மே மாதம் 9ஆம் நாள் முன்னாள் சோவி யத் யூனியனிலும் இன்றைய ரஷ்யா விலும் மிகப்பெரிய வெற்றி தினமாக கடைப்பிடிக்கும் நாள். 1945ஆம் ஆண்டு இந்த நாளில்தான் ஜெர்மன் படைகள் அதிகாரப்பூர்வமாக சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்க தளபதிகளி டம் சரணடைந்தன. அதற்கான ஒப்பந்தம் கையெ ழுத்திடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வெற்றி தினம் பல சிக்கல்களை சந்திக்கிறது. உக்ரைன் போர் பின்ன ணியில் இந்த வெற்றி தினத்தை சீர்குலைக்க பல நிகழ்வு கள் அரங்கேறியுள்ளன. எத்தகைய சீர்குலைவு செயல்கள் செய்தாலும் பாசிசத்தை தோற்கடித்து உலகை காப்பாற்றிய சோவியத் யூனியன் மக்களின் தியாகத்தை எவராலும் அழிக்க முடியாது.
ஏகாதிபத்தியத்தின் கண்ணை மறைத்த கம்யூனிச எதிர்ப்பு
ஜெர்மனி-இத்தாலி-ஜப்பான் அடங்கிய பாசிசக் கூட்டணியை எதிர்த்து ஒரு ஐக்கிய முன்னணி அமைக்க முன்வரவேண்டும் எனும் சோவியத் யூனி யனின் வேண்டுகோளை பிரான்சு, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் செவி மடுக்கவில்லை. அவர்களுக்கு சோசலிசப் புரட்சிதான் பாசிசத்தைவிட அதிக பயத்தை அளித்தது. எனவே பாசிசம் உருவா வதும் அது சோசலிசத்தை அழிக்க முன்வருவதும் தமக்கு சாதகம்தான் என அவர்கள் எண்ணினர். இதனை அமெரிக்க ஜனாதிபதி ஹென்றி ட்ரூமனின் கீழ்க்கண்ட கூற்று மிகத் தெளிவாக வெளிப்படுத்தி யது: “ஜெர்மனி வெல்வது போல சூழல் உருவானால் நாம் ரஷ்யாவுக்கு உதவ வேண்டும். ரஷ்யா வெல்வது போல சூழல் உருவானால் நாம் ஜெர்மனிக்கு உதவ வேண்டும். அந்த வகையில் அவர்களுக்குள் போரிட்டுக் கொண்டு அதிகபட்சம் ஒருவருக்கொருவர் கொன்று குவித்துக்கொள்ளட்டும்.” கம்யூனிச எதிர்ப்பு அவர்களின் கண்களை மறைத்தது என்பதற்கு ட்ரூமனின் இக்கூற்று சிறந்த எடுத்துக்காட்டு. எனினும் ஒற்றுமைக்கு சோவியத் யூனியன் தொடந்து கடினமாக உழைத்தது. அதே சமயத்தில் போருக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது. 1941இல் இட்லர் சோவியத் யூனியனை தாக்கியபொழுது தன்னந்தனியாகப் போரிட்டது.
சோவியத் மக்களின் தியாகம்
1941ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று சோவியத் மக்க ளுக்கு ஆற்றிய உரையில் ஸ்டாலின் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்: “ஜெர்மனியுடன் நடக்கும் இந்த யுத்தம் சாதாரண யுத்தம் அல்ல. இது இரண்டு இராணுவங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் அல்ல. மாறாக இந்த யுத்தம் என்பது பாசிச ஜெர்மனி இராணுவத்திற்கு எதிராக அனைத்து சோவியத் மக்களின் வரலாறு காணாத யுத்தம் ஆகும்.” அவர் மேலும் கூறினார்: “செஞ்சேனையும் சோவியத் மக்களும் நமது கிராமங்களையும் நகரங்களையும் பாதுகாக்க கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும் வரை போராட வேண்டும்.” என்றார். மேலும் இந்தப் போரில் உலகில் உள்ள அனைத்து ஜனநாயக எண்ணம் கொண்ட மக்களின் ஆதரவும் நமக்கு உள்ளது என ஸ்டாலின் கூறினார். சோவியத் மக்கள் காட்டிய வீரமும் தீரமும்தான் இட்லருக்கு முதல் தோல்வியை அளித்தது. அதற்குப் பின்னர்தான் ஏனைய முதலாளித்துவ நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இப்போரில் சோவியத் யூனிய னின் தியாகம் அளப்பரியது. குறிப்பாக சோவியத் மக்க ளின் உயிர்த் தியாகம் ஈடு இணையற்றது. இதனை கீழ்க்கண்ட விவரங்கள் தெளிவாக்கும்.
உலகப்போரில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றிய சில விவரங்கள்:
தேசம் இராணுவ வீரர்கள் குடி மக்கள் மொத்தம்
சோவியத்
யூனியன் 97,50,000 1,32,04,000 2,29,54,000
சீனா 35,00,000 1,15,00,000 1,50,00,000
பிரிட்டிஷ்
இந்தியா 87,000 20,00,000 20,87,000
பிரான்சு 2,17,600 2,67,000 4,84,600
பிரிட்டன் 3,82,700 67,100 4,49,800
அமெரிக்கா 4,16,800 1,700 4,18,500
சோவியத் யூனியன் பல இயற்கை வளங்களை இழந்தது. ஆயிரக்கணக்கான நகரங்கள் பல்லாயிரக்க ணக்கான கிராமங்கள் அழிந்தன. 61,600 கி.மீ. நீளமுள்ள இருப்புப் பாதையும் 90 சதவீதம் நிலக்கரிச் சுரங்கங்களும் அழிக்கப்பட்டன. 30,000க்கும் அதிகமான ஆலைகளும் தரைமட்டமாயின. 84,000 பள்ளிகளும் 43,000 நூல்கங்களும் அழிந்தன. 3 கோடி கால்நடைகள் மடிந்தன. இரண்டாம் உலகப்போரில் மொத்தம் 2.36 கோடி இராணுவ வீரர்களும் 4.20 கோடி மக்களும் ஆக மொத்தம் 6.56 கோடிப் பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு சோவியத் யூனியன் மக்களின் தியாகம் ஆகும். இதில் சோவியத் மக்களின் உயிரிழப்பு மட்டும் 2.29 கோடி. இந்த மகத்தான தியாகம்தான் பாசிசத்திட மிருந்து உலகைக் காப்பாற்றியது. அப்பொழுது சோசலிச நாடாக இல்லை என்றாலும் சீனாவும் 1.5 கோடி உயிர்களை இழந்தது. பாசிச எதிர்ப்பு போரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் இருந்தது. இந்த உன்னதமான தியாகத்தைதான் தற்பொழுது இருட்ட டிப்புச் செய்ய முயல்கின்றனர்.
கிரெம்ளின் மீது தாக்குதல்
மே மாதம் 4ஆம் தேதியன்று ரஷ்ய ஜனாதிபதி தங்கும் கிரெம்ளின் மாளிகை மீது ட்ரோன் தாக்கு தல்கள் நடத்தப்பட்டன. இரண்டு ட்ரோன்கள் மாளிகை மீது பறந்த பொழுது ரஷ்ய வான் பாதுகாப்புப் படை அவற்றை சுட்டு வீழ்த்தின. இதன் விளைவாக மாளி கையின் கோபுரம் சிறிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த ட்ரோன்கள் உக்ரைன் ராணுவத்தால் ஜனாதி பதி புடினை கொல்ல அனுப்பப்பட்டவை என ரஷ்யா குற்றம்சாட்டியது. உக்ரைன் மறுத்தது. எனினும் உக்ரைனின் மறுப்பை, போரின் போக்கைக் கவனிக்கும் எவரும் நம்பத்தயாராக இல்லை. அமெ ரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள்
இந்த நிகழ்ச்சியை குறைத்து மதிப்பிட்டன அல்லது உதா சீனப்படுத்தின. சில முதலாளித்துவ ஊடகங்கள் ரஷ்யாவே இதை அரங்கேற்றியது என மிக விஷமத் தனமான பிரச்சாரத்தை முன்வைத்தன. அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் மிகச்சரியாகவே இத்தகைய நிகழ்வு வெள்ளை மாளிகை மீது நடத் தப்பட்டால் அமெரிக்காவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை சிந்தியுங்கள் என கேள்வி எழுப்பி னார். ரஷ்யாவின் எதிர்வினை தன் மீது இருக்கக் கூடும் என மதிப்பிட்ட ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உக்ரை னைவிட்டு வெளியேறியுள்ளார். மீண்டும் 13ஆம் தேதிதான் உக்ரைன் திரும்புவார் என செய்திகள் கூறுகின்றன. எனினும் உக்ரைன் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் மே 9 வெற்றி தினத்தை பாதுகாப்பு