articles

தகவல் அறிவு தான் நமக்கான ஆயுதமும், அதிகாரமும் ஆகும்! - கா.வேணி

நவம்பர் 16 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திருப்பூர் மாவட்டக்குழு சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு, உள்ளாட்சி நிர்வாகத்தில் சமூக நீதி பயிற்சி முகாம், திருப்பூரில் உள்ள அரிமா சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால் தலைமை யில் நடந்த முகாமில், மாவட்டப் பொருளாளர் ஏ.பஞ்ச லிங்கம் வரவேற்றார்.  அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தலித் ஊராட்சி மன்ற தலை வர்கள் இந்த முகாமிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 15 ஊராட்சி மன்ற தலைவர்கள் இதில் பங்கேற்று இருந்த னர். இந்த முகாம் அவர்களுக்கு மிகப்பெரும் நம்பிக்கை அளிப்பதாகவும் உத்வேகம் அளிப்பதாகவும் இருந்தது என்று சொன்னால் மிகையல்ல. இம் முகாமில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சிலர் கூறியது:

“ஒரு தலித் ஊராட்சித் தலைவராக இருக்கும் இடங்க ளில் ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்தான் துணைத் தலை வராக இருக்கிறார். அவருடைய மனநிலை என்னவாக இருக்கிறது என்றால், நான் தலைவராக வந்திருந்தால், ஏதாவது சம்பாதித்திருப்பேன். எனக்கு மரியாதையும் கிடைத்திருக்கும். பட்டியலினத்தவருக்கு என்று இந்த ஊராட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் என்னால் தலை வராக முடியவில்லை. அதற்குக் காரணமான நீ, காசோ லையில் கையெழுத்திடுவதற்கு எனக்குப் பணம் தர வேண்டும் என்று கேட்கிறார்கள். தலித் தலைவர்களாக உள்ள பல ஊராட்சிகளில் இந்த நிலைதான் நிலவுகிறது”. “இன்னமும் கிராமங்களில் உள்ள ஆதிக்க சாதியி னர் பலருக்கு, தலித்துகள் கல்வியில், பொருளாதார நிலையில், அரசியலில் முன்னேறுவது மனதளவில் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், தலித் ஊராட்சித் தலைவர்களிடம், வார்டு உறுப்பி னர்களாக உள்ள ஆதிக்க சாதியினர், ஊராட்சி மன்றக் கூட்டத்துக்கு வர பணம் கேட்பது, தீர்மானத்தில் கையெ ழுத்திட மறுப்பது போன்றவை நடக்கிறது. ஊராட்சி உதவியாளராக இருந்தால், தலைவர்க ளை மதிப்பதில்லை. இதைப் போன்ற ஏதாவது ஒரு வடிவில் தங்கள் மனத்தாங்கலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்” 

“எங்கள் ஊராட்சியில், 78 ஆண்டுகளாக பொது மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த சாலையை எனது நிலத்தில் இருக்கிறது என்று ஆதிக்க சாதியைச் சார்ந்த வர் பிரச்சனை செய்கிறார். இதற்கு முன்னர் அவர்கள் ஊராட்சித் தலைவர்களாக இருந்தபோதெல்லாம் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. இப்போது நாங்கள் தலைவராக வந்தவுடன் எங்களை கேள்வி கேட்பது அனைவருக்கும் எளிதாக இருக்கிறது. ஆனால், ஆதிக்க சாதித் தலைவர்களாக இருந்தால் அவர்களை உறவு சொல்லி அழைத்துக் கொள்கிறார்கள். அவர்களி டம் நிர்வாகம் தொடர்பான கேள்விகளைப் பொது வெளியில் கேட்பதில்லை”. “எங்கள் ஊராட்சியில், துணைத் தலைவர் கூட பிரச்சனையில்லை. ஆனால், ஊராட்சி உதவியாளர் தான் என்னை மதிக்கவே மாட்டார். அவர் சம்பளம் பெறு வது ஊராட்சி மூலமாகத்தான். ஆனால், விடுமுறை என்றால் கூட என்னிடம் சொல்ல மாட்டார். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சொல்லி விட்டோம்என்பார்”.

