கர்நாடக பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான 55 வய தான கௌரி லங்கேசு,”லங்கேசு பத்ரிகே”என்ற கன்னட இதழின் முதன்மை ஆசிரியர். மதம், சாதி, இந்துத்து வாக் கொள்கைகளுக்கு எதிராக முற் போக்குக் கருத்துக்களை முன்னெடுத்த வர். அதனால் இந்துத்துவா சங்கிகளின் எதிர்ப்பை சம்பாதித்தவர். இதனால்,2017 செப்டம்பர் 5 அன்று பெங்களூருவில் சங்கித் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர். இந்தக் கொலை இந்தியாவிலும் வெளி நாட்டிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.யுனெசுகோ அமைப்பு இப்படு கொலையைக் கண்டித்தது. பத்திரிகை யாளர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். ஆனால் மக்கள் கிளர்ச்சி? மண்புழு மாதிரி. ஆனால், இதேபோன்ற பத்திரிகை யாளர் படுகொலையை எதிர்த்து, அர்ஜெண்டினா மக்கள் கிளர்ந்தெழுந்த னர்; குற்றவாளிகளுக்கு தண்டனையும், ஆட்சி மாற்றமும் செய்தனர். இந்த உண்மை நிகழ்வே, நெட்பிளிக்ஸில் வெளி வந்துள்ள,”தி போட்டோகிராபர்:மர்டர் இன் பினாமர்”என்ற ஆவணப்படம். பினாமர், பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு நீலக் கடற்கரை அமைந்த அழகிய நகரம். மெக்கா ஆப் பேஷன் என்ற பெய ரும் உண்டு. பெரிய இடத்து பிரச்சனை முதல் கார்ப்பரேட் பிரச்சனைகள் வரை, அனைத்து அரசியல் பிரச்சனைகளும் ரக சியமாக பேசப்படும், ஆளும்வர்க்கத்தி னரின் அந்தப்புரம். இதனால் செய்தி ஊட கங்களின் மோப்பத்திற்கு ஆட்பட்ட நகரம். ஜோஸ் லூயிஸ் காபிஸாஸ், (1989 -1997) அர்ஜெண்டினாவின் பிரபல பத்திரி கையான நோட்டீஸியாஸ் (Newsweek)ன் புகைப்பட நிருபர். பியூனஸ் அயர்ஸ் காவல் ஆணையர் கிளடீஸ்க். கொடிய ஊழல் பேர்வழி. இவரது சொகுசு பங்களாக்கள், படகு கள், மாஃபியா குண்டர்களோடு தொடர்பு கள் பற்றி “தப்பான போலீஸ்” (Damn Police) என்ற தலைப்பில் அட்டைபுகைப் படத்துடன் செய்தி கட்டுரை பிரசுரிக்கி றான் காபிஸாஸ். அதிபர் கார்லஸ் மேனம்(1989-1999), மந்திரி சபையில் வர்த்தக அமைச்சர் டொமின்கோ காவலா. நாட்டில் தனியார் மயத்தை அமலாக்கியவர். கார்லஸ் மேனத்தின் மோசமான ஆட்சியால், பண வீக்கம், விலைவாசி உயர்வு பெசோ மதிப்பு வீழ்ச்சி என நாட்டின் பொருளாதாரம் சீர்குலைகிறது. சிரியன் வந்தேறி ஏபரான் என்பவன், தனியார் மயத்தை பயன்படுத்தி அரசோடு கள்ளக் கூட்டு வைத்துள்ள, பில்லியன் டாலர் வர்த்தகப் பெருமுதலாளி. தபால், வங்கி,வரி வசூல்,விமான நிலைய பராம ரிப்பு, போன்ற பல துறைகளை தன்வயப் படுத்தி, கார்ப்பரேட் மாஃபியாவாக வலம் வருகிறான்.
