articles

img

திரிபுரா தேர்தல் வாக்குச் சிதறலால் வென்ற பாஜக - அ.அன்வர் உசேன்

திரிபுராவில் பா.ஜ.க. தனது ஆட்சியை தக்க வைத் துள்ளது. எனினும் தொகுதிகள் மற்றும் வாக்குக ளில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. வாக்கு விவ ரங்களை ஆய்வு செய்யும் பொழுது “திப்ரா மோதா”  எனும் பழங்குடி இன மக்களின் அமைப்பு எதிர்க்கட்சிக ளுடன் சேராமல் தனியாக நின்றதுதான் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு வழி செய்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. பா.ஜ.க. தோற்கடிக்க முடியாத சக்தி அல்ல. ஆனால் அதற்கு எதிர்க் கட்சிகளிடையே ஒற்றுமை மிக அவசியம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த மதிப்பீடு எவ்வளவு சரியானது என்பதை மீண்டும் ஒரு முறை திரிபுரா தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியை அழிக்க திட்டம்

2018ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற பா.ஜ.க. ஒன்றை தெளிவாக உணர்ந்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வைத்தால் தனக்கு ஆபத்துதான் என்பதை உணர்ந்த பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கட்சியை சீர்குலைக்கவும் அழிக்கவும் அனைத்து முயற்சிகளையும் இந்த 5 ஆண்டுகளில் செய்தனர். மிகப்பெரிய தாக்குதல்க ளை கட்டவிழ்த்து விட்டனர். இந்த கோரத் தாண்ட வத்தின் சில வெளிப்பாடுகள்:

    22 கட்சி ஊழியர்கள் படுகொலை F    3254 கட்சி ஊழியர்கள் மீது கொலை வெறித்தாக்கு தல்கள்

    866 கட்சி மற்றும் வெகு மக்கள் அமைப்புகளின் அலுவ லகங்கள் தாக்கப்பட்டன

    மாநிலக் குழு அலுவலகம் தீக்கிரை

    கட்சி ஊழியர்களின் 3363 வீடுகளும் 659 கடைகளும் அழிப்பு

    கட்சி குடும்பங்களின் மீன் குளங்கள்/ இரப்பர் தோட்டங்கள் போன்ற வாழ்வாதார வசதிகள் நாசம்!

    பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற தோழர் மாணிக்சர்க்கார் மீது கொலை வெறி தாக்குதல்

    302 இடைக்குழுக்களில் 124ஆம் 24 மாவட்ட குழுக்களில் 7ம் தமது இடத்தை தவிர்த்து வேறு பகுதி களில் மாநாடுகளை நடத்த வேண்டிய தேவை ஏற் பட்டது. (இத்தகைய அடக்குமுறை சூழல்களிலும் மாவட்ட மாநாடுகளில் 100 சதவீத பிரதிநிதிகள் பங்கேற் றனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

இப்படி ஏராளமான பாசிசத் தாக்குதல்கள் கட்ட விழ்த்துவிடப்பட்டன. ஊடகங்களும் இந்த தாக்குதலிலி ருந்து தப்பவில்லை. பா.ஜ.க. ஆட்சியை விமர்சித்த காரணத்துக்காக 42 ஊடகவியலாளர்கள் நேரடியா கத் தாக்கப்பட்டனர். பல  ஊடகங்களின் அலுவல கங்கள் சூறையாடப்பட்டன. பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு 6 முறை பல உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்துள் ளன. அனைத்திலும் முறைகேடுகள் நடந்தது மட்டு மல்ல;  இடது முன்னணி வேட்பாளர்கள் 50 சதவீதத்துக் கும் அதிகமானவர்கள் வேட்பு மனுக்களை கூட தாக்கல் செய்ய  முடியவில்லை. இதே நிலைதான் ஏனைய எதிர்கட்சிகளுக்கும்! வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன. வாக்குகளை பா.ஜ.க. குண்டர் களே போட்டுக்கொண்டனர். 

