நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே, காசா மீது தாக்குதல் தொடர்கி றது, காசா குடிமக்கள், தன்னைத் தானே மனிதத் தன்மையற்றதாக்கிக் கொண்ட ஒரு அரசு மற்றும் அதன் பலம்வாய்ந்த ஆதரவாளர்களால் (பிரதம மந்திரி நரேந்திர மோடி, சமீபத்தில் இணைந்து கொண்ட பாரம் சுமப்பவர்) படுகொலை செய்யப்படு கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக, ஒவ்வொரு பத்தாண்டும் அதற்கு முந்தைய பத்தாண்டைவிட மிக மோசமாக இருக்கும். இரண்டு பக்கத்தையும் சீர்தூக்கிப் பார்த்தால் அவற்றிற்கிடையே நீதி, அரசியல், அல்லது இராணுவ சமநிலை ஏதுமில்லை.
தடுக்கப் போகிறீர்களா? இல்லையா?
இஸ்ரேல் ஒரு அணுஆயுத நாடு. அதற்கு சகல விதமான ஆயுதங்களையும், அமெரிக்கா அளித்துள் ளது. அதன் இருத்தல் அச்சுறுத்தப்படவில்லை. ஆனால், பாலஸ்தீனர்கள், அவர்களின் நிலங்கள், அவர்களின் வாழ்வு ஆகியவை எல்லாக் கால மும் தொடர்ந்து தாக்கப்படுகிறது. இதனை அனைத்து வழிகளிலும் தடுக்க வேண்டியது அவசியமாகிறது. அல்லது பாலஸ்தீனர்கள் படிப்படியாக அழிக்கப்படு வதை அல்லது அவர்கள் தாயகத்திலிருந்து துரத்தி யடிக்கப்படுவதை மேற்கத்திய நாகரீகம் வேடிக்கை பார்க்கப் போகிறதா? ஒரு புதிய ‘நக்பா’ (பேரழிவு என்ப தற்கான அரபி வார்த்தை) சமீப சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே தற்போது எழுந்துள்ள விவாதப் பொருளாகும்.
அகண்ட இஸ்ரேலுக்காக
இஸ்ரேலில் உள்ள அதிதீவிர வலதுசாரி அரசு; அவர்களில் சிலர் முக்கிய பொறுப்புகளில் உள்ள மிகவும் அபாயகரமான பாசிஸ்ட்டுகள்; அவர்கள் கூண்டோடு அழிக்கும் வெறித்தனத்தில் பேசுகின்றனர், அச்சுறுத்துகின்றனர்; அவற்றில் சிலவற்றை அமல் படுத்தியும் வருகின்றனர். அவை, வழக்கம்போல, மேற்கொள்ளப்படும் போர்க்குற்றங்களுக்கு பாதிக்கப் பட்டவர்களையே குறை சொல்வதாகும்.
நியூயார்க் டைம்ஸ், அது ஒரு காலத்தில், இராக் பற்றிய பொய்க்கதைகளை பதிப்பித்துக் கொண்டி ருந்தது (பேரழிவு ஆயுதங்கள் உள்ளது என்ற கதை கள்). அதைப் போன்றே தற்போதும், பாலஸ்தீனக் குழுக்களே காசாவின் மருத்துவமனையை குண்டுக ளால் தாக்கின என்ற அபத்தமான கதைகளை ஆதரித்து பிரசுரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த முறை மிகச் சிலர் மட்டுமே இந்த பிரச்சாரத்தை நம்புகின்றனர். உண்மையில்லாத ஒவ்வொரு தகவலும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. அதற்கு பதிலாக பிரம்மாண்ட மான போராட்டங்கள் நடைபெறுகின்றன. இஸ்ரேலிய ராணுவம் முடிந்தளவுக்கு பாலஸ்தீனர்களைக் கொல்வது, வடக்கு காசாவை ஆக்கிரமிப்புக்கு உள் ளாக்குவது, தெற்கு காசாவை தினமும் தாக்கி, அந்தப் பகுதியை ஒட்டுமொத்தமாக அழித்து, அங்கு (மிச்சம் மீதி) இருப்பவர்களை எகிப்திற்கு விரட்டியடிப்பது என்ப தையே விரும்புகின்றனர். இஸ்ரேலியப் படையினர் வெகுவிரைவில் மேற்கு கரைக்கும் செல்வர். ஐ.நா. சபையில் இஸ்ரேலியப் பிரதமர் நேதன்யாகு கொக்க ரித்தது போல், அதன் பிறகு ஒரே ஒரு இஸ்ரேல் மட்டுமே, அதுவும் நிறவெறி அரசாக இருக்கும். அதுவே, உண்மையில் பல இஸ்ரேலிய தலைவர்கள் ஆரம்பம் முதலே விரும்புவது. லேபர் கட்சியும், லிகுத் கட்சியும் மாறுபட்ட நடைமுறையைக் கொண்டிருந்தாலும், அவர்களின் நோக்கம் ஒன்றே. ‘அகண்ட இஸ்ரேல் (எர்ட்ஸ் இஸ்ரேல் இயக்கம்).’
சுய நிர்ணய உரிமைக்கான அமைதி இயக்கம்
நீண்ட காலமாகவே, பாலஸ்தீன மக்களும் அவர்தம் அமைப்புகளும், பல்வேறு வழிகளில் முயன்று பார்த்து ஏதாவது சிறிய அளவிலாவது அர்த்த முள்ள சுயநிர்ணய உரிமையைப் பெறலாம் என முயன்று வருகின்றனர். ஒவ்வொரு இஸ்ரேலிய அரசியல் கட்சியும் இந்த நம்பிக்கையை சிதைத்தது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள பாலஸ் தீனர்களிடம், இஸ்ரேல் நாட்டிற்கு அழுத்தம் கொடுப்ப தற்காகத் தொடங்கப்பட்ட, பிடிஎஸ் என்ற இஸ்ரேலி யப் பொருட்கள் புறக்கணிப்பு (பாய்காட்), விலக்குவது (டைவஸ்மெண்ட்), தடைகள்(சாங்ஷன்ஸ்) என்ற இயக் கம் மிகவும் பிரபலமாக இருந்தது. இது ஒப்பில்லாத ஓர் அமைதியான இயக்கம், அது ஓரளவிற்கு வெற்றிகர மாகவும் மாறியது. துல்லியமாக இந்தக் காரணங்க ளுக்காகவே, நேட்டோவும் அமெரிக்காவும், ஐரோப்பா விலும், அமெரிக்காவிலும் இந்த இயக்கத்தை ஒரு கிரிமினல் நடவடிக்கையாக மாற்ற முயற்சித்தன. பிடிஎஸ் இயக்கத்தை ஆதரிப்பதும், பாலஸ்தீ னர்களை ஆதரிப்பதும், “யூத எதிர்ப்பை” ஊக்குவிப்ப தாக, எந்த அதிகாரமும் அற்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு (ஐசிஹெச்ஆர்) வரையறