articles

img

கதறும் கைத்தறி... செவிமடுக்குமா அரசு நிர்வாகம்? - இ.முத்துக்குமார்

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் 2.44 லட்சம் கைத்தறிகள் இயங்கி வருகின்றன. நேரடியாகவும் கைத்தறி துணி உற்பத்திக்கான சார்பு தொழில்களிலும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் 1985-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஜெட்லூம் - விசைத்தறி உள்ளிட்ட நவீன தறிகளில் அனைத்து ரக  துணிகளும் உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதால் இந்தியாவில் கைத்தறி தொழிலை நம்பி வாழ்ந்து வரும் 5 கோடி நெசவாளர்கள் வாழ்வு பறிபோகும் என்பதால், குறிப்பிட்ட 22 ரகங்கள் கைத்தறியில் மட்டுமே உற்பத்தி செய்யவேண்டும் என்று அன்றைய ஒன்றிய அரசு 1985-ஆம் ஆண்டு ரக ஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்தது. கைத்தறி, நெசவாளர்கள் எண்ணிக்கை இந்தியா முழுவதும் படிப்படி யாக குறைந்து 2 கோடி பேர் மட்டுமே பணிபுரிந்த நிலையில் துணி உற்பத்தி தேவை யை ஈடுகட்ட 1995-ஆம் ஆண்டு கைத்தறிக்கான 22 ரகங்களை 11 ரகமாக ஒன்றிய அரசு குறைத்து சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. ரகஒதுக்கீடு சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள சேலை, வேட்டி, துண்டு, லுங்கி,  பெட்சீட் ஆகிய ஐந்து வகை துணிகள் தமிழகத்தில் கைத்தறியில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம், ஆரணி, கோவை, ராமநாதபுரம், தஞ்சை, விழுப்புரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பட்டுசேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சேலை உற்பத்தியில் மட்டும் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுவந்தனர். பட்டுச் சேலை மற்றும் பருத்திச் சேலைகள் விசைத்தறியில் சட்ட விரோதமாக உற்பத்தி செய்யப்படுவது மெல்ல, மெல்ல அதிகரித்து தமிழகம் மற்றும்  இந்தியா முழுவதும் பரவலாக விசைத்தறி யில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் அனைத்து பெரிய ஜவுளி கடைகளிலும் விற்பனைக்கு குவிந்துள்ளன. 

மோசடி விற்பனை

அசல்பட்டு சேலைகள் மற்றும் செயற்கை பட்டு சேலைகள் காஞ்சி காட்டன் போன்ற பருத்திச் சேலைகளை சட்ட விரோதமாக உற்பத்தி செய்வதால் விலை வித்தியாசம் காரணமாக விசைத்தறி துணிகளை கைத்தறி என்றும். செயற்கை பட்டு சேலை கள் அசல்பட்டு சேலைகள் என்றும் மோசடி விற்பனைகள் நடைபெறுகின்றன. கைத்தறி துணிகள் என்றால் அதற்கான அரசு வெளியிட்டுள்ள கைத்தறி முத்திரை சான்று  இருக்க வேண்டும். அத்தகைய  முத்திரை சான்று எதுவும் இல்லாமல் விசைத் தறியில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்வதால் கூட்டுறவு சங்கங்களிலும் - தனி யார் துணி உற்பத்தியாளர்களிடமும் கைத்தறி சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி யுள்ளன. கூட்டுறவு சங்கங்களில் சுமார் ரூ.150 கோடி அளவிற்கும் தனியார் நிறு வனங்களில் கூட்டுறவை விட சற்று கூடு தலாகவும் பட்டுச் சேலைகள் தேங்கியுள்ளன. துணி தேக்கம் காரணமாக நெசவாளர் களுக்கு மாதம் 3 சேலை நெய்வதற்கு பதி லாக ஒரு சேலை மட்டுமே நெய்து தருவதும் பல தனியார் நிறுவனங்கள் முற்றிலும் நெசவாளர்களுக்கு வேலை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

 பெயரளவு செயல்பாடு

கடந்த 6 மாதமாக கடுமையான வேலை யின்மையில் நெசவாளர்கள் தள்ளப்பட்டு ள்ளதுடன் வங்கிகளில் நெசவாளர் கடன் திட்டத்தில் வாங்கிய கடனால் கடன் வலையில் சிக்கியுள்ளனர். விசைத்தறியில் கைத்தறி ரக துணிகள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டிய ரக  ஒதுக்கீடு அமலாக்க அலுவலகங்கள் தமிழக  கைத்தறி துறையின் மூலம் சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய மையங்கள் இருந்த போதிலும் இத்துறை பெயரளவிற்கே இக்காலத்தில் செயல்படுகின்றன. தமிழகத்தில் நெசவாளர் நலச் சட்டம் 1982-ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்தது. கடந்த 43 ஆண்டுகளாக இச்சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கைத்தறி துறையோ, தொழிலாளர் துறையோ முன்வர வில்லை. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், பசுமை வீடு திட்டம் என்றெல்லாம் அறிவிக்கும் நமது அரசுகள் நீண்ட விவாதத்திற்கும் நீதிமன்ற தடைகளை கடந்து பெரும் போராட்டத்திற்கும் பிறகு கொண்டு வரப்பட்ட நலச்சட்டத்தை நடைமுறை படுத்த அரசு முன்வருமானால் வேலை யின்மையால் பாதிக்கப்படும் நெசவாளர் களுக்கு நிவாரணம் உட்பட பல பாதுகாப்பு களை உறுதி செய்யமுடியும். ஒன்றிய அரசு கைத்தறி நெசவாளர் களுக்காக ஏதோ புதிய சாதனைகளை செய்வ தாக கூறி ஆகஸ்ட் 7-ல் தேசிய நெசவாளர் தினம் என மோடி அரசு அறிவித்தது. இந்த அறி விப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விரல் விட்டு எண்ணும் சில நெசவாளர்களை தேர்வு  செய்து விருகள் வழங்கியது தவிர எந்த முன்னேற்றத்தையும் செய்யவில்லை. நூல்  மற்றும் பட்டு வெள்ளி ஜரிகையின் விலைகள்  இக்காலத்தில் மூன்று மடங்கு உயர்ந்து விட்டன. இதை கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு சிறிதளவும் அக்கறைக் காட்டவில்லை.

