articles

img

எதிர்கால இந்தியத் தூண்கள் குழந்தைகள் - வாலண்டினா

கண்ணென்பார் மணியென்பார் கற்கண்டு தேனென்பார்- எதிர் கால தூண்கள் குழந்தைகள் என நாம் உரைப்போம்.எதிர்கால இந்தியா வின் தூண்கள் குழந்தைகள். அவர்கள் வளரும் சமூக பொருளாதார சூழல் பாது காப்புடன் அமைவது மிக பொருத்தமா னது. பாதுகாப்பற்ற சூழலில் குழந்தை கள் வாழ்வதனால் அவர்களது சிந்தனைத் திறன், கல்வி, பாதுகாப்பு, வாழ்க்கை முறை என அனைத்தும் மோசமாக பாதிக் கப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை,எதிர்காலம் கேள்விக் குறியாக மாறி வருகிறது. எதிர்கால துண்க ளான வளரும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது இந்த சமூகத்தின் முக்கிய பொறுப்பாகும்.  அமைதியான பாதுகாப்பான வீடு, கல்வி, மருத்துவம் சுதந்திரம் என்பன குழந்தைகளுக்கு சரியாக கிடைக்கும் வகையில் உத்தரவாதப்படுத்துவது ஒவ்வொரு பெற்றோரின் பொறுப்பு என கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பெரும்பகுதியான குடும்பங்கள், குறிப் பாக பெண்கள் தலைமை தாங்கும் குடும் பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள தனித்து வாழும் பெண்களின் குடும்பங்க ளில் வாழக்கூடிய குழந்தைகளின் நிலை மிக மோசமானதாக இருக்கும். அவர்கள் குழந்தைகளை அவர்களுடைய உரிமை க்கு ஏற்ப பாதுகாப்பது என்பது கேள்விக் குறியான ஒன்றே.

இன்றைய விலைவாசி உயர்வு, வேலையின்மை,கோவிட்- 19 போன்ற நேரங்களில் இழந்த வேலையும் வருமான மும் மிகப்பெரிய மன உளைச்சலையும் வேதனையும் ஏற்படுத்தி இருக்கக்கூடிய சூழலில் குழந்தைகளை பாதுகாப்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி யுள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கும் இடம் வீடு, கல்வி வளாகங்கள், விடுதிகள் போன்றவைகள் என நாம் நினைக்கிறோம். சமீபகாலமாக பள்ளி வளாகங்களில் குழந்தைகள் மீதான பாலி யல் வன்முறை, இயற்கைக்கு மாறான பள்ளி வளாக மரணங்கள், குழந்தை உழைப்பு, குழந்தைத் திருமணங்கள், குழந்தைகள் கடத்தல் மற்றும் விற் பனை செய்வது, பாலியல் தொழில் ஈடு படுத்துவது போன்ற குழந்தைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தெரு வோரச் சிறுவர்கள், வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் போன்றவர் கள் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஆகியவை குழந்தைகளின் உரிமையின் மீது மிகப் பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.

