articles

img

அறிவிலிருந்து அந்நியப்பட்ட ஆர்.என். ரவியின் பேச்சு - க.கனகராஜ்

விஞ்ஞான ரீதியாக ஹிட்லர்களையும், முசோலினிகளையும் உருவாக்குவது தான் உங்களுடைய திட்டம் என்றால் உங்களுடைய மாடல் ஐரோப்பிய மாடல் அல்லாமல் இந்திய மாடலா மிஸ்டர் ரவி? “ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே தத்துவம்” என்று ஆர்.எஸ்.எஸ். பேசும்  கொள்கைகள் எல்லாம் நேரடியாக ஐரோப்பிய நாஜிகளிடமிருந்தும், பாசிஸ்ட்டுகளிடமிருந்தும் கடன் வாங்கியது என்பதை ஆர்.என். ரவிக்கு யாராவது சொல்லி புரிய வைக்க வேண்டும். அவர் ஒன்றும் தேடி படிப்பவரும் அல்ல. சிரமப்பட்டு சிந்திப்பவரும் அல்ல.

மார்க்சியம் அந்நிய தத்துவம் என்றும், மார்க்சின் சிந்தனை இந்தி யாவை சிதைத்து விட்டது என்றும் மிகப்பெரிய கண்டுபிடிப்பை ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டிருக்கிறார்.  தமிழ்நாடு, அரசமைப்புச் சட்டம், மாநிலங்கள் உருவாக்கம் என்று ஒவ்வொன்றை பற்றியும் ‘வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டி’யில் வாசித்து விட்டு அதை வாந்தி எடுத்து முகர்ந்து பார்த்து சுகம் அடைவதில் ஆர்.என்.ரவிக்கு நிகர் அவர் மட்டுமே. இப்போது மார்க்சையும், மார்க்சியத்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறார். “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்பது வள்ளுவன் வாக்கு. அறிவில் அயலானது என்றும், உடன் பிறந்தது என்றும் பிரிக்க முடி யுமா? அயலானது எல்லாம் தவறு என்றும், தான் நினைப்பதே சரியென்றும் கொண்டாடுவது அறிவிலி களின் வழக்கமே தவிர; அறிவாளிகள் தேடிக் கொண்டே இருப்பார்கள். எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்களை எல்லாம் கொண்டு வர வேண்டுமென்று எங்கள் முண்டாசுக் கவிஞன் முரசறைந்து சொல்லியிருக்கி றான். தேடிப் படிக்க ஆர்.என். ரவிக்கு தோதுப்பட வில்லை என்றால் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

நாஜிகளிடமும் பாசிஸ்ட்டுகளிடமும்  கடன் வாங்கியது யார்?

மார்க்சியம் அந்நியத் தத்துவம் என்று சொல்லும் ஆர்.என். ரவிக்கு, ஆர்.எஸ்.எஸ். யாரைப் பின்பற்றி சாகா தொடங்கியது என்று தெரியுமா?. ஆர்.எஸ்.எஸ்.சை ஆரம்பித்தவர்களில் ஒருவரும், ஆர்.எஸ்.எஸ்.சின் முதல் தலைவருமான ஹெட்கேவரின் ஞான பீடமும், ஆர்.எஸ். மூஞ்சே இத்தாலிக்கு போனதும் முசோலினியைச் சந்தித்தும், கொலைகாரத் தத்துவத்தை கொண்டாடி மகிழ்ந்ததும், சாவர்க்கரும், கோல்வால்கரும் ஹிட்லரை மெச்சிப்புகழ்ந்ததும், உலகத்திற்கே அவர்கள் தான் வழிகாட்டி என்று சொன்னவர்களும் தான் ஆர்.என். ரவியின் ஆத்மார்த்த குருக்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் சாகா இத்தாலிய பாசிஸ்ட் முசோலினியிடமிருந்து கடன் வாங்கியது. சுவஸ்திக் கும் மார்பில் கை வைத்து வணங்கும் முறையும் நாஜி  ஹிட்லரிடமிருந்து கடன் வாங்கியது. இத்தாலிய வரலாற்று ஆய்வாளர் மார்சியா கசோலரி (MARZIA Casolari) மூஞ்சே முசோலினியை சந்தித்தது பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். மூஞ்சேவும் தன்னு டைய டைரியில் இந்த சந்திப்பை பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார். “போர் மட்டுமே மனித சக்தியின் உயர் மட்டத்தை  முன்னுக்கு கொண்டு வருகிறது. அதுவே மனித னின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. பாசிசம் அனைவருக்குமான அமைதி என்பதையும், அதற்கான சாத்தியத்தையும் மறுதலிக்கிறது. அமைதி, சகோதரத்துவம் என்பதெல்லாம் தியாகத்திற்கு பதிலாக கோழைத்தனத்தை முன்வைக்கிறது.” என்று முசோலினி சொன்னதை மூஞ்சே அப்படியே ஆதரித்து வழிமொழிகிறார்.

