articles

img

தணிக்கை ஆணையம் அம்பலப்படுத்தும் மருத்துவ சிகிச்சை முறைகேடுகள் - அ.அன்வர் உசேன்

தணிக்கை ஆணையம் வெளியிட்டுள்ள இன்னொரு முக்கியமான ஆய்வறி க்கை பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜ்னா  (ABPMJAY  எனப்படும் மருத்துவ சிகிச்சை திட்டம் குறித்ததாகும். இந்திய மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று மருத்துவ வசதிகள் குறைபாடு! ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் மருத்துவச் செலவுகள் காரணமாகவே வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுகின்றனர். சுகாதாரத்துக்கு குறைந்தபட்சம் ஜி.டி.பி.யில் 3 முதல் 6% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இடது சாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசோ 1%க்கும் குறைவாகவே ஒதுக்கீடு செய்கிறது.  இந்த நிலையில்தான் பிரதமர் மோடி  2018ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ வசதி திட்டம் என ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா எனும் திட்டத்தை அறிவித்தார். உண்மையில் இது அரசின் நிதியில் உருவாக்கப்படும் திட்டம்  அல்ல; மாறாக மக்களின் மருத்துவ தேவை களை காப்பீடு திட்டங்கள் மூலம் பூர்த்தி  செய்வது ஆகும். இது காப்பீடு கார்ப்பரேட்டு களுக்கு லாபக்கொள்ளை அடிக்க வழி வகுக்கும் திட்டம். இந்த திட்டத்தில் கூட உரு வான பல முக்கிய குறைபாடுகளை தணிக்கை  ஆணையம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள் ளது. இந்த குறைபாடுகள் முறைகேடுகளுக் கும் ஊழலுக்கும் வழிவகுத்ததா என்பதை ஆணையம் குறிப்பிடவில்லை. அது ஆணை யத்தின் வரம்புக்குட்பட்டது அல்ல. ஆனால் அத்தகைய வாய்ப்புகள் இல்லை என கூறிவிட முடியாது. 

பயனாளி என தீர்மானிப்பதற்கு அடிப்படை எது?

இந்த திட்டத்துக்கு அடிப்படை Socio Economic Caste Census எனப்படும் சமூக  பொருளாதார சாதிய மக்கள் தொகை கணக் கெடுப்பு என ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் இந்த அடிப்படையே பல குறைபாடுகளை கொண்டுள்ளது என்பது தணிக்கை ஆணை யத்தின் கருத்து. இந்த கணக்கெடுப்பு 2011இல்  நடந்தது. 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல லட்சக்கணக்கானவர்கள் புதிதாக இந்த  திட்டத்தில் இணையும் தேவை ஏற்பட்டிருக்க லாம். அது பற்றி இந்த திட்டம் கவலைப்பட வில்லை என தணிக்கை ஆணையம் சுட்டிக் காட்டுகிறது. ஒன்றிய அரசின் திட்டத்துக்கு முன்பு பல மாநில அரசாங்கங்கள் தமக்கென தனித்தனியாக மருத்துவ திட்டங்களை வைத்திருந்தன. உதாரணத்துக்கு கேரளா அர சாங்கத்தின் மருத்துவ திட்டம் மிகச்சிறந்த ஒன்று. அதே போல தமிழ்நாடும் காப்பீடு திட்ட த்தை அமலாக்கி வந்தது. மாநில அரசாங்கங் களின் தகுதி வரையறைகளும் ஒன்றிய அரசின் வரையறைகளும் வேறுபட்டிருந்தன. ஒன்றிய  அரசின் PMJAY திட்டத்துக்கு பின்பு அனைத்து  மாநிலங்களும் அதில் சேர வேண்டிய நிலை உருவானது. இதனால் உருவான பல முரண் பாடுகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன என ஆணையம் சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர். 

தகுதியின்றி சிகிச்சை பெற்ற 1.93 கோடி பேர்

இந்த திட்டத்துக்கு பல்வேறு தகவல் தொழில் நுட்பத்தையும் தரவுகள் சேகரித்த லுக்கான மென் பொருளையும் ஒன்றிய அரசு தான் உருவாக்கியது. இதில் பல கோளாறு களும் குறைகளும் உள்ளன. இதன் விளை வாக பல முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள் ளது. அவ்வாறு நடந்தவற்றை தணிக்கை ஆணை யம் பட்டியலிடுகிறது. அவற்றில் சில: சிகிச்சை பெற தகுதிகள் இருந்தும் நிரா கரிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை-சுமார் 60 லட்சம்.  தகுதிகள் இல்லாமலேயே சிகிச்சை பெற்ற வர்கள் எண்ணிக்கை-சுமார் 1.93 கோடி.  இந்த திட்டத்தின் கீழ் 10.74 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என அறிவிக்கப் பட்டது. ஆனால் இதுவரை 4.70 கோடி குடும் பங்கள்தான் அடையாளம் காணப்பட்டுள் ளன. இதில் 1.89 முதல் 2.08 கோடி குடும்பங்கள் மட்டுமே தகுதி படைத்ததாக தீர்மானிக்கப் பட்டுள்ளன. தகுதி படைத்த அனைத்து குடும்ப ங்களையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவர தணிக்கை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

