articles

img

அருந்ததியர் உள் ஒதுக்கீடு ஒரு பின்னணி -பி.சம்பத் ,மத்தியக்குழு உறுப்பினர் - சிபிஐ (எம்)

நன்றாக அடுக்கி வைக்கப்பட்ட மூட்டை கள் போல் இந்திய சாதி அமைப்பு அமைந் துள்ளது. இவ்வாறு அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டைகளாக தலித் மக்கள் உள்ளனர். தலித் மக்களிலும் பல பிரிவுகள் உள்ளன. அவர் களில் தலித்துகளிலும் தலித்துகளாக அருந்ததி யினர் உள்ளனர். இத்தகைய அவல நிலையை பயன்படுத்தியே இவர்களை கொடூரமாக சுரண்ட வும் அடக்கி ஆளவும் தீண்டாமை கொடுமை களை சுமத்தவும் ஆதிக்க சக்திகள் பெரிதும் ஈடு படுகின்றனர். வேதங்கள், இதிகாசங்கள், மனுநீதி ஆகிய இந்து மத சாஸ்திரங்கள் கொடூரமான இச்சாதி அமைப்பையும், அதன் ஒடுக்குமுறை களையும் நியாயப்படுத்துகின்றன. இவையெல் லாம் மனித ஏற்பாடு அல்ல. ஆண்டவனின் கட்டளை என அறுதியிட்டு கூறுகின்றனர். சமீப காலமாக தலித் மக்களிடையே விழிப் புணர்வு வளர்ந்து வருகிறது. ஒன்றுபட்டு போராடி ஜனநாயக மற்றும் இடதுசாரி இயக்கங்களின் ஆதரவோடு சிறிதளவு முன்னேறி உள்ளனர். எனினும், இன்னும் வெகுதூரம் முன்னேற வேண்டியுள்ளது என்பதுதான் உண்மை. அருந்ததியர் மக்களின் வாழ்நிலையோ அவலத்தி லும் அவலம். அநேகமாக இவர்களில் மிக மிக கணிசமானவர்கள் உடைமை அற்ற கூலி உழைப்பாளிகளாகவே உள்ளனர். வேறு எவரை யும் விட இவர்கள் மீது மிக இழிவான வேலை களும், தீண்டாமை கொடுமைகளும் சுமத்தப்படு கின்றன. மனித நாகரீகத்தின் நுழைவு வாயிலை கூட இவர்கள் நெருங்க முடியவில்லை. எனவே தான், தலித் மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக் கும் முன்னேற்றத்திற்கும் போராடி வருகின்ற சிபிஐ(எம்) அருந்ததியர் மக்களின் அவல நிலை போக்கிட தனிக்கவனம் செலுத்துகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அருந்ததி யர் மக்கள் வாழ்கின்றனர். மேற்கு மாவட்டங் களில் மிக அதிகமாகவும், தெற்கு மாவட்டங் களில் ஓரளவும், இதுபோக தமிழகம் முழுவதும் பரவலான பல மாவட்டங்களிலும் இம்மக்கள் வாழ்கிறார்கள். தமிழகம் முழுவதும் இவர்கள் ஒரே சாதி பெயரில் கூட அழைக்கப்படுவதில்லை. சக்கிலியர், பகடை, தொம்மான், மாதாரி, மாதிகா, தோட்டி, ஆதி ஆந்திரர், ஆதி கர்நாடகர், அருந்ததியர் இதுபோக வேறு பல பெயர்களிலும் அருந்ததியர்கள் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒன்றுபடுவதற்கு இத்தகைய பிரிவு களும் பெயர்களும் கூட தடையாக இருக்கும் அளவிற்கு ஆதிக்க சக்திகள் சதி செய்துள்ளனர். எனினும் தமிழகம் முழுவதும் அருந்ததியர்கள் என அழைக்கப்பட இவர்களுக்கு ஏற்பு உண்டு. சென்னையில் ஆதி ஆந்திரர் மக்கள் பரவலாக வசிக்கின்றனர்.