பிளவு நடவடிக்கைகள்

தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.க. திரிபுராவில் இருவித பிளவுகளை உருவாக்க  முயன் றது. ஒரு பக்கம் மலைவாழ் மக்களுக்கும் ஏனையோ ருக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கியது. மறுபுறத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக் களை திரட்ட முயன்றது. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி யான ஐபிஎஃப்டி (IPFT) மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது. எனவே திரிபுரா மன்னர் குடும்பத் தால் உருவாக்கப்பட்ட  “திப்ரா மோதா” எனும் அமைப்பு டன் கூட்டு சேர முயற்சிகள் நடந்தன. இந்த அமைப்பு மலைவாழ் மக்களுக்காக தனி மாநிலம் எனும் முழக்கத்தை முன்வைத்து சுமார் 35 லட்சம் மக்கள் வாழும் திரிபுராவை இரண்டாக பிரிக்க முனைகிறது. இதன் மூலம் மலைவாழ் மக்களுக்கும் ஏனையோ ருக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த பா.ஜ.க. முயன்றது.

மறுபுறத்தில் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல்க ளை தொடுத்து முஸ்லீம் அல்லாத மக்களின் ஆத ரவை பா.ஜ.க.வுக்கு திருப்பிவிட சங் பரிவார அமைப்பு கள் முயன்றன. சில இடங்களில் மசூதிகளும் முஸ்லீம்களின் வீடுகளும் தாக்கப்பட்டன. திரிபுராவின் வரலாற்றில் மதக்கலவரங்கள் நடந்ததேயில்லை. ஆனால் குறுகிய ஆதாயங்களுக்காக இந்த  மத முரண்பாடுகள் கூர்மைப்படுத்தப்பட்டன. இப்படி பல முனைகளில் பா.ஜ.க. ஆட்சியின் அடக்குமுறைகளும் முறைகேடுகளும் மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கின. பா.ஜ.க.வுக்குள் கடும் கோஷ்டிப் பூசல்களும் அதிகரித்து வந்தன. எனவேதான் பிப்ளவ்தேப் தலைமையில் தேர்தலை சந்தித்தால் வெற்றி சாத்தியமில்லை என மதிப்பிட்ட பா.ஜ.க. தலைமை அவரை முதல்வர் பதவியிலிருந்து அகற்றி மாணிக் சாஹாவை முதல்வர் ஆக்கியது. 

அதே சமயத்தில் கட்சிக்கு எதிராக இன்னொரு பிரச்சாரமும் நடத்தப்பட்டது. முக்கிய எதிர்க்கட்சி எனும் தன்மையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இழந்துவிட்டது எனவும் அந்த இடத்தை திரிணாமுல் காங்கிரஸ் பிடித்துவிட்டது எனவும் பா.ஜ.க.வுடன் சில ஊடகங்களும் ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19.47 சதவீத வாக்குகளும் திரிணாமுல் 16.77 சதவீத வாக்குகளும் பெற்றது இதற்கு நிரூபணமாக கூறப்பட்டது. இதற்கு பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிட்ட பொழுது திரிணா முல் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வது தடுக்கப்படவில்லை எனும் உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் ஒரே நோக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாக கூட செயல்பட இயலவில்லை எனும் தோற்றத்தை உரு வாக்குவதுதான்! இத்தனை தடைகளையும் மீறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாது மக்கள் பிரச்சனைகளில் போராட்டங்களை நடத்தியது. எப்பொழுதும் மக்கள் பக்கம் நின்றது. மக்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்புகளை வலுவாக்க சாத்திய மான அனைத்து முயற்சிகளையும் கட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இந்த கால கட்டத்தில் வேறு எந்த  எதிர்க்கட்சியும் பா.ஜ.க.வுக்கு எதிராக களம் காண முன்வர இயலவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஒற்றுமையை நிராகரித்த  திப்ரா மோதா

