articles

img

ஒரு விரல் புரட்சிக்கு தயாராவோம்! - - சி.பரமேஸ்வரி -

பெண் என்ற தாய்மையில் இருந்து தான் உலகின் உயிர்கள் அனைத்தும் தோன்றுகின்றன. ஒரு வெற்றிகரமான சமூகம் உருவாவதற்கு பெண்கள் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். குழந்தைகளை பெற்று வளர்த்து அவர்களை ஆளாக்கி குடும்பத்தை நிர்வகிப்பவர்கள் பெண்கள். அசாத்தியமான மனவலிமையும் பொறுமையும் உடையவர்களாக இருக்கிறார்கள்.  ஆனால் இத்தகைய பெண்களுக்கு உரிய அந்தஸ்தும் உரிமைகளும் பாதுகாப்பும் சமூகத்தில் மறுக்கப்படுகிறது.  இந்திய அரசியலமைப்பில் பிரிவு 14,15,21 ஆகிய பிரிவுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதில் எல்லா வகையான வேறுபாடுகளையும் களைந்து சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்துகின்ற பிரிவு 21ல் பெண்கள் பொது இடங்களில், பணியிடங்களில் மதிப்பாக நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நடைமுறையில் நாம் காண்பது பெண்கள் பாதுகாப்பற்ற நிலையோடும், அன்று தொடங்கி இன்று வரை பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். இருப்பினும்  பெண்கள்  கல்வி, தொழில் போன்ற துறைகளில் ஓரளவு வளர்ச்சியடைந்துள்ளனர். பெண்ணின் விடுதலைக்கும் பாரதியின் பாடல்கள், கவிதைகளுக்கும் பெரும் பங்கு உண்டு.  ஒவ்வொரு ஆணும் சமூகத்தில் பெண் பாதுகாப்பினை உறுதி செய்ய முன்வர வேண்டும்.  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பாரதியின் கனவை நனவாக்கி வருகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்தி வருகிறது. பெண்களை முன்னிலைப்படுத்த அவர்களை பயிற்றுவிக்க மாநில அளவில் பெண்கள் மாநாடுகளை நடத்தி  வருகிறது. இந்த 40ஆம் மாணிக்க ஆண்டில் நமது வாழ்வாதார உரிமைகளை, இழந்ததை மீட்கவும் இருப்பதை காக்கக்கூடிய மாநில மகளிர் மாநாடாக இன்றைய மாநாடு அமையட்டும். நமது உரிமைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு விரல் புரட்சி செய்ய 2024ம் ஆண்டில் தயாராவோம்.