articles

img

புதிய சவால்களை முறித்து முன்னேறும் செங்கொடி - டி.கே.ரங்கராஜன்

மூலதனத்தின் பெருக்கம் தொழிலாளியின் உழைப்பை உறிஞ்சி எடுப்பதோடு நேரடியாக தொடர்புடையதாகும்.

எட்டு மணி நேர வேலை என்கிற உரி மைக்கான போராட்டம் ஒரு நெடிய வர லாற்றைக் கொண்டதாகும். சிகாகோ  நகரில் நடந்த தொழிலாளர்களின் போராட்டம் அரசதி காரத்தின் கொடூரகரங்களால் நசுக்கப்பட்டபோதும், உழைக்கும் வர்க்கம் எழுப்பிய போர்க்குரல் எட்டு மணி  நேர வேலை எனும் கோரிக்கையை வென்றெடுத்தது. இப்போராட்டத்தின் எழுச்சி எல்லா இடங்களிலும் எதிரொலித்தபோதும், எட்டு மணி நேர வேலை என்பது அப்படியே உலகம் முழுவதும் அமலாகிவிடவில்லை. ஆங்காங்கு எழுந்த தொழிலாளி வர்க்கத்தின் தொடர் போராட்டங்களும் அவர்களின் உயிர்த்தியாகங்களுமே அதை சாத்தியமாக்கியது.   மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு தொழில் துறையில்  முழுமையாக அது ஆதிக்கம் செலுத்திய காலத்தில்  வேலை நேரம் என்பது 16 முதல் 18 மணி நேரமாக  இருந்தது. போராட்டங்களின் விளைவாக வேலை நேரத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. இதனை தொடர்ந்து. 1848 ல் பிரிட்டனில் சட்டப்படியான வேலை நேரம் 10 மணி நேரமாக மாற்றப்பட்டது. இந்த  வேலை நேரமும் கூடுதலானதுதான், இது முழுமையான  வெற்றி இல்லை என்கிறபோதும் இந்த மாற்றம் என்பது  வேலை நேரத்தை குறைக்கவேண்டும் என்பதற்கான கொள்கை ரீதியான வெற்றி என்கிற‌ வகையில் ஏற்பட்டது.  இது சரியான திசை வழியிலான சரியான முடிவு என்றார் ஏங்கெல்ஸ்.

இந்தியாவில் எட்டு மணிநேர வேலைக்கான போராட்டம்

பிரிட்டனில் சட்டப்படியாக வேலை நேரம் 10 மணி நேரம் என்று மாற்றப்பட்ட பிறகும், அடிமைகளுக்கு உரிமைகள் தேவையில்லை என்கிற நோக்கத்தோடு அதை இந்தியாவில் அமலாக்க பிரிட்டன் மறுத்தது. நாட்டிலேயே முதன் முதலாக சென்னையில் 1918 ல் சென்னை தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. சென்னை பின்னி மில் தொழிலாளர்களை மையமாக வைத்து அச்சங்கம் துவக்கப்பட்டது. நாட்டிலேயே முதன் முதலாக மேதின விழா சென்னையில் 1923 ல்  தோழர் சிங்காரவேலரால் முன்னெடுக்கப்பட்டது. அக்காலம்தொட்டே எட்டு மணிநேர வேலை என்ப தற்கான போராட்டம் கனல்விடத் துவங்கியது. சென்னை, கல்கத்தா, பம்பாய் உள்ளிட்ட இடங்களில் செங்கொடி இயக்கத்தின் தலைமையில் எட்டு மணிநேர வேலைக்கான போராட்டங்களும் எழுந்தன. பிரெஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரியில், ஆங்லோ-பிரெஞ்ச் டெக்ஸ்டைல் மில்ஸில் எட்டு மணிநேர வேலைக்கான போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டம் அடுத்தடுத்த கட்டத்தை எட்டியது. வேலை நிறுத்தங்கள் தொடர்ந்தன. இதை சகித்துக்கொள்ள முடியாத பிரெஞ்சு அரசு அடக்குமுறைகளை ஏவியது.  துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் தங்களின் இன்னு யிரை தியாகம் செய்தனர். இப்போராட்டத்தின் விளை வாகவே 1936 முதன் முதலில் எட்டு மணி நேர வேலை  என்பது ஆங்கிலோ-பிரெஞ்ச் டெக்ஸ்டைல் மில்லில் அமலுக்கு வந்தது என்பதே வரலாறு. உயிர்போகும் என்று தெரிந்தும், சிறு சலனமும் இல்லாமல் கோரிக்கை களை முழங்கியபடி செங்கொடி ஏந்தி களத்தில் உயிர்  நீத்த தியாகிகளின் சுவடுகளே எட்டு மணிநேர வேலை யை சாத்தியப்படுத்தியது. அந்த தியாகத்தின் விளை பயனை கார்ப்பரேட்டுகளின் காலடியில் வைப்பதை  அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்பு வேலை நேரத்தை அதிகரிக்கும் விதமாக தொழிற்  சாலை சட்டத்திருத்தம் கொண்டு வந்தது அதிர்ச்சி யளிக்கக்கூடியது. மக்களின் எழுச்சி, தொழிற்சங்கங் களின் அழுத்தம் ஆகியவை தாற்காலிகமாக இதை தடுத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