மேலும் பல்வேறு சட்டங்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக உரு வாக்கப்பட்டிருந்தாலும் அவற்றை முறை யாக நடைமுறைப் படுத்துவதில் ஏராள மான சிக்கல்கள் நிறைந்துள்ளன. சட்டத் தில் குறிப்பிட்டுள்ள அடிப்படையில் குழந் தைகள் உரிமைகளை பாதுகாப்பதற் கான நடைமுறைகள் என்பது கேள்விக் குறியாக உள்ளது. குறிப்பாக குழந்தை திருமணம் ஒழிப்புச் சட்டம் 1986, குழந்தை தொழிலாளர்கள் தடைச் சட்டம் 1993, கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் 1976, இந்திய குற்றவியல் சட்டம் 1860, நீதி முறை பாதுகாப்பு பராமரிப்பு சட்டம் 2000, ஆந்திர மாநிலத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் 1988. கர்நாடகா தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் 1982ல் கொண்டுவரப் பட்டது. பம்பாய் பிச்சை எடுக்கும் குழந்தை கள் தடுப்புச் சட்டம் 1959, இந்திய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் சீர்திருத்த சட்டம் 1986.  குழந்தை திருமண தடைச் சட்டம் 1929, தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்பு சட்டம் 1956, குழந்தைகள் மீதான பாலி யல் ரீதியான வன்முறை தடுப்புச் சட்டம் (போக்சோ) 2005 என பல்வேறு சட்டங்கள் குழந்தைகளை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டிருந்தாலும் கூட, குழந்தைகளை பாதுகாப்பதற்கான உரிய பாதுகாப்புகளை சட்டரீதியாகவும் அரசு நல திட்டங்களின் மூலமாகவும் அரசு போதிய கவனத்தோடு செயல்பட்டு இருக்கிறதா என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே உள்ளது. ஒவ்வொரு மனி தனுக்கும் கல்வி மிகவும் அவசியமானது என்பதை மறுப்பதற்கு இல்லை. கல்வி ஒரு கட்டாயமான ஒன்றாக இச்சமூகம் கருதும் இச்சூழலில் கல்வி வளாகங்களில் குழந் தைகளுக்கு பாதுகாப்பு உள்ளதா என பார்த்தால் சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்கள் பார்க்கும்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம், திண்டுக்கல் சக்தி கல்லூரியில் மாணவியின் சந்தேக மரணம், கடலூர் தனியார் பள்ளி மாணவி சந்தேகமான முறையில் இறந்தது இப்படிப்பட்ட இயற் கைக்கு மாறான சந்தேக மரணங்கள் அதிகரித்து இருக்கின்றன. 

 பாலியல் உறவு என்றால் என்ன வென்றே தெரியாத பச்சிளம் குழந்தை களை ரோஜா பூவை கசக்கிப் பிழிவது போல் ஐந்து வயது ஒன்றாம் வகுப்பு படிக் கும் குழந்தை அரசு பள்ளியில் ஆசிரிய ராக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது.  அருப்புக்கோட்டை கல்லூரியில் மாணவிகள் தவறாக பாலியல் ரீதியாக பயன்படுத்தியது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்த, படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளின் மீதான பாலியல் வன்முறை என சிறு குழந்தைகள் படிக்கும் ஆரம்ப கல்வி நிலையம் முதல் பல்கலைக்கழகங்கள் வரை மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் இக் காலத்தில் அதிகரித்திருப்பது கண்கூடாகப் பார்க்க முடியும். இந்த இடங்களில் குழந் தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. 

தில்லியில் போராடக்கூடிய மல்யுத்த  வீராங்கனைகளின் பாலியல் வன் முறைக்கு எதிரான போராட்டம் தீவிரம டைந்துள்ளது. அதில் 17 வயது மல்யுத்த பயிற்சி வீராங்கனை உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள். நாடாளுமன்ற உறுப்பி னராக இருக்கிற பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டதை வெளிப்படையாக புகார் அளித்தும் தொடர்ந்து பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தாங் கள் போராடி ஒரு உறுதியோடு இந்திய நாட்டின் மரியாதையைப் பாதுகாக்கக் கூடிய வகையில் மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடித்து வந்தே மாதரம் என்ற வார்த்தைகளால் புல்லரிக்க வைத்து வாங்கிய பதக்கங்களை கங்கையில் தூக்கி எரிகிறோம் என்று கண்ணீரோடு அந்த மல்யுத்த வீராங்கனைகள் சொன்ன தற்குக் கூட கலங்காத ஒன்றிய அரசு, பிரிஜ்பூஷண் சரண் சிங்கை பாதுகாப்ப தற்காக முயற்சி எடுப்பது உலக அளவில் இந்திய நாட்டின் மரியாதையை குறைத்து வருகிறது. இந்திய மகள்களாக மல்யுத்த வீராங்கனைகளை பாதுகாப்பதற்கான முயற்சி எடுக்காமல் அவர்கள் மீது தாக்கு தல் நடத்தி, பல நூற்றுக்கணக்கான அவர் களுக்கு ஆதரவானவர்களை கைது செய்து, அவர்கள் போராடிய இடத்தை அப்புறப்படுத்திய மிக கொடூரமான தாக்கு தல்கள் நடந்ததை நம்மால் பார்க்க முடியும்.