வரி விதிப்பு மோடி அரசின் பரிசு

சுதந்திர இந்தியாவில் கைத்தறி தொழிலை  குடிசைத் தொழிலாக கருதி அவர்கள் உற்பத்தி செய்யும் துணிகள் மீது கடந்த 70  ஆண்டுகளாக எந்த ஒரு அரசும் விற்பனை  வரியை விதிக்கவில்லை. துணி உற்பத்திக்  கான நூல், கச்சாப்பட்டு, ஜரிகை, சாயப்பவு டர் உள்ளிட்ட அனைத்து உற்பத்தி பொரு ளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதித்ததுடன் கூடுத லாக துணி விற்பனை மீதும் 5% ஜி.எஸ்.டி வரி விதித்து வரியற்ற துணி உற்பத்தி மற்றும் விற்பனையை முடிவுக்கு கொண்டு வந்ததே மோடி அரசு நெசவாளர்களுக்கு வழங்கிய பரிசாகும். ஒன்றிய அரசின் இந்த செயலால் கைத்தறி துணியின் விலை பல மடங்கு உயர்ந்ததுடன், துணி தேக்கத்திற்கும் வேலை யின்மைக்கும் வழி வகுத்தன. இந்தியா முழு வதும் கைத்தறிக்கான ரகங்களை விசைத்தறி உள்ளிட்ட நவீன தறிகளில் உற்பத்தி செய்ய  ஒன்றிய அரசு அனுமதித்ததன் விளைவாக  தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும்  கைத்தறி நெசவாளர்களும் உற்பத்தியாளர்  களும், கைத்தறி சார்ந்த துணை தொழில் களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் வேலையற்ற நிலையை நோக்கி தள்ளப் பட்டுள்ளனர். எனவேதான் ஆகஸ்ட் 7-ல் தேசிய நெசவாளர் தினத்தை கருப்பு தினமாக அறி விக்க வேண்டிய நிலைக்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டனர்.

தமிழக அரசு அறிவிப்பு

தற்போது கைத்தறியில் ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடி, வேலையின்மை காரண மாக கைத்தறி நெசவாளர்களும் உற்பத்தி யாளர்களும் இணைந்து தன் எழுச்சி போராட்டங்கள் உருவாகியுள்ளன. ஆரணி யில் 10-07-2023 அன்று 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணி போல் சிறுமுகை, இராணிபேட்டை, காஞ்சிபுரம், திருபுவனம், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்ட சூழல் உருவாகியுள்ளன. லுங்கி, டவல் நெய்யக்கூடிய பகுதியிலும் இதே நிலை விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது. நெசவாளர்கள் போராட்டங்களை ஒட்டி  தமிழக அரசு சட்டவிரோதமாக உற்பத்தி செய்யும் விசைத்தறி மையங்களில் ஆய்வு  செய்வதற்கான அறிவிப்புகளை வெளி யிட்டுள்ளது. இது போதுமானது அல்ல.

கோ ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல்

தமிழக அரசு கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் துறையில் தேங்கியுள்ள துணிகளை கோ-ஆப் டெக்ஸ் மூலம் குறைந்த பட்ச  லாபத்துடன் அடக்க விலையில் சிறப்பு திட்டம் அறிவித்து கொள்முதல் செய்திட வேண்டும். விசைத்தறியில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யும் பகுதிகளில் ரக ஒதுக்கீடு சட்டப்படி விரைவு நடவடிக்கைகள் மேற் கொண்டு கைத்தறி ரக துணி உற்பத்தியை தடுத்து நிறுத்த வேண்டும். வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். துணி விற்பனை நிலையங்களில் கைத்தறி முத்திரையிட்டு விற்கப்படும் விசைத்தறி துணிகளை பறி முதல் செய்வதுடன், நிறுவனங்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒன்றிய  அரசு வெளி மாநிலங்களில் சேலை ரகங்கள்  பெங்களூர், ஆந்திரா, பனாரஸ் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சட்டவிரோத உற்பத்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பிரதமர் நெசவாளர் கடன் திட்டத்தில் வாங்கியுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக அரசின் நெசவாளர் அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து நெசவாளர் குடும்பங்களுக்கும் வேலையின்மை கால நிவாரணமாக ரூ. 5000 வழங்கிட வேண்டும். தமிழகத்தில் கைத்தறி தொழிலையும், நெச வாளர்களையும் பாதுகாக்கும் நோக்குடன் நெசவாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள், உற்பத்தியாளர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் உள்ளடக்கிய கைத்தறி நெசவாளர் உயர் மட்ட குழு அமைக்கப்படவேண்டும்.   இந்தியாவின் பாரம்பரிய தொழிலை  பாதுகாக்க செவி கொடுப்பார்களா நமது ஆட்சியாளர்கள்?