articles

img

நாக்கில் எச்சில் ஊறும், இனிப்புகளின் தோற்றத்தில் மெழுகுவர்த்திகள் - விக்னேஷ்

தீபாவளி என்றாலே நம் மனதில் தோன்றக் கூடியவை பல காரங்கள், இனிப்பு வகைகள். தீபாவளிக்கு இனிப்புகள் செய்து ஒரு வருக்கொருவர் பரிமாறிக் கொள்வது நம் கலாச்சாரம், அப்படி  இனிப்புகளை கண்டால் நாக்கில் எச்சில் ஊறும்...அந்த இனிப்புகள் போலவே மெழுகுவர்த்திகள் செய்து அசத்தி வருகிறார் தூத்துக்குடியை சேர்ந்த பட்டதாரி பெண் கீர்த்திகா. 2021 இல் இருந்து வீட்டில் வைத்து அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள் தொழில் செய்து வரும் இவர், தற்போது  வித்தியாசமான முறையில் இனிப்புகள் போன்று மெழுகுவர்த்தி செய்து அசத்தி  வருகிறார்.... பொதுவாக, நாம் மண் விளக்கு, அகல் விளக்கு, பீங்கான் விளக்குகளை தான் நாம் பார்த்திருப்போம்.. ஆனால் கீர்த்திகா ஒரு புது முயற்சியாக நம் இந்தியாவில் பிரபலமாக  உள்ள இனிப்புகள் போன்று மெழுகுவர்த்திகள் செய்து வருகிறார்.. முந்திரி  அல்வா, திருநெல்வேலி அல்வா, சூரிய கலா, சந்திர கலா (தஞ்சாவூர் பகுதியில் சிறப்பு வாய்ந்தது) காஜி கட்லி (வட மாநிலத்தில் சிறப்பு வாய்ந்தது), மற்றும் முறுக்கு, சோன்பப்டி, குளோப் ஜாமுன் வடிவில் மெழுகுவர்த்திகள் செய்து அசத்தி வருகிறார்..  இந்த புதுவித மெழுகுவர்த்தியை பார்க்கும் போது நாக்கில் எச்சில்  ஊறும்.. ஆனால் அதை எடுத்து  சுவைக்க முடியாது.. அவ்வளவு அற்புதமாக, அழகாக, ஸ்வீட்  போன்றே தத்ரூபமாக செய்துள் ளார். லட்டு போன்று வடிவில் உள்ள மெழுகுவத்தி 100 ரூபாய். மொத்தமாக வாங்கினால் 75 ரூபாய் வரையும் விற்பனை செய்கிறார். ஒவ்வொரு இனிப்பு கள் போன்ற மெழுகுவர்த்திகளுக்கும் ஒவ்வொரு விதமான விலை யில் விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து, கீர்த்திகா கூறுகையில், “பொதுவாக வீட்டில் பொருத்தக் கூடிய வகையில் இல்லாமல் வித்தியாசமான இனிப்பு வடிவில்  மெழுகுவர்த்திகள் செய்து வருகிறேன். தீபாவளிக்கு பொதுவாக ஸ்வீட்ஸ்கள், முறுக்கு வகைகள் செய்வோம், நான் அதே போன்று விளக்குகள் செய்து வருகிறேன். அல்வா, சூரிய கலா சந்திர கலா போன்ற மெழுகுவத்திகள், சோன்பப்டி,  போன்றவை தீபாவளிக்காகத் தயார் செய்து வருகிறேன். இதன் விலை  500 ரூபாய்.. மேலும், 25 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரைக்கும் மெழுகு வத்திகள் உள்ளன”. ஆன்லைன் மற்றும் வட்டாரக் கடைகளில் விற்பனை செய்து வரு வதாகக் கூறிய அவர் இந்த மெழுகுவத்திகள், பிற மெழுகுவத்திகள் போல் இல்லாமல் அதிக நேரம் எரியக் கூடியதாகவும், எரியும் போது வீட்டிற்குள் புகையும் வராமலும் இருக்கும், பொதுவாக, கச்சா எண்ணெயிலிருந்து, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களில் இருந்து எடுக்கப்படும் கழிவுப் பொருளில் இருந்து, சுத்திகரித்து எடுக்கப்பட்டு தயார் செய்வது தான் மெழுகுவர்த்திகள். ஆனால் (கீர்த்திகா) செய்யக்கூடிய இந்த மெழுகு சோயா வேக்ஸ் எனப்படும் சோயா எண்ணையிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்ற வேக்ஸ், தேனில் இருந்து பெறப்படும் தூய்மையான தேன்மெழுகு (beeswax) ஆகியவற்றை பயன்படுத்துகின்றோம் என்றார். இத்துடன் பல வண்ணங்களிலும் பல்வேறு மாடல்களிலும் கைவினைத் திறனுடன் உருவாக்குகிறேன் என்றார்.