சாக்கடைக்குள் இறங்கி பணியாற்றுவது போன்ற தொழில்களில் இம்மக்கள் ஈடுபடுத்தப்படுகின்ற னர். இதில் இவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் ஏராளம். இதுபோக வேறு பல பணிகளையும் செய்யுமாறு இவர்கள் கட்டாயப்படுத்தப்படு கின்றனர். செத்த மாட்டை தூக்குவது, தோல் வேலை செய்வது, பிணக்குழி தோண்டுவது, பிணம் எரிப்பது, இழவு செய்தி சொல்வது, செருப்பு தைப்பது, வெட்டியான் வேலை செய் வது, அறுவடை காலங்களில் களம் புடைப்பது என பல விதமான வேலைகளை செய்யுமாறு இவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். எல்லா பகுதி களிலும் இத்தகைய பணிகளை இவர்களே செய் கிறார்கள் என கூற முடியாவிட்டாலும் பல்வேறு பகுதிகளில் இத்தகைய பணிகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. எந்த வேலையையும் ஒருவரை செய்யுமாறு கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமானதுதான். எனினும், குலத்தொழில் என்று கூறி இத்தொழில் களை இவர்கள் செய்யுமாறு இச்சமூகத்தில் கட்டா யப்படுத்தப்படுவது பல்வேறு கிராமங்களில் வரைமுறையின்றி நடக்கிறது. இதனை மீறு வோர்கள் அல்லது செய்ய மறுப்பவர்கள் சமூக ரீதியாக கடுமையாக ஆதிக்க சக்திகளால் தண்டிக்கப்படுகிறார்கள். மறுபுறம், இவர்கள் வாழ்விற்கு மாற்று ஏற்பாடு இல்லாதபோது - நிலமோ, வேறு எந்த உடமையோ இவர்களுக்கு இல்லாதபோது இப்பணிகளை செய்வதை தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை. மேலும், இவர்களை குலத்தொழில் என்று செய்ய வைக்கும் பல வேலைகளுக்கு கூலி கிடையாது அல்லது மிகக் குறைந்த கூலியே கொடுக்கப்படுகிறது. அவ்வாறு கொடுக்கப் படும் குறைந்த கூலியை கூட தீண்டாமையை கடைப் பிடித்து இழிவான வார்த்தைகள் பேசி கொடுப்பது என்பது பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இவர்களது கடுமை யான உழைப்பைக் கூட அங்கீகரிக்க மறுக்கும் கேடுகெட்ட போக்கு அல்லவா இது?  மாநகரங் கள், பெரிய நகரங்களில் இப்போக்கில் தற்போது வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், கிராமங் களிலும் பரவலான பகுதிகளிலும் இந்நிலைமை நீடிக்கவே செய்கிறது.

எந்த வேலையையும் செய்யுமாறு எவரையும் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. அதேசமயம், செய்யும் வேலைக்கு நியாய மான ஊதியம் கௌரவமான முறையில் வழங்கப் பட வேண்டும். இதனை உத்தரவாதப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உண்டு. சென்னையில் மயான ஊழியர்களுக்கு அரசு ஊதியம் நிர்ணயம் செய்து மாநகராட்சி மூலம் வழங்கும் நடைமுறை உள்ளது. இதுபோல இதர பகுதிகளில் பணி யாற்றும் மயான ஊழியர்களுக்கு அரசே நியாய மான முறையில் ஊதிய நிர்ணயம் செய்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்குவதை உத்தர வாதப்படுத்த வேண்டும். வெட்டியான் முறை அமலாகி வரும் இடங்களில் இப்பணிக்கு பெயர் மாற்றமும் கௌரவமான ஊதியமும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கலைஞர் முதல்வராக இருந்தபோது, சிபிஐ(எம்) வற்புறுத்தலால் துப்புரவு பணியா ளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டது. இதனால், முழு பயன் கிடைக்காவிட்டாலும் ஓரளவு அவர்களின் பிரச்சனைகளை விவாதிக்க முடிந்தது. தற்போது அத்தகைய நலவாரியம் இல்லை. தற்போதைய தமிழக அரசு துப்புரவு பணியாளர்களுக்கு என தனி நலவாரியம் அமைப்பதும், அதில் அவர்களது நலன்கள், வேலை முறை, நலத்திட்டங்கள் போன்றவை விவாதிக்கப்படுவதும் அவசியமானதாகும். அத்தகைய நலவாரியத்தை செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கும் அமைக்க வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாய கூலி தொழிலாளர்களாக, மூட்டை சுமக்கும் தொழி லாளர்களாக, பட்டாசு தொழிலாளர்களாக, பல்வேறு அணி திரட்டப்படாத தொழில்களில் பணியாற்றுபவர்களாக அருந்ததியர் மக்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இப்பணி களில் இதர தொழிலாளர்களை போல ஊதியம் பெறுகிறார்கள் என்ற போதிலும் உரிய சமூக அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஊரையே சுத்தப்படுத்தும் அருந்ததியர் மக்க ளின் குடியிருப்புகள் நகரங்களில் நரகமாகவே உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னதாக திண்டுக்கல் நகரத்தில் சிபிஐ(எம்) நடத்திய கள ஆய்வு மூலம் இவர்களது குடியிருப்பு பகுதிகளின் நிலைமை படுமோசமாக இருந்ததை காண முடிந்தது. 198 குடும்பங்களை ஆய்வு செய்ததில் 182 வீடுகளில் கழிப்பறை இல்லை. 143 வீடுகளுக்கு அருகாமையில் குடிநீர் குழாய்கள் இல்லை. பொது கழிப்பறை, பொது குடிநீர் குழாய்கள் தேடி நெடுந்தொலைவு செல்ல வேண்டி இருந்தது. தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், சுகாதாரக் கேடாக இருந்தன. குடியிருக்கும் வீடுகளின் நிலையோ சொல்லி மாளாது. 140 வீடுகள் வாடகை வீடுகள். 32 வீடுகள் சொந்தமான வீடுகள். 25 வீடுகள் அரசு வழங்கி யவை. வேதனை என்னவென்றால், ஒரு வீட்டில் பத்து குடும்பங்கள், எட்டு குடும்பங்கள் என வாழ வேண்டிய நிலை இருந்தது. ஒரு வீட்டில் ஒரு குடும்பம் என இருப்பது மிகச் சில வீடு களில்தான். (தற்போதைய நிலைமையில் ஓரளவு முன்னேற்றம் உள்ளது. அரசு கட்டிக் கொடுத் துள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. குடியிருப்பு பகுதியிலேயே சில கழிப் பிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சாலை வசதி யும் ஓரளவு செய்யப்பட்டுள்ளது).