அம்பேத்கரின் பங்கு

எட்டு மணி நேர வேலை என்பதை இந்தியாவில் சட்ட மாக மாற்றியதில் அம்பேத்கருக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இந்தியாவில் 1937-ல் தொழிலாளர் துறை உருவாக்கப்பட்டது. 1942 ஜூலையில் அம்பேத்கர் அதன் பொறுப்பிற்கு வருகிறார். தனது அறிவார்ந்த தலை யீட்டை தொடர்ந்து செலுத்தினார். மாறிவரும் உலகில்  தொழிலாளர்களின் போராட்டங்கள், அவை முன்வைத்த  கோரிக்கைகள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்தார். கம்யூனிஸ்ட்டுகள் வேலை நேர குறைப்பிற்கான போராட்டத்தை வலுவாக கொண்டு சென்றனர். இது  ஒரு சர்வதேச உணர்வாகும். 1942 நவம்பர் 27 அன்று  இந்திய தொழிலாளர் மாநாட்டில் 14 மணி வேலை  நேரத்தை 8 மணி நேரமாக குறைக்கும் தீர்மானத்தை  அம்பேத்கர் கொண்டுவந்தார். அதன் தொடர்ச்சியாகவே  1948 ல் கொண்டுவரப்பட்ட தொழிற்சாலை சட்டத்தின்படி  வாரத்திற்கு 48 மணி நேரத்தை தாண்டி வேலை நேரம்  இருக்கக்கூடாது என்பது சட்டமானது. இன்று அம்பேத்கர்  பிறந்த நாளின்போதும், நினைவு நாளின்போதும் மாலை  அணிவிப்பதே அவருக்கு செலுத்தும் மரியாதை என்ப தாக நினைக்கின்றனர். உண்மையில் தொழிலாளர்  நலன் போன்று அவர் காப்பாற்றிய விழுமியங்களை  காத்து நிற்பதே அவருக்கு செலுத்தும் மிகச்சரியான மரியாதை என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டி யுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியும் பாதிப்புகளும்

