articles

மணிப்பூர் முதல்வரே வெளியேறுக!

அமைதி ஏற்பட தடையாக உள்ளார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு வலியுறுத்தல்

மணிப்பூர் நிலைமை குறித்து நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பிலிருந்து பிரதமர் நழுவிக் கொண்டிருப்பதன் விளைவாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக சீர்குலைந்திருக்கிறது. 

புதுதில்லி, ஆக.8- மணிப்பூரில் இயல்பு நிலை மற்றும் அமைதி  திரும்பிட மேற்கொள்ள வேண்டிய முதல் நட வடிக்கையாக முதலமைச்சர் பைரேன் சிங் பதவி யை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்தியக் குழு கோருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழுக் கூட்டம் புதுதில்லியில் ஆகஸ்ட் 4-6  தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொட ர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

மணிப்பூர்

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக  மணிப்பூரில் ஏற்பட்டுள்ள இன மோதலால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வசிப்பி டங்களை இழந்து, மிகவும் மோசமான விதத்தில்  நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ள நிலைமைகளைக் கண்ட மத்தியக் குழு தன் கோபத்தை வெளிப்படுத்திக்கொள்கிறது. இந்நிலைமைக்கு மாநில அரசே முழுப்  பொறுப்பு என்பது தெளிவாகவே தெரிகிறது.  மணிப்பூர் நிலைமைகள் குறித்து எதுவும் கூறாது  பிரதமர் மவுனம் சாதிப்பதிலிருந்தும், ஒன்றிய அரசாங்கத்தின் வலுவற்ற தலையீடும், இவ்வாறு மணிப்பூர் மாநிலம் பற்றி எரிவ தற்கான நிலைமையை அனுமதித்ததில் ஒன்  றிய அரசாங்கம் கள்ளத்தனமாக உடந்தையாயி ருந்து வருவதையும் காட்டுகிறது. மணிப்பூர் நிலைமை குறித்து நாடாளு மன்றத்திற்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பிலிருந்து பிரதமர் நழுவிக் கொண்டி ருப்பதன் விளைவாக நாடாளுமன்ற நடவ டிக்கைகள் ஒட்டுமொத்தமாக சீர்குலைந்தி ருக்கிறது. மணிப்பூர் மோதல் வட கிழக்கில் உள்ள அண்டை மாநிலங்களுக்கும் பரவுவது  மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திடும்.

ஹரியானா மதவெறி வன்முறை

மேவாட் பிராந்தியத்தில் நூ என்னுமிடத்தி லிருந்து தொடங்கி, குருகிராம் மற்றும் இதர இடங்களுக்கும் பரவியுள்ள வன்முறை வெறி யாட்டங்களைத் தொடர்ந்து ஹரியானா பாஜக  அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள புல்டோசர்  அரசியலை மத்தியக் குழு கடுமையாகக் கண்ட னம் செய்கிறது. வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் கயவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, ஹரியானா பாஜக அரசாங்கம் முஸ்லீம் சிறுபான்மையினரைக் குறிவைத்து, அவர்களின் கடைகளையும் வீடு களையும் இடித்துத் தரைமட்டமாக்கிக் கொண் டிருக்கிறது. இக்கட்டிடங்களில் பலவற்றை அவர்கள் வைத்திருப்பதற்கு சட்டப்பூர்வமாக ஆவணங்களை வைத்திருக்கிறார்கள். சிலர் நீதிமன்றத்திலிருந்து தடையாணைகள் பெற்றிருக்கிறார்கள். இருப்பினும், பாஜக அரசாங்கம் இந்த சொத்துக்களை இடித்துத்  தரைமட்டமாக்கும் செயல்களைத் தொடர்கி றது. எனினும், கடந்த நான்கு நாட்களாக நடை பெற்றுவரும் இந்த இடிப்பு நடவடிக்கை களுக்கு பஞ்சாப் – ஹரியானா உயர்நீதி மன்றம் தடை விதித்திருக்கிறது.

