மக்கள் தொகை பெருக்கம், தொற்று நோய், போர் ஆகியவற்றால் உலகள வில் பட்டினியால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 828 மில்லியனாக உயர்ந்துள்ளது என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். உலகளவில் 2021ம் ஆண்டு 2.3 பில்லியன் மக்கள் 29.3 சதவீதம் என்ற அள வில் கடுமையான உணவு பாதுகாப்பின்றி இருந்தனர். பசியால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 2021ல் உலக மக்கள் தொகையில் 9.8 சதவீதமாக உயர்ந்தது. இது 2020ல் 9.3 சதவீத மாக இருந்தது. 5 வயதுக்கு உட்பட்ட 45 மில்லி யன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச் சத்துக் குறைபாடு குழந்தைகளின் இறப்பு அபாயத்தை 12 மடங்கு அதிகரித்திருக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட 149 மில்லியன் குழத்தை கள் தங்கள் உணவில் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் இல்லாததால் வளர்ச்சி குன்றியிருந் தனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின் றன.
உணவு மூலம் பரவும் நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்து 20ஆயிரம் இறப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஜெர்மனியின் ஒரு ஆய்வு நிறுவனம், பசியின் தாக்கத்தால் ஒவ்வொரு 13 வினாடிக்கும் ஒரு குழந்தை இறக்கிறது என்கிறது. பழங்கள், காய்கறிகள், தானியங்களை எடுத்துக் கொள்வது குறைந்து, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, இனிப்பு சுவை நிறைந்த குளிர்பானங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் நிலை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. போதிய ஊட்டச்சத்து உள்ள உணவு கிடைக்காமல் அல்லது உண்ணாமல் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் இந்தியாவில் இறப்பதாக அறி வியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. உலகின் 5வது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. விரைவில் இது மூன்றாவது இடத்துக்கு வரும் என்கிறது ஒன்றிய அரசு. அதே நேரம், நாட்டில் உள்ள 74 சதவீத மக்களுக்கு ஆரோக்கிய மான உணவு கிடைக்கவில்லை என உலக வங்கியின் அறிக்கை சொல்கிறது. இந்தியர் களில் 71 சதவீதம் பேருக்கு போதிய ஊட்டச் சத்து உணவு கிடைப்பதில்லை. இதில், சர்வ தேச சராசரி 42 சதவிகிதமாக உள்ளது என சர்வ தேச ஊட்டச்சத்து அறிக்கை தெரிவிக்கின் றது. உலகளாவிய பசி குறியீடு 2022 தரவரிசை யில், 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது.
உலக மக்கள் தொகைக்குப் போதுமான உணவை உற்பத்தி செய்தாலும், 9 பேரில் ஒருவர் அதாவது 820 மில்லியன் மக்கள் பட்டி னியால் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது என உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சொல்கிறது. உணவு வீணாக்குதல் குறித்த அறிக்கை, ஆண்டொன் றுக்கு இந்தியர் ஒருவர் 50 கிலோ உணவை வீணாக்குகிறார் என்கிறது. இந்தியாவில் 20 வயதுக்கு அதிகமான வர்கள் தினமும் 200 கிராம் பழங்களை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், 35.8 கிராம் அளவே பழங்களை உட்கொள் கின்றனர். தினமும் 300 கிராம் அளவு காய்கறி களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், 168.7 கிராம் அளவு காய்கறிகளையே எடுத்துக் கொள்கின்றனர். இதற்குப் பொருளாதாரமும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆரோக்கிய உணவானது, ஒரு நபர் ஈட்டும் வருவாயில் 63 சதவீதத்தை தாண்டும்போது, அது சாத்தியமில்லாத ஒன்றாகிவிடுகிறது என உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரி விக்கிறது.