கடந்த நூற்றாண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு தளங்களில் மாற்றங்களை கொண்டு வந்தது.  1970-களுக்குப் பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி மேலும்  வேகம் எடுத்தது. இந்த வளர்ச்சி என்பது செலுத்தப்பட  வேண்டிய மனித உழைப்பின் அளவைக் குறைத்தது, அதேநேரம் உற்பத்தியை உயர்த்தியது. பஞ்சாலை, சிமிண்ட் ஆலை, சர்க்கரை ஆலை போன்ற தொழிற்  சாலைகளில் தொழில் நுட்பங்கள் உள்ளடக்கப்பட்ட தால் பழைய அளவிற்கு தொழிலாளர்கள் அங்கு தேவை யில்லை என்கிற நிலை உருவாகியுள்ளது. அதேநேரம் தொழிலாளர்களின் கூடுதல் உழைப்பை மூலதனம் கோருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, மூலதனத்தை பெருக்குகிறது. மூலதனத்தின் பெருக்கம் தொழிலாளி யின் உழைப்பை உறிஞ்சி எடுப்பதோடு நேரடியாக தொடர்புடையதாகும். சில நாளேடுகள், தமிழ்நாடு அரசு வேலை நேரத்தை  அதிகரிக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததை ஆத ரித்து தலையங்கங்களை எழுதின. வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நிறைய  தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த தொழில்களெல்லாம் உடலுழைப்பை அதிகம் செலுத்த வேண்டிய தேவை இல்லாத தொழில்களாகும். குறிப்பாக செல்போன் உற்பத்தி தொழில்கள், மின்னணு வன்பொருள் (ஹார்டுவேர்) தொழில்கள், தோல் அல்லாத காலணி களை உற்பத்தி செய்யும் தொழில்கள் என்று ‘குளு குளு’  அறைகளில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டிய தொழில்களாகும்’’ என்று பத்திரிகைகள் எழுதின. தமிழ்  நாட்டில் வேலை நேரத்தில் நெகிழ்வுத் தன்மை வேண்டும் என்கின்றனர். ஒன்றிய அரசு வேலை நேரத்தை கூடுதல்  ஆக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  வேறு சில மாநிலங்கள் இதை அமலாக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளன.

‘குளு குளு’ அறையில் வேலை செய்கிறார்கள்; எனவே அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்ப தெல்லாம் அபத்தமான வாதங்களாகும். கூடுதல் வேலை  நேரம் என்பது தொழிலாளர்களை உடல் ரீதியாகவும்,  மன ரீதியாகவும் வதைக்கும். தற்போதைய நிலை யிலேயே தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்று பவர்கள் கூடுதல் நேரம்தான் உழைக்கின்றனர். வெளி நாட்டில் உள்ளவர்களின் கால நேரத்திற்கு ஏற்றவகை யில் இங்குள்ளவர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது.  தொழிற்சாலையில் வேலை செய்யும்போது உள்ள பாது காப்பற்ற சூழலை போலவே கூடுதல் நேர உழைப்பு என்பது உடல் ரீதியாக பல்வேறு சிக்கல்களை அவர்  களுக்கு உருவாக்குகிறது. பல மணிநேரம் கணினியில் பணியாற்றுபவர் தனது கைகளையும் கால்களையும் நீட்டக்கூட அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. கூடுதல்  நேரம் கணினித் திரையைப் பார்ப்பது கண் பார்வையை  பாதிக்கிறது. அவ்வளவு நேரமும் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது பல்வேறு உடல் உபாதைகளை உருவாக்குகிறது. நவீன தொழில்நுட்ப பணிச்சூழலில் இருப்பவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான பாதிப்பு கள் குறித்து எவ்வித ஆய்வையும் அரசு இதுவரை  மேற்கொண்டதில்லை. இப்பணியில் உள்ளவர்களுக் கான பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும்.