“ஒவ்வொரு ஊராட்சித் தலைவரும் 11 வங்கிக் கணக்குகளைப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வங்கிக் கணக்குக்கும் தனித்தனியான காசோலைப் புத்தகங்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், பணப் பரிமாற்றப் புத்தகங்கள் என்று பராமரிக்க வேண்டும். இந்த விபரங்களனைத்தும் தெரிந்தவர்கள், ஊராட்சி உதவியாளர்கள்தான். எங்களுக்கு இந்த விபரங்கள் முழுமையாகவும், தெளிவாகவும் தெரியவில்லை என்றால், உதவியாளர்கள் சொல்வதைத்தான் நம்ப வேண்டும். சில சமயங்களில் விபரம் தெரிந்த தலை வர்களைக்கூட இவர்கள் குழப்பி விடுகிறார்கள். அவர் கள் சொல்கிறபடி கேட்டால், நிதி முறைகேட்டுக்கு வழி வகுக்கும். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்”. இவையெல்லாம் திருப்பூரில் நடந்த பயிற்சி முகா மில், ஊராட்சி மன்றத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக் கப்பட்ட பட்டியல் சாதித் தலைவர்கள் சிலரின் மனக் குமுறல்கள். 

மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் யு.கே.சிவ ஞானம் முகாமை தொடங்கி வைத்துப் பேசுகையில், பட்டியல் / பழங்குடி சமூக மக்களின் மேம்பாட்டுக்கு என ஒதுக்கப்படும் துணைத் திட்ட நிதி முறையாக பயன் படுத்தப்படுவதில்லை. அது குறித்த விழிப்புணர்வு அவசியம். தலித் / பழங்குடி தலைவர்கள் ஒன்றி ணைந்து ஒருமித்த குரலில், அந்த நிதி, முறையாக பயன்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலுவாக எழுப்ப வேண்டும், என்றார். மேலும், பாகுபா டுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமையை உங்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. ஒவ் வொரு கிராமமும் சுயசார்புடைய, சுய ஆளுகையுள்ள தாக முழுமையாக மாற வேண்டும். அதற்கு அனை வரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.  73ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் முக்கிய அம்சங்களை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் – 1994 -ல் மாவட்ட ஆட்சியருக்கு உள்ள வான ளாவிய அதிகாரத்தைப் பற்றியும், கேரளா போன்ற மாநிலங்களில், ஊராட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பற்றியும், மாநிலக்குழு உறுப்பினர் கா.வேணி விளக்கினார். மேலும், ஊராட்சித் தலை வர்கள், ஊராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை யோடு செயல்பட்டு, தங்கள் பிரச்சனைகளை கிராம சபையில் மக்களோடு பகிர்ந்து கொண்டால், பல நேரங்களில் தலைவர்களுக்கு மக்கள் துணையாக இருப்பார்கள் என்றும் கூறினார்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவு 83 மற்றும் 84-ன் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு ஊராட்சித் தலைவரும் செயல் அதிகாரி. ஊராட்சி நிர்வாக முறை யைப் பொறுத்தவரை, ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஆய்வாளர் (மாவட்ட ஆட்சியர்), ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் ஆகிய மூன்று பேர்தான் செயல் அதிகாரிகள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூடுதல்  இயக்குநர் (ஊராட்சிகள்) ஆகிய மற்ற அனைவரும் அலுவலர்கள்தான். அதிகாரிகள் கிடையாது. ஊராட்சித் தலைவர்கள், தங்கள் அதிகாரத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியும், 31 ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் படிவம் 30 –ஐ, தலைவர் பூர்த்தி செய்து (மாதாந்திர கணக்குகள்) அதை, ஊராட்சிமன்றக் கூட்டத்திலும், கிராம சபை யிலும் வைக்க வேண்டும். இது போன்ற தகவல்களைத் தலைவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ‘தகவல் தெரிந்து வைத்திருப்பது என்பது அறிவு, அத்தகைய அறிவே நமக்கான ஆயுதமும், அதிகாரமும்’ என்று  எம்.எல்.தாஸ் விளக்கினார். நிர்வாகம், நிதி தொடர் பாக, அவர் அளித்த விளக்கங்களுக்குப் பின்னர், தலை வர்கள் தங்கள் சந்தேகங்களையும், நடைமுறையில் தாங்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கான ஆலோச னைகளையும் கேட்டுத் தெளிந்து கொண்டனர். 

மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு பேசுகை யில், “இன்னமும் நமது நாட்டில் பல இடங்களில் பட்டி யல் சமூக மக்கள் ஒவ்வொரு நிலையிலும் பிரச்சனை களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். கிராம அள வில் தலைவர்களாக வந்தால், சிலஉரிமைகள் கிடைக் கிற அதேநேரத்தில் பிரச்சனைகளும் பல இருக்கின் றன. ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை கட்டாய மாக தேர்தல் நடத்த வேண்டுமென்று அரசியல் திருத்தம் குறிப்பிட்டாலும், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட 4 கிராமங்களில் தேர்தல் நடத்தவே எவ்வ ளவு போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியி ருந்தது என்பதை நாம் பார்த்தோம்.  இன்னமும், தலித் தலைவர்கள் பலர் ஆதிக்க சாதியினரின் பினாமிகளாக செயல்பட வேண்டிய நிலை, துணைத் தலைவர் உள்ளிட்ட கிராம வார்டு உறுப்பினர்களின் ஒத்துழைப்பின்மை போன்ற பிரச்ச னைகளை சந்தித்து வருகின்றனர். 

தீண்டாமை ஒழிப்பு முன்னணி களஆய்வு நடத்திய போது, தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளைக்கூட பல தலித் தலைவர்கள் பகிர்ந்துகொள்ள அஞ்சினர். ஒரு சில ஊராட்சிகளில், ஆதிக்க சாதியைச் சார்ந்த ஜனநாயக உணர்வுள்ள மக்கள், தலித் தலைவர்க ளின் பிரச்சனையை சொன்னார்கள். நமக்கு உள்ள  அதிகாரங்கள் பற்றிய விழிப்புணர்வு, ஒவ்வொரு பட்டி யல் சாதி தலைவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.   நம்மோடு ஊராட்சி நிர்வாகத்தில் ஒத்துழைக்க மறுத்தால் அவர்களுக்கு அது குறித்த முதல் கடிதத் தினை நாம் அனுப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி துறை செயலர் போன்றவர்களுக்கும் அதன் நகலை அனுப்பும் அதே நேரத்தில், தாழ்த் தப்பட்டோர் ஆணையத்துக்கும் ஒரு நகல் அனுப்ப வேண்டும். பிரச்சனை தீருகிறதோ, இல்லையோ உங் களை எதிர்ப்பவர்கள், உங்களை வேறு மாதிரி பார்ப் பார்கள். தீண்டாமை ஒழிப்பு முன்னணியைப் பொறுத்த வரையில், உங்களின் பிரச்சனைகளுக்கு தோள் கொ டுக்கவும், களத்தில் போராடவும் எப்போதும் தயாராக உள்ளது“ என்று தனது கருத்துரையில் குறிப்பிட்டார்.

மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ் பேசுகை யில், மாவட்டத்தில் உள்ள பட்டியல் / பழங்குடி ஊராட்சித் தலைவர்களின் கோரிக்கைகளைத் தொகுத்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும், சாதிய ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக களத்தில் நின்று போராடவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னிற் கும் என்றார். தலைவர்களுக்கான நினைவுப் பரிசை மாவட்டத் துணைத் தலைவர் செல்லமுத்து வழங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி நன்றி கூறினார்.  தமிழகத்தில் ஒரு புதிய முன்னெடுப்பாக,  திருப்பூ ரில் நடந்த இந்த சமூக நீதி பயிற்சி முகாம், இதில் பங்கேற்ற தலித் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறி வொளி ஊட்டக்கூடியதாகவும், நம்பிக்கை அளிப்பதா கவும் அமைந்திருந்தது.

கட்டுரையாளர் : மாநிலக்குழு உறுப்பினர்,  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி