ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்க அவதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றிக் கொண்டே இருக்கின்றன. முன் அவதாரம் அன்னா ஹசாரே என்றால் சமீபத்திய அவதாரம் திருவாளர் அண்ணா மலை. திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு, வீடியோ திரை காட்சிகள், சிறப்பு வலைதளங்கள் என அமர்க்கள மாக மீடியா முன் தோன்றி கொஞ்சம் அரசியல்வாதி களின் சொத்துப் பட்டியல்களை வெளியிட்டு அடுத்த பட்டியல் விரைவில் என சினிமா பாணியில் திரில் காட்டி “என் மண் என் மக்கள்” என கசிந்துருகி நடை பயணத்திற்கு தமிழ்நாட்டு மக்களை அழைத்தி ருக்கிறார். ஏற்கனவே கறுப்புப் பணத்தை , கள்ளப்பணத்தை ,வெளிநாட்டு பதுக்கல் பணத்தை எல்லாம் கொண்டு வருவதாக இவரது விஸ்வகுரு மோடிஜி கூறி நள்ளிரவில் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து பலநூறு பேரை சாகடித்து அப்பாவி மக்களை நோகடித்து இறுதியில் கறுப்பும் கள்ள பணமும் எல்லாவற்றையும் தன் கார்ப்பரேட் நண்பர்க ளுக்கு வெள்ளையாக்கி தந்து விட்டார். உலகிலேயே மிகப் பெரிய ஊழல் என்றால் இதுதான். கறுப்பை வெள்ளையாக்கிக் கொடுத்த ஊழல்
ஹிண்டன்பர்க் அறிக்கையின்படி அதானி அடித்த கொள்ளைகளை, சர்வதேச மோசடிகளை விசாரிப்ப தற்கே ஒத்துக் கொள்ளாமல் நாடாளுமன்றத்தையே முடக்கிப் போட்டிருக்கிறது பிஜேபி அரசு. பக்கத்து மாநிலம் கர்நாடகாவில் பிஜேபி முதல்வ ராயிருந்த எடியூரப்பா, அம்மையார் ஜெயலலிதா இருந்த பரப்பன அக்ரகார சிறையில் தான் ஊழல் குற்றங்களுக்காக அடைக்கப்பட்டிருந்தார். இன் றைக்கும் கர்நாடக பிஜேபி அரசு 40சதவீதம் கமிஷன் அரசு என சந்தி சிரிக்கும் அரசாக இருந்து கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் பிஜேபியின் சவுகான் ஆட்சியில் வியாபித்துக் கிடந்த வியாபம் ஊழல். ஊரெல்லாம் நாறிய ஊழல். சாட்சிகளை எல்லாம் கொலை செய்து சாதனை செய்த ஊழல்.
பஞ்சாயத்து வார்டு உறுப்பினரில் துவங்கி பிஜேபி பொறுப்பு வகித்த உள்ளாட்சிகளாகட்டும் நகராட்சி களாகட்டும் மாநகராட்சிகளாட்டும் ஒன்றிய- மாநில அரசு நிர்வாகங்களாகட்டும் எங்கேயாவது நேர்மையை காண முடிந்திருக்கிறதா? தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை,வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளான சமூக விரோதிகளை தேடித்தேடி கட்சியில் சேர்த்து மாநில அளவில் பொறுப்புகளையும் கொடுத்து சமூகத்தில் இன்று ‘ஆருத்ரா’ போன்ற நிதி மோசடிகள், ரவுடித்தனங்கள் பெருகுவதற்கு காரணமான பிஜேபி ஊழலைப பற்றி பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா?
ரபேல் போர் விமானங்களை வாங்கும் போது அரசு தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் கம்பெனிக்கு ஆர்டரை தராமல் அனில் அம்பானியின் லெட்டர்பேடு கம்பெனிக்கு கொடுத்து மூன்று மடங்கு விலை உயர்த்தி வாங்கிய மகா தேசபக்தி நடவடிக்கையில் கைமாறிய கோடிகள் எத்தனை? பிரதமர் நிவாரணநிதி என அரசுப் பூர்வ நிதித் தொகுப்பு இருக்கும் போது யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதல்லாத கேள்வி எழுப்ப முடியாத ‘பி.எம் கேர்ஸ்’ நிதித் தொகுப்பு எதற்காக ஏற்படுத்தப் பட்டது? அதில் சேர்ந்தது எவ்வளவு? செலவி டப்பட்டது எவ்வளவு? எதற்காக செலவிடப்பட்டது? அப்படி ஒரு மர்ம நிதி பிரதமருக்கு எதற்கு? தேர்தல் பத்திரம் என்று சொல்லி பெரு முதலாளி கள் கொடுக்கும் பெரும் தொகைகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பெற்றுக் கொள்ளும் ஏற்பாடு எதற்காக கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதன் மூலம் கைமாறிய கோடிகள் எத்தனை ஆயிரம்? கார்ப்ப ரேட்களுக்கு காட்டும் சலுகைகளுக்காக பெறப்படும் சன்மானம் தானே அப்பெருந்தொகைகள்.
சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற உறுப்பி னர்களை சுடச்சுட விலைக்கு வாங்கி அரசு அமைக்க கோவாவில், மத்தியப் பிரதேசத்தில், மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களில் செலவிடப்பட்ட கோடிகள் எவ்வளவு? ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு சுமார் 100 கோடி, இடம் மாற்றி மாற்றி தங்க வைக்கசொகுசு ஏற்பாடுகள் செய்ய, தனி விமானங்களை அமர்த்த என கொட்டப்படும் பல்லாயிரம் கோடிகள் பிஜேபிக்கு எங்கிருந்து வருகின்றது? ஊழல் சாக்கடையில் உருண்டு புரண்டு அதன் சுகத்தில் திளைத்து நாட்டையே நாறடித்துக் கொண்டி ருக்கும் பிஜேபி கட்சியின் தலைவர் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டிருப்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச்சுவை.