ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுடன் அர்ஜெண்டினா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைக்கப் பட்டுள்ளன. முறையாக இணைவதற்கான மனுவினை தாக்கல் செய்திருந்த 22 நாடுகளுள் இவை 6 க்கு மட்டும் இணைவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு இணைப்பு நடந்துள்ளது. தற்போது, ‘பிரிக்ஸ்’ தலை மைப் பொறுப்பிற்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்கா, 40 நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறுகிறது. (ஜி-20 அமைப்பை விட) ஏன் திடீரென்று பிரிக்ஸ் இத்தனை ஈர்ப்பினை பெற்றது?
வேறுபட்ட அமைப்பு
பிரிக்ஸ் என்பது, உலக அமைப்புகளில் மிகவும் வேறுபட்ட அமைப்பு. ரஷ்யாவும் சீனாவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள். ரத்து (வீட்டோ) அதிகாரத்துடன் கூடிய நாடுகள். இவற்றுள் ஒன்று, ‘உயரடுக்கில் உள்ள - அதாவது- ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளுடன் பேரிட்டுக் கொண்டிருக்கிறது. இன் னொன்று அவர்களது ‘முக்கிய எதிரியாக’ சித்தரிக் கப்பட்டுள்ளது. பிரிக்ஸின் பிற நாடுகள் இது வரை உலக விவகாரங்களில் பெரிய அளவிற்கு முக்கியப் பங்கு வகித்ததில்லை. எனவே, இன்றைக்கு பிரிக்ஸில் மற்ற நாடுகள் இணைவதற்கான நோக்கம், உலக அரசியல் அரங்கில் தங்களுக்கு பெரிய முக்கியத்து வம் வேண்டி அல்ல; மாறாக, தற்போது அவர்க ளுக்குத் தேவைப்படுவது அரசியல் பொருளாதா ரத்துடன் கூடிய மீட்சி சார்ந்த வாய்ப்புகள். தற்போது உலகின் பல நாடுகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் கூட ‘பொருள் சுழற்சி தேக்க நிலை’ (“se cular stagnation”) என்று அழைக்கின்றனர். (பொருள் சுழற்சி தேக்கநிலை என்றால், சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தில் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கும் நிலை அல்லது பொருளாதார வளர்ச்சியே இல்லாத நிலை, கிராக்கி இல்லாத நிலை). இந்தச் சூழலில் இருந்து மீட்சி பெற பழைய சர்வதேச அமைப்புகள் மட்டும் போதுமானதல்ல. மேலும் ஏகாதிபத்திய நாடுகளால், அந்த பழைய அமைப்பு களை புதிய பொருளாதார சூழலுக்கேற்ற வகையில் மாற்றியமைக்கவோ அல்லது புதிய நிறுவன ஏற்பாடு களை செய்யவோ முடியவில்லை. மாறாக, பிரிக்ஸ், இந்த வகையில் பல புதிய உறுதிமொழிகளை எடுத்துள்ளது. நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஏகாதிபத்திய ஏற்பாட்டின் மீதான நம்பிக்கை யின்மையின் வெளிப்பாடு தான் 40 நாடுகள் பிரிக்ஸில் இணைய விருப்பம் தெரிவிக்கக் காரணம்.
ஆனால், இதனால் மட்டும் பிரிக்ஸ் என்பது “ஏகாதி பத்திய எதிர்ப்பு” குழுவாக மாறிவிடாது. அதில் உள்ள சில நாடுகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவை என்பதில் நமக்கு சந்தேகமில்லை. அதே நேரத்தில் எகிப்து, எத்தியோப்பியா, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யும் என்று நாம் கனவில் கூட, எந்த கற்பனையிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாது. அவை பிரிக்ஸில் இணைவது ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதாக இல்லாவிட்டாலும், வரும் நாட்களில் அவர்களுக்கு முக்கியமான ஆதரவை பிரிக்ஸ் வழங்க முடியும் என்ற நம்பிக்கை தான்.
