களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்
திருவாரூர் மாவட்டத் தில் களப்பணி யாற்றிய பல தோழர் களை நாம் ஏற் கெனவே சந்தித்திரு க்கிறோம். இங்கே நாம் சந்திக்க விருப்பது மன்னார் குடி வட்டம், மணக்கரை கிராமத்தைச் சேர்ந்த தோழர் எ. தங்கவேல். 1946-ஆம் ஆண்டு தலித் பண்ணையாள் குடும்பத்தில் பிறந்தவரான தங்கவேல் 5-ஆம் வகுப்பு வரைபடித்தார். அதற்குமேல் படிக்க வைக்க இயலாத பெற்றோரின் சூழலில் அந்தச் சிறுவயதிலேயே தென்னங்கீற்று முடையும் தொழிலில் ஈடுபட்டுக் குடும்பத்திற்கு உதவினார். தங்கவேலின் தந்தை 1960இல் கிராம நிர்வாக அலுவலருக்கு உதவியாளராக தலை யாரி வேலையில் சேர்ந்தார். தந்தை செய்து வந்த அந்த வேலையில் 1972இல் தங்க வேல் சேர்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கண்ணமங்கை பகுதிச் செயலா ளராக இருந்தவர் தோழர் முத்தையா. மணக்கரையைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட பின்னணியில் தங்கவேலுடன் பழகிய அவர் தொடர்ந்து இவ ருடன் அரசியல் பேசி வந்தார். தோழர் ஜி.வீரய்யன் தொடர்பு கிடைக்க, அவரும் இயக்கம் குறித்துப் பேசியிருக்கிறார். அந்த உரையாடல்களின் உந்துதலோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதென்று முடி வெடுத்து 1971இல் கட்சி உறுப்பினரானார். தொடர்ந்து ஏ.கே.கணேசன் (களப்பால் குப்பு வின் மகன்), கே.முத்தையா உள்ளிட்ட தோழ ர்களோடு இணைந்து கட்சிப்பணியாற்றினார். பாலக்குறிச்சி, புள்ளமங்கலம், மணக்கரை, ஊட்டியாணி ஆகிய கிராமங்களில் மிராசுதாரர்கள் தானியக் கூலி தர மறுத்தனர். பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில் 1974இல் விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மிராசுதாரர்கள் வெளியூர் ஆட்களைக் கொண்டு வந்து சாகு படி வேலைகளைத் துவங்கியதை கம்யூ னிஸ்ட் கட்சியும், விவசாயத் தொழிலாளர் சங்க மும் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. ஜி. வீரய்யன், ஏ.கே.கணேசன், எ.தங்கவேல் உள்ளிட்டு பலர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குத் தொடுத்தனர். 15 நாட்கள் சிறையில் இருந்து பிணை யில் வெளியில் வந்தார்கள். வழக்கு விசா ரணையில் அனைவரும் விடுதலையானார்கள்.
மேற்கண்ட போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மாவட்ட அரசு நிர்வாகம் தங்கவேலை தலையாரி வேலையிலிருந்து நீக்கியது. கட்சியின் மாவட்டக் குழு முடிவை ஏற்று தோழர் தங்கவேல் முழுநேர ஊழிய ராகப் பணியாற்றத் தொடங்கினார். அக்காலத்தில் மன்னார்குடி வட்டம் உள்ளிட்டு கீழத்தஞ்சை முழுவதும் விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காகவும், குத்தகை விவசாயிகளின் நலன்களுக்காகவும், நில உச்சவரம்பு சட்டத்தின்படியான உபரி நில விநியோகத்திற்காகவும் போராட்டங்கள் நடந்து வந்தன. கீழத்தஞ்சை போர்க்குணமிக்க வர்க்கப் போராட்டக் களமாகத் திகழ்ந்தது. செம்பிய நத்தம் கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு நடை பெற்ற போராட்டத்தில் மணக்கரையிலிருந்து தோழர் தங்கவேல் மற்றும் தோழர் டி. மகா லிங்கம் ஆகியோர் முக்கியப் பங்காற்றி னார். தோழர் தங்கவேல் கட்சியின் மன்னார்குடி வட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கட்சிப் பணிகளிலும் விவ சாயிகள் சங்க வேலைகளிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வந்தார். தோழர் தங்கவேலு அவர்களோடு மன்னார்குடி வட்டக்குழுவில் பணியாற்றிய பரவாக்கோட்டை கிராமத்தைச் சார்ந்த தற்பொழுது 90 வயதாகும் தோழர் கே.டி. கந்தசாமி மன்னார்குடி கட்சி அலு வலகத்திலேயே தங்கி கட்சி பணியாற்றி வரு கிறார். 1980இல் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டு மன்னை வட்டத்தில் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் இரண்டை யும் கட்டுவதிலும், கட்சிக் கிளைகளை இயக்குவதிலும் சிறப்பாகப் பங்காற்றினார்.