போக்சோ வழக்குப் பதிவு செய்த பிறகும் கூட ஒரு குற்றவாளி கைது செய்யப் படாமல் காலம் தாழ்த்துவது என்பது சட்டத்தில் இருக்கும் உரிமைகளுக்கு மாறானது என்பது நாம் அறிந்ததே. உத்த ரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியி லுமா ஹாத்ரஸ் பகுதியிலும் குழந்தைகள்  மீதான பாலியல் வன்முறை நடைபெற்ற  போது அந்த குழந்தைகள் மீதான வன் முறையை தடுப்பதற்கோ, அவர்கள் மேல் குற்றம் நிகழ்த்திய குற்றவாளிகளுக்கு சரி யான தண்டனையை பெற்றுக் கொடுப்ப தற்கோ மாறாக, பாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகிறார்: இப்படித்தான் அந்த குழந்தை இறக்க வேண்டும் என்று கடவு ளின் சித்தம் என்றால் நம்மால் மாற்ற முடி யாது என்று கூறுகிறார். இது எவ்வளவு மோசமான ஒரு கூற்றாக இருக்கும்.

அதுபோல பொதுவெளியில் வீடற்ற ஏராளமான குடும்பங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சாலை ஓரங்களில் படுத்து உறங்குவதும் குடும்பம் நடத்து வதையும் நம்மால் காண முடியும்.அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கும். குழந்தைகளை கடத்திச் சென்று பாலி யல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும் சேலத்தில் சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை கடத்திச் சென்று பாலியல் வன்முறையில் உள்ளாக் கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்ததை நாம் பார்த்தோம். அதேபோல ஒரு குழந் தையை பாலியல் வன்முறை செய்து படுகொலை செய்து அலுமினிய குண்டா னில் அடைத்து வைத்த கொடூரத்தை யும் நாம் பார்த்தோம். ஆத்தூர் சிறுமி ராஜ லட்சுமி என்கிற குழந்தையை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு தாயின் கண்முன்னே அவள் தலையை வெட்டி துண்டாடிய கொடூரத்தையும் இச் சமூகத்தில் பார்த்து இருக்கிறோம். தாம்பரம் அருகே 5 வயது சிறுமி ஹாசினி, வடசென்னை 3 வயது சிறுமி ரித்திகா, கடலூர் இரண்டரை வயது குழந்தை எனப் பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது. 

வீடு தான் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்று நினைத்தால் அங்கேயும் உற வினர்களால், வீட்டில் உள்ள நெருங்கிய உறவுகளால் ஏராளமான வன்முறைகளு க்கு உள்ளாக்கப்படுவது ஆய்வுகளின் மூலமாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளிப்படுத்தியுள்ளதை காண்போம். தந்தையே மகளை, சகோதரனே உடன் பிறந்தவளை, தாத்தாவே மகள் வழி பேத்தியை, மகன் வழி பேத்தியை, சித்தப்பா, பெரியப்பா, மாமா என குடும்ப உறவினர்களும் அந்த குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படக்கூடிய சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகும். இவை கள் குறித்து ஏராளமான புள்ளி விவ ரங்களை ஆய்வுகள் வெளியிட்டு வரு கின்றன. இவை வீடற்ற காரணத்தினா லும் நடைபெறுகிறது. வறுமையின் கார ணமாகவும் நடைபெறுகிறது. சமூகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும் அது நடைபெற்று வருகிறது. பெண் கருக் கொலை, சிசுக் கொலைக்கு எதிரான சட்டம், குழந்தைத் திருமண தடைச் சட்டம் அமலில் இருந்த பொழுதும் கூட சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குடும்பங்களில் நடைபெற்ற குழந்தை திருமணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. திண்டுக்கல், மதுரை போன்ற சில மாவட்டங்களிலும் குழந் தை திருமணங்கள் அதிகரித்து இருப்ப தாக தகவல்கள் கூறுகின்றன. கொரோ னா பெருந்தொற்று காலத்தில் குழந்தை கள் திருமணம் அதிகரித்துள்ளதாக தமிழக பெண்கள் ஆணையமும் அறி வித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்க தாகும். சட்டம் இருந்தும் கூட, தடுப்ப தற்கு மாறாக அவைகளை ஊக்கப்படுத் தும் வகையில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள், நானே குழந்தை திருமணம் தான் செய்து கொண்டேன் என்று பகிரங்க மாக கூறியிருப்பது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஆளுநரே இப்படிப்பட்ட வார்த் தைகளை வெளியிடுவது என்பது அவரு டைய தனிப்பட்ட கருத்தாக பார்க்க முடி யாது. அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லுகிற சட்ட பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கு முயற்சி எடுக்காமல் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்ப டையில் இப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிடுவது மிக மோசமானது.

