ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் இந்திய விவசாயம், தொழில்களை நசுக்குகிற பட்ஜெட். மாநிலங்களை வஞ்சிக்கிற, பாஜக அரசின் பதவி நாற்காலியை காப்பாற்றுவதற்கான ஒன்றிய பட்ஜெட் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாகச் சாடியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஜூலை 28 ஞாயி றன்று மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய மக்களுக்கு எதிராக,கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதி ராக ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள் ளது. இதனைக் கண்டித்து இடதுசாரிக்கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி யன்று நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் நாடு முழுவதும் எதிர்ப்பை,கோபத்தை உருவாக்கியுள்ளது. இது நாட்டுக்கான பட்ஜெட்டாக இல்லாமல், நாற்காலிக்கான பட்ஜெட்டாக பாஜக அரசு தாக்கல் செய்துள்ளதே இதற்கு காரணம் ஆகும். ஆந்திரப்பிரதேசம்,பீகாருக்கான குறிப்பிட்ட சிறப்புத் திட்டங்களை அறிவித்த இந்த பட்ஜெட், நாட்டின் வேறு எந்த மாநிலத்திற்கும் சிறப்புதிட்டங்களை அறி விக்கவில்லை.ஒன்றிய பட்ஜெட்டைக் கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர் கள் விரிவான கண்டன அறிக்கைகளை வெளியிட்டார் கள். இதற்கு ஒன்றிய நிதியமைச்சர், ஆந்திராவிற்கான சிறப்புத்திட்டம் என்பது அந்த மாநிலம் பிரிக்கப் பட்டபோதே கொடுக்கப்பட்டதுதான் என்று கூறி யிருக்கிறார்,கடந்த 10 ஆண்டுகளாக பாஜகதான் மத்தி யிலே ஆட்சியில் இருந்தது. 10 ஆண்டுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்திற்கு,10 ஆண்டுகளாக நிதி ஒதுக்கி யிருந்தால்,யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை.ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பட்ஜெட் டில்தான் ஆந்திரா,பீகாருக்கு மட்டுமே குறிப்பிட்ட சிறப்பு திட்டங்களை ஒதுக்கியிருப்பது என்பது அரசியல் சந்தர்ப்பவாத பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது.
தமிழக உட்கட்டமைப்பு பணிகளை கிடப்பில் போடும் பாஜக அரசு
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அநேகமாக எதுவும் இல்லை.வஞ்சிக்கப்பட்ட மாநிலமாக இன்று தமிழ்நாடு நின்றுகொண்டிருக்கிறது. இந்தியா விலே தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு நகரங்கள் கிடையாது.10 பெருநகரங்களை கொண்ட மாநிலம் இந்தியாவிலே தமிழ்நாடு மட்டும் தான். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஓசூர், திருநெல்வேலி, ஈரோடு என்று மிகப்பெரும் நகரங்களைக் கொண்ட, நகரமயமாக்கல் அதிகம் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான்.இதில்தான் தமிழ் நாட்டுக்கான உட்கட்டமைப்பு மிகப்பெரும் பங்கை வகிக்கிறது.உட்கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலை யும் விமானத்துறையும் ரயில்வே துறையும் மிகப்பெரும் பங்காற்ற வேண்டும்.ஆனால் கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பாஜக ஆட்சியில் உட்கட்ட மைப்பிற்கு மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதியை காட்டிலும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி மிகமிகக் குறைவு.அத்தகைய நிலைதான் இந்த பட்ஜெட்டிலே தொடர்கிறது.ஒன்றிய பாஜக ஆட்சியின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். இதனை தமிழ்நாடு அரசு தனக்கே உரிய முறையில் சந்திக்கும் என்று முதல மைச்சர் அறிவித்திருக்கிறார்.