பெண்களின் கடும் சுமை

வேலை நேர உயர்வு என்பது பெண்களை கடுமை யாக பாதிக்கும். இந்திய சமூகத்தில் பெண்கள்தான் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்க்கின்ற னர். குடும்ப உழைப்பில் அவர்களின் சக்தி கூடுதலாக  செலவாகிறது. இதையும் தாண்டி அவர்களை 12  மணிநேர உழைப்பில் ஈடுபடுத்தும் போக்கு அவர்களை  மேலும் கூடுதலான சிக்கலுக்கு உள்ளாக்கும். அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பெண்களையும் சமுக உற்பத்தியில் பங்கேற்கச் செய்வது அவசிய மாகும். சமூக ரீதியான ஒடுக்குமுறைகளையும் அதன்  வழியேதான் சரிசெய்ய முடியும். பெண்களின் சிரமங்  களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சாதகமான பணிச்சூழலை உருவாக்குவதும் அதற்கேற்ற வகை யிலான கொள்கைகளை வகுப்பதும் காலத்தின் தேவை யாக உள்ளது. மேலும் முதலாளித்துவ கணக்கின்படி பார்த்தால் கூட, கூடுதல் வேலை நேரம் என்பது தொழிலாளியின் உற்பத்தி திறனை குறைக்கும். இந்த உற்பத்தி திறனை கருத்தில் கொண்டே ஃபோர்டு நிறுவனம் தானாகவே  வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக மாற்றியது. உற்பத்தி வேண்டுமெனில் தொழிலாளி சோர்வடையும் முன்பு வேலையைப் பெறுவதுதான் என்று அது புரிந்து கொண்டது.

வேலை வாய்ப்பா? வேலையிழப்பா?

தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என பல்வேறு  காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், பொருளாதார சீர்திருத்தம் என்கிற வகையில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக சட்டங்களையும் நிர்வாக ஏற்பாடுகளையும் அரசு மாற்றியமைக்கிறது. இந்த மாற்றங்களின் ஒரே நோக்கம் லாபம், மேலும் லாபம் என்பதுதான். மாநில அரசுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொள்கின்றன. அதில் அந்நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வாரி வழங்குகின்றன. மின்சாரம், தண்ணீர் வசதி,  வரிச்சலுகை என இந்த சலுகைகளை அனுபவித்து முடிந்தவுடன் வியாபாரப் போட்டி, வேறு நாடுகளில் கிடைக்கும் சலுகைகள், சந்தை நிலவரம் ஆகியவை களை கணக்கிட்டு அந்நிறுவனங்கள் தங்களின் நிறு வனத்தை வேறு மாநிலத்திற்கோ, வேறு நாட்டிற்கு மாற்றிக்கொள்கின்றன என்பதுதான் உலகம் முழு வதும் கிடைக்கும் அனுபவங்களாக உள்ளன. தமிழ்நாட்டில் அன்னிய முதலீட்டின் வரலாறு அதையே உணர்த்துகிறது. நோக்கியா தொழிற்சாலை 2014 ல் மூடப்பட்டது, 8000 தொழிலாளர்கள் வேலை  இழந்தனர். பாக்ஸ்கான் தொழிற்சாலை 2015 ல் மூடப்  பட்டது, 10,000 தொழிலாளர்களுக்கு மேல் வேலை  இழந்தனர். தைவான் நாட்டு பில்ட் யுவர் ட்ரீம்ஸ்  தொழிற்சாலை 2015 ல் மூடப்பட்டது, 6000 தொழிலா ளர்கள் வேலை இழந்தனர். வின்டெக் தொழிற்சாலை 2015 ல் மூடப்பட்டது, 1000 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். பெர்லாஸ் தொழிற்சாலை 2014 ல் மூடப்  பட்டது, 1800 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1995 ல் துவங்கிய ஃபோர்ட் நிறுவனம் 2021-ல் மூடப்  பட்டது 4000 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மேலும் இந்நிறுவனங்களுக்கு துணை நிறுவனங்களாக இருந்த பல நிறுவனங்கள் மூடப்பட்டும் அந்நிறுவனங்களில் பணியாற்றிய தொழிலாளர்களும் வேலை இழந்தும் உள்ளனர். இதுவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எதார்த்தமாகும்.