வெறுப்புக் குற்றங்கள்

ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர், மிகவும் கொடூரமான முறை யில் அதிகாரி ஒருவரையும், மூன்று முஸ்லீம்  பயணிகளையும் மனிதாபிமானமற்ற முறை யில் வெறுப்புக் குற்றத்தின் கீழ் கொலை செய்தி ருக்கிறார். முஸ்லீம் சமூகத்தினரை இழிவு படுத்தி ஆர்எஸ்எஸ்/பாஜக-வினர் மேற் கொண்டுவரும் விஷத்தனமான வெறுப்புப் பேச்சுக்களும் பிரச்சாரங்களின் விளைவுதான் இத்தகைய குற்றங்கள் அதிகரித்துக் கொண்டி ருப்பதற்குக் காரணங்களாகும். நச்சுக் கலவை யுடனான இந்துத்துவா சக்திகளின் இத்தகைய  நிகழ்ச்சிநிரல் இந்தியக் குடியரசின் மதச்சார்  பற்ற ஜனநாயகக் குணத்தை அழித்துக் கொண்டி ருக்கிறது என்பதற்கு, கண்டிக்கத்தக்க இந்த  நிகழ்வு ஓர் எச்சரிக்கை மணியாகும்.

ஞானவாபி மசூதி தாவா

1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின்படி, வழி பாட்டுத்தலங்கள் சுதந்திரம் பெற்ற சமயத்தில் என்ன நிலையில் இருந்தனவோ அந்த நிலை  கறாராக அமல்படுத்தப்பட வேண்டும் என்று  கூறியிருக்கிறது. எனினும் நாட்டின் உயர்மட் டத்திலான நீதித்துறை இதனைக் கறாராக அமல்படுத்த முன்வராதது ஏன் என்பது புரி யாத புதிராக இருக்கிறது. அது சட்டமாக்கப் படும்போது மேற்கொள்ளப்பட்ட ஒரே விதி விலக்கு என்பது அயோத்தி தாவா மட்டுமே.  ஏனெனில் அப்போது அது நீதிமன்ற நடவ டிக்கைகளின்கீழ் உட்படுத்தப்பட்டிருந்தது.  அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 3 அன்று ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்திட இந்தியத் தொல்லியல் துறையை அனுமதித்து, தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்தச் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து உச்சநீதிமன்றம் பல முறை உயர்த்திப்  பிடித்திருந்தபோதிலும்கூட இப்போது இந்த  ஆய்வினை நிறுத்தி வைத்திட முன்வர வில்லை. நாட்டின் சட்டமான இந்தச் சட்டத்தைக் கறா ராக அமல்படுத்திட வேண்டும் என்று மத்தியக் குழு கோருகிறது. 

கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல்கள்

மோடி அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் சுருக்கிடும் விதத்தில் மாநில அரசாங்கங்கள் கடன் பெறுவதற்கான வரையறைகளில் சமீபத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கி றது. மாநில அரசாங்கங்கள் பட்ஜெட்டுக்குப் புறம்பாகவும் (off-budget) மற்றும் பட் ஜெட்டைவிடக் கூடுதலாகவும் (extra budgetary) கடன்கள் வாங்குவது இப்போது பொதுக் கடன்களின் ஒரு பகுதியாக (a part  of the public borrowings) கருதப்படுகிறது. ஆயினும் இதுபோல் ஒன்றிய அரசாங்கங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டால் அதற்கு இந்த வரையறைகள் பொருந்தாதாம். மேலும் இதனைப் பின்தேதியிட்டு பிரயோகித்திடவும் வகை செய்திருக்கிறது. கேரளா போன்ற ஒரு மாநிலத்திற்கு இதன்  பொருள் என்னவெனில், 2023-24ஆம் ஆண்டிற்  கான நிதிப் பற்றாக்குறை என்பது 17,310 கோடி  ரூபாய்களாகும் என்பதாகும். இவ்வாறு மாநில  சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்டி லேயே மிகப் பெரிய அளவில் பற்றாக்குறை  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது மாநில உரிமை கள் மீதான மோசமான தாக்குதலாகும்.