நிச்சயமாக அதனை சந்திப்போம். ஆனால் வழங்க வேண்டிய நிதியில் மிகப்பெருமளவை வழங்க மறுக்கிற, தமிழ்நாட்டை கொடுமையாக வஞ்சிக்கிற பட்ஜெட்டாக ஒன்றிய பட்ஜெட் உள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள கோசி நதியின் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைக்காக 21 ஆயிரம் கோடி ரூபாய் ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கி றது. ஆனால் தமிழ்நாட்டில் சென்னை, திரு நெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத அதி கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு ரூ.30 ஆயிரம் கோடி வெள்ள நிவார ணம் கோரியது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு வெறும் ரூ.500 கோடியை மட்டுமே ஒதுக்கியது.அதன்பிறகு இதுவரை ஒரு பைசா கூட நிவாரண நிதி ஒதுக்க வில்லை.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தர ஒப்புக்கொண்ட நிதியை ஒன்றிய பாஜக அரசு தரவில்லை.மதுரை மெட்ரோ திட்டம் பற்றி வாய் திறக்கவில்லை.கோவை மெட்ரோ திட்டத்திற்கு எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு திட்டப்பணிகளை கிடப்பில் போட்டுப்பார்க்கும் வேலையை ஒன்றிய பாஜக அரசு செய்கிறது.இதனை வெளிப்படையாக செய்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி, 25 மக்களவை இடங்களை கொடுத்திருந்தால் தமிழக மக்களுக்கு திட்டங்களை செய்வோம் என்று செய்தியாளர்களிடம் கூறியி ருக்கிறார். இதற்கு எதற்கு நீங்கள் ஆட்சி நடத்த வேண்டும்? தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கிற வரிப் பணம், எதிர்க்கட்சி மாநிலங்கள் கொடுக்கிற வரிப்பணம் என்ன குறைவா? வரிசெலுத்தும் மாநிலங் களுக்கு உரிய பங்கீடை வழங்கக்கூடிய இடத்தில் ஒன்றிய அரசு உள்ளது. ஆனால் வாக்களிக்கவில்லை என்பதற்காக, அயோத்தி ராமரையே கைவிட்டவர்கள். தமிழகத்தை கைவிட்டது ஒன்றும் ஆச்சரியமில்லை.
சிறு குறு, நடுத்தரத் தொழில்களுக்கு வரிக்குறைப்பு இல்லை
அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைத்திருக்கிறார்கள்.ஆனால் இங்குள்ள சிறு குறு, நடுத்தரத்தொழில்களுக்கு எந்த வரிக்குறைப்பும் இல்லை.,இந்த தொழில்களை நடத்தக்கூடியவர் கள் வங்கிகளில் வாங்கிய கடனை 3 மாதத்திற்குள் செலுத்தவில்லை என்றால், வராக்கடனாக அறிவித்து, வங்கி அடுத்து கடனே தராது. 3 மாதமாக உள்ளதை 6 மாதங்களாக உயர்த்த வேண்டும் என்று சிறு குறு -நடுத்தர தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்ற னர்.இந்த கோரிக்கையை கொரோனா காலத்திலி ருந்து முன்வைத்து வருகின்றனர். ஆனால் இவர்க ளுக்கு சலுகை வழங்காமல் ஒன்றிய நிதிய மைச்சர், அந்நியநிறுவனங்களுக்கு வரிச்சலுகையை வாரி வழங்குகிறார். மதிய உணவுத்திட்டம், 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டுள் ளது. உரமானியம் வெட்டப்பட்டுள்ளது. அந்நிய மூலதனத்திற்கான வரிக்குறைப்பு என்பது தேசத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.ஒரு நாட்டின் மீதான தாக்குதல் எல்லையிலிருந்து மட்டும் நடக்க வில்லை. அதைவிட வலிமையாக மூலதனம் வழியாக வும் நடக்கிறது.அந்நிய மூலதனத்தை மிகப்பெரு மளவிற்கு திறந்துவிட்டு,வரிக்குறைப்பு செய்து, உள்நாட்டு தொழில்முனைவோர்களை, சிறு,குறு, நடுத்தர தொழில்களை முற்றிலுமாக பாதிக்கிற நட வடிக்கையை ஒன்றிய பாஜக அரசு செய்திருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசுக்கு வரி வருமானத்தில் முதலிடத்தில் இருந்தது,கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிற வரி.அதற்கு அடுத்த இடத்தில் மறைமுக வரி,இதற்கு அடுத்து தனிநபர் வருமான வரி இருந்தது.ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.கார்ப்பரேட்கள் செலுத்துகிற வரி மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டது.ஜிஎஸ்டி வரி முதலிடம், தனிநபர் வரி இரண்டாமிடத்தில் உள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் நாட்டுக்கான பட்ஜெட்டாக இல்லாமல், பாஜக அரசின் நாற்காலிக்கான பட்ஜெட்டாக உள்ளது.மாநிலங்க ளை பழிவாங்குகிற சந்தர்ப்பவாத பட்ஜெட்டாக இருக்கிறது.இந்தியாவின் தொழில், விவசாயம், சிறுகுறு, நடுத்தர தொழில்களை நசுக்குகிற அநீதி இழைக்கிற பட்ஜெட்டாக இருக்கிறது.
