articles

img

ஒளிச்சேர்க்கையை திறன்மிக்கதாக மாற்ற இயலுமா? - * ரமணன்

ஒளிச்சேர்க்கையை  திறன்மிக்கதாக மாற்ற இயலுமா?

மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த  தாவரவியலாளரான வாக்கர் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வை செய்திருக்கிறார். தாவரங்கள் நடத் தும் ஒளிச்சேர்க்கை அற்புதமானது என்றாலும் அது திறன் குறைந்தது. சூரிய ஒளியின் 1 சத வீதத்தையே  பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக இலைகள் மாற்றுகின்றன என்கிறார் வாக்கர்.  இதற்கு ஒளிச்சேர்க்கையின் முதல் படியில் நடை பெறும் தவறு பகுதிக் காரணம். ஒளிச்சேர்க்கை யின் போது ஒரு நொதிப்பொருள் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடைபிரித்து சர்க்கரை மூலக்  கூறுடன் இணைக்கிறது. ஆனால் பல நேரங்க ளில் கார்பன் டை ஆக்சைடிற்குப் பதிலாக, ஆக்சிஜனை எடுத்துக் கொண்டுவிடுகிறதாம். இதனால் உண்டாகும் கூட்டுப்பொருள் ஒளிச்  சேர்க்கையையே தடுத்துவிடுகிறதாம். ஒளி மூச்சு விடுதல்(photo respiration) என்கிற நிகழ்வின் மூலம் அந்தக் கூட்டுப்பொருள் நீக்  கப்படுகிறது. அதற்கு ஏராளமான ஆற்றல் தேவைப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய  மேற்குப் பகுதியில் மட்டும் கோதுமை, சோயா பீன்ஸ் ஆகிய பயிர்க் காலங்களில் இந்த நிகழ்வி னால் 148 ட்ரில்லியன் உணவுக்கலோரிகள் இழப்பு ஏற்படுகிறதாம். ஆகவே ஒளிச்சேர்க்கை யை திறன்மிகுந்ததாக மாற்றினால் உணவு உற்பத்தியில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். ஆனால் இதற்கு அறிவியலாளர்கள் முதலில் ஒளிச்சேர்க்கையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். வாக்கர் நடத்திய சோதனையில், ஒளிமூச்சு விடுதலில் உருவாகும் அமினோ அமிலங்கள், ஒளிச்சேர்க்கையின்போது தவ றாக உண்டாகும் கூட்டுப்பொருளை நீக்குவ தற்குப் பதிலாக புரதங்களை உண்டாக்குவ தற்காக மாற்றிவிடப்படுகின்றன என்பது தெரிய வந்தது. இதிலிருந்து ஒளிமூச்சு விடுதலை சீரமைத்தால் அதிகமான சத்துள்ள பயிர்களை  உற்பத்தி செய்ய இயலும். ஆனால் அவ்வாறு  செய்யும்போது என்ன விளவுகள் ஏற்படும் என்  பதையும் பார்க்க வேண்டும் என்கிறார் வாக்கர்.  அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கான உணவை தயாரிப்பது ஒரு பிரச்சினை. அதை  மாறிவரும் கால நிலையில் எவ்வாறு செய்வது  என்பது இரண்டாவது பிரச்சனை. இந்த இரண்டு  பிரச்சனைகளையும் தீர்க்க முயலும் ‘தாவர  அறிவியல்’ என்பது பெரும் துறை. ஆகவே  பல்வேறு பயிர்களில் தொடர்ந்து பரிசோதனை கள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் வாக் கர்.

மங்காத நாணயங்கள்

இத்தாலி நாட்டின் சார்டினியா தீவுக்கு அருகில், முக்குளிப்பவர் ஒருவர் கடலினடியில் உலோக நாணயங்களை கண்டுள்ளார். பின் இத்தாலி நாட்டு கடல் தொல்பொருள் ஆராய்ச்சி துறையை சேர்ந்த முக்குளிப்பவர்கள் அங்கு சென்று ஆராய்ச்சி செய்ததில், அவை கி.மு 4ஆம் நூற்றாண்டை  சேர்ந்த உலோக நாணயங்கள் என்று தெரிய வந்துள்ளது. கிட்டதட்ட 50000 நாணயங்கள் கிடைத்துள்ளன. ஒரு சிலவற்றைை தவிர மற்றவை அனைத்தும் சேதமடையாமல் உள்ளனவாம். சேதமடந்த நிலையிலுள்ளவைகளிலும் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் தெளிவாக உள்ளனவாம். இந்த நாணயங்கள் ரோமானிய பேரரசானன டையோகிளிடிஷியன் காலத்தில் பண சீர்திருத்தத்தை ஒட்டி வெளியிடப்பட்ட வெண்கல நாணயங்களாம்.

இரட்டை வைரஸ்

பேக்டீரியாக்களை தொற்றும் வைரஸ் கிருமிகளை பேக்டீரியோபேஜஸ் என்கிறார்கள். அப்படிப்பட்ட இரண்டு வைரஸ் கிருமிகள் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு வைரஸ்கள் இ்ணைந்திருப்பது காணப்படுவது இதுவே முதல்முறையாகும். இரண்டில் ஒன்று சிறியதாக அடர் நீலத்திலும்(purple) பெரியது நீல வண்ணத்திலும் காணப்பட்டது.. பெரிய வைரஸை ஹெல்ப்பர் வைரஸ் என்கிறார்கள். சிறிய வைரஸை துணைக்கோள் வைரஸ் (satellite virus)என்று அழைக்கிறார்கள்.  ஹெல்ப்பர் வைரஸின் உதவி இல்லாமல், சிறிய வைரஸால் தானாக தொற்றவோ புரவல உடலுக்குள் வளர்ச்சி அடையவோ இயலாது. எனவே ஒரு உயிரை தொற்றும்போது இரண்டும் இணைந்திருக்க வேண்டும். இந்த புதிய கண்டுபிடிப்பின்போது துணைக்கோள் வைரஸ் ஹெல்ப்பர் வைரஸின் கழுத்துப் பகுதியில் இணைவதை கண்டுள்ளார்கள். எலெக்ட்ரான்களை வீசும் நுண்ணோக்கியை பயன்படுத்தியபோது இந்த வியத்தகு நிகழ்வு காணப்பட்டதாம்.