சிறுபான்மை மக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு வழங்கவும், அரசியலமைப்பு சட்டப்படி மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 6) சென்னையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் ஆற்றிய உரை:
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75ஆம் ஆண்டு விழாவை கொண்டாட வேண்டிய இந்த தரு ணத்தில் ஒன்றிய அரசு தேசத்திற்கும் மக்களுக்கும் பெரும் சோகத்தையும், மிகப்பெரிய சவா லையும் ஏற்படுத்தியுள்ளது. தேசத்தின் அதிகார மையத்தில் அமர்ந்திருக்கக் கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ். சக்திகள் அரசியல் சாசனம் குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. இவர்கள் ஆட்சி நடத்துவதற்கு அரசியல் சாசனத்தை வைத்திருக்கவில்லை; மாறாக புல்டோசரைத்தான் வைத்திருக்கிறார்கள்.
புல்டோசர் என்பது இயந்திரம். ஆனால் இன்று அது வெறும் இயந்திரமல்ல. அது சில விஷயங்களை பிரதி நிதித்துவப்படுத்துகிறது. ஆட்சியாளர்களின் வெறுப்பு நிறைந்த, விஷம் நிறைந்த அந்த சித்தாந்தத்தை அடையாளப்படுத்துகிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். கையில் மக்களைப் பிரிப்பதற்கான ஒரு அரசியல் உத்தியின் அடையாளமாக புல்டோசர் இருக்கிறது. அரசியல் சாசனத்தை புறம் தள்ளுவதற்கான அடை யாளமாக புல்டோசர் உள்ளது. மத அடிப்படையி லான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த போது அதை மக்களும், தலைவர்களும் நிராகரித்திருந்தாலும், மீண்டும் அந்த இலக்கை அடைவதற்கு அடையாளமாக நம்முன் புல்டோசரை வைக்கிறார்கள். புல்டோசருடைய படுபாத கமான விளைவுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கி றோம். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக வெறுப்பு பேச்சுக்களை பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பா ளர்களை ‘அதிகாரப்பூர்வமற்ற உதிரி நபர்கள்’ என்று கத்தாரில் இருக்கக் கூடிய இந்திய தூதர் கூறியிருக்கி றார். இவர்கள் உண்மையிலேயே ‘உதிரி நபர்கள் தானா? இவர்கள் இப்படிப் பேசுவதற்கான தைரியத்தை வழங்கியது யார்?
ஒவ்வொரு இந்தியருக்கும் அவமானம்
வெறுப்பு பேச்சுக்களை முன்வைத்த பாஜகவின் பெண் செய்தி தொடர்பாளர் தனக்கு சில மிரட்டல்கள் வந்ததாகவும், உடனே தனக்கு ஆதரவு தெரிவித்து வந்த முதல் தொலைபேசி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்துதான் என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பாஜகவின் அகில இந்திய தலைவ ரிடமிருந்தும், பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் தனக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது என்றும், மகா ராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பட்னா விஸ் தொலைபேசியில் நீங்கள் எதற்கும் கவலப்பட வேண்டாம், நீங்கள் பேசிய வெறுப்பு பேச்சால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் துணை நிற்போம் என்று ஆதரவு தெரிவித்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த செய்தித் தொடர்பாளர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பாஜக கூறுகிறது. இப்படி அவர்கள் தைரியமாக பேசுவதற்கு ஆட்சியில் இருப்ப வர்களும், அதன் தலைவர்களும் தான் காரணம். இவர்களெல்லாம் இன்றைக்கு வெறுப்பு அரசியலின் புரவலர்களாக, பாதுகாவலர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங்பரி வாரத்தினுடைய எந்த தலைவர் வாயை திறந்தாலும் விஷம் தான் உமிழ்கிறார்கள். வெறுப்பு பேச்சு வெளியே வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, ஜன நாயகத்தை, கருத்து சுதந்திரத்தை முன்வைக்கும் அனைவருக்கும் எதிராக அவர்கள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய செயல்பாட்டின் காரணமாக அநாகரீகமான, வெறுப்பு பேச்சின் காரணமாக ஒவ்வொரு இந்தியரும் தலை குனிய வேண்டியிருக்கிறது, உலக அரங்கில் அவ மானப்பட வேண்டியிருக்கிறது .
உலக அரங்கில் விமர்சனம் எழுந்த பிறகு, வெறுப்பு பேச்சை பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். அவர்கள் பேசி 4 நாட்கள் ஆன பிறகும் கூட ஆட்சியாளர்களிடம் இருந்து, தலைவர்களி டமிருந்து ஒரு கண்டனம் கூட வரவில்லை, அமைதி யாக இருந்தார்கள். இப்படிப்பட்ட விஷம் கலந்த பேச்சுக்களை பேசக் கூடாது என்றும், ஆத்திரமூட்டும் வகையில் பேசக் கூடாது என்றும், மதவெறியை தூண்டி விட்டு வன்முறைக்கு களம் அமைத்து கொடுக்கக் கூடாது என்றும் சட்டம் கூறுகிறதே. அப்படியானால் சட்டவிரோதமாக இப்படி பேசியவர்களை ஏன் கைது செய்யவில்லை? தினசரி யாரையாவது இந்த அரசு தேசத்துரோக குற்றத்தில் கைது செய்து வருகிறது. ஆனால் சட்டத்தின்படி மிக மோசமான குற்றத்தை செய்திருக்கக் கூடிய மேற்படி பாஜக நபர்கள் மீது எந்த கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பாஜகவின், ஆர்.எஸ்.எஸ்.சின் இரட்டை முகத்தை வெளிப்படுத்துகிறது. எனவே உடனடி யாக வெறுப்பு பேச்சை பேசியவர்களை கைது செய்யுங் கள். அவர்களது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போரா டிவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள் ளீர்களே, அவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.
பண்டிட்டுகள் படுகொலைக்கு கண்டனம்
காஷ்மீரில் சிறுபான்மையாக இருக்கக் கூடிய பண்டிட்டுகள் சந்திக்கக் கூடிய அவலங்களையும், தீவிர வாதிகளால் இலக்கு வைத்து பண்டிட்டுகள் வேட்டை யாடப்படுவதையும் வன்மையாக நாங்கள் கண்டிக்கி றோம், அவர்களுக்கு எங்களது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 3 மாதத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர் கள், பெண்கள், சிறு வியாபாரிகள், மத்தியதர ஊழி யர்கள் என 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தீவிர வாதிகளால் நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். காஷ்மீரில் இந்த நிலைமை ஏற்படுவதற்கு யார் காரணம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
1990ஆம் ஆண்டுகளில் வன்முறையின் காரண மாக பண்டிட்டுகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப்பட்டார்கள். 2010ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவர்க ளுக்கு பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து உதவி களையும், நிவாரணங்களையும் வழங்கி, மீண்டும் அவர்கள் இருப்பிடத்திலேயே வசிப்பதற்கான ஏற்பாட்டை செய்தது. 2010ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டிற் குள் திட்டமிட்டு நடத்தப்பட்ட தற்போதைய கொலை களைப் போன்று இதற்கு முன் நாம் பார்க்கவில்லை.
மதச்சார்பின்மையின் அடையாளமாக ஏதாவது இருந்தால் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பலால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. இந்திய பிரி வினையின் போது இஸ்லாமிய நாடான பாகிஸ்தா னோடு செல்ல விருப்பமில்லை என இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். இந்தியாவுடனே இணைந்து கொள்கி றோம் என காஷ்மீர் மக்கள் கூறினார்கள். அவர்கள் இந்தியாவோடு இணைந்த பிறகு இஸ்லாமியர்கள் அதிகமுள்ள ஒரே மாநிலமாக காஷ்மீர்தான் இருந்தது. இந்திய மதச்சார்பின்மையின் ஒரு அடை யாளமாக காஷ்மீர் விளங்கியது என்றால் அது மிகை யாகாது. அதை சீர்குலைக்க தீவிரவாதத்தின் மூலம் பாகிஸ்தான் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்ட போதும், காஷ்மீர் மக்கள் உறுதியுடன், விடாப்பிடியாக இந்தியாவுடன்தான் நின்றார்கள். இவர்களின் இந்த நடவடிக்கைக்கு பாஜக அளித்த வெகுமதி என்ன? ஆர்.எஸ்.எஸ். வழங்கிய பரிசு என்ன? காஷ்மீர் என்ற மாநிலத்தையே இல்லாமல் செய்ததுதான். சிறப்பு அந்தஸ்தை வழங்கக் கூடிய சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது என்ற வெகுமதியைத்தான் வழங்கி னார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி நடத்து கிற மாநிலம் என்ற அந்தஸ்தை சீர்குலைத்து, உள்துறை அமைச்சகத்தினுடைய நேரடி ஆட்சியில் அந்த யூனி யன் பிரதேசங்கள் இருக்கும் நிலையை உருவாக்கி னார்கள். இந்த பின்னணியில் இன்றைக்கு காஷ்மீரில் இருக்கக் கூடிய பண்டிட்டுகள் பதற்றத்தோடும், விரக்தி யோடும் இங்கிருந்து நாங்கள் சென்று விடுகிறோம் என்று கூறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காஷ்மீர் குறித்த பாஜகவின் கொள்கை ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்திருப்பதையே இது காட்டுகிறது. காஷ்மீர் மக்களை பாதுகாக்க வக்கற்ற கொள்கையைத்தான் பாஜக இன்று கடைபிடித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் பண்டிட்டுகள் உள்ளிட்ட மக்கள் தீவி ரவாதிகளால் அங்கு கொலை செய்யப்படுகிறார்கள்.
