அமெரிக்க ஜனாதிபதி பைடன் இஸ்ரேல் நகரங்க ளில் ஒன்றான டெல் அவிவ் நகரத்திற்குச் சென்றிருப்பது, இஸ்ரேலுக்கான கண்மூடித்தனமான ஆதரவையே வெளிப்படுத்துகிறது. அமெரிக்கா, இஸ்ரேலை மேற்கு ஆசியா வில் அதன் புறக் காவல்நிலையமாக அமைத்து, வளர்த்து வருகிறது என்பது 1948இலிருந்தே மாறாத உண்மை என்பதை பைடனின் இந்த விஜயம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்கா, பல பில்லியன் டாலர்கள் உதவி மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வழங்கி இஸ்ரேலை ஒரு ராணுவ அரண் மிக்க நாடாக மாற்றி இருக்கிறது.
16 ஆண்டு கால முற்றுகை
இவ்வாறு செய்வதன் காரணமாக, அமெரிக்கா, பாலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறைகளையும், அவர்க ளுக்கு இழைக்கப்பட்டு வரும் அட்டூழி யங்களையும், மேற்குக் கரை போன்ற ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப் பட்ட பிரதேசங்களில் நடக்கும் இனச் சுத்திகரிப்புகளையும் கண்டுகொள்வ தில்லை. கடந்த 16 ஆண்டு காலமாக 23 லட்சம் பாலஸ்தீன மக்கள் வாழும் காசா, மனிதாபிமானமற்ற முறையில் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை அது ஆதரித்தே வந்திருக்கிறது.
சமீப காலங்களில், இஸ்ரேல், மேற்கு கரையில் யூதர்களின் குடியேற்றங்க ளை விரிவாக்கி வருவதன் மூலமும், ஒருவிதமான நிறவெறி ஒடுக்குமுறை அமைப்பைத் திணித்துவருவதன் மூலமும், ஐ.நா.மன்றத்தால் முன்மொ ழியப்பட்ட ‘இரு தேசக் கொள்கை’யை மிகவும் வேகமாக அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறது. இரு தேசக் கொள்கைக்கு உதட்டளவில் மட்டும் சேவை செய்துகொண்டு, அமெரிக்கா வும், அதற்கு எடுபிடியாகவுள்ள மேற்கத்திய நாடுகளும் இக்கொடூரமான திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கி வருகின்றன.
அரபு நாடுகளின் உதவி பெறும் முயற்சி தோல்வி
காசா மீது தரைவழி ஆக்கிரமிப்பைத் தொடங்க இஸ்ரேல் தயாராகிக் கொண்டி ருந்த அதேசமயத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், பைடனின் வருகைக்கு முன்னதாக, இஸ்ரேலையும், ஐந்து அரபு நாடுகளையும் சுற்றிவந்து, இஸ்ரேலின் தாக்குதலுக்கு, எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற அண்டை நாடுகளின் உதவி களைப் பெற முயற்சித்தார்.
பிளிங்கன், காசாவிலிருந்து பாலஸ்தீனர்கள் எகிப்துக்குள் ரஃபா வழி மூலம் வருவதற்கு எகிப்திய ஜனாதி பதியை இணங்கச் செய்வதில், தோல்வி யடைந்தார். பாலஸ்தீனர்கள் அவ்வாறு ஒருதடவை எகிப்துக்குள் வருவதற்கு அனு மதித்துவிட்டோமானால், அவர்கள் மீண்டும் காசாவிற்குத் திரும்ப அனு மதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்க ளை எகிப்தில் நிரந்தர அகதிகளாக மாற்றிட வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி சிசி அறிவித்தார். ஜோர்டா னும் தங்கள் பகுதிக்குள் மக்கள் வருவ தற்கான ஆலோசனைகளை ஏற்க மறுத்தது.
சக்தி வாய்ந்த ராக்கெட் குண்டுகள்...
பைடன் டெல் அவிவ் வருவதற்கு முந்தைய இரவு, தெற்கு காசாவில் உள்ள அல்-அஹ்லி ஆங்கிலிகன் மருத்துவ மனையில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மிகவும் கொடூரமான அளவில் படுகொலைகள் நடந்துள்ளன. இதில் இதுவரை 471 பேர் கொல்லப் பட்டுள்ளார்கள். இஸ்ரேலின் ராணுவம், வடக்கு காசாவில் உள்ள 22 மருத்துவ மனைகளும் தங்கள் நோயாளிகளையும், ஊழியர்களையும் 24 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்திட வேண்டும் என்றும், இல்லையேல் பின்னால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு என்றும் உத்தரவுபிறப்பித்திருந்த பின்னணியில் இந்தக் குரூரமான தாக்குதல் நடைபெற்றுள்ளது.