வடபாதிமங்கலம் - நிலப் போராட்டம்
வடபாதிமங்கலம் முதலியார் தன்னுடைய 4,500 ஏக்கர் நிலத்தையும், சில நடுத்தர விவசாயிகளின் 1,500 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து 6,000 ஏக்கரை கரும்புப் பண்ணை என பதிவு செய்தார். கரும்புப் பண்ணை ஒரு தோட்டம் என்ற அடிப்படையில், திமுக அரசு கொண்டு வந்த 15 ஏக்கர் நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து அவர் விதிவிலக்கு பெற்றி ருந்தார். ஆனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு கரும்பு சாகுபடி மெல்லமெல்லக் குறைந்து நெல் சாகுபடி நடந்து வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், கட்சியின் தலைமையிலான விவசாயிகள் சங்கமும் கரும்பு பண்ணையைக் கலைக்க வேண்டும், உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படையில் 4,500 ஏக்கர் நிலத்தை நில மற்ற விவசாய தொழிலாளர்களுக்கு விநியோ கிக்க வேண்டும் என வலியுறுத்திப் போராட்டத்தைத் தொடங்கினர். பல ஆண்டுகள் அந்தப் போராட்டம் நடந்தது. அதனை ஒருங்கிணைப்பதற்காக வடபாதிமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் சங்க அலுவலகம் கட்டப்பட்டது. கட்சியின் முடிவுப்படி தோழர் தங்கவேல் இறுதிக்கட்டம் வரையில் அங்கே தங்கி போராட்டத்தை ஒருங்கிணைத்தார். 1979 ஆம் ஆண்டு 4,500 ஏக்கர் நிலத்தை விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோ கிக்க வலியுறுத்தி வடபாதிமங்கலத்தில் மாநாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கில் விவ சாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் தோழர்கள் என்.சங்கரய்யா, ஆர்.ராமராஜ், ஜி.வீரய்யன் உள்ளிட்டோர் பங்கேற்று வழிகாட்டியதை நினைவுகூர்கிறார் தங்கவேல். இதே காலகட்டத்தில் பண்ணைத் தொழி லாளர்கள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி யிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரும்புப் பண்ணையைக் கலைக்கக் கூடாது என இயக்கம் நடத்தியது. நில விநியோகம் குறித்து வருவாய்த்துறை அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தை வெற்றிபெறவில்லை. நில விநி யோகத்திற்கான போராட்டத்தை விவசாயி கள் சங்கம் தொடர்ந்தது. அவசர நிலை ஆட்சிக்காலத்தில் மாநில ஆளுநர் கரும்புப் பண்ணையைக் கலைக்க உத்தரவிட்டார். ஆனால், உபரி நிலம் விநியோகம் செய்யப்பட வில்லை. மீண்டும் போராட்டம் தொடர்ந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1989இல் சட்டமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்பியது. களத்திலும் வலுவான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைத்த கோரிக்கையை ஏற்றார். ஒரு குடும்பத்திற்கு முக்கால் ஏக்கர் என்ற அடிப்படையில் 4500 ஏக்கர் நிலத்தை 5000 நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் குடும்பங் களுக்கு விநியோகிக்கப்பட்டது. அந்த மகத்தான போராட்டத்தில் கலந்துகொண்டதை யும், களத்தில் நின்று ஒருங்கிணைத்ததையும் இன்றளவும் பெருமையாகக் கருதுகிறார் தங்கவேல். மணக்கரையில் கரும்புப் பண்ணைக்குச் சொந்தமான நிலம் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த கருப்பன் செட்டியார் கட்டுப்பாட்டில் இருந்தது. ஏ.கே.கணேசன், தங்கவேல் இருவரும் புதுக்கோட்டைக்குச் சென்று கருப்பன் செட்டியாருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன் பலனாக அந்த நிலம் 72 குடும்பங்களுக்கு 100 குழி (33 சென்ட்) வீதம் பிரித்தளிக்கப்பட்டது. ராஜன்கட்டளை கிராமத்தில் தர்மபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான 42 1/2 ஏக்கர் நிலத்தை விவசாய தொழிலாளர்களுக்கு விநி யோகம் செய்ய வேண்டுமென்று போராட்டம் நடந்தது. பேச்சுவார்த்தையில் அதனைப் பிரித்துக் கொடுக்க முடிவானது. கிராமத்துக் கோவில் அறக்கட்டளையில் எ.