200 வயதுக்கும் மேற்பட்டோர்

22.78 லட்சம் விண்ணப்பதாரர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. சிலரின் பிறந்த வருடம் 1814/1821/1841 என குறிப்பிடப் பட்டுள்ளது. அப்படியானால் அவர்கள் வயது 200க்கும் மேல்!  இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ளவர் களுக்கு 9 இலக்க தனித்துவ அடையாள எண்  தரப்படுகிறது. இது வாழ்நாள் முழுவதும் பொருந்தக்கூடியது. ஆனால் ஆணையத்தின் மாதிரி ஆய்வில் ஒரே எண் இருவர் அல்லது மூவர் அல்லது நான்கு பேருக்கு கூட தரப் பட்டுள்ளது. அப்படி 1.57 லட்சம் எண்கள் தவறாக தரப்பட்டுள்ளன.

ஒரே குடும்பத்தில் 100 முதல் 200 பேர்

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 11  முதல் 50 என 43180, 50 முதல் 100 குடும்ப உறுப்பி னர்கள் என 12,100 முதல் 200 வரை என 4 பயனாளிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் முறைகேடுகள் நடந்திருந்தால் ஆச்சர்யம் இல்லை. 000000000000 எனும் ஆதார் எண் கீழ் 1285 பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதே போல 784545 என தொடங்கும் ஒரே ஆதாரின் கீழ் 1245 பெயர்களும் 21547 என தொடங்கும் ஒரே ஆதாரின் கீழ் 975 பெயர்களும் இணைக் கப்பட்டுள்ளன. இப்படி 5 ஆதார் எண் கீழ் 4761 பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களுக்கு காப்பீடு... குணமாகி சென்றவர்களுக்கு அறுவைச் சிகிச்சை

இறந்த 88,760 பேருக்கு சிகிச்சை அளித்த தாக காப்பீடு தொகை பெறப்பட்டுள்ளது. 2.25 லட்சம் பேருக்கு மருத்துவமனையிலிருந்து குணமாகி வெளியே சென்ற பின்னர் அறுவை சிகிச்சை செய்ததாக தரவுகள் உள்ளன.  இத்திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பே  சில மருத்துவமனைகள் சிகிச்சை செய்ததாக கணக்கு காட்டி பணம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் பெரியவர்களுக்கு செய்ததாக போலிக் கணக்குகள் காட்டப்பட்டுள்ளன. தகுதியற்றவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று காப்பீடு தொகையை வாங்கியது நடந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் (2019-20 ஆண்டுகளில்) அவ்வாறு ரூ.22.44 கோடியை தகுதியற்றவர்கள் பெற்றுள்ளனர். இதே போல லடாக்/ சண்டிகர் போன்ற பல பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

ஒரே நோயாளி ஒரே சமயத்தில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை

1081 நிராகரிக்கப்பட்ட பயனாளிகளின் அட்டைகள் மூலம் ரூ.71.47 லட்சமும் முடக்கப்பட்ட 590 அட்டைகள் மூலம் 55.31 லட்சமும் பெறப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவ மனைகள் அதற்கு பின்னரும் சிகிச்சை அளித்து ரூ.1.46 கோடி பெற்றுள்ளன. ஒரே நோயாளி ஒரே சமயத்தில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக கணக்கு காட்டி பணம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு 2231 மருத்துவமனைகள் முறைகேடு செய்துள்ளன. காப்பீடு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டிய ரூ.458.19 கோடி திரும்பப் பெறவில்லை. மேற்கண்ட குறைகளை ஒன்றிய அரசு உருவாக்கிய மென்பொருள் கண்டுபிடிக்கவோ அல்லது தடுக்கவோ இயலவில்லை.

ஒரு மெகா முறைகேடு

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் அலைபேசி எண் பெறப்படுகின்றன. அந்த எண்ணுக்குதான் அனைத்து தகவல்களும் அனுப்பப்படுகின்றன. எனவே அலை பேசி எண் முக்கியத்துவத்தை பெறுகிறது. ஆனால் ஒரே அலைபேசி எண் அல்லது பொய்யான அலைபேசி எண் எந்த அளவுக்கு இடம் பெற்றுள்ளது என்பதை ஆணையம் கீழ்கண்டவாறு பட்டியலிட்டுள்ளது: 9999999999 எனும் எண் 7,49,820 பெயர்களுடனும் 8888888888 எனும் எண்  1,39,300 பெயர்களுடனும் 9000000000 எனும் எண்  96,046 பெயர்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன.  இந்த 3 அலைபேசி எண்களும் பொய்யா னவை. ஆனால் இவற்றுடன் மொத்தம் 9,60,046 பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 20 அலைபேசி எண்கள்-10001 முதல் 50000 பெயர்களுடனும் 1435 அலைபேசி எண்கள்- 1001 முதல் 10000 பெயர்களுடனும் 185397 அலைபேசிகள் – 11 முதல் 1000 பெயர்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன என தணிக்கை ஆணையம் குறிப்பிடுகிறது. இந்த எண்கள்  மூலம் இத்திட்டத்தில் முறைகேடு நடந்திருந் தால் அது மிகப்பெரிய ஊழலாக அமையும்.