தில்லி அவசரச் சட்டம்

அதிகார வர்க்கத்தைக் கட்டுப்படுத்துவது உட்பட அரசாங்கத்தின் முக்கியமான பகுதிகள்  அனைத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசாங்கத்தின் உரிமைகளை உயர்த்திப் பிடித்து, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச்சட்ட அமர்  வாயம், சமீபத்தில் பிறப்பித்த தீர்ப்பை செல்லா ததாக்கும் விதத்தில் மோடி அரசாங்கம் ஓர்  அவசரச் சட்டத்தை, எதேச்சதிகாரமாக மிகவும்  வெட்கக்கேடான முறையில் பிறப்பித்திருக்கி றது. இது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, அர சமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவம்  மற்றும் ஜனநாயக அரசாங்கம் மக்களுக்குப்  பதில் சொல்ல வேண்டும் என்கிற நெறிமுறை கள் அனைத்திற்கும் எதிரானதுமாகும். மோடி அரசாங்கம் மக்களவையில் தனக்கி ருக்கும் மிருகத்தனமான பெரும்பான்மை யைப் பயன்படுத்திக்கொண்டும், மாநிலங்க ளவையில் பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய மாநிலக் கட்சி களின் ஆதரவுடனும் இதனை சட்டமாக நிறை வேற்றி இருக்கிறது.

சூறையாடப்படும்  நாட்டின் சொத்துக்கள்

கார்ப்பரேட்டுகள்-இந்துத்துவா மதவெறி யர்களின் கள்ளப்பிணைப்பின்கீழ், நாட்டின் சொத்துக்கள் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களின்கீழ் சட்டப்பூர்வமாக சூறையா டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாடாளு மன்ற நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதன் மூலமாக, நாட்டின் சொத்துக்களைத் தனியா ருக்குத் தாரை வார்ப்பதற்கு வசதி செய்துதரும் விதத்தில் முக்கியமான சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் 2023ஆம் ஆண்டு வன (பாது காப்பு) திருத்தச் சட்டமுன்வடிவும் அடங்கும்.  இதன்கீழ், வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின்  இயற்கை வளங்களைச் சூறையாட கார்ப்ப ரேட்டுகளுக்கு உதவும் விதத்தில் அவர்களுக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து காடுகள் அழிக்கப்படு வது நாட்டில் புவிவெப்பமயமாதலை மேலும்  மோசமானதாக்கிடும். 2023ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிம  வளங்கள் (வளர்ச்சி மற்றும் முறைப்படுத்தல்) திருத்தச் சட்டமுன்வடிவு, லிதியம் (Lithium) உட்பட மிகவும் விலைமதிப்புள்ள கனிம  வளங்களையும், முக்கியமான சுரங்கங்களை யும் தனியாருக்குத் தாரை வார்த்திட வசதி  செய்துதரும் விதத்தில் நிறைவேற்றப்பட்டி ருக்கின்றன. 2023 கடலோரப் பகுதி (வளர்ச்சி  மற்றும் முறைப்படுத்தல்) திருத்தச் சட்டமுன்  வடிவு, கடலோரங்களில் கச்சா எண்ணெய் எடுப்பதற்குத் தனியாருக்கு வசதி செய்து தரும் விதத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. 

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதி ராக தாக்குதல்களும், குற்றங்களும் அபாயகர மான முறையில் அதிகரித்துக்கொண்டிருக் கின்றன. தேசிய ஆவணக் குற்றக் காப்பகத்தின் தரவு களின்படி, நாள்தோறும் சராசரியாக 86 பாலியல்  வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்படு கின்றன, 2021இல் ஒரு மணி நேரத்தில் பெண்க ளுக்கு எதிரான குற்றங்கள் 49 பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. பாலியல் வன்புணர்வுக் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2020இல் 28,046 ஆக இருந்தது, 2021இல் 31,677ஆக உயர்ந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கை 2020இல் 3,71,503 ஆக இருந்தது, 2021இல் 4,28,278ஆக உயர்ந்தி ருக்கிறது. இவ்வாறு இழி நடவடிக்கைகளில் ஈடுபடும் கயவர்களுக்கு மோடி அரசாங்கம் அன்பும் அரவணைப்பும் காட்டிவருவதன் விளைவாக, இந்தக் குற்றங்களில் ஈடுபடும்  கயவர்கள் மத்தியில் தாங்கள் தண்டிக்கப்படு வோம் என்ற பயமே கிடையாது.