1934 ஜனவரியில் ‘பாசிசமும், முசோலினியும்’ என்ற தலைப்பில் ஹெட்கேவர் தலைமையில் ஒரு கருத்த ரங்கம் நடைபெற்றிருக்கிறது. அதே ஆண்டு மார்ச் மாதம் மூஞ்சே, ஹெட்கேவர் மற்றும் அவரது கூட்டத்தினர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் மூஞ்சே பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்: “இந்து தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் இந்துத்துவத்தை தரப்படுத்துவதற்கான ஒரு திட்டம் வைத்திருக்கிறது. இந்த திட்டத்தை நிறை வேற்ற வேண்டுமென்றால் ஓர் இந்துவை சர்வாதி காரியாக கொண்ட ஓர் ஆட்சியை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்குவதற்கு கடந்த கால மன்னர்க ளைப் போன்றோ அல்லது தற்காலத்தில் இத்தாலி யிலும், ஜெர்மனியிலும் இருக்கும் முசோலினி அல்லது ஹிட்லரைப் போன்றோ சர்வாதிகாரிகள் தேவை. ஆனால், இதன் பொருள் இந்தியாவில் யாராவது ஒரு சர்வாதிகாரி தானாக வரும் வரை கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டுமென்பதல்ல. நாம் விஞ்ஞான ரீதியான ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். விஞ்ஞான ரீதியாக ஹிட்லர்களையும், முசோலினி களையும் உருவாக்குவது தான் உங்களுடைய திட்டம் என்றால் உங்களுடைய மாடல் ஐரோப்பிய மாடல் அல்லாமல் இந்திய மாடலா மிஸ்டர் ரவி? “ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே தத்துவம்” என்று ஆர்.எஸ்.எஸ். பேசும்  கொள்கைகள் எல்லாம் நேரடி யாக ஐரோப்பிய நாஜிகளிடமிருந்தும், பாசிஸ்ட்டுக ளிடமிருந்தும் கடன் வாங்கியது என்பதை ஆர்.என். ரவிக்கு யாராவது சொல்லி புரிய வைக்க வேண்டும். அவர் ஒன்றும் தேடி படிப்பவரும் அல்ல. சிரமப்பட்டு சிந்திப்பவரும் அல்ல.

