articles

img

பட்டியல், பழங்குடியின மக்களுக்கு நிலம், உணவு, வேலை வழங்குக! - எம்.சின்னதுரை எம்எல்ஏ.,

தமிழ்நாடு சட்டப் பேரவையில் வெள்ளியன்று (மே 6) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர் எம்.சின்னதுரை ஆற்றிய உரை:

எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் படைப்புகளை நாட்டுடைமையாக்குக!

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மார்ட்டின் லூதர் கிங், ஆங்சான் சூகி, மாமேதை காரல்மார்க்ஸ் போன்ற தலைவர்களின் வரலாற்றையும், பாலஸ்தீன விடுதலை இயக்கம், அயர்லாந்து போராட்டம், சாசன இயக்கம் அந்தமான் சிறை என பலதரப்பட்ட தலைப்புகளில் 98 புத்தகங்களை மறைந்த எழுத்தாளர் தோழர் என். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். அவை தமிழ் சமூகத்திற்கு பயன்தரக்கூடியவை என்பதால் அவரது படைப்புகளை நாட்டுடமையாக்கிட கேட்டுக் கொள்கிறேன்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை கல்வி மற்றும் சமூக பொரு ளாதார நிலைகளில் உயர்வடையச் செய்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்க திட்டங்களை அறிவிப்பு செய்துள்ள முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்.

தேசிய ஆணையமும்  மாநில ஆணையமும்

தமிழ்நாட்டில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் - முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண உதவிடும். மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  அளித்த கோரிக்கை மனுக்களுக்கு தேசிய ஆணை யத்தின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளில் தலையிட முடியாது என்று அறிவித்துவிட்டன. தேசிய ஆணையத்தின் முடிவு இறுதியானது என தெரிகிறது.  மாநில சட்டத்தில் இது சம்பந்தமான பிரிவுகளில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். தேசிய ஆணை யம் தலையிட்டால், மாநில ஆணையங்கள் தலை யிடக் கூடாது என்று குறிப்பிடவில்லை. மாநில அரசின் ஆணையத்திற்கு இந்த சட்ட ஆலோசனை அளித்து, திருப்பி அனுப்பி வைத்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும். தேசிய ஆணையம் கள ஆய்வு  செய்யும் போது மாநில ஆணையமும் விசாரணை மேற்கொள்வதற்கு தகுந்த சட்டங்களை இயற்ற வேண்டும்.

கண்காணிப்புக் குழு

மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண் காணிப்பு குழு கூட்டம் நடத்தப்படாமல் காலம் கடந்தது. அதனை திருத்தியமைத்து நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களை பங்கேற்கச் செய்து முறையாக தமிழக முதல்வர் தலைமையில் நடந்தது, எஸ்.சி., எஸ்.டி. மக்களின் வாழ்வில் பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஒரு சமூகம் முன்னேற வேண்டு மென்றால் தரமான, வளமான சமூக வளர்ச்சியை ஏற்படுத்த நிலம், வேலை, உணவு தேவைகளை ஆய்வுக்குட்படுத்தி புதிய திட்டங்களை தீட்டப்பட வேண்டும்.

10 மாவட்டங்களில் தான்...

‘இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே’ 

-பாரதிதாசன் கூற்றை கவனத்தில் கொண்டு, இறுதிப் பயணத்திலும் பிரிவினை இருக்கக் கூடாது என சமத்துவ - சமூகம் காண முன்மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.10 லட்சம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது இதுவரை 10 மாவட்டங்களில் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தாலே நாம் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமென்பதை புரிந்து கொள்ள முடியும்.

ரூ.1 லட்சம் கோடி  என்னாயிற்று?

கடந்த பத்தாண்டுகளில் சிறப்பு உட்கூறுத் திட்ட நிதி 1,12,098 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்களுக்கு என்று ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி பொதுத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படு கிறது. இதில் ஆதிதிராவிட மக்களுக்கான பயன்பாடு குறைவு என்பது கவலையளிக்கிறது. ஆகவே, காலங் காலமாய் ஒதுக்கப்பட்டு கிடக்கிற சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு செலவழிக்கப்பட்டுள்ளது என்பதற்கான வெள்ளை அறிக்கையினை அரசு வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தனிச்சட்டம் தேவை

மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் எஸ்.சி., எஸ்.டி., மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு தமிழகத்தில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். மாநில நிதித்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து சுயமாகச் செயல் படவேண்டும்.