அதிகாரப்பூர்வ தரவுகள் குறித்து அச்சம்

தேசிய குடும்ப சுகாதார சர்வே-6இலிருந்து  ரத்த சோகை தொடர்பாகவும், ஊனமுற்றோர் சம்பந்தமாகவும் இருந்த வினாப்பட்டியல்கள் நீக்கப்பட்டிருப்பதற்கு மத்தியக்குழு தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறது. இதற்கு முந்தைய சர்வே, இந்தியாவில் உள்ள பெண்களில் 57 விழுக்காட்டிற்கும் அதிக மாகவும், குழந்தைகளில் 67 விழுக்காட்டிற்கும்  அதிகமாகவும் ரத்த சோகையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று வெளிப்படுத்தி இருந்தது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறக்கும் குழந்தைகள் மரணிப்பதற்கு இதர கார ணங்களைக் காட்டிலும் ரத்த சோகை முக்கிய பங்களிப்பினைச் செய்கிறது. ஊனமுற்றோர் தொடர்பான கேள்வி களை நீக்கியிருப்பது படு பிற்போக்கு நடவ டிக்கையாகும். மோடி அரசாங்கம் இவ்வாறு துல்லியமான தரவுகளை அளிப்பதை ஒழித்துக்கட்டுவது குறித்து வெட்கப்படுவதே கிடையாது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் உல கம் முழுதும் தரவுகள் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், இந்தியா வில் இது காலவரையறையின்றி தாமதமாகிக் கொண்டிருக்கிறது. சர்வதேச மக்கள்தொகை அறிவியலுக் கான இன்ஸ்டிட்யூட் இயக்குநர் (Director of the International Institute for Population  Science), கே.எஸ். ஜேம்ஸ், தேசிய குடும்ப சுகாதார சர்வே-5ஐ மேற்கொண்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு மத்தி யக்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. தேசிய குடும்ப சுகாதார சர்வே-5, மோடி அர சாங்கம் அவிழ்த்துவிடும் சரடுகளுக்கு, குறிப் பாக இந்தியா, “திறந்தவெளி மலஜலம் கழித்தல் இல்லாத (“open defecation free”)  நாடாக மாறிக்கொண்டிருக்கிறது என்ற சரடைப்  பொய்ப்பிக்கும் விதத்தில் அறிக்கை அளித்த தால், அவர் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்  பட்டிருக்கிறார்.

பழங்குடியினர்  எதிர்ப்புப் பேரணி

2023 வனப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டத் திற்கு எதிராகவும், பொது சிவில் சட்டத்திற்கு எதி ராகவும் ஆகஸ்ட் 9 அன்று நாடு தழுவிய அள வில் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திட பழங்குடியினர் அமைப்புகள் விடுத்துள்ள அறைகூவலுக்கு மத்தியக் குழு தன் ஆதர வினை விரிவுபடுத்திக்கொள்கிறது. இந்தச் சட்ட மானது, வன உரிமைகள் சட்டத்திலும், மற்றும் பல சட்டங்களிலும் பழங்குடியினருக்கு அளிக்  கப்பட்ட உரிமைகளை மறுக்கிறது. மேலும் இது  பல்வேறு சட்டங்களின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அரசமைப்புச்சட்ட உத்தரவாதங்களின்மீதும் நேரடியாகப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 

அறைகூவல்கள்

1. வரும் 2023 செப்டம்பர் 1-7 தேதிகளில் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், வேலை கள் உருவாக்கக் கோரியும் அகில இந்திய கிளர்ச்சி வாரம் அனுசரித்திட வேண்டும் என்று  அனைத்துக் கட்சிக் கிளைகளும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

2. பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் அகில இந்திய பிரச்சாரத்திற்கு அறைகூவல் விடுப்ப தற்காக, இடதுசாரிக் கட்சிகளின் சிறப்பு மாநாட்டை நடத்திட எவ்வளவு விரைவாக முடி யுமோ அவ்வளவு விரைவாக நடத்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.

3. மத்தியத் தொழிற் சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆகியவற்றின் கூட்டு  மேடையால் அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கை கள் திட்டத்திற்கு ஆதரவு அளித்திட வேண்டும்.

4. அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தினால் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ள 2023 அக்டோபர் 5 அன்று நடைபெறவுள்ள அகில இந்திய தில்லி பேரணிக்கு விரிவான முறையில் ஆதரவினை அளித்திட வேண்டும். 

தமிழில்: ச.வீரமணி