ஒரே வீட்டில் பல குடும்பங்கள் இணைந்து வாழ்வது எவ்வளவு துயரமானது. குறைந்தபட்ச மனித வாழ்க்கை கூட இவர்களால் வாழ முடிய வில்லை. திண்டுக்கல் மாவட்ட ஆய்வுதான் என்றாலும் தமிழகத்தில் பல பகுதிகளிலும் இத்தகைய நிலை நீடிக்கவே வாய்ப்புகள் அதிகம். அருந்ததிய உழைப்பாளி மக்களின் பொருளாதார நிலையும், அவர்களது குடியிருப்புகளும், சுற்றுச்சூழலும் வருந்தத் தக்க நிலையில்தான் உள்ளன என்பது கண்கூடு. எனவே, அருந்ததியர் மக்களுக்கு குடியிருப்பு கள் உருவாக்கி தருவதில் தனி கவனம் செலுத்த  வேண்டும். ஒவ்வொரு தொகுப்பு வீட்டிற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பட வேண்டும். இம்மக்கள் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும். அங்கன்வாடி அமைப்புகளை அருந்ததியர் குடியிருப்பு பகுதிகளில் கூடுதலாக அமைக்க வேண்டும். அருந்ததிய பெண்களின் வாழ்நிலையில் தனி கவனம் செலுத்த வேண்டும். கடும் உழைப் பாளிகளான அருந்ததிய பெண்கள் சுகாதார குறைவு, ஊட்டச்சத்து குறைவு காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பெருமளவு பாலியல் கொடுமைகளால் பாதிக்கப் படுபவர்களாக தலித் பெண்கள் உள்ளனர். இதில் அருந்ததியர் பெண்களின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தலித் மக்களுக்கு அந்தந்த மாநிலங்களில் வாழும் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு 18+1 என்ற அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தற்போதைய தமிழக தலித் மக்கள் தொகை 19 சதவிகிதமாக உயர்ந்துள்ள நிலையில் இவர்களுக்கு இட ஒதுக்கீட்டையும் 19 சதவிகிதமாக்க வேண்டும். முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட தலித் மக்களுக் கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் நிலை மிகவும் அவலமானதாகும். இவர்கள் மீது சமூகம் சுமத்தி யுள்ள இழிவான தொழில்கள், தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் வாழ்நிலை காரணமாக கல்வி, வேலை வாய்ப்பில் இவர்கள் மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, இவர்களது குழந்தைகளாக வளர்ந்து வரும் இன்றைய தலைமுறையினரும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின் துப்புரவு பணியாளர்களான அருந்ததியர் மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கல்வி, வேலை வாய்ப்பு விபரங்களை மட்டும் இங்கே எடுத்துக் கொள்வோம்.

