articles

img

இந்தியக் குடியரசின் அடிப்படைக் குணத்தை பாதுகாப்பதற்கான போர்! - சீத்தாராம் யெச்சூரி, ,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும்  “மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு” 
(ஜூலை 23-மதுரை) சிறப்புக் கட்டுரை - 6

‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக விளங்குவது, இந்தியாவின் மகத்தான விடு தலைப் போராட்டத்தின்போது உரு வான கூட்டாட்சித் தத்துவமே’ என்று உச்ச நீதிமன்றம், 1994 எஸ்.ஆர். பொம்மை மற்றும் 2006 குல்தீப் நய்யார் வழக்கு களில் அடையாளம் காட்டியிருக்கிறது.   விடுதலைப் போராட்டம் தான் நாட்டு மக்கள் அனைவரையும், அவர்களி டையே இருந்த வேற்றுமைகளையெல் லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, பல்வேறு மொழி பேசுவோரையும், பல்வேறு வித மான பழக்க வழக்கங்கள் உள்ளோரை யும், பல்வேறு கலாச்சார மரபுகள் கொண்டவர்களையும், பல்வேறு மதத்தி னரையும் ஒரே அணியில் கொண்டு வந்தது; பல்வேறு தரப்பினரிடம் காணப் பட்ட, அனைத்து வேற்றுமைகளையும் சமமாகக் கருதி அங்கீகரித்து, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்திட முடியும், வலுப்படுத்திட முடியும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டியது.

மாநிலங்களின் ஒன்றியம்

கூட்டாட்சித் தத்துவம் நம் நாட்டில் இரு விதமான அரசாங்கங்களை உள்ளடக்கி யது. ஒன்று ஒன்றிய அரசாங்கம், மற் றொன்று மாநில அரசாங்கங்கள். இதை நம் அரசமைப்புச்சட்டம், தன்னுடைய முதல் பிரிவிலேயே, “இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஓர் ஒன்றியம்,” (“India, that is Bharat, shall be a Union of States”) என்று வரையறுத்துக் கூறியிருக்கிறது. இதன் அடிப்படையி லேயே ஒன்றிய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கங்களுக்கும் இடையே யான  சட்டமன்ற/நாடாளுமன்ற அமைப்பு முறை, ஆட்சியாளர்களின் அதிகாரங் கள், நீதிபரிபாலனம் மற்றும் நிதி சம்பந்த மான விவகாரங்கள் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. எனினும் நடைமுறையில், தற்போது அதிகாரங்கள் ஒன்றிய அரசாங்கத்தின் கைகளில் குவிக்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசாங்கத்திற்கு என்று சில துறை களும், மாநில அரசாங்கங்களுக்கு என்ற சில துறைகளும், இரு அரசாங்கங்களுமே கையாளலாம் என்று பொதுப் பட்டிய லில் சில துறைகளும் (concurrent list of subjects) வரையறுக்கப்பட்டிருக்கின் றன. இருந்தபோதிலும் நடைமுறையில் பொதுப்பட்டியலில் உள்ள துறைகளைப் பொறுத்தவரை ஒன்றிய அரசாங்கம் என்ன கருதுகிறதோ அதுதான் செயல் படுத்தப்படுகிறது.

முதலாளித்துவத்திற்கும் கூட்டாட்சி தேவை

நாடு சுதந்திரம் பெற்றபின், முதலா ளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றி டும் இந்திய ஆளும் வர்க்கங்கள், இயற் கையாகவே, மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒரு கட்டமைப்பையே, தங்களுடைய சந்தைக்கும் உற்பத்திச் சாதனங்களுக்கும் உகந்தது என விரும்பின. எனினும், முதலாளித்துவ வளர்ச்சிக்குமே கூட நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டியது அவசியமாகும். அப் போதுதான் ஓர் ஒருங்கிணைந்த சந்தை  மற்றும் தொழிலாளர்களைத் தேவை யான அளவிற்கு உத்தரவாதப்படுத்திட முடியும். முதலாளித்துவ வளர்ச்சிக்கு இது அத்தியாவசியமாகும். இதற்கு, ஜனநாய கத்தின் கீழ் ஒற்றையாட்சித் தன்மைக்கு மாறாக கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்ப டையிலான அரசாங்கத்தை நடத்துவது அவசியமாகும். இவ்வாறுதான் இந்தியாவில் இயல்பா கவே மாநிலங்களின் அடையாளங்கள் சம்பந்தமாகவும், சட்டமன்றங்களின் வல்லமை மற்றும் பிராந்தியங்களில் ஏற் படும் அவசர நிலைமைகள் சம்பந்தமா கவும் மோதல்களும் முரண்பாடுகளும் இருந்த போதிலும், அவற்றுடன் இணை ந்து இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தின் மத்தியத்துவப்படுத் தப்பட்ட குணமும் உருவானது.

முதலாளித்துவத்துக் குள்ளேயே ஏற்பட்ட முரண்பாடு

மத்தியில் அதிகாரங்களைக் குவிக்க வேண்டும் என்கிற ஆளும் வர்க்கங்க ளின் ஆசைக்கும், கூட்டாட்சிக் கட்ட மைப்புக்கான கட்டாய நிலைமைக ளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு, மத்திய ஆட்சியாளர்களால் அரசமைப் புச்சட்டத்தின் ஷரத்துக்களைத் துஷ்பிர யோகம் செய்து, அன்றைக்கு காங்கிரஸ் அல்லாத மாநில அரசாங்கங்களை ‘டிஸ்மிஸ்’ செய்ய வைத்திடும் சூழ்நிலை களை உருவாக்கின. இது, தோழர் இ.எம்.எஸ். தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டதிலிருந்து தொடங்கியது.

இரண்டு ஆணையங்கள்

நாட்டின் பல மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசாங்கங்கள் உரு வானபோது, அவசரநிலைக் காலத்தி ற்குப் பின்னர், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தேவை என்னும் கோரிக்கைகள் எழுந்தன. மத்திய - மாநில உறவுகள் சம்பந்தமாக எதிர்க் கட்சிகள் நடத்திய பல்வேறு சிறப்பு மாநாடு களும், கூட்டு இயக்கங்களும், போராட் டங்களும் 1983இல் சர்க்காரியா ஆணை யம் நிறுவப்படுவதற்கு இட்டுச் சென்றன. எனினும் இதன் பரிந்துரைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக் கின்றன. 2004இல் மன்மோகன் சிங் தலை மையில் ஐமுகூ அரசாங்கம் அமைந்த பின், இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத் தால் 2007இல் புஞ்சி (Punchhi) ஆணை யம் நிறுவப்பட்டது. எனினும் இதன் பரிந்துரைகளில் பலவும் இன்னமும் நிறைவேற்றப்படாமல் நீடிக்கின்றன.

பாஜக ஆட்சிக்கு  வந்த பின்பு..

2014இல் பாஜக தனிப் பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைத்தபின், கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல்கள் வெறித்தனமாக அதிகரித்தன. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கம் என்ற முறையில் பாஜகவானது ஆட்சி தன் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணத்தை, ஆர்எஸ்எஸ் விரும்பும் வெறி பிடித்த ‘சகிப்புத்தன்மையற்ற, பாசிசத் தன்மை கொண்ட இந்துத்துவா ராஜ்ஜிய மாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் வேகமாக இறங்கியிருக்கிறது. இதனை முழுமையாக ஈடேற்ற வேண்டுமானால், இப்போது நடைமுறையில் உள்ள அரச மைப்புச்சட்டத்தை முழுமையாக இடித் துத் தரைமட்டமாக்க வேண்டியது ஆர்எஸ்எஸ்- பாஜகவுக்கு அவசியம். எனவேதான், இவர்கள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் மதச்சார்பின்மை, ஜன நாயகம், பொருளாதார இறையாண்மை மற்றும் சமூக நீதி ஆகிய நான்குட னும், கூட்டாட்சித் தத்துவத்தையும் கடு மையாக அரித்து வீழ்த்திக்கொண்டி ருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பாசிச நிகழ்ச்சிநிரலை நிறைவேற்ற வேண்டு மானால் அதற்கு ஒற்றை ஆட்சி அமைப்பு இருக்கவேண்டியதும், மத்தி யத்துவப்படுத்தப்பட்ட பாசிச அரசாங்கம் இருக்க வேண்டியதும் தேவையாகும். எனவேதான், 2014க்குப்பின் மோடி ஆட்சியின்கீழ் கல்வி, அரசியல், நிதி, சமூகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய கூட்டாட்சித் தத்துவத்தின் அனைத்து அம்சங்கள் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