இந்தியாவில் சுமார் பத்து கோடி (7.5 சதம்) பேரும்,  தமிழகத்தில் 45 லட்சம் (4.5 சதம்) பேரும் வேலையின்றி உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வேலை யற்ற இவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க போது மான நடவடிக்கைகள் இல்லை. நிலத்தை இழந்து, வாழ்வை இழந்து பிழைப்பைத் தேடி நகரங்களை நோக்கி வரும் கோடிக்கணக்கான மக்கள் வேலை கிடைக்காமல் தடுமாறுகின்றனர். முறைசாரா தொழில் களில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறைந்த  கூலியில் பத்து மணிநேரம், பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்யும் சூழல் உள்ளது. வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் எவ்வித சமூகப்  பாதுகாப்பும் இன்றி உழைக்கின்றனர். அவர்களுக்கான  உணவு, இருப்பிடம், பணிச்சூழல், போதுமான ஓய்வின்மை, சுகாதாரமற்ற நிலைக்கு தள்ளி அவர்களை கொடுமையாக வதைக்கிறது. இதையெல்லாம் சரி செய்யும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டுமே தவிர அவர்களை மேலும் கசக்கிப்பிழி வதற்கு வழிவகுக்கக்கூடாது.

தொழிலாளி வர்க்க  ஒற்றுமையே தீர்வு

தொழிலாளி, முதலாளி - என்பதாக மட்டுமல்லா மல் இன்றைய சூழலில் உலக வங்கி, சர்வதேச நிதி யம், உலக வர்த்தக நிறுவனம் என எல்லாவற்றின் தாக்க மும் அதன் அழுத்தங்களும் பாதிப்பை உருவாக்கு கிறது. நமது விவசாயத்தை அதன் கட்டுப்பாடுகள் கடு மையாக பாதிக்கின்றன. அதையும் தொழிலாளி வர்க்கம் புரிந்து கொள்ளவேண்டும். நிரந்தரப் பணி இல்லாமை, தொகுப்பூதிய பணியாளர்கள், நிரந்தர பணியற்ற கிக் பொருளாதார வளர்ச்சி என்பதெல்லாம் இவற்றின் தாக்கங்களேயாகும். தொழிலாளி, விவசாயி, விவசாயத் தொழிலாளி, சிறு-குறு தொழில் ஆகியவற்றை செங்கொடி இயக்கத்தால்தான் பாதுகாக்க முடியும். இந்தியச் சூழலில் சாதி மத ரீதியான திரட்டுதல் என்பது திட்டமிட்ட வலதுசாரி அணிதிரட்டலாகும். இது சாமானிய மக்களை  பாதிக்கிறது. தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கெடுக்கிறது. மதவாத, சாதியத்தை ஒழிப்பதற்கு பெருமுதலாளிகளின் கொள்கைகளை முறியடிக்க  வேண்டும். இந்தியாவில் ஒரு மாற்றத்தை உருவாக்கு வதற்கும் அனைத்து விதமான சுரண்டலையும் ஒடுக்கு முறைகளையும் எதிர்கொள்வதற்கான சிறந்த ஆயுதம்  என்பது தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பதேயாகும். இத்தகையச் சூழலில் தொழிலாளி வர்க்கம் மேலும்  ஒன்றுபடவேண்டிய அவசியத்தை மே தினம் உணர்த்து கிறது. முன்பைவிட பரவலான வாய்ப்பு வசதிகள் உரு வாகியுள்ள அதேநேரம் நெருக்கடிகளும் அதற்கு இணை யாக வளர்ந்துள்ளன. இதை தொழிற்சங்கங்கள் சந்திக்க  வேண்டியுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட மும் அதன் பலன்களும் வர்க்க அணி சேர்க்கையை மேலும் வலுப்படுத்திட உதவிடவேண்டும் என்பதை மனதிற் கொண்டு செங்கொடியின் கீழ் உழைக்கும் மக்களை அணிதிரட்டுவோம்.