ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட் ஒட்டு மொத்தமாக இந்திய மக்களின் வாங்கும் சக்தியை பெருமளவிற்கு குறைக்கும். 2018-19 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2021-22 ஆண்டில் மக்களின் வாங்கும் சக்தி 13 சதவீதம் குறைந்துள்ளது. வரும் ஆண்டில் இது இன்னும் பாதாளம் நோக்கித் தான் பாயும்.
கேள்வி: இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நலனுக்கான பட்ஜெட் என்று சொல்லப்படுவது உண்மையா?
பதில்: இந்திய அரசு வருடா வருடம் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பது, ‘வெறும் வரவையும் செலவையும் பட்டியலிட்டு சொல்லும் அறிக்கையல்ல.’ அது மாறாக, இந்திய அரசின் ஓராண் டிற்கான பொருளாதாரக் கொள்கை பற்றியும், அரசின் அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பும் ஆகும். அப்படி பார்க்கும் போது, நிதியமைச்சர் கடந்த 2023 பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்த பட்ஜெட் 2023-24, இந்திய மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தி ருக்கிறது.
முதலாளிகளுக்கானது...
இந்த பட்ஜெட்டை கூர்ந்து நோக்கும் போது, நரேந் திர மோடி அரசு, இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை அப்படியே படு மோசமாக வைத்துக் கொண்டு 2024 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்க தயாராகி வருவது வெளிச்ச மாகத் தெரிகிறது. இந்திய நாட்டு மக்களின் துயரங்க ளை துடைப்பதற்கு எந்த மார்க்கமும் சொல்லாமல், அவர்களை அப்படியே வைத்திருந்து, தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறது. கடந்த காலங்களில், ஆட்சியாளர்கள், தேர்தலுக்கு முன்பான ‘‘பாப்புலிஸ்ட் பட்ஜெட்டை” அறிவிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை முழுக்க முழுக்க ஒரு சில ‘‘பெரு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான பட்ஜெட் டாக’’ மோடி அரசு அறிவித்திருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வர இயலாவிடில், தனக்கு நெருக்கமான கார்ப்பரேட் கனவான்களுக்கு பிரதிபலன் செய்ய முடி யாதே என்கிற ஆதங்கம் தான் இந்த பட்ஜெட்! பட்ஜெட்டுக்கு முதல் நாள் தாக்கல் செய்யப்பட்ட ‘பொருளாதார ஆய்வறிக்கை’ (Economic Survey), இந்திய மக்களின் வாழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்கிற உண்மையைக் கூட ஏற்க வில்லை அல்லது பேச மறுத்துவிட்டது.
இந்திய நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவு முறைசார் தொழில்களில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சுருங்கிவிட்டது. அதற்கடுத்த தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையிழப்பு என்பது அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், அந்த தொழிலாளர்களுக்கு தரப் படும் சம்பளமும் மிகவும் குறைந்து விட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தொகை அதிகரிப்பு, குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் நோயுற்று இருப்பது, பட்டினியால் வாடும் குழந்தைகள், இந்திய குடிமக்கள், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையில்லா இந்தியர்களின் எண்ணிக்கை - இவைகளை பற்றிய சிறு வார்த்தை கள் கூட பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் வாசிக்க வில்லை. ஆனால் நிதியமைச்சர் 2014 ஆம் ஆண்டிற்கு பின் இந்தியா ‘அமிர்தமான காலத்திற்குள் நுழைந்து விட்டது’ என்றும் அதற்கு முன் வந்த அரசுகள் இந்திய மக்களைப் பற்றிய கவலையே இல்லாமல் இருந்ததா கவும் குறிப்பிடுகிறார். (அவர் சொன்ன காலகட்டத் தில் தான் வாஜ்பாய் அரசும் இருந்ததைக் கூட அவர் அறியவில்லை).