எல்லோரும் வெளியேற வேண்டும் என்கிற உத்தரவு அக்டோபர் 12 அன்று மாலை அளிக்கப்பட்டது. அல்-அஹ்லி மருத்துவமனை மீது அக்டோபர் 15 அன்று வெடிகுண்டு வீசப்பட்டு தீக்கிரை யாக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டிருப்பதற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்றும், அதற்கு இஸ்லாமிய ஜிகாத் தான் காரணம் என்றும் இப்போது இஸ்ரேல் கூறுகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த ராக்கெட் குண்டுகள் காசா தீவிரவாதிகள் வசம் இல்லை என்று ராணுவ வல்லுநர்களும் பல ஊடக விமர்சகர்களும் குறிப்பிட் டிருக்கிறார்கள்.
பைடனுக்கு ஏமாற்றம்
இருப்பினும், ஜனாதிபதி பைடன் வெட்கமின்றி இஸ்ரேல் கூறும் கூற்றையே ஆதரித்து, “இவ்வெடிகுண்டு தாக்குதல் மற்றக் குழுவால் மேற்கொள்ளப்பட்டது” என்று கூறியிருக்கிறார். இவ்வாறு, இஸ்ரேல் மேற்கொண்டுள்ள யுத்தக் குற்றங்களுக்கு பைடன் உடந்தையாக மாறியிருக்கிறார். அம்மானில் நடை பெறவிருந்த ஜோர்டான், எகிப்து மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி பைடனுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கி றது. இஸ்ரேல் மிகவும் கொடூரமான முறையில் குற்றங்களைச் செய்து கொண்டிருக்கக்கூடிய தருணத்தில், அமெரிக்காவின் கூட்டாளிகளாக இருந்திடும் எந்தவொரு அரபு நாட்டின் தலைவரையும் கூட, ஜனாதிபதி பைடனுடன் பார்க்க முடியவில்லை
இஸ்ரேலைப் பாதுகாத்திட அமெ ரிக்கா எந்த எல்லைக்கும் செல்லும் என்பது தெளிவாகத் தெரிகிறது. காசாவிற்கு உயிர்காக்கும் மருந்துகள் மனிதாபிமான அடிப்படையில் அனு மதிக்கப்பட வேண்டும் என்று பிரேசிலால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மா னம் கொண்டுவரப்பட்டபோது, அதனை அமெரிக்கா, தன் ரத்து (veto) அதிகாரத்தின் மூலம் ரத்துசெய்துள்ளது. உணவு மற்றும் மருந்துகளைக்கூட காசா மக்களுக்கு அளிக்காமல் அவர்களைப் பட்டினியில் தள்ளுவதற்கும் அமெரிக்கா உடந்தையாக இருந்துவருவதையே இது காட்டுகிறது.
100 டிரக் பொருட்கள் தேவை
மாறாக, பைடன் தன்னுடைய விஜயத்திற்குப்பின்னர், தான் இஸ்ரேலிய ராணுவ அமைச்சரவையிடம், ரஃபா வழியாக காசாவிற்கு உயிர்காக்கும் பொருள்களை அனுப்பிட அனுமதித்தி டுமாறு கேட்டுக்கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறார். இதன் விளைவாக, 20 டிரக்குகளில் அநேகமாக அக்டோபர் 20 அன்று பொருள்கள் அனுப்பி வைக் கப்படக்கூடும். இதுவும்கூட, எகிப்து இஸ்ரேலால் வெடிகுண்டுத் தாக்குத லுக்கு ஆளாகியுள்ள சாலைகளை சரி செய்தபின்பே சாத்தியமாகும். ஐ.நா. நிவாரண முகமை, குறைந்தபட்சம் நிவா ரணம் அளிக்கப்பட வேண்டுமானால்கூட, குறைந்தது 100 டிரக்குகளிலாவது பொருள்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.
காசா பகுதிக்குள் இஸ்ரேல் தரை வழியே நுழைவது இப்பிராந்தியத்தில் மோதலை விரிவாக்கிடும். ஏற்கனவே, இத்தகையதொரு தாக்குதல் நடை பெற்றால் தாங்கள் அமைதியாக இருந்திட மாட்டோம் என்று லெபனா னில் உள்ள ஹிஸ்புல்லா அறிவித்தி ருக்கிறது. காசாவில் நடைபெற்றுவரும் கொடூரமான தாக்குதலுக்கு எதிராக (பதினோராவது நாளான இன்று (அக்.19) இதுவரை, 1,100 குழந்தைகள் உட்பட 3,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்) அரபு நாடுகள் மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள மக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி கிளர்ச்சிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா இஸ்ரேலை அரசியல் ரீதியாகவும், ராணுவ உதவிகள் மூலமாகவும் ஆதரிப்ப தன் மூலம் உலகத்தின் பார்வையில் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.