இன அழிப்பு வழியில் கொலைகாரத் தத்துவம்

ஆர்.எஸ்.எஸ்.சின் குருஜி என்று அழைக்கப்படுகிற கோல்வால்கர் ‘நாம் அல்லது நமது தேசியம்’ என்கிற  அவரது நூலில் இப்படி எழுதுகிறார்: “யூதர்களை முற்றிலுமாக துடைத்தெறிவதன் மூலம் இனம் மற்றும் கலாச்சார தூய்மையைப் பாதுகாப்பதில் ஜெர்மனி உலகத்தையே அசைத்துப் பார்த்திருக்கிறது. இந்துஸ்தானம் இந்த நல்ல பாடத்தை கற்றுக் கொண்டு பலனடைய வேண்டும்..... இந்த குறிப்பிட்ட சூழலில் நாஜிசம் ஜெர்மனியின் ஆபத்பாந்தவனாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.” ஓர் இனத்தை அழிப்பதை கொண்டாடியும், அது தங்களுக்கு பாடம் என்றும் சொல்லுகிற மிகக் கேவ லமான, மனித குலத்திற்கு விரோதமான ஒரு தத்து வத்தைச் சொன்னவர் உங்கள் குருஜி என்பதை உணர்ந்து கொண்டு பேசுங்கள் மிஸ்டர் ரவி. இன்னும் சொல்லப்போனால் மூஞ்சே “உண்மை யில் இந்துத்துவா தலைவர்கள் ஜெர்மனியின் இளைஞர் இயக்கமான ‘பாலில்லா’ மற்றும் இத்தாலி யின் பாசிச ஸ்தாபனத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இந்தியாவிற்கு முழுமையாகப் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா வின் குறிப்பிட்ட சூழலுக்கு பொருந்தும்படி அவற்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.” என்று பேசி யிருக்கிறார். இதைத்தான் ஆர்.எஸ்.எஸ். இப்போதும் கடைப்பிடித்து வருகிறது. இது தான் உங்கள் இந்திய தத்துவமா மிஸ்டர் ரவி?

உங்கள் தத்துவம் ஒரு கொலைகாரத் தத்துவம் என்றால் உங்களுக்கு ஏற்க மனமில்லாமல் போக லாம். ஆனால் மூஞ்சே “மத்திய இந்து இராணுவ சமூகம் மற்றும் இராணுவ பள்ளிக்கான முகவுரை” என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்: “இந்த பயிற்சி என்பது நம்முடைய பையன் களை மொத்தமாக மனிதர்களை கொல்லும் விளை யாட்டிற்கு தகுதியுள்ளவர்களாகவும், பொருத்த முள்ளவர்களாகவும் மாற்றுவதற்காகத்தான். வெற்றியை நோக்கமாக கொண்டு அதிகபட்ச இறப்புகளையும், சேதாரங்களையும் எதிரிகளுக்கு உருவாக்குவதே இந்த பயிற்சியின் மிக முக்கியமான நோக்கமாகும்.”  அவர்கள் எதிரிகள் என்று சொல்லுவது யார் என்று சொல்ல வேண்டியதில்லை. இந்திய மக்களில் ஒரு பகுதியினரை என்பது சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும். கொலையைக் கொண்டாடும் கருத்தை தத்துவமாக வைத்திருக்கும் ஆர்.என்.ரவி வகைய றாக்கள் ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிய அந்த கருத்தை இந்திய கருத்து என்று கொண்டாடுவதும், அனைவருக்குமான வாழ்வை உத்தரவாதப்படுத்தப் போராடும் தத்துவமாம் மார்க்சியத்தை அந்நியத் தத்துவம் என்று அவதூறு பொழிவதும் அறிவுடமை தானா மிஸ்டர் ரவி?

மார்க்சியம்  இந்தியாவை சிதைத்ததா?

