‘ஏ இவன் செயின் சங்கரு, சங்கிலி அறுப்பான், நிறைய சம்பாதிக்கிறான், ஆனா (ஸ்டேஷனுக்கு) மாசம் ஐயாயிரம்தான் கொடுக்கிறான்’ என்பதும், ‘பிரியாணி கடையில தினம் இருபதாயிரம் வருமானம் வந்தும் நமக்கு எதுவும் தரலையா’ என்பதும் தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்ற வசனங்கள். நடைமுறையில் இப்படியெல்லாம் செய்கிற - அதாவது திருடனைத் திருட வைத்து வசூலிக்கிற, முறையாகத் தொழில் நடத்தினாலும் ரவுடிகளுக்கு மாமூல் தரவேண்டிய - நிலையெல்லாம் இருக்குமா என்று வியப்பு ஏற்படுவது உண்டு. அவை இருக்குமோ இல்லையோ, அப்படி மிரட்டி வசூல் செய்கிற ஒரு கட்சியே ஆட்சியில் இருக்கிறது என்பதுதான் பாஜகவிற்கு அளிக்கப்பட்டுள்ள நிதிகளை ஆய்வு செய்த நியூஸ்லாண்டரி தளத்தின் ஆய்வுகளில் வெளிப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியபின், தேர்தல் பத்திரங்கள் பற்றிய விப ரங்களை சமர்ப்பித்த ஸ்டேட் வங்கி, யாரால் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று அடை யாளம் காண உதவிடக்கூடிய வரிசை எண்களை மறைத்திருக்கிற நிலையில், தேர்தல் பத்தி ரங்கள் மட்டுமின்றி, முந்தைய தேர்தல் அறக் கட்டளை உட்பட பல்வேறு வழிகளிலும், ஆட்சியி லிருக்கிற பாஜகவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் வந்த நிதிகள், அவற்றை அளித்தவர்களுக்கு, அதன்பின் கிடைத்த கைம்மாறு, அல்லது அளிப்பதற்கு முன் விடுக்கப்பட்ட ‘ரெய்ட்’ போன்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை, ஊடகங்களில் அவ்வப்போது வெளியான செய்திகளின் அடிப்ப டையில் அது தொகுத்திருக்கிறது.
பாஜகவுக்கு நிதியளித்தால் பிணை கிடைக்கும்!
ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டவருக்குப் பிணை வழங்குவது நீதிமன்றமாக இருந்தா லும், பிணையை எதிர்த்து வாதாட வேண்டியவர் அரசுத் தரப்பின் - அதாவது சிபிஐ, அமலாக் கத்துறை அல்லது வருமானவரித்துறையின் சார்பில் ஆஜராகிற வழக்கறிஞர்தான். அவர் மறுக்காவிட்டால் பிணை எளிதில் கிடைத்து விடும். செந்தில் பாலாஜி வழக்கில் பிணை வழங்கக்கூடாது என்று எதிர்த்து இன்றுவரை தீவிரமாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் வாதாடுவதோடு ஒப்பிட்டால் இது விளங்கும். மத்தியப் பிரதேசத்தின் சோம் டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் வரி ஏய்ப்புக் காக 2020இல் கைது செய்யப்பட்டனர். கீழமை நீதிமன்றங்களால் இருமுறை பிணை மறுக்கப் பட்டபின், ஜபல்பூர் உயர் நீதிமன்றம் அவர்களு க்குப் பிணை வழங்கியது. அவர்கள் பிணையில் வெளிவந்த 10 நாட்களில், சோம் டிஸ்டிலரீஸ் நிறுவனம் பாஜகவிற்கு ரூ.1 கோடி நிதியளித்தது. அடுத்த சில மாதங்களில் இரு தவணைகளாக மேலும் ரூ.1 கோடி அளித்தது. அதாவது, பேரம் படிகிற வரை பிணை மறுக்கப்பட்டு, படிந்தபின் பிணை வழங்கப்பட்டு, அதற்கான ‘கட்டணமும்’ வசூலிக்கப்பட்டது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அகமதாபாத்தைச் சேர்ந்த குழாய் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரால் நிறுவனத்தில் 2021 நவம்பரில் வருமானவரித்துறை சோதனை நடத் தப்படுகிறது. அடுத்த 2 மாதங்களில் அந்நிறு வனம் பாஜகவிற்கு ரூ.1 கோடி நிதியளிக்கிறது. மும்பையைச் சேர்ந்த யுஎஸ்வி என்ற மருந்து நிறு வனத்தில் வருமானவரிச் சோதனை நடத்தப்படு கிறது. அடுத்த மாதத்தில் அந்நிறுவனம் பாஜக விற்கு ரூ.9 கோடி நிதியளிக்கிறது.