பொய்களால் கட்டப்பட்ட வாய்ப்பந்தல்
நமது எச்சரிக்கை இது தான், நிதியமைச்சர் வாசித்த 2023-24 க்கான பட்ஜெட் உரை மற்றும் அதற்கு முதல் நாள் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வ றிக்கை இரண்டும் பொய்களால் கட்டப்பட்ட வாய்ப் பந்தல். பொருளாதார ஆய்வறிக்கையில் தரப்பட்டுள்ள உண்மையான செலவினங்கள் முதல் மூன்று காலாண் டிற்கானது. கடைசி காலாண்டிற்கானதை ஒன்றிய அரசு எப்படி வேண்டுமானாலும் பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வ றிக்கையில் காட்டப்பட்டுள்ள செலவினங்கள் கடந்த பட்ஜெட் அறிவிப்பை விட மிகவும் குறைவானது. அதே போல் 2023 - 24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டிருக்கும் திட்டச்செலவுகள், பொது மக்கள் வாழ்நிலையை உயர்த்துவதற்கான ஒதுக்கீடு அனைத் தும் மிகமிகக் குறைவு. இன்னும் சொல்லப்போனால் கடந்த இரு பத்தாண்டுகளில் (two decades) போடப் பட்ட பட்ஜெட் ஒதுக்கீடுகளைவிட மிகவும் குறைவு. இந்திய நாட்டில் வேலையின்மை அதிகரித்து வரும் வேளையில், கிராமப்புற மக்களின் வருமானம் பெருமளவு குறைந்து வரும் சூழலில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MNREGA) என்கிற கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற் கான ஒதுக்கீட்டை ஒன்றில் மூன்று பங்காக (1/3) வெட்டிச் சுருக்கியிருக்கிறது இந்த பட்ஜெட். இந்த வருடத்திற்கான நிலுவைத்தொகை, வரும் ஆண்டிற் கான 100 நாட்களுக்கு வேலைக்கான கூலி இவை அனைத்தும் சேர்த்து ரூபாய் 2,72,000 கோடி தேவை யென பீப்பிள்ஸ் ஆக்சன் ஃபார் எம்ப்ளாய்மெண்ட் கியாரண்டி (People’s Action for Employment Guarantee) என்கிற அமைப்பு கணக்கிட்டிருந்த நிலை யில், வெறும் ரூபாய் 60,000 கோடி மட்டுமே இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஒதுக்கியிருப்பது நரேந்திர மோடி அரசு யாருக்கான அரசு என்பதை சுட்டிக் காட்டுகிறது.
60 சதவீத வெட்டு...
அதே போல், ‘உணவு மானியத்திற்கான ஒதுக்கீட்டில்’ ஒன்றில் மூன்று பங்கு வெட்டி குறைத்துள் ளது இந்த அரசு மக்களின் ஊட்டச் சத்து குறை பாட்டை பற்றியும், பட்டினிச் சாவு பற்றியும் கிஞ்சித்தும் கவலைப்படாதது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த பட்ஜெட்டில் தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு ஒதுக்கியுள்ள தொகை, ஒரு வருட பணவீக்கத்தை பார்க்கும் போது மிகவும் குறைவு ஆகும். சுகாதாரப் பணிகளுக்காக தனிநபர் (per capita) ஒதுக்கீடு என்பது மிகவும் குறைந்துள்ளது. பிஎம் ஸ்வஸ்தியா சுரக்க்ஷாயோசனா (PM Swasthya Suraksha Yojana) என்கிற இன்சூரன்ஸ் திட்டத்திற்காக ஒதுக்கியுள்ள தொகை கடந்த பட்ஜெட்டில் ரூபாய் 10,000 கோடி என்பது 2023-24 பட்ஜெட்டில் ரூபாய் 3365 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்திருக்கும் இந்தச் சூழலில், ‘மருத்துவக் காப்பீட் டிற்கான தொகையை கிட்டத்தட்ட 66 சதவீதம் வெட்டி தள்ளியிருப்பது’ என்பது இந்த அரசு யாருக்கான அரசு என்பதை நாடாளுமன்றத்திலேயே திரையிட்டு காட்டியி ருக்கிறது. கொரோனா காலத்திற்கு பின்னான கற்றல் குறை பாட்டை சரி செய்வதற்கான செலவுகளை உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அதிகரித்து வரும் நிலை யில் அதற்கான ஒதுக்கீட்டை ரூபாய் 60,000 கோடியிலி ருந்து வெறும் ரூபாய் 5,356 கோடியாக குறைத்தி ருப்பது, பாஜக அரசின் கல்வி மீதான, மாணவர்கள் மீதான அலட்சியத்திற்கு சாட்சியமாக உள்ளது.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல்
கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு வெட்டிச் சுருக்கியது போலவே, விவசாயத்திற்கும் நிதிய மைச்சர் தயவு தாட்சண்யமின்றி, தனது அரசின் கொள்கை என்னும் கத்திரிக்கோலால் வெட்டித் தள்ளி யிருக்கிறார். ஆமாம் விவசாயப் பொருட்களுக்கு சந்தையில் ஆதார விலை குறைந்தால், அவற்றுக்கு நிவாரணம் தருவதற்கு கடந்த பட்ஜெட்டில் ரூபாய் 1,500 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. பட்ஜெட் 2023-24 இல் இந்த தொகை ஒரு லட்சம் மட்டுமே. (ஒரு லட்சம் என்பது தட்டச்சு பிழையல்ல...வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே) அப்படியானால் ஒரு வருட கால மாக போராடிய விவசாயப் பெருமக்களின் வயிற்றில் அடிக்கும் செயலன்றி வேறு எப்படி இதை சொல்வது? பெரும்பாலான மூலதனச் செலவு கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கடன் அடைப்பதிலும், எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடு செய்வதற்கும் செலவிடப்படுகிறது. அப்படியானால் இந்திய நாட்டின் அடிப்படை கட்டமைப்பிற்காக ஒதுக்கப்படும் மூல தனத் தொகையில் பெரும் பகுதி கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு மடைமாற்றம் செய்வதை பட்ஜெட் மூலமாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்பு தல் பெறுகிறது ஒன்றிய அரசு. ‘‘14ஆவது நிதி கமிஷன், ஒன்றிய அரசு வசூல் செய்யும் ஒட்டு மொத்த வரியில் 42 சதவீதம் மாநி லங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று சொல் கிறது.’’ ஆனால் இந்த பட்ஜெட்டில் மாநில அரசுக ளின் பங்கினை 30.4 சதவீதமாக குறைத்துள்ளது கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக்குள்ளாக்கி யுள்ளது.
மக்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைக்கும்...
ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட் ஒட்டு மொத்த மாக இந்திய மக்களின் வாங்கும் சக்தியை பெரு மளவிற்கு குறைக்கும். 2018-19 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2021-22 ஆண்டில் மக்களின் வாங்கும் சக்தி 13 சதவீதம் குறைந்துள்ளது. வரும் ஆண்டில் இது இன்னும் பாதாளம் நோக்கித் தான் பாயும். அதே சமயம், தனிநபர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பங்கானது 23.1 சதவீதத்திலிருந்து 19.6 சதவீத மாக கடந்த ஆண்டுகளில் குறைந்துள்ளது. இந்த குறைவு விகிதம் வரும் ஆண்டுகளில் இன்னும் அதி கரிக்கும் அபாயம் நிறைய உள்ளது. இந்த கார்ப்பரேட் நல பாஜக அரசு, நுண் பொருளா தார மறுமலர்ச்சிக்கு (micro economic revival) கொஞ்சம் கூட நிதி ஒதுக்கவில்லை. மாறாக கார்ப்பரேட் செலவினத்தை மட்டும் செய்தால் மக்களின் துயரங்கள் தீர்ந்துவிடும் என்ற முட்டாள் தனமான கொள்கையை முன்னிறுத்தி இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளது. தேர்தல் நேரங்களில் பல்வேறு ‘‘பிரிவினை பிரச்சா ரங்களுக்கு இரையாகி, வாக்காளர்கள் மீண்டும் ஏமாற் றப்படாமல் இருக்க வேண்டும்.’’
தமிழில்: வி.ரமேஷ், பொது இன்சூரன்ஸ், மதுரை