மார்க்சியம் இந்தியாவை சிதைத்து விட்டதாக ஒரு கிணற்றுத் தவளையைப் போல ஆர்.என். ரவி பிதற்றியிருக்கிறார். உண்மையில் உலகத்தை செதுக் கியது மார்க்சியமே. செதுக்கிய ஒன்றை சிதைத்ததாக சொல்லுவது சிந்தனைச் சிதைவின் உச்சம். உலகத்தில் வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமையை முதன் முதலில் அளித்து அழகு பார்த்தது மார்க்சியம், சோசலிச சோவியத் யூனியன். இந்த நாகரீக நடவடிக்கையை வேறு எந்த தத்து வமாவது அதற்கு முன்பு யோசித்தாவது பார்த்த துண்டா? இங்கிலாந்திடம், பிரான்சிடம், போர்ச்சுக்கலிடம், டச்சுக்காரர்களிடம், ஸ்பானியர்களிடம் ஏராளமான நாடுகள் அடிமைப்பட்டு, காலனி நாடுகளாக இருந்தன. மார்க்சியத்தால் உந்தப்பட்ட சோசலிசப் புரட்சி தான் உலகம் முழுவதிலும் இருந்த காலனி நாடுகளுக்கு உத்வேகம் அளித்து விடுதலைப் போராட்டத்தை விரைவுபடுத்தியது. இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக குழந்தை முதல் முதியவர் வரை போராடிக் கொண்டி ருந்தார்கள். சிறைக்குப் போனார்கள், செக்கிழுத் தார்கள், தூக்குமேடை ஏறினார்கள், குண்டடிபட்டுச் செத்தார்கள், குடும்பத்தை இழந்தார்கள். இத்தனை யும் நடந்து கொண்டிருந்தபோது, ஆங்கிலேயர்களிடம் கூடிக் குலாவி கும்மாளம் அடித்த கும்பல் ஆர்.எஸ்.எஸ். இந்து மகா சபா என்பதை ஆர்.என். ரவி அறியட்டும். 1921இல் அப்போது தான் தோன்றியிருந்த கம்யூ னிஸ்ட்டுகள், காங்சிரஸ் மகா சபை கூட்டத்தில் இந்தியாவிற்கு பூரண சுதந்திரம் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்கள். (ஆர்.என். ரவி கம்யூ னிஸ்ட்டுகள் எப்படி காங்கிரசில் இருந்தார்கள் என்று கேட்கக் கூடும். அவர் மூளையை அப்படியே பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு சிரமம் கொடுக்கக்  கூடாது என்று கருதி ஒன்றை சொல்லி வைக்க விரும்பு கிறோம். வெவ்வேறு கட்சிகளிலும் இருந்தவர்கள் அன்றைக்கு காங்கிரசிற்குள்ளும் இணைந்தும் செயல்பட்டார்கள்.) அப்படி முன்மொழிந்தவர் மௌலானா ஹஸ்ரத் மொஹானி, வழிமொழிந்தவர் சுவாமி குமரானந்தா. உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஹிட்லரையும், முசோலினியையும் அவர்களுக்கு துணையாக இருந்த ஜப்பானின் டோஜோவையும் முறியடித்து உலகத்தை காப்பாற்றுவதற்காக தனது மக்கள் தொகையின் 10 சதவிகிதத்தை அதாவது, 2 கோடி பேரை இழந்தது மார்க்சியத்தை பின்பற்றிய சோசலிச சோவியத் யூனியன்.

அறிவியல் முன்னேற்றமும் சிதைப்பும்

புதிதாக விடுதலையடைந்த நாடுகள் தொழில் நுட்பத்திற்காக கையேந்திய போதெல்லாம், முதலா ளித்துவ நாடுகள் உங்களுக்கு எதற்கு தொழில் நுட்பம்; பொருட்களையே உற்பத்தி செய்து தரு கிறோம் என்று சொன்னபோது, சோசலிச சோவியத் யூனியன் தான் தொழில்நுட்பங்களை உலகம் முழு வதும் உள்ள ஏழை நாடுகளுக்கும் கொடுத்தது.  இந்தியாவின் உருக்காலைகள், அணுமின்நிலை யங்கள், துறைமுகக் கட்டுமானங்கள், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இவையெல்லாம் சோசலி சம் இந்தியாவுக்கு கொடுத்த கொடைகளில் சில. 20 கோடி மக்கள் தொகையை மட்டுமே கொண்டி ருந்த சோவியத் யூனியன் அது பங்கேற்ற ஒலிம்பிக்  பந்தயங்களில் இரண்டைத் தவிர மீதி அனைத்திலும் பதக்கங்கள் பெற்று முன்னிலையில் இருந்ததை ஆர்.என். ரவி போன்றோர் அறிய மாட்டார். ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கிற மூட நம்பிக்கைகள், பசுவின் முன்னே மனிதனை மண்டியிடச் செய்து கொண்டிருந்த போது முதன் முதலாக செயற்கைக் கோளை (ஸ்புட்னிக்) விண்வெளிக்கு அனுப்பியதும், விண்வெளிக்கு முதலில் ஒரு உயிரினம் என்கிற முறையில் நாயை (லைக்கா) அனுப்பியதும், ஒரு பெண்ணை (வாலண்டினா தெரஸ்கோவா) விண்வெளி க்கு அனுப்பியதும், ஒரு மனிதன் (யூரி ககாரின்)  விண்வெளிக்கு சென்றதை சாத்தியமாக்கியதும் மார்க்சியத்தை பின்பற்றிய ஒரு நாட்டின் சாதனை. நீங்கள் அறிவியலை சிதைத்துக் கொண்டிருந்த போது, மார்க்சியத் தத்துவம் அறிவியலைக் கொண்டு முன் னேற்றங்களை செதுக்கிக் கொண்டிருந்தது. சோவியத் யூனியனும், சோசலிச முகாமும் இருந்த வரைக்கும் அமெரிக்காவோ, வேறு எந்த நாடுமோ இன்னொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்ததே இல்லை. எளிய நாடுகளின் பாது காவலனாக சோசலிச முகாம் விளங்கியதற்கான அடிப்படையான காரணம் மார்க்சியம் என்பதை மத வெறியர்கள் அறிய மாட்டார்கள். மனிதத்தை நேசிக்கி றவர்களுக்கு அது புரியும்.

உலகின்  பாதை மார்க்சியம்

கொரோனா வந்ததும் கைதட்டு, மணி அடி,  விளக்கு ஏற்று என்றெல்லாம் சொல்லிக்கொண்ட வர்கள் தங்களை விஸ்வ குரு என்று மார் தட்டிக் கொண்ட போது, 1.12 கோடி மட்டுமே மக்கள் தொகை கொண்ட சோசலிச கியூபா உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பி மக்களை காப்பாற்றியது. எபோலா வைரஸ், அமெ ரிக்காவை சுருட்டிய புயல் என்று பேரிடர் எங்கு வந்தா லும் யாரும் கேட்காமலேயே உதவிக்கரம் நீட்டுகிற மாண்பை உலகிற்கு அளித்தது மார்க்சியம் தான். இதோ அருகில் உள்ள கேரளா இந்தியாவில் மனிதவளக் குறியீட்டில் முன்னணியில் இருக்கிறது. கல்வி அறிவில் முன்னேறித் திகழ்கிறது. தமிழ்நாடு நிகர மேற்படிப்பு மாணவர்களின் விகிதத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது. கொரோனாவை எதிர்கொள்வதில் கேரளாவின் பங்களிப்பை உலகப் புகழ் பெற்ற 38 பத்திரிகைகள் தலையங்கம் எழுதியும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டும் பாராட்டியிருக்கிறது. உலக சுகாதார நிறுவனமும் பாராட்டியது. இந்தியாவில் பாஜக ஆளும் எந்த மாநிலத்தையும் இப்படி யாரும் பாஉங்கள் பாதை அழிவின் பாதை; எங்களது மார்க்சி யம் அறிவின் பாதை. அதுவே உலகின் பாதை. ராட்டியது கூட கிடையாது.

உங்கள் பாதை அழிவின் பாதை; எங்களது மார்க்சி யம் அறிவின் பாதை. அதுவே உலகின் பாதை. 

கட்டுரையாளர்: மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)