அதானிக்கு விட்டுக்கொடு!
கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் 2020-22 காலத்தில் பாஜகவிற்கு ரூ.12 கோடி நிதியளிக்கிறது. அதற்கடுத்த ஆண்டில் அந்நிறுவனம் நிதியளிக்கவில்லை. அவ்வாண்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டு, ரூ.23 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு என்று குற்றம் சாட்டப்படுகிறது. சங்கி இண்டஸ்ட் ரீஸ் என்ற நிறுவனத்தை வாங்கும் முயற்சியிலி ருந்த ஸ்ரீ சிமெண்ட்ஸ், இந்த நெருக்கடிகளால் அதனை அதானிக்கு விட்டுக்கொடுக்கிறது. சரி யாகச் சொன்னால், அதானிக்கு விட்டுத் தரச் சொல்லி, இந்நிறுவனத்துக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி உணவு நிறு வனத்தில் வருமானவரிச் சோதனை நடந்து வழக்கு நடந்துகொண்டிருக்கிற நிலையில், அந்நிறுவனத்திடமிருந்து ரூ.5.78 கோடி நிதியை பாஜக பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டின் எஸ்என் ஜே டிஸ்டிலரீஸ் நிறுவனத்தில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்ட 4 மாதங்களில் ரூ.1.05 கோடியையும், அடுத்த ஆண்டில் ரூ.6 கோடியை யும் ‘நன்கொடை’யாக பாஜக ‘வசூலித்திருக்கி றது’. அடுத்த ஆண்டில் மேலும் ரூ.5 கோடியை, பெரும்பகுதியை பாஜகவிற்கு வழங்கக்கூடிய ப்ரூடெண்ட் தேர்தல் அறக்கட்டளைக்கு அந்நிறு வனம் வழங்கியுள்ளது.
உனக்கு நான்; எனக்கு நீ!
மும்பையைச் சேர்ந்த ஐஆர்பி இன்ஃ ப்ராஸ்ட்ரக்ச்சர் டெவலப்பர்ஸ் நிறுவனம் 2013-14 இல் பாஜகவிற்கு ரூ.2.3 கோடி நிதியளித்துள்ளது. அடுத்த ஆண்டில் அந்நிறுவனத்தில் சிபிஐ சோதனை நடக்கிறது. அந்த நிறுவனம் பாஜக விற்கான நன்கொடையை ரூ.14கோடியாக ‘உயர்த்தி’ தருகிறது! இந்த நிறுவனமும், இதன் துணை நிறுவனங்களும் சேர்த்து 2013-24 காலத்தில் பாஜகவிற்கு ரூ.84 கோடி நிதியளித்திருக்கின்றன. கைம்மாறாக, ஹாப் பூர்-மொராதாபாத் நெடுஞ்சாலை ஒப்பந்தம் இந்நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடந்தி ருப்பதாக பின்னர் சிஏஜி அறிக்கை வெளிப் படுத்துகிறது. 2019-20இல் பாஜகவிற்கு வெறும் ரூ.2.5 லட்சம் நிதியளித்திருந்த ஹைதராபாத்தின் யசோதா மருத்துவமனைகள் குழுமத்தில் வரு மான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்ட பின், ரூ.10 கோடி நிதியளிக்கிறது. அகமதாபாத் தைச் சேர்ந்த சிரிபால் இண்டஸ்ட்ரீஸ், 2019-20இல் பாஜகவிற்கு ரூ.2.25 கோடி நிதி யளித்துவிட்டு, அடுத்த இரண்டாண்டுகளுக்கு நிதியளிக்கவில்லை. அதன்மீது வருமான வரித்துறைச் சோதனை நடத்தப்பட்டு, கணக்கில் வராத ரூ.10 கோடி கைப்பற்றப்பட்டதாக அறி வித்தவுடன், அந்நிறுவனம் பாஜகவிற்கு ரூ.2.61 கோடி நிதியளிக்கிறது.