அரசியல் ரீதியாக இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண முயற்சிக்காமல், ஒரு தொகுதியில் கூட இஸ்லாமி யர்கள் பெரும்பான்மையாக இருந்து விடக் கூடாது எனபதற்காக சட்டமன்ற தொகுதிகளை மறுவரை யறை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய மக்கள் வேலை வேண்டும் என்று கேட்டுக் கொண்டி ருக்கிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு அனைத்து துறைகளிலும் மிக மோசமாக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த பிரச்சனைகளை அவர்களால் தீர்க்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவர்கள் மக்களை பிரித்தா ளுகிற கொள்கையைத்தான் இன்று உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடக மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல், மக்களை பிளவுபடுத்த ஹிஜாப், ஹலால் என்று பிரச்சனையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும், கேரளாவிலும் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துதான் பள்ளிக்கு செல்கிறார்கள். ஹிஜாப்பை தடை செய்கிறோம் என்ற பெயரில் இஸ்லாமிய மாணவி களின் கல்வியை பறிப்பதுதான் அவர்களின் நோக்கம். சீக்கிய மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது டர்பன் அணிந்துதான் செல்கிறார்கள். அதை சீருடையின் ஒரு பகுதிதான் என ஏற்றுக் கொள்ளும் போது, ஹிஜாப்பும் சீருடையின் ஒரு பகுதி தான் என ஏற்றுக் கொள்ள பாஜக மறுக்கிறது. பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் பாடப் புத்தகங்களில் இருந்து மநுஸ்மிருதியை எதிர்த்து, சமூக சீர்திருத்தத்திற்காக போராடிய பகத்சிங், பெரி யார், நாராயணகுரு போன்றவர்களின் குறிப்புகள் நீக்கப்பட்டு, வெள்ளை ஏகாதியபத்தியத்தோடு வெட்க மில்லாமல் சமரசம் செய்து கொண்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் குறிப்புகளை இடம் பெறச் செய்கிறார்கள்.