பிங்க் புத்தகம் வெளியிடாமல் மோசடி
நாளையுடன் (ஜூலை29) பட்ஜெட் மீதான விவாதம் முடிவடைகிறது. செவ்வாய்க்கிழமை விவா தத்தின் மீது நிதியமைச்சர் பதிலளிக்கிறார்.இதில் மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால்,2014 ஆம் ஆண்டுவரை ரயில்வே பட்ஜெட் இருந்தது.எந்தெந்த மாநிலங்களுக்கு என்னென்ன ரயில்வே திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து ரயில்வே பட்ஜெட் நாட்டுக்கு முன்பு வைக்கப்பட்டு, ஊட கங்கள் விவாதித்தன. நாடாளுமன்றம் விவாதித்தது. நாடே விவாதம் செய்தது.ஆனால் 2017 இல் பாஜக ரயில்வே பட்ஜெட்டை ஒழித்தது.ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் இல்லை. பொது பட்ஜெட்டுடன் அதனை இணைத்துவிட்டனர். ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிற அன்றே பிங்க் புத்தகம் என்ற ரயில்வே திட்டங்கள் அனைத்தும் அடங்கிய புத்தகம் வெளியிடப்படும். 2017 வரை இது இருந்தது. ஆனால் இந்த முறை அதிலும் மிகப்பெரிய மோசடியை அரங் கேற்றிக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.இந்த நிமிடம் வரை பிங்க் புத்தகம் வெளியிடப்பட வில்லை.புதிய ரயில்வே வழித்தடம் என்ன? பழைய வழித்தடங்களுக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? மின்மயமாக்கல்,இரட்டை வழிப்பாதைக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? கவாச் இயந்திரம்வாங்கு வதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது? புதிய சிக்னல்களுக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? என்ற எந்த விபரங்களும் நாட்டு மக்களுக்கு தெரி யப்படுத்தப்படவில்லை. ஆனால் இதற்கு மாறாக ரயில்வே அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி,இந்த திட்டங்களையெல்லாம் செய்துள் ளோம் என்று கூறுகிறார்.ரயில்வே மண்டல மேலாளர் கள் பத்திரிகைகளுக்கு இதுகுறித்த செய்திகளை தருகிறார்கள்.பிங்க் புத்தகம் என்ற ஆவணத்தை தராம லேயே பட்ஜெட் விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்தி முடிக்கிறது பாஜக அரசு.இது இந்திய வரலாற்றிலே இல்லாத துரோகம்.மடியிலே கனம் இல்லை என்றால், வழியிலே பயம் இல்லை.நல்ல திட்டங்களை போட்டுள்ளீர்கள் என்றால் பாஜக அரசு பிங்க் புத்தகத்தை வெளியிட்டிருக்க வேண்டும்.ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கும் எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களுக்கும் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில்வே விபத்து உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.இதற்கு காரணம் கவாச் என்ற பாதுகாப்பு இயந்திரம் பொருத்தப்படாதது; ஒரே ஆண்டில் மட்டும் 55 ஆயிரம் ரயில்வே சிக்னல்கள் பழுதடைகின்றன என்று ரயில்வே ஆவணங்கள் கூறுகின்றன.