நாட்டின் பொருளாதாரச் சரிவுக்கு அர சுக்குள், ஏபரானின் தலையீடே காரணம் என வர்த்தக அமைச்சர் கவாலா பகிரங்க மாக குற்றம் சாட்டும் அளவிற்கு,அரசியல் செல்வாக்கு கொண்டவன். பொதுவெளியில் முகம் காட்டாத ஏபரானை,மறைந்திருந்து புகைப்படம் எடுக்கிறான் காபிஸாஸ். அட்டைப்பட மாக பத்திரிகையிலும் வெளியிடுகிறான். இதனால், மாஃபியா மற்றும் ஊழல் காவல் ஆணையர் ஆகிய இரு கள்ள அதிகாரத்தின் சீற்றத்துக்கு ஆளாகிறான் காபிஸாஸ். சதிகாரர்களின் கொலை வலை பின்னப்படுகிறது. ஜனவரி 24,1997 இல், பெரும் புள்ளி ஆஸ்கர் ஆண்டிரினி, பினாமரில் அரசி யல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். இதில் காபிஸாஸ், அவரது நண்பர் காபிரியேல் பங்கேற்கின்றனர். காபிரியேல் பாதியில் சென்று விடுகிறார். மறுநாள் காலை காபிஸாஸ் காரோடு எரித்து படுகொலை செய்யப்பட்ட செய்தி மட்டும் நாடெங்கும் பரவுகிறது. மக்கள் போராட்டம் வெடிக்கிறது. முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கா னோர், இரு கைகளையும் தட்டிக் கொண்டு, “காபிஸாஸை மறக்கக் கூடாது” என்ற வாசகம் அடங்கிய படத் தோடு பேரணி செல்கின்றனர். கார்களில் ஒலிப்பானை தட்டி ஓசை எழுப்புகிறார்கள். புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மர டோனா பேரணியில் கலந்து எதிர்ப்பை தெரிவிக்கிறார்.
டோலர்ஸ் நீதிமன்றத்தில்,மூவர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கிறது. போலி கூலிப்படைகள் இப்படுகொலைக்கு பொறுப்பேற்கிறது. விசாரணையில் உண்மையான கொலையாளிகள் கண்ட றியப்பட்டு; முடிவில் ஏபரான் கைதுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் கைதுக்கு முன்பே தற்கொலை செய்து கொள்கிறான்.நான்கு போலீஸ்காரர்கள் உள்ளிட்ட ஒன்பது குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.மக்கள் போராட்டத்தின் நீட்சியால்,1999 அதிபர் தேர்தலில் கார்லஸ் மேனம் தோற்கடிக்கப்படுகிறார்.டீ லா ரூவா புதிய அதிபராகிறார். காபிஸாஸ் அடக்கம் செய்யப்பட்ட பின், அர்ஜெண்டினா முன்னணி பத்திரிகை யின் புகைப்படக் கலைஞர்கள், அபெ லிஸ்கா சதுக்கத்திற்கு சென்று, வட்டமாக நின்று, தங்களது புகைப்படக் கருவிகளை காபிஸாஸ் புகைப்படத்தின் மேலே தரை யில் வைக்கின்றனர்.இது தோல்வியை குறிப்பதாகக் கருதி, அனைத்து புகைப் படக் கருவிகளையும் வானுயர உயர்த்தி, சமூகப்போராளிக்கு வீரவணக்கம் செலுத்துகிற காட்சி மெய்சிலிர்க்கச் செய்கிறது. மாஃபியா என்பவன் பொதுவெளிக்கு தன்னை அடையாளம் காட்டாதவன். புகைப்படம் எடுப்பது,தன்னைத்தானே சுட்டுக்கொள்வதற்கு ஒப்பாகும் என்ற மாஃபியா பற்றிய விளக்கம் புதுமையானது. புகைப்பட இருட்டறையில் நெகடிவ், படமாக மாறும் தருணத்தில்,புதிருக்கான விடையும் அடுத்தடுத்த காட்சிகள் வருவதும் நல்ல உத்தி. படத்தின் நெகிழ்வான இசை பின்ன ணியில்,கடந்த கால நிகழ்வை எதிர் கொண்டவர்களின் பேட்டியில் வெளி வரும் உண்மைகள்,மனதை சுடும் உணர்வை ஏற்படுத்துகிறது. 1990 முதல் 2001 வரை மக்கள் போராட்டம் உள்ளிட்ட அரிய நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து,ஒரு கதை படம் பார்க்கும் அனுபவத்தை உண்டாக்கியுள் ளார் எடிட்டர் சாண்டியாகோ பாரிஷோ. துணிச்சலான முயற்சியில் இப்படத்தை இயக்கியுள்ளார் அலெஸாண்ரோ ஹார்ட்மன். 2022க்கான அர்ஜெண்டினா வின் சிறந்த ஆவணப்பட விருது இப்பட இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு காரணமான கொலையாளிகள், இதுவரை கண்டறி யப்படவில்லை என்பதை இதனுடன் ஒப்புநோக்க வேண்டும். இயேசு சிலுவையை சுமக்கும்போது, மக்கள் எழுச்சியுற்று போராடியிருந்தால், இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டிருக்கமாட்டார். வருங்காலத்தில் இந்தியா, அர்ஜெண்டினா போல்,எழுச்சி பெறும்! என்ற எதிர்பார்ப்பை இந்த ஆவணப்படம் ஏற்படுத்தியுள்ளது.