ஆரம்ப கல்வி - 48 பேர்
நடுநிலை கல்வி - 74 பேர்
உயர்நிலை கல்வி - 11 பேர்
எழுத்தறிவின்மை - 65 பேர்
மொத்தம் - 198 பேர்

இது ஒரு உதாரணம் தான். இதர மாவட்டங்க ளில் துப்புரவு பணியாளர்களின் நிலை இதை விட பெரும் மாற்றம் இருக்கும் என கருத முடி யாது. இவர்களில் 32 சதவிகிதத்திற்கும் மேல் கல்வி அறிவு இல்லாதவர்கள், 24.2 சதவிகிதம் பேர் ஆரம்ப கல்வி மட்டுமே பயின்றவர்கள். ஆக 56 சதவிகிதம் அருந்ததியர் நிலை இதுதான் என்பது எவ்வளவு பெரிய வெட்கக் கேடு. மிகச் சொற்பமான எண்ணிக்கையிலேயே உயர் நிலைக் கல்வி கற்றுள்ளனர். இம்மக்களின் குழந்தைகள் எந்தளவு கல்வி பெறுகின்றனர் என்ற விபரத்தையும் ஆய்வு செய்தோம். 1 முதல் 5 வரை குழந்தைகள் உள்ள குடும்பங்களை ஆய்வு செய்தபோது, கிடைத்த விபரம் அதிர்ச்சியளித்தது. இந்த விபரங்களை ஆய்வு செய்தபோது துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளில் ஒரு குழந்தை கூட கல்லூரிக்கு செல்லவில்லை என்பது தெளிவாகியது. குடும்பத்தில் குழந்தை களின் எண்ணிக்கை அதிகரித்தால் அக்குழந் தைகள் ஆரம்ப கல்வி, நடுநிலை கல்வியை கூட எட்ட முடியாதவர்களாக இருந்தார்கள். துப்புரவு தொழிலாளர் அல்லாத இதர தொழில்களில் பணி யாற்றும் அருந்ததியர் குழந்தைகளை ஆய்வு செய்தால் ஒருவேளை நிலைமை சற்று மேம்பட்டு இருக்கலாம். எனினும், குறிப்பிடத் தக்க முன்னேற்றம் இருக்க வாய்ப்பு இல்லை. துப்புரவு தொழிலாளர் குடும்பங்களில் வயது வந்தவர்களின் வேலை வாய்ப்புகள் குறித்தும் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வின்படி 198 குடும் பங்களில் 12 பேர் அரசு பணியிலும், 5 பேர் தனியார் நிறுவனங்களிலும் 35 பேர் கூலித் தொழிலாளர் களாகவும், ஒருவர் விவசாய பணியிலும், 145 பேர் எந்த வேலையும் கிடைக்காதவர்களாகவும் உள் ளனர். எனவே, அரசுப் பணியும் பொதுத்துறை நிறு வனங்களின் பணியும் இவர்களுக்கு பெரும்பா லும் எட்டாக்கனியாகவே உள்ளது என்பதை உணர முடியும்.

இப்பின்னணியில்தான் அருந்ததியர் மக்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை பலப்படுத்துவது அவசரமான உடனடி பணியாக இருந்தது.  குறிப்பாக உயர் கல்விக்கான வாய்ப்புகளை பலப்படுத்துவதும் அதேபோல அரசு பணி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவர்களின் வேலை வாய்ப்பை அதிகரிப்பதும் முன்னுரிமை பணியாக அக்காலத்தில் இருந்தது. இப்பிரச்சனைகளை சிபிஐ(எம்) மாநில செயற்குழுவிலும், பின்னர் மாநிலக்குழுவிலும் விரிவாக விவாதித்தோம். இக்காலத்தில் அருந்ததியர் அமைப்புகள் நடத்தி வந்த பல்வேறு போராட்டங்களையும் அப்போராட்டங்களை அரசு நிர்வாகம் கண்டு கொள்ளாத போக்கையும் கணக்கில் எடுத்தோம். இத்தகைய பரிசீலனையின் முடிவாகத்தான் அருந்ததியர் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள் ஒதுக்கீடு தேவை என்ற முடிவிற்கு வந்தோம். அதாவது, தலித் மக்க ளுக்கு ஒதுக்கப்படும் வேலை வாய்ப்பு விகிதத் தில் அருந்ததியர் மக்களுக்கு குறிப்பிட்ட சத விகிதம் அவர்களது மக்கள் தொகைக்கேற்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க முடிவு செய்தோம். எனவே, அருந்ததி யர் பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று சிபிஐ(எம்) முன்வைத்த கோரிக்கை ஆழமான பரிசீலனைக்கு பிறகு எடுத்த மிக முக்கியமான கொள்கை முடிவாகும். இம்முடிவிற்கு பிறகு இதனை அடைவதற்கான போராட்ட வியூகத்தை சிபிஐ(எம்) உருவாக்கியது. இதற்கான போராட் டம் தமிழக சமூக நீதிக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்கதொரு அத்தியாயமாகும்.