ரூ.47,000 கோடி முறைகேடுக்கு வாய்ப்பு

உதாரணத்துக்கு குறைந்தபட்சம் 20 அலைபேசி எண்களை 10,001 பேர் பயன்படுத்தினர் எனில் 2,00,020 முறை காப்பீடு  முறைகேடாகப் பெறப்பட்டுள்ளது என பொருள். 1435 அலைபேசி எண்களை 1001 பேர் பயன்படுத்தினர் எனில் 14,36,435 பேரும் 1,85,397 அலைபேசி எண்களை 11 பேர் பயன்படுத்தினர் எனில் 20,39,367 பேரும் ஆக மொத்தம் குறைந்தபட்சம் 46,35,868 (9,60,046+2,00,020+14,36,435+20,39,367)   பயனாளிகள் பெயரில் போலியாக காப்பீடு தொகை பெறப்பட வாய்ப்பு உள்ளது. இந்த  திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை பெறலாம்.  குறைந்தபட்சம் 1 லட்சம் தவறாக பெறப்பட்ட தாக வைத்துக் கொண்டாலும் கிட்டத்தட்ட ரூ. 47,000 கோடி முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த முறைகேடுகள் மூலம் சில தனி நபர்களோ அல்லது மருத்துவமனை களோ அல்லது காப்பீடு கார்ப்பரேட்டுகளோ பலன் அடைய வாய்ப்பு உள்ளது. இப்படி முறைகேடு நடந்ததா என்பதை விரிவான விசாரணை மூலம்தான் கண்டுபிடிக்க இயலும். அத்தகைய விசாரணைக்கு ஒன்றிய  அரசாங்கம் தயாராக இருக்குமா என்பது தான் கேள்வி.

காப்பீடு சுகாதார முறை தீர்வு அல்ல!

உலகமெங்கும் முன்வந்துள்ள அனுபவம் என்னவெனில் தனியார் காப்பீடு மூலம் உருவாக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளும் சுகாதாரக் கட்டமைப்புகளும் மக்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்வது இல்லை. இந்தியாவிலும் இதுதான் அனு பவம். காப்பீடு மருத்துவ முறையில் ஏராள மான முறைகேடுகளும் ஊழல்களும் நடக் கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இத்தகைய முறைகேடுகள் மொத்த சுகாதார செலவில் 10% என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய முறைகேடுகள் 35% வரை இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ABPMJAY எனும் இந்த திட்டம் உலகிலேயே மிகப்பெரியது என பா.ஜ.க. அரசு வாய்ப் பந்தல் அடிக்கிறது. இந்த ஆண்டு இத்திட்ட த்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.7200 கோடி.  இந்த திட்டம் மூலம் 12 கோடி குடும்பங் கள் அதாவது 50 கோடிப் பேர் பலன்பெறுவர் என அரசு கூறிக்கொள்கிறது. 50 கோடிப் பேரு க்கு 7200 கோடி என்பது ஒருவருக்கு ரூ. 144  மட்டுமே! அதாவது ஒன்றிய அரசு ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.144 மட்டுமே மருத்து வத்துக்கு ஒதுக்குகிறது.உலகிலேயே இந்த அளவுக்கு குறைவான ஒதுக்கீடு வேறு எங்கும் இருக்காது.

மக்களுக்கல்ல பலன், கார்ப்பரேட்டுகளுக்கே!

“அனைவருக்குமான சுகாதார பராமரிப்பு” என்பதுதான் உலகெங்கும் அம லாக்கப்படுகிறது. வளர்ந்த தேசங்கள் மட்டு மல்லாது மெக்சிகோ/பிரேசில்/சீனா போன்ற தேசங்களும் அந்த இலக்கை நோக்கி நெருங்கு கின்றன. இந்தியா போன்ற தேசங்களில் கல்வி யும் மருத்துவமும் முழுமையாக அரசின் கை களில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு பலன் கிடைக்கும். ஆனால் இந்தி யாவில் ஆடம்பர பெயர்களுடன் பகட்டான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அவை மக்களுக்கு பயன்படுவது இல்லை. மாறாக தனியார் கார்ப்பரேட்டுகளுக்குதான் பல னளிக்கின்றன. ABPMJAY திட்டமும் அதற்கு  விதிவிலக்கு அல்ல. இத்தகைய திருப்தி யற்ற திட்டங்களும் கூட பல முறைகேடு களுக்கு வழிவகுக்கின்றன என்பதையே தணிக்கை ஆணையத்தின் விவரங்கள் தெரி விக்கின்றன. ஊழலுக்கும் முறைகேடுகளுக் கும் அப்பாற்பட்டது பா.ஜ.க. அரசு என்பது உண்மையல்ல என்பது தெளிவாகிறது.