மூன்று வகையான நாடுகள்
பிரிக்ஸில் தற்போது மூன்று வெவ்வேறு வகையான நாடுகள் உள்ளன. 1. ஏகாதிபத்தியம் தன்னிச்சையாக சில ‘தடைகளை’ அல்லது தண்டனையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை விதித்துள்ள நாடுகள்; 2. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் நாடுகள்; 3. தற்போதைய உலக நெருக்கடியின் மத்தியில் ஏற் கனவே சிரமங்களை அனுபவித்து வரும் அல்லது வரும் நாட்களில் அவ்வாறு அனுபவிக்கவிருக்கும்நாடுகள். சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவை முதல் வகையை சேர்ந்தவை ; ரஷ்யா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது வகையை சேர்ந்தவை ; எகிப்து, எத்தியோப்பியா, அர்ஜெண்டி னா மூன்றாவது வகையை சேர்ந்தவை (பிரேசில் மற்றும் இந்தியா ஆகியவை விரிவடையும் நெருக்க டியைப் பற்றி கவலைப்பட்டு மாற்று ஏற்பாடுகளில் ஆர்வமாக உள்ளவை).
ஈரானின் முக்கியத்துவம்
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அனுமதி இல்லா மல் கூட விதிக்கப்படும் ஒருதலைப்பட்ச ஏகாதி பத்திய தடைகளுக்கு உட்பட்ட நாடுகள், அந்த தடை களைக் கடந்து செல்வதற்கான சாத்தியப்படும் ஏற்பாடுகளை பிரிக்ஸ் செய்து கொடுக்கிறது. அந்த வகையில் பிரிக்ஸ் அமைப்பில் ஈரானைச் சேர்ப்பது ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட வேறு எந்த நடவடிக்கையையும் விட முக்கியமானது ஆகும். ஈரான் கடுமையான பொருளாதாரத் தடைக ளுக்கு இலக்கானது மட்டுமல்லாமல், உலகப் பெருநகர வங்கிகளில் வைத்திருக்கும் தனது சொந்த அந்நியச் செலாவணி இருப்புகளை அணுகுவதில் கூட அனுமதி மறுக்கப்பட்ட முதல் நாடு ஆகும். உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவும் இத்தகைய கடும் தடை களுக்கு இலக்கானது சமீபத்திய உதாரணம் ஆகும்.
எண்ணெய் நாடுகளின் வியூகம்
உலக மந்தநிலை காரணமாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் நாடுகள், விலை வீழ்ச்சியடைவதைக் கண்டு, உற்பத்தியைக் குறைத்து விலைகளை உயர்த்த முயற்சிக்கின்றன. இது அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிரானது. உண்மையில், இப்பிரச்சனையில் சவூதி அரேபி யாவிற்கு அமெரிக்கா அளித்த நிர்ப்பந்தம் பலனளிக்க வில்லை. எதிர்காலத்தில், எண்ணெய் உற்பத்தி செய்யும் சவூதி அரேபியா உள்ளிட்ட ‘ஓபெக்’ நாடுகள் அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக எண்ணெய் உற்பத்தி குறித்த முடிவினை சுயமாக எடுக்க வேண்டு மென்றால், போதுமான சுயாட்சியைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு அமெரிக்காவிற்கு விரோதமாக இருக்க வேண்டிய அவசியமின்றி, அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருப்பதில் இருந்து வெளியே வந்து விட்டால் பாதுகாப்பானது என்று அந்த நாடுகள் நினைத்ததன் வெளிப்பாடு தான் பிரிக்ஸ் அமைப்பில் சேர்வது என்ற முடிவு.
டாலரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவது
மூன்றாவது வகை நாடுகளான எகிப்து, அர்ஜெண்டி னா, எத்தியோப்பியா ஆகியவை கடுமை யாக நலிவடைந்துள்ள பொருளாதாரங்களைக் கொண்டவை. பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப் பிரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் கடு மையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்கு பிரிக்ஸ் மீதான ஈர்ப்பு, டாலரைக் கடந்து உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பு. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீர கத்தைப் போலவே பிரேசிலும் சீனாவும் சமீபத்தில் அத்தகைய உள்ளூர் நாணய வர்த்தக ஏற்பாட்டில் நுழைந்துள்ளன; வரவிருக்கும் நாட்களில் பிரிக்ஸ் உறுப்பினர்களிடையே இதுபோன்ற பல ஏற்பாடுகள் சாத்தியமாகும் என்பது தான், இந்த நாடுகள் பிரிக்ஸில் சேருவதற்கான முக்கிய ஈர்ப்பாகும். அத்தகைய ஏற்பாடுகளுக்குள் நுழையும் நாடுக ளுக்கிடையிலான ஒப்பீட்டு நாணய மதிப்புகள் (relative currency values- பிற வெளிநாட்டு நாண யங்களுக்கு எதிராக வர்த்தகம் செய்யும்போது அல்லது பொருட்களை வர்த்தகம் செய்ய பயன்படுத்தப்படும் போது ஒரு நாணயத்தின் வாங்கும் திறன்) நிலையான தாக இருக்கும். வர்த்தக பரிமாற்றங்களை மேற் கொள்ள அமெரிக்க நாணயமான டாலர் தேவைப் படாது. இத்தகைய ஏற்பாடுகளின் காரணமாக, டாலர் பற்றாக்குறையால் வர்த்தகம் தடைபடாமல், இந்த நாடுகளில் புழங்கும் நாணயத்தின் இருப்பையே திறம்பட விரிவுபடுத்துவதன் மூலமும், அந்த நாடுகள் சொந்தமாக எடுக்கின்ற முடிவுகளின் அடிப்படையில் நாணய விநியோகத்தை அதிகரிப்பதன் மூலமும் வர்த் தகத்தை தடைபடாமல் நடத்துவதை எளிதாக்கும்.
இன்னும் முன்னேற வேண்டும்
இருப்பினும் இது, ஒரு பாதி பிரச்சனைக்குத் தான் விடையளிக்கிறது; காரணம், இத்தகைய உள்ளூர் நாணயங்கள் மூலமான வர்த்தகம், உலகப் பொருளா தாரத்தில் உள்ளூர் பணப்புழக்கத்தின் இருப்பை விரிவு படுத்துகிறதே தவிர, அத்தகைய ஏற்பாட்டிற்குள் நுழை யும் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தால் எழும் வெளிநாட்டுக் கடனின் சிக்கலைச் சமாளிக்காது. எனவே, பிரிக்ஸ், இருதரப்பு வர்த்தக ஏற்பாடுகளை ஊக்குவிக்கும் போது, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி பற்றாக்குறையுடன் இருக்கும் நாட்டின் கடன் சுமையை அதிகரித்துக் குவிப்பதற்கு பதில், அந்த நாட்டிலிருந்து அதிகமான பொருட்களை வாங்கி வர்த்தகம் செய்வதன் மூலம் அந்த நாட்டின் நிலுவை கள் தீர்க்கப்பட வாய்ப்பு ஏற்படும். அப்போது, அது உலகப் பொருளாதாரத்தின் செயல்பாட்டை மேம் படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யும். அப்படிச் செய்யுமானால், அது ஏகாதிபத்திய மேலாதிக்க உலகப் பொருளாதார ‘ஒழுங்கிற்கு’ உண்மையான மாற்றாக அமையும்.
ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் பிடி தளரும்
பிரிக்ஸ் வங்கியின் புதிய இயக்குநரும், பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதியுமான தில்மா ரூசெப் - பொதுவாக மூன்றாம் உலக நாடுகளுக்கோ அல்லது உறுப்பு நாடுகளுக்கோ கடனைத் தீர்ப்பதற்கான கடனை வழங்குவதோ அல்லது சேவைக்காக கடன் வழங்குவதோ இந்த வங்கியின் நோக்கம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் உள்ளூர் நாணயம் மூலமான வர்த்தகத்தை விரிவுபடுத்துவ தற்கும், மூன்றாம் உலக நாடுகளின் உள்கட்டமைப் பிற்கும் இந்த வங்கி கடன் வழங்கும் என்பதை தெளிவு படுத்தியுள்ளார். இந்த நடவடிக்கையே ஏகாதிபத்திய ஆதிக்க நிறுவனங்களின் பிடியை தளர்த்த உதவும்.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஆக.31, 2023)
தமிழில் சுருக்கம் : ஆர்.எஸ்.செண்பகம்