இதன்பிறகு பிங்க் புத்தகத்தை வெளியிட்டால் நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதம் நடத்த நேரம் இருக்காது.இது திட்டமிட்ட மிகப்பெரிய மோசடி. நாட்டு மக்களுக்கு இழைக்கப்படுகிற மிகப் பெரிய அநீதி. ஒன்றிய பாஜக அரசின் இந்த அநீதியைக் கண்டித்துத்தான் இடதுசாரிக்கட்சிக ளான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (எம்-எல்) லிபரேசன் ஆகியவை ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தை நடத்துகிறோம். மதுரையில் மட்டும் மதுரை ரயில் நிலையம், ஒத்தக் கடை, திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய இடங்க ளில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
வெள்ள நிவாரணம் ஒதுக்காதது குறித்து
தமிழக பாஜக-என்டிஏ தலைவர்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை?
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சு.வெங்க டேசன் எம்.பி.,அளித்த பதில் வருமாறு: 3 மாதங்களாக சண்டை போட்டோம்.இனி மேல் மக்களுக்கான வேலையை பார்ப்போம் என்று பிரதமர் மோடி கூறினார். ஒன்றிய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்ததுதான் மோடி சொன்ன வேலை யா? உத்தரப்பிரதேச மாநில மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டியது போல இந்தியா முழுவதும் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கு நிதியை குறைத்துவிட்டு, கார்ப்பரேட்களுக்கு சலுகை களை வாரி வழங்கி, அதிக நிதி ஒதுக்கியுள்ளனர், பாஜகவின் இந்த அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். போ ராட்டங்களின் வடிவத்தை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிற போது, அரசியல் இயக்கங்கள் போராட்டங்களை நடத்துகின்றன. இந்தியா கூட்டணியின் வேட்பாளராக மதுரையிலிருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளேன்.பட்ஜெட் குறித்து விவாதிப்பேன்;எதிர்ப்பேன்.ஆனால் மதுரை மக்களின் பிரதிநிதி என்ற முறையில், பட்ஜெட்டிலிருந்து மக்க ளுக்கு நல்லதிட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கி றேன்.12 தொழிற்பேட்டைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஒரு தொழிற்பேட்டை மதுரைக்கு வேண்டும் என்று தொழில்துறை அமைச்சரிடம் கேட்கப்போகிறேன்.விமானத்துறை அமைச்ச ரை சந்தித்து நீண்டநேரம் பேசியுள்ளேன்.வாரணாசி விமான நிலையத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்குகிறது.மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரம் இயக்குவதற்கு, தொழில் பாது காப்புப்படை ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்க தேவைப் படுவது வெறும் ரூ.30 கோடிதான்.ஆனால் இதுவரை கொடுக் கப்படவில்லை.இதனால் விமான நிலையத்தை 24 மணி நேரம் முழுவதுமாக இயக்க முடியவில்லை.வாரணாசியை விட10 மடங்கு அதிகமாக பயணிகள் பயணம் செய்கிற விமான நிலையம் மதுரை விமானநிலையம். அரசியல்ரீதியாக இழைக்கப்படுகிற அநீதிகளை அரசியல்ரீதியாக சந்திப்போம். மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை செய்துகொடுப்ப தற்கும் முயற்சிகளை மேற்கொள்வோம். பீகார் கோசி நதி வெள்ளத்தடுப்புக்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்குகிற ஒன்றிய அரசு, தமிழக வெள்ளப்பாதிப்புக்கு ஏன் நிதி ஒதுக்க வில்லை என்று தமிழக பாஜக தலைவர்களும் அதன் கூட்ட ணிக்கட்சித் தலைவர்களும் ஏன் கேட்கவில்லை. வாக்களிக்க வில்லை என்றால் அரசுஎதையும் செய்யாது என்று பய முறுத்துவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மதுரைக்கு மெட்ரோ மற்றும் ரயில்வே திட்டங்க ளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள்,ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேட்டுள் ளோம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மக்கள் நலத்திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்திய தொழில்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.ரயில்வே பட்ஜெட்டில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்படுகிறது.அந்த அநீதியை மறைப்பதற்காகத்தான் பிங்க் ஆவணத்தை அரசு வெளியிடாமல் இருக்கிறது.ஒன்றிய அரசின் அநீதியை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நர சிம்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முருகன், சிபிஐ(எம்.எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.