பிஞ்சு நெஞ்சிலே நஞ்சை விதைப்ப தாக போதைப் பழக்கவழக்கங்களுக்கு ஆட்படுத்தப்படுவது இளம் மாணவர் பருவத்தை குறிவைத்து சமூகவிரோதிகள் செயல்படுவதையும் பார்க்க முடியும். போதைப் பழக்கம் என்று சொன்னால் நேரடியாக மது, கஞ்சா மட்டும் அல்ல. சாக்லேட், கூல்டிரிங்ஸ் போன்ற பல் வேறு வடிவங்களில் இப்பொழுது போதைப் பொருட்கள் வெளிவந்து கொண்டுள் ளன. கல்வி வளாகங்களை தேர்வு செய்து மாணவர்களை குறிவைப்பது ஆபத்தான விஷயமாக அதிகரித்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொலைக்காட்சி தொடர்களில் எப்படி ரகசியமாக விற்பனை செய்வது, மாணவர்களை எப்படி விலை க்கு வாங்குவது, அவர்களை வைத்து கல்வி வளாகங்களில் நேரடியாக போதைப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பது போன்ற காட்சிகளை நேரடி யாக வெளிப்படையாக காட்டுவது மாண வர் சமூகத்தை சமூக விரோதச் செயல்க ளில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்துவதா கவே அமையும். தொலைக்காட்சிகள் மற்றும் திரைப்படங்கள் சமூக வலை தளங்களில் வரும் இப்படிப்பட்ட மோச மான பழக்கங்களை வெளிப்படுத்தக் கூடிய காட்சிகளை தடுப்பதற்கான முயற்சி களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. 

சில குடும்பங்களில் பெற்றோர்களிடம் ஒற்றுமையின்மை என்பதையும் போதைப் பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்ட பெற்றோர்களால் குழந்தைகள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் குழந்தை கள் வாழ்வதை பார்க்க முடியும். அவர்கள் சிந்தனைத் திறன், கல்வி, பழக்க வழக் கங்கள் என அனைத்திலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை சமூ கத்திற்கு வேண்டாத குற்றவாளிகளாக உருவாக்கி வருகிறது. குற்றவாளிகள் என கருதப்படக்கூடிய சில சமூக விரோதச் செயல்களில் ஈடுபடக்கூடிய குழந்தைக ளை கூட, பாதுகாக்கக்கூடிய சிறார் சீர் திருத்த பள்ளிகளில் சமீபத்தில் செங் கல்பட்டில் இருந்து ஒரு மாணவன் படு கொலை செய்யப்பட்டதை நாம் அறி வோம். அப்படிப்பட்ட பல சிறார் சீர் திருத்தப் பள்ளிகளில் விடக்கூடிய குற்ற வாளி என கருதப்படும் குழந்தைகள் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும் அவர்களுக் கான கல்வியையும் பயிற்சியையும் எதிர்கால வாழ்க்கையையும் உத்தரவா தப்படுத்துவதற்கான தொடர் கண்கா ணிப்பு என்பது இன்றைக்கு அவசியமா கிறது. ஆகவே இப்படிப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் சிறப்பான முறையில் வளர்த்தெடுக்கப்படுவதும் சிறந்த கல்வியை கொடுப்பதும் நல்ல பழக்க வழக்கங்களோடு இந்த சமூகத்தை சிறப்பிக்கக் கூடிய சிற்பிகளாக இந்த குழந்தைகளின் மனநிலையில் ஒரு மாற்றத்தை உருவாக்குவது இன்றைக்கு மிகவும் தேவை. அப்படிப்பட்ட பாது காப்பான ஒரு சூழ்நிலையை குழந்தைக ளுக்கு உருவாக்கி அவர்களுடைய உரி மையை பாதுகாப்பதற்காக உருவாக் கப்பட்ட சட்டங்களை முறையாகப் பயன் படுத்துவது என்பது அவசியமாகும். குறிப்பாக போக்சோ எனப்படும் குழந் தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக உருவாக்கப்பட்ட சட்டத்தில் ஏராளமான பாதுகாப்பு விதிமுறைகள் இருந்தாலும் கூட வழக்குகள் பதிவு செய்வது என்பது மிகவும் குறைவான தாகவே உள்ளது. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கூட தண்டனை கிடைக்கப் பட்டவை ஒரு சிலவே. 