ஆரோக்கியமான உணவுக்கான விலை அதிகரித்து வருவதை ஆய்வுகள் உறுதி செய் கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை 65 சதவீதம் அதிக ரித்துள்ளது. இந்தியாவில் இறக்கும் 5 வய துக்கு உட்பட்ட குழந்தைகளில் 69 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பதாக யுனிசெப் கூறுகிறது. 1 முதல் 5 வயது வரை யிலான குழந்தைகளில் 35 சதவீதம் குழந்தை கள் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள் ளன. 6 முதல் 23 மாதம் வரையிலான குழந் தைகளில் 42 சதவீதம் பேருக்கு மட்டுமே போதிய இடைவெளியில் உணவு ஊட்டப்படு கிறது. இன்று கிராமம், நகரம் என்கிற பேதம் இல்லாமல் துரித உணவு கலாச்சாரம் வத்து விட்டது. தூக்கலான உப்பு சுவையுடன் மசாலா கலந்த அதன் சுவைதான் எல்லோரையும் ஈர்க்கிறது. இதில் அடங்கியுள்ள அதிக கொழுப்புகள் மனதை ஒரு மயக்கத்தில் தள்ளு கிறது. ஆனால் அதன் பின் விளைவுகள் குறித்து நாம் கவலை கொள்வதில்லை. தொடர்ந்து துரித உணவு வகைகளை சாப்பி டுபவர்களுக்குப் பல்வேறு நோய்கள் வரு வதற்கான ஆபத்துகள் அதிகமாக இருக்கி றது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பீட்சா, பர்கர், பிரைட் ரைஸ் ஆகியவை குழந்தைகள், இளைஞர்களுக்கு பிடித்த உணவுகளாக இருக்கின்றன. இவை அதிகம் கலோரிகள். ஆரோக்கியமற்ற கொழுப்பு கள் கொண்டவை. ஊட்டச்சத்து உள்ளடக் கம் குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கி யத்தை பாதிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தி யையும் பலவீனப்படுத்துகின்றன. இதனால் காலப்போக்கில் நீரிழிவு நோய் பாதிப்பு அதி கரிக்கும் என்று சிறப்பு மருத்துவர்கள் கூறு கின்றனர்.
துரித உணவுகளில் உப்பு அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் மனசோர்வு, தலைவலி, உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்ற பாதிப்புடன் நரம்பு செல்களும் பாதிக்கும். ஞாபக சக்தி குறையும். கவனச் சிதறல் ஏற்படும். இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உட லின் ஏனைய உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும். நெஞ்செரிச்சல், அதிக அமில சுரப்பு ஏற்படவும் துரித உணவுகளே காரணம். குழந்தைகளுக்கு இரைப்பை அழற்சி, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன் போன்றவை ஏற்படலாம். படிப்பு, விளை யாட்டில் ஆர்வம் குறையும். தாழ்வு மனப் பான்மை ஏற்படும். இதயம் தொடர்பான நோய்களும் வரலாம். இந்த துரித உணவு களை போல பாக்கெட் உணவுகளும் ஆபத்தா னவை. இதை அதிகம் உண்ணும் போது உட லில் நச்சுக்கள் அதிகமாகி அஜீரண கோளாறு, புற்றுநோய், தோல் வியாதி போன்ற நோய்கள் ஏற்படலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். வள்ளுவரோ மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு என்கிறார். அதாவது, பாதிப்பு இல்லாத உண வைக்கூட, அளவு மீறாமல் அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் ஏதும் வராது என்பதே அதன் அர்த்தம். உணவை வீணாக்குவதைத் தவிருங்கள். உங்களுக்கு தேவையான உணவு பொருட் களை பட்டியலிட்டு வாங்குங்கள். குழந்தை களுக்கு ஆரோக்கியமான உணவை தர வேண்டும். அது சுவை மிகுந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சத்தான தாக இருக்கவேண்டும். சமச்சீர் உணவை உண்பதன் முக்கியத்துவம் பற்றிச் சிறு வய திலிருந்தே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். ஐ.நா. சபை 2030ம் ஆண்டுக் குள் பசியை முடிவுக்குக் கொண்டுவர உலக ளாவிய நோக்கத்தை அமைத்துள்ளது. அதை நோக்கி நமது பயணம் தொடரட்டும்.