இந்தச் சூழலில்தான் சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.வை தோற்கடிக்க ஒரு வலுவான ஒற்றுமை தேவை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிட்டது. அதன் அடிப்படையில் காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு உருவானது. அந்த கூட்ட ணியில் இணையுமாறு திப்ரா மோதாவுக்கும் அழைப்பு விடப்பட்டது. ஆனால் அந்த அமைப்பு ஒற்றுமைக் கான அழைப்பை நிராகரித்தது. எனவே மும்முனை போட்டி உருவானது. தேர்தல் முடிவுகள் கீழ்க்கண்ட வாறு அமைந்தன: 2021ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ.க. 60சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால் சட்டமன்ற தேர்தல்க ளில் அது 40 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் முறைகேடுகளும் வன்முறையும் தலைவிரித்தாடின எனும் குற்றச்சாட்டு உண்மை என்பது நிரூபணம் ஆகிறது. திப்ரா மோதா இடதுசாரிகளுடன் நின்றிருந்தால் பா.ஜ.க. ஆட்சியை  தக்க வைத்திருக்க இயலாது என்பதை ஒட்டு மொத்த வாக்கு விவரங்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு தொகுதியின் வாக்கு விவரத்தை ஆய்வு செய்தால் மேலும் 26 தொகுதிகளை பா.ஜ.க. இழந்திருக்கும் என்பது தெரிகிறது. அதாவது பா.ஜ.க. வெறும் 7 தொகுதிளில் மட்டுமே வென்றிருக்க முடியும். தான் மட்டுமே வென்று ஆட்சி அமைக்க முடியும் என திப்ரா  மோதா கனவு கண்டது. “எங்கள் குடும்ப அரண் மனையை விற்றாவது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பேன்” என  அதன் தலைவர் முழங்கினார். பா.ஜ.க.வின் சூழ்ச்சிக ளையும் வஞ்சகத் தன்மையையும் அவர் குறைத்து மதிப்பிட்டார் என்றே தெரிகிறது. 

              கட்சி             வாக்குகள்        சதவீதம்  தொகுதிகள்

பா.ஜ.க. கூட்டணி    10,16,888             40.23          33   
மார்க்சிஸ்ட் 
கம்யூனிஸ்ட் கட்சி+
காங்கிரஸ் 
கூட்டணி         8,93,789                              35.36       14   
திப்ரா மோதா    4,98,182                              19.70    13

திப்ரா மோதாவின் அடிப்படை கோரிக்கைகள் ஒற்று மைக்கு நெருடலாக இருந்தன. திரிபுராவின் பாரம்பர் யம் பழங்குடி மற்றும் பழங்குடி அல்லாதவர்களின் ஒற்றுமைதான்! திரிபுரா மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பழங்குடி இன மக்கள்! ஆனால் திப்ரா மோதா பழங்குடி இன மக்களுக்கு தனி மாநிலம் கோருகிறது. அந்த மாநிலத்தில் வங்க தேசத்தில் உள்ள சில பகுதிகளும் இணைக்க வேண்டும் என கேட்கிறது. இன்னொரு தேசத்தில் உள்ள பகுதிகள் எப்படி பெற இயலும்? இத்தகைய தனி மாநிலம் உரு வானால் அனைத்து பழங்குடி இளைஞர்களுக்கும் உடனடி அரசு வேலை கிடைக்கும் எனவும் அந்த மாநிலம் பூமியில் சொர்க்கம் போல இருக்கும் எனவும் பிரச்சாரம் செய்தனர். இது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி! எனினும் பழங்குடி மக்களிடையே இது ஆழமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்பதை வாக்கு விவரங்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க. வெல்ல முடியாத சக்தி அல்ல என்பதை திரிபுரா தேர்தல் முடிவுகள் தெளிவாக கூறுகின்றன. எனினும் அதற்கு எதிர்க்கட்சிகளின் வலுவான ஒற்றுமை தேவை! 2024 தேர்தல்கள் நெருங்கும் வேளையில் ஒற்றுமையை உருவாக்கும் இந்த கடமை தான் எதிர்க்கட்சிகள் முன் உள்ளது என்பதை கூறத்தேவை இல்லை.