ஊடக உலகில் உண்மையின் பேரொளியாக, இதழியல் துறையில் வைரவிழா கண்டு, திருநெல்வேலியில் ஐந்தாவது அச்சுப் பதிப்பினை தீக்கதிர் நாளிதழ் துவங்கிட இருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடை கிறேன். உழைப்பாளி மக்களின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிப்பதோடு, மதச்சார் பின்மை உள்ளிட்ட விழுமியங்களை பாது காப்பதற்கான நீண்ட நெடிய போராட்டக் களத்தில் அனைவரையும் அணிதிரட்டும் ஆயுதமாகவும் தீக்கதிர் நாளிதழ் திகழ்கிறது. தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களை தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்லும் வாகனமாகவும் தீக்கதிர் நாளிதழ் செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் மற்றும் அமலாக்கம் தொடர்பாக தீக்கதிர் நாளிதழ் வெளியிடும் கருத்துக்களும் களநிலவரம் பற்றிய பிரதி பலிப்பும், அரசின் திட்டங்களை இன்னும் செழுமையாக அமல்படுத்திட உதவியாக இருக்கிறது. மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி தமிழ்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார தளங்கள் மட்டுமின்றி, அறிவியல், கலை இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளிலும் தீக்கதிர் ஏடு தனது செய்திகள், கருத்துக்கள், விமர்சனங்கள் வாயிலாக மகத்தான சமூகப் பங்களிப்பினை செய்து வருகிறது. அத்தகைய ஏட்டின் வைரவிழா நிறைவு மற்றும் திரு நெல்வேலி பதிப்பு துவக்க விழா சிறக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.