ஒரு கிராமத்தில ஒரு வயதான பாட்டி தனியா வாழ்ந்து வந்தாங்க. அந்தப் பாட்டியின் மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்தனர். பாட்டி தன்னைபோல் உள்ளவர்களுக்கு உதவினார். ஏழைகளுக்கு படிப்பு உதவி செய்தார். ஒருநாள் அந்த பாட்டி வீட்டுல் தோட்ட வேலைப் பார்த்தாங்க. ரெண்டு சிறுமிகள் தெருவில் விளையாண்டனர். அவர்கள் வைத்திருந்து கை பந்து உருண்டு வீட்டிற்குள் சென்றது. கதவை திறந்து எடுத்தனர்.
பாட்டி தனியா இருப்பதை கவனித்தனர். பாட்டி தோட்டத்தில் கொய்யா பறித்துக் கொண்டிருந்தார். இருவரும் பாட்டிய பயமுறுத்தலாம் என முடிவெடுத்தனர். ‘ப்பே’ எனக் கத்திப் பாட்டி மீது பந்தைத் தூக்கிப் போட்டனர். அந்த பந்து அவங்க மேல் படாமல், வீட்டு கதவுல பட்டது. கண்ணாடி உடைஞ்சு போனது. “பசங்களா! இங்க வாங்க” அப்படின்னு கூப்பிட்டாங்க. ‘போச்சு நம்மள திட்ட போறாங்க‘ என்று அந்த ரெண்டு சிறுமியும் நினைச்சாங்க. இப்ப, இவுங்க ரெண்டு பேரும் பயந்து நடுங்குனாங்க. “பந்தை எடுத்துக்கோங்க. ஏன் பயப்படுறீங்க? “ என்றார். ரெண்டு பழங்கள் பறித்து கொடுத்தாங்க. “பாட்டி ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க. எங்களை மன்னிச்சிடுங்க.” என கூறினார்கள்.அந்தச் சிறுமிகள் போயிட்டாங்க. அடுத்து ஒரு நாள் அந்த பாட்டி காய்கறி வாங்க போனாங்க. ரெண்டு பசங்க ஸ்கூல்ல போயிட்டு இருந்தாங்க. பாட்டியை பார்த்த ஒருத்தன், “ இந்த பாட்டிய பாத்தியா! எவ்வளவு சுருக்கமான மூஞ்சியோடும், பொந்து கண்ணோடு இருக்காங்க. ராத்திரி எவனாவது பார்த்தா செத்துருவான்.” என்றான். “ ஆமாண்டா! இந்த பாட்டினால் என்ன லாபம்? “ என்றான் மற்றொருவன்.
அவங்க பேசினது பாட்டியின் காதில் கேட்டது. “ நம்மள எப்படி சொல்றாங்க. ஆமா! அவங்க சொல்ற மாதிரிதானே இருக்கேன்!” ன்னு நினைச்சாங்க. அவுங்க யோசிச்சுகிட்டே கவலையோட போனாங்க. அந்த வழியா அந்த ரெண்டு சிறுமிகள் வந்தாங்க. “என்ன பாட்டி நீங்க ரொம்ப கவலையா இருக்கீங்க?” ன்னு கேட்டாங்க. ஒன்னும் இல்லப்பான்னு சொன்னாங்க. “இந்தாங்க! இந்த பழத்தை சாப்பிடுங்க” என கையில் உள்ள பழத்தைக் கொடுத்தார் பாட்டி. இருவரும் வாங்கிக் கொண்டனர். அந்தப் பசங்க ரோட்டில் விளையாடிக் கொண்டே பள்ளிக்குச் சென்றனர். ஒரு பஸ் வேகமாக வந்தது. அப்போ அந்தப் பசங்க பஸ்சை கவனிக்கலை. அந்தப் பாட்டி , “ தள்ளி போங்க! தள்ளி போங்க, பசங்களா! “ன்னு கத்தினாங்க. அது அந்தப் பசங்க காதல் விழலை. கேட்கவே இல்லை.
அந்தப் பாட்டி கிடுகுடுன்னு ஓடினாங்க. தன்னோட வயச கூட நினைக்காம ஓடி போயி, அந்தப் பசங்கள தள்ளிவிட்டாங்க. அந்தப் பாட்டி மேல பஸ்ஸு மோதியது. பாட்டி கீழே விழுந்ததில் இறந்துட்டாங்க. பசங்க பதறிட்டாங்க. இரண்டு பேரும் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க . “ நான்தான் பாட்டியை கொலை பண்ணினேன். என்னை மன்னிச்சிரு கடவுளே! என்னை மன்னிச்சிரு பாட்டி !’ இப்படிதான் ரெண்டு பேரும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அந்த ரெண்டு சிறுமிகள் கதறி அழுதார்கள். பாட்டியோட சொந்தக்காரங்களுக்கு போன் பண்ணி சீக்கிரம் வரச் சொன்னாங்க. பாட்டி அடிபட்டு கிடக்கிறாங்கன்னு சொன்னதும், சொந்தக்காரங்க, வெளிநாட்டிலிருந்து அவுங்க பிள்ளைங்க வந்தாங்க. பாட்டியம் அடக்கம் பண்ணினாங்க. இப்ப அந்த பசங்க யாரையுமே குறை சொல்றதில்லை. உங்களை நம்புறேன். சரிங்களா!