கல்வி உதவித் தொகை

உயர்கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்க ளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 60:40 என்ற அடிப்ப டையில் ஒன்றிய அரசும், மாநில அரசும் கல்விக் கட்டணத்தை வழங்கி வருகின்றன. 2021-22 கட்டணம் மற்றும் பராமரிப்பு உதவித் தொகை என இரண்டை யுமே மாணவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவது என்று முடிவு செய்து மாவட்ட வாரியாக ஆன்லைன் மூலம் பெறப்பட்டு ஆதிதிராவிட நல இயக்குநர கத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த நிதியை விடுவிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. பெரு வாரியான ஆதிதிராவிட மாணவர்கள் இறுதித் தேர்வு களை நோக்கியுள்ள சூழ்நிலையில் ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் கல்வி உதவித் தொகை பெறப்படாத சூழ்நிலையில் அச்சம் அடைந்துள்ளனர். மாணவர்களின் தேவையற்ற பதற்றத்தைக் களைய வும் இடையூறுகளை தவிர்க்கவும் கல்வித் தொகையை விடுவிக்க விரைந்து செயல்பட வேண்டுமென கோருகிறேன்.

மொத்த நிதி ஒதுக்கீட்டில் புதிய திட்டங்களை தொடங்கிட எஸ்.சி. எஸ்.டியினருக்கு ஒவ்வொரு துறை யும் 20 சதவிகித நிதியை புதிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும். தொழில் முனைவோரை ஊக்குவிக்க எஸ்.சி., எஸ்.டி., மக்க ளுக்கு சொந்தமான சிறு, குறு தொழில்களுக்கு 4 சத விகித கொள்முதல் கொள்கையை அமல்படுத்த வேண்டும். அதற்கு தெளிவான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

26 ஆண்டுகளாக...

ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம், ஈங்கூர் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்காக தாட்கோ திட்டம் மூலம் 1996ல் கட்டி முடிக்கப்பட்ட 200 பின்ன லாடை தொழிற்கூடங்கள் 26 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. தற்போது இந்த தொழிற்கூடங்கள் பழுதடைந்துள்ளன. எனவே இதனை சீர்செய்து ஒதுக்கீடு செய்திட கேட்டுக் கொள்கிறேன். அரசுப்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் எஸ்.சி., எஸ்.டி., பின்னடைவு காலி யிடங்களை நிரப்ப வேண்டும்.

ஆதி திராவிட மாணவர்களுக்கு...

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கழிப்பறை, தண்ணீர் வசதி, நூலகம், ஆய்வகங்கள் உட்பட அமைத்து உட்கட்டமைப்பை சீரமைக்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். புதுக் கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள விடுதி பழு தடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அதனை உடனடியாக  சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.  விடுதி மாணவர்களுக்கு ரேசன் அரிசி உணவு தான் வழங்கப்படுகிறது. விடுதி மாணவர்களுக்கு வழங்கும் உணவுக் கட்டணத்தை அதிகப்படுத்துவ தோடு தரமான உணவு வழங்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கான பாரா மெடிக்கல் படிப்புகளை பயில்வ தற்கு 10 ஆண்டுகளுக்கு முன் தாட்கோ மூலம் சிறப்பு பயிற்சி அளித்து அரசே முழுக் கட்டணத்தை செலுத்தி வந்தது. இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே  இது தொடர வேண்டும். அதுபோல விமான பைலட், கேட்டரிங் பயிற்சி  போன்றவை தொடர்ந்து அளிக்கப் பட வேண்டும்.

பண்டித அயோத்தி தாசர், தந்தை பெரியார் மையங்களில் சமூக மாற்றம் குறித்த இடைநிலை ஆய்வுக்கான இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும். சமநீதி - சமூக நீதி குறித்த தெளிவுடன் அரசின் நலத் திட்டங்கள் தேவையறிந்து ஒதுக்கீடு செய்ய இது பயனளித்திடும். ஏழை, எளிய அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். வெளி நாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான முனைவர் பட்ட உதவித் திட்டத்தை புதுப்பிக்க வேண்டும்.