ஆளுநர்களின் அட்டூழியம்

பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளு நர்களும், துணை நிலை ஆளுநர்களும் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தங்க ளுக்கு விதிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, பாஜகவின் அரசியல் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்திட செயல்பட்டுக் கொண்டி ருக்கின்றனர்.  மோடி அரசாங்கமானது, அரச மைப்புச்சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசின் கீழ் உள்ள பட்டியலில் (state list) உள்ள துறைகளையும், பொதுப் பட்டியலில் (concurrent list) உள்ள துறைகளையும் தொடர்ந்து ஒரு தலைப்பட்சமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை, படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்கள், கூட்டுறவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது முத லானவற்றை இவற்றிற்கு எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.  

தேசிய மொழிகளுக்கு அந்தஸ்து மறுப்பு

கலாச்சாரத் துறையிலும் மாநில அரசாங்கங்களின் சுயாட்சி தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள தேசிய மொழிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்து அளிப்ப தற்கு மறுப்பதோடு, இந்தி மொழியை மட்டும் வளர்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வெறும் 30 சதவீத நிதியே!

கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்ப டையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கு வதும் முற்றுகைக்கு உள்ளாகி இருக்கி றது. மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாக நசுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசாங்கம் வசூலித்தி டும் மறைமுக வரிகளில் மாநிலங்க ளுக்கான பங்கு உரிய முறையில் பிரித்துக் கொடுக்கப்படாமல் பறிக்கப்பட்டி ருக்கிறது. மேலும் கூடுதலாக, மோடி அரசாங்கமானது, சர்சார்ஜ் வரிகள் என்ற பெயரிலும் செஸ் என்ற பெயரிலும் நேரடியாகவே வரி வசூல் செய்கிறது, இதில் மாநிலங்களுக்கு எவ்விதப் பங்கி னையும் அளிப்பதில்லை. 14ஆவது நிதி ஆணையமானது, அரசாங்கங்கள் வசூலிக்கும் மொத்த வரிவருவாயில், மாநிலங்களின் பங்கு 42 விழுக்காடாக இருந்திட வேண்டும் என்று பரிந்து ரைத்திருந்தது. ஆனால் மோடி அர சாங்கமோ இதற்கெதிராக 2023-24இல் அளிக்கப்பட்ட பட்ஜெட்டில் வெறும் 30.4 விழுக்காடே அளித்திருக்கிறது.   இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணத்தை, ஆர்எஸ்எஸ் விரும்பும் வெறிபிடித்த- சகிப்புத்தன்மை யற்ற பாசிச இந்துத்துவா ராஜ்ஜியமாக மாற்றுவதற்காக, மோடி அரசாங்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்ப டைத் தூண்கள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கிட மூர்க்கத்தனத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  இன்றைய நிலைமைகளில் கூட்டாட் சித் தத்துவத்தைப் பாதுகாப்பது என்ப தன் பொருள் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், இந்தியக் குடியரசின் குணாம்சத்தையும் பாதுகாப்பது என்பதேயாகும்.  

தமிழில் : ச.வீரமணி