பேரிடி விழுந்திடுச்சே!
பெரும் புதையல் தொலஞ்சிடுச்சே!
ஊருக்காய் துடித்த உயிர்
உருக்குலைஞ்சு போயிடுச்சே!
சங்கடம் சூழ்ந்ததென்ன ?
சங்கநாதம் முடிந்ததென்ன?
எங்கள் ஊர் ஏங்கல்சு
எமை விட்டு போனதென்ன!
சோகத்தில் தமிழகமே
சுருண்டு படுத்ததென்ன?
தியாகத்தின் வடிவத்தை
தீ தின்ன கொடுத்ததென்ன?
சிறுமை கண்ட போது
சிலிர்த்தெழுந்த சிங்கம் அவன்!
வறுமை நோய் ஒழிப்பதற்கு
வழி சொன்ன டாக்டர் அவன்
இள வயது காலம் தொட்டு
இந்தியாவை எண்ணியவன்!
தளர்வடையா போராளி
தகைசால் தமிழன் அவன்!
ஏழைகளின் மருதாணி
இயக்கத்தின் அச்சாணி.
நாளை வரும் புரட்சிக்கு
நம்பிக்கை போர் பரணி!
சித்தத்திலும் கூட
சிவப்பனுக்கள் அவனுக்கு
செவ்வணக்கம் செலுத்துகிறோம்
எம் ஞான தகப்பனுக்கு