பாஜகவிற்கு நிதியளித்தால் பரிசுத்தமாகலாம்!
அசாமைச் சேர்ந்த மகாலட்சுமி குழுமத்தின் மீது முறைகேடுகளுக்காக 2012, 2016இல் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அதன் உரிமையாளர் நவீன் சிங்கால் வீட்டில் 2020இல் வருமானவரித்துறைச் சோதனை நடத்தப்பட்டதையடுத்து, அவர் பாஜகவிற்கு ரூ.2.85 கோடி நிதியளிக்கிறார். அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் ரூ.7.45 கோடி, ரூ.1.49 கோடி நிதியை பாஜகவிற்கு அவர் அளித்ததைத் தொடர்ந்து, சிபிஐயால் முறைகேடுகள் செய்த தாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது நிறு வனத்திற்கு, வடகிழக்கு இந்தியாவின் மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கத்திற்கான உரிமம் அளிக்கப்படுகிறது. போலியான வங்கிச் சான்று அளித்ததற் காக தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்ட மைப்பு நிறுவனத்தால் 2016இல் 5 ஆண்டு களுக்குத் தடை விதிக்கப்பட்ட எஸ்என் பவே நிறு வனத்திற்கு 2019இல் 8 ஒப்பந்தங்கள் அளிக் கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து அந்நிறுவ னம் பாஜகவிற்கு ரூ.3.47 கோடி நிதியளிக்கிறது. குஜராத்தைச் சேர்ந்த அக்ரோசெல் இண்ட ஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் ஆண்டுதோறும் பாஜ கவிற்கு நிதியளித்து வருகிறது. அந்த நிறுவ னத்திற்கு கட்ச் பகுதியில் முறைகேடாக 18 ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
கடைவீதி ரவுடிகளை விடக் கேவலமாக...
இப்படி நீள்கிற பட்டியலில் சில மட்டும் ‘சாம்பிளுக்கு’ இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தெரிகிற செய்திகள் என்ன வென்றால், தேர்தல் பத்திரங்கள் அறிமுகப் படுத்தப்பட்ட 2018இலிருந்து 2023 வரை யான காலத்தில் பாஜகவிற்கு நிதியளித்துள்ள நிறுவனங்களில் குறைந்தது 30 நிறுவனங்க ளின்மீது ஒன்றிய அரசின் அமைப்புகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை மொத்தம் ரூ.335 கோடி நிதியளித்துள்ளன. அதில் ரூ.187.58 கோடியை அளித்துள்ள 23 நிறுவனங்கள், ‘ரெய்டு’க்கு முன்பாக பாஜக விற்கு நிதியளித்ததே இல்லை. 4 நிறுவனங்கள் ரெய்டு நடந்து 4 மாதங்களுக்குள் நிதியளித் துள்ளன. ஏற்கெனவே பாஜகவிற்கு நிதியளித்துக் கொண்டிருந்த 6 நிறுவனங்கள், ரெய்டுக்குப் பின் முன்பைவிட மிக அதிமான தொகையை நடவடிக்கைக்குப்பின் பாஜகவிற்கு அளித் துள்ளன. மொத்தத்தில் கடைகளில் மிரட்டி வசூல் செய்கிற ரவுடிகளைவிட மிகக் கேவலமான முறைகளில் வசூல் செய்திருக்கிறது பாஜக!
-அறிவுக்கடல்