கருதி குறைந்த அளவு கொண்டாடுமாறு ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த அளவுக்கு உக்ரைனின் தீய நோக்கம் நிறைவேறி யுள்ளது. சோவியத் யூனியனின் பல முக்கிய பாரம்பரி யங்களை முதலாளித்துவ தேசமாக மாறிய ரஷ்யா கை விட்டு விட்டது. சமீபத்தில் கூட விளாதிவாஸ்டக் நகருக்கு மீண்டும் ஸ்டாலின்கிராட் என பெயரிடப்பட வேண்டும் என அந்த நகர மக்களின் கோரிக்கை நிரா கரிக்கப்பட்டுவிட்டது. எனினும் சோவியத் யூனிய னின் பாரம்பரியமான மே 9 வெற்றிப் பேரணியும் விழாக்கோலமும் ரஷ்ய மக்கள் தொடர்ந்து கடைப் பிடித்து வந்தனர். முதல் தடவையாக உக்ரைன் ட்ரோன் தாக்குதல் காரணமாக இந்த நிகழ்ச்சியின் சிறப்பும் வீரியமும் குறைக்கப்படுகிறது. இது உக்ரைனுக்கு மட்டுமல்ல; மேற்கத்திய நாடுகளுக்கும் உள்ளூர மகிழ்ச்சியை தரும்.
ஐரோப்பிய நாடுகளின் வன்மம்
சோவியத் செஞ்சேனை இட்லரின் பாசிசப் படை களை தன் மண்ணிலிருந்து விரட்டியது மட்டுமல்ல; போலந்து, ருமேனியா, ஹங்கேரி, அன்றைய செக்ஸ்லோவேகியா, பல்கேரியா போன்ற பல தேசங்க ளை பாசிசப் படைகளிடமிருந்து விடுவித்தது. அந்த போரில் மற்ற நாடுகளுக்காக ஆயிரக்கணக்கான செஞ்சேனை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். அதற்காக பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நினைவுச் சின்னகளில் பலவும் உக்ரைன் போரைக் காரணம் காட்டி உடைக்கப்பட்டுவிட்டன. சில இடங்களில் அர சாங்கங்களும் பல இடங்களில் ரஷ்ய எதிர்ப்பு வன் முறைக் கும்பல்களும் இந்த அழிப்பு வேலையில் ஈடுபட்டன. பாசிச எதிர்ப்புப் போரில் சோவியத் யூனிய னின் பங்கை முற்றிலுமாக அழிக்கும் முயற்சி இது! போலந்து, பின்லாந்து, லாத்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா போன்ற பல தேசங்களில் மே 9 பேர ணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறு ஊர்வலம் நடத்தினால் கூட சிறைத் தண்டனை என அறிவிக்கப் பட்டுள்ளது. செஞ்சேனை வீரர்களின் சின்னங்களுக்கு அஞ்சலி செலுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது அல்லது ஒருவர் ஒருவராக மட்டுமே வந்து அஞ்சலி செலுத்த வேண்டுமென தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியனின் பங்கை இருட்ட டிப்புச் செய்து வந்தது. இப்பொழுது ஐரோப்பிய நாடு களும் இந்த தீய அணுகுமுறையில் இணைந்துள் ளன. உண்மையில் உக்ரைன் போருக்குப் பின்னர் ஐரோப்பா தனது சுயாதிபத்தியத்தை முற்றிலும் அமெ ரிக்காவிடம் அடகு வைத்து விட்டது எனபரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. அது உண்மைதான் என பல நிகழ்வுகளும் வெளிப்படுத்துகின்றன.
எத்தகைய முயற்சிகள் செய்தாலும் பாசிச எதிர்ப்புப் போரில் சோவியத் யூனியனின் பங்கை மறைக்க முடியாது. ஏனெனில் பாசிசத்தை தோற்கடித்ததில் சோவியத் மக்களின் தியாகம் ஈடு இணையற்றது. சூரியனை கை கொண்டு மறைக்க முடியாது. அது போல சோவியத் மக்களின் தியாகத்தையும் முதலாளித்துவ வாதிகளால் மறைக்க இயலாது. பாசிசத்திடமிருந்து பாதுகாத்ததற்காக என்றென்றும் உலகம் சோவியத் மக்களுக்கு கடமைப்பட்டுள்ளது.