குறிப்பாக சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்களின் மூலமாக 2021ல் 50,1484 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டதாக மக்களவையில் தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு துறை தெரிவித்துள்ளது .26 மாநி லங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்க ளில் 640 விரைவு நீதிமன்றங்களும் 338 போக்சோ நீதிமன்றங்களும் ஆக மொத்தம் 1023 வரை நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள் அதிகமாக இருந்தாலும் கூட சட்டப்பூர்வ மான நடவடிக்கைகளுக்கு செல்வதற்கு பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் அச்சப் படுகின்றன. காரணம் சம்பந்தப்பட்ட குடும்பம், அவர்கள் சார்ந்த சமூக குடும்பப் பின்னணி பலம் பொருந்திய குற்றவாளி களின் குடும்பங்களின் தாக்குதல், அர சியல்வாதிகளின் தலையீடு போன்றவை களால் அதிருப்திக்கும் அச்சுறுத்தலுக் கும் ஆளாகப்படுகிற போது சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு செல்வதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தயங்கும் சூழ்நிலை உள்ளது. ஆகவே பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக சாட்சியம் அளிக்க வைத்து குற்றவாளிகளுக்கு உரிய முறையில் தண்டனை பெற்றுக் கொடுப்பது குழந்தை களுக்கு நாம் கொடுக்கும் பாதுகாப்பாக அமையும். இப்படிப்பட்ட பாதுகாப்பு உணர்வுகளை ஏற்படுத்தி குற்றங்களை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொள் வது என்பது இன்றைய தேவை என கருது கிறோம்.

மேலும் பள்ளி பாடத்திட்டங்களில் பாலின பாகுபாடற்ற சமூகத்தை உரு வாக்குவதற்கான பாலின சமத்துவ நிகர் நிலை கல்வி கொடுப்பதும் குழந்தை வளர்ப்பில் பாரபட்சமில்லாமல் இருப்பது போன்றவைகளும் கூடுதலாக குழந்தை உரிமையை பாதுகாக்க உதவும். 2030க்குள் பாலின சமத்துவத்தை நிலை நாட்டுவோம் என்று ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளது. அது நடை முறைப்படுத்த வேண்டும். குழந்தை உரிமைகளுக்கான, சர்வதேச உடன் படிக்கை குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் 54-சரத்துக்களை உள்ளடக்கி யதாகும். குழந்தை உரிமை அனைத்தும் மனித உரிமையே என்றும் பிரகடனப் படுத்த வேண்டும். குழந்தை உரிமையை பாதுகாக்கும் நோக்கத்துடன் தீர்மானங்க ளுடன் குமரியில் ஜூன் மாதம் 25ஆம் தேதி பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு கூடுகிறது. பெருந்திரளாய் பெண்கள், குழந்தைகள் அனைவரும் பங்கேற் போம். ஆதரவு தருவோம்.