தங்கவேல் அறங்காவலராக சேர வேண்டுமென்று கட்சி முடிவு செய்தது. இந்து அறநிலையத்துறை அதிகாரிக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், மிராசுதாரர்கள் ‘‘தங்கவேல் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர், கடவுள் நம்பிக்கை இல்லாதவர், அவரை அறக்கட்ட ளையில் சேர்க்கக் கூடாது’’ என்று ஆட்சேபித்த னர். தங்கவேல் சென்னைக்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் களில் ஒருவரான வி.பி.சிந்தனைச் சந்தித்து, அவருடைய ஆலோசனையின்படி நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றியும் பெற்றார். இதைப் போலவே, மது சுந்தரேஸ் வரர் கோவிலுக்கு சொந்தமான 130 ஏக்கர் நிலம் விவசாய தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. இத்தகைய பணிகளுக்காக இந்தக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்க வேலுக்கு அன்பளிப்பாக 5 ஏக்கர் நிலம் கொடுக்க முன்வந்தனர். போராட்டம் நடத்தியது பொது நலனுக்காகத்தான், எனவே நிலம் தனக்கு வேண்டாம் என்று அவர்களி டம் அறிவித்தார் தங்கவேல். கட்சியின் ஆலோசனையோடு அந்த நிலமும் விவசாயத் தொழிலாளிகளுக்கே பிரித்தளிக்கப்பட்டது.
வட்டக்குழு செயலாளராக
2005 ஆம் ஆண்டு புள்ளமங்கலத்தில் நடை பெற்ற கட்சியின் வட்ட மாநாட்டில் வட்டச் செயலாளராக தங்கவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் கட்சியின் மாவட்டக்குழு விற்கும் தேர்வானார். 3 முறை தேர்வு செய்யப்பட்டு வட்டச் செயலாளராக 9 ஆண்டு காலம் செயல்பட்ட நாட்களின் நினைவு களைப் பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்கிறார். அக்காலத்தில் எம்.செல்லமுத்து, என்.கோவிந்தராஜன், என்.மணியன் போன்ற தோழர்களோடு இணைந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்பையும் பெருமையாகக் கருதுவதாக குறிப்பிட்டார். புள்ளமங்கலம் கிராம வேளாண் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கம்யூனிஸ்ட்டு களின் நேர்மையான பணிக்கு எடுத்துக்காட்டா கச் செயல்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றார். 2006 ஆம்ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலில் ஏ.தங்கவேலு டைய மனைவி தங்கம்மாள் கட்சியின் வேட்பா ளராக ஊராட்சிமன்றத் தலைவருக்கு போட்டி யிட்டு வெற்றிபெற்று 5 ஆண்டு காலம் செயல்பட்டிருக்கிறார். இந்த ஆண்டுகளில் பல நலத்திட்டங்களை அவர் அமலாக்கி யிருக்கிறார்.
மணக்கரையில் கட்சி அலுவலகம்
தோழர் தங்கவேல் முயற்சியில் கட்சிக்குச் சொந்தமாக 60 குழி (20 சென்ட்) நிலம் வாங்கப்பட்டு கிளை அலுவலகம் (வெண்மணி இல்லம்) கட்டப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தங்கவேல் - தங்கம்மாள் திருமணம் சீர்திருத்த முறையில் ஏ.கே.கணேசன் தலைமையில் நடைபெற்றது. இவர் களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். அனை வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமாக உள்ளனர். இவரது குடும்பம் கட்சிக் குடும்பம். தற்போது 77 வயதாகும் தோழர் எ.தங்க வேல் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக அர்ப்பணிப்போடு கூடிய இயக்க வேலை செய்து வந்திருக்கிறார். கைது, சிறை, வழக்கு போன்ற அடக்குமுறைகளை சந்தித்தவர். போராட்டத்தில் கலந்து கொண்டதால் அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்டதைப் புறந்த ள்ளி கட்சியின் முழுநேர ஊழியரானவர். தற்போது வயது மூப்பின் காரணமாக மாவட்டக்குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டு மணக்கரை கிராமத்துக் கிளையில் உறுப்பி னராக இருந்துகொண்டு தன்னாலியன்ற இயக்கச் செயல்பாடுகளைத் தொடரும் தங்கவேலுவின் களப்பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.