வரலாற்றைப் படியுங்கள்
அடுத்ததாக இந்து மத வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு என்ற பிரச்சனையை கையில் எடுத்திருக்கி றார்கள். 1991ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில், 1947க்கும் முன்பு மத வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்ததோ அது அப்படியே நீடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். முதலில் வரலாற்றை முழுமை யாக ஆழ்ந்து படிக்க வேண்டும். வழிப்பாட்டுத் தலங்கள் சிதைக்கப்பட்டு வேறு ஒரு வழிபாட்டுத்தலம் உருவாக்கப்பட்டது என்ற பிரச்சனையை பாஜக கையில் எடுத்தால், பல இடங்களில் இருந்த புத்த விகா ரங்கள் சிதைக்கப்பட்டு, ஜைன வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்பட்டு வேறு மதத்தின் கோயில்கள் எழுப்பப் பட்டுள்ளனவே;. பெளத்தர்கள் வழிபாடு நடத்திவந்த வழிபாட்டு தலத்தை இடித்து விட்டு அங்குதான் பூரி ஜெகந்நாதர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது என சுவாமி விவேகானந்தரே கூறியுள்ளாரே;.எனவே, வரலாற்றை குறித்து பேசுவதென்றால் புத்த விகாரங்கள், ஜைன மத வழிபாட்டு தலங்கள் குறித்தும் பேசுங்கள். வர லாற்றை சிதைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்து வதற்காகத்தான் இப்படிப்பட்ட பிரச்சனைகளை ஆர்எஸ்எஸ் - பாஜகவினர், கையில் எடுத்துள்ளார் கள். இவர்களது செயல்பாடு இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நல்லதல்ல.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். முவைக்கக்கூடிய தேசபக்தி என்பது மக்களை பிரிக்கிற தேச பக்தியாக உள்ளது. தனித்தனியாக இரு தேசங்கள்- இந்தியா -பாகிஸ்தான் என்பதை முன்வைத்தது ஜின்னா எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் முதன்முதலில் இந்த விஷ யத்தை 1937ஆம் ஆண்டே முன் வைத்தார் சாவர்க்கர். பெரும்பான்மை மதக் கோட்பாட்டின் அடிப்படையில் அந்த மதத்தில் இருப்பவர்கள்தான் குடிமக்களாக இருக்க முடியும், மற்றவர்கள் குடிமக்களாக இருக்க முடியாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தம். பிரிட்டிஷார் நம்மை ஆட்சி செய்யும் போது எப்படி பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்களோ, அதே உத்தியைத்தான் பாஜக - ஆர்.எஸ்.எஸ். பின்பற்றிக் கொண்டிருக்கிறது.
கம்யூனிஸ்ட்டுகளின் பெருமை
1921ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ‘பூரண சுதந்திரம்’ என்ற முழக்கத்தை முதன் முதலில் முன்வைத்தது கம்யூ னிஸ்டுகள்தான். அப்போது காந்தி உள்ளிட்ட தலை வர்கள் இது சாத்தியம் இல்லை எனக் கூறினார்கள். அந்த மாநாட்டிற்கு வந்த பிரதிநிதிகளில் ஒருவரான மவுலான ஹஸ்ரத் மொகானி தான் இந்த முழக்கத்தை எழுப்பினார். இதுதான் தேசபக்தி. எங்களுடைய தேச பக்தியை உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசிய மில்லை. தேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்காத உங்களிடம் இருந்து தேசபக்திக்கான சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை. புல்டோசர் அரசியல் என்பது சிறுபான்மை மக்க ளுக்கு மட்டும் எதிரானதல்ல, அரசியல் சாசனத்திற்கு, மதச்சார்பின்மைக்கு, ஜனநாயக கோட்பாட்டிற்கு எதிரானது. எனவே இவர்களிடம் இருந்து தேசத்தை பாது காக்கும் உன்னதமான கடமையை செய்கிற பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்ற அடிப்படை யில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
‘பெரும்பான்மை ஆள்வது மட்டுமே ஜனநாயகமல்ல’
உலகம் முழுவதும் போற்றக்கூடிய 100 பேர் பட்டியலைப் பேராசிரியர் பாட் வெளியிட்டார். அதில் முதல் இடத்தை பிடித்தவர் முகமது நபி ஆவார். உலகில் முதல் இட ஒதுக்கீட்டை அளித்த அவர் அன்றைய காலகட்டத்தில் கறுப்பின அடிமைகளைப் புழு பூச்சியைப் போல் இழிவாகப் பார்த்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முகமது நபி, பிலால் என்ற கறுப்பின அடிமையை அழைத்து பாங்க் ஒலிக்கும் உரிமையை அளித்தார். அப்படிப்பட்ட ஒருவரை அவமானப்படுத்தினால் இஸ்லாமி யர்கள் அதிகமாக வசிக்கும் வளைகுடா நாடுகளுடனான இந்தியப் பொருளாதாரம் பாதிக்கும் என ஆட்சி யாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டாமா? ஊடகத்தில் தவறான கருத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்த பின்னர் அனைவரும் கண்டனம் தெரிவித்தோம். ஆனால் அமித்ஷாவோ, மோடியோ வாய் திறக்கவில்லை. பெரும்பான்மை ஆள்வது மட்டுமே ஜனநாயகமல்ல. பெரும்பான்மை மக்கள் சிறு பான்மை மக்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதுதான் உண்மையான ஜனநாயகம். எனவே உண்மை யான ஜனநாயகத்தைப் பாதுகாக்க உறுதியேற்போம்.
(தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதிலிருந்து)