுக்க குடியுரிமைக்கு மத அடையாளம் அளிக்கும் நோக்கம் கொண்டதாகும். தேர்தல் தருணத்தில் இச்சட்டத்தை அமலாக்கியிருப்பது மத ரீதியாக மக்களை துண்டாடுவதும் அணிதிரட்டுவதுமான ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நிகழ்ச்சிநிரலை அமலாக்கவே. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அது பங்கேற்றுள்ள இந்தியா அணியும் இந்த சட்ட அமலாக்கத்தை வலுவாக எதிர்க்கின்றன.