இனச்சான்று  அலைக்கழிப்பு

2021 ஆளுநர் உரையில் பழங்குடியின மக்க ளுக்கு இனச்சான்றிதழ் வழங்கும் செயல்முறை எளி மைப்படுத்தப்பட்டு விரைவுப்படுத்தப்படும் - காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு உள்ளது. அதனை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவை பழங்குடியின மக்களின் வயிற்றில் பால் வார்த்தது போல் உணர்கிறேன். விரைந்து தீர்வு காண வேண்டுமென வலியுறுத்துகிறேன். இன்றைய தினம் கூட தமிழ் இந்து பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் எழுதியுள் ளது கட்டுரையாக வெளிவந்துள்ளது. அதில் குறிப்பாக இனச்சான்று வழங்குவதில் அதிகாரிகளின் கவ னக்குறைவால் பிரச்சனை நீடிக்கிறது என்பதை விளக்கி யுள்ளார். அரசு இதனை கவனப்படுத்தி குறைகளை களைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். ஈரோடு, மலையாளி, குறவன், குருமன்ஸ், வேட்டைக்காரன், புலையன், நரிக்குறவர் இனச்சான்று வழங்குவதில் காலம் கடத்தப்படுகிறது. ஒன்றிய அரசின் வழிகாட்டல் பெற்றவைக்கு சான்றுகள் வழங்கிட வேண்டும்.

வன உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்துக!

பழங்குடியின மக்களுக்கு சிறு வனப்பொருட்களை சேகரித்து சந்தைப்படுத்தலை உறுதி செய்து குறைந்த பட்ச ஆதார விலைத் திட்டத்தை சிறந்த முறையில் மேம்படுத்த வேண்டும். பழங்குடியின மக்களை பாது காத்திட 2006 வன உரிமைச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.  வனத்தில் ஆடு,  மாடு மேய்ச்சல் உரிமைக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து மேய்ச்சல் உரிமையை பாதுகாத்து தர வேண்டு மென கோருகிறேன்.

  1.  ஒன்பது துறைகளில் ஆதிதிராவிடர் மக்களுக்காக எந்த ஒரு திட்டமும் ஒதுக்கப்படவில்லை. (கல்வி, விளையாட்டு, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, குடிநீர், துப்புரவுத் தொழில், கனிமத் தொழில், சமூகப் பணிகள், பொருளாதாரப் பணிகள்)
  2.  தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
  3.  புதிரை வண்ணார் நலவாரியம், தூய்மைப் பணி புரிவோர் நலவாரியம், பழங்குடியினர் நல வாரி யங்களை சீரமைத்து செயல்படுத்த வேண்டும்.
  4.  பல தலைமுறைகளாக கோயில் இடங்களில் குடி யிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அறநிலையத் துறை சட்டம் 34ஐ பயன்படுத்தி பட்டா வழங்கிட கோருகிறேன். கோயில் இடங்களை பயன்படுத்தும் வாடகைதாரர்களை பாதுகாத்திட வேண்டும். வாடகை குறைந்தது 5 ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்திட வேண்டும்.
  5.  கந்தர்வகோட்டையில் தொழிற்பயிற்சி நிலையம் அமமைக்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். வீடு கட்டுவதற்கு ரூ. 6 லட்சம் நிதி வழங்க வேண்டும்.
  6.  ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் குடிநீர், சாலைகள், மின்சாரம் முதலிய அடிப்படை வசதிகளை செய்து  தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றிட வேண்டும்.
  7.  மாவட்டந்தோறும் பட்டியலின - பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதியில் பல்நோக்கு சமுதாயக் கூடம் அமைத்திட வேண்டும்.
  8.  நீண்ட காலமாக நிலமில்லாத ஏழைகளுக்கு நிலம் கிடைக்க  நிதி ஒதுக்கீடு செய்து நிலம் வழங்கிட திட்டமிட வேண்டும்.
  9.  தமிழகம் முழுவதும் சுடுகாடு/இடுகாடு இல்லாத பகுதியினை கண்டறிந்து சாலை வசதிகளுடன் கட்ட மைத்திட வேண்டும்.
  10.  எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர்கள் தொழில் தொடங்கிட 50 சதவிகித மானியத்துடன் குறைந்தது ரூ. ஒரு கோடி வழங்கிட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  11.  இலவச தொழிற்கல்வி, போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைத்திட வேண்டும்.
  12.  புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1990க்கு முன்பாக ஆதிதிராவிட மக்களுக்கு கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. புதிய வீடுகளை ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் கட்டித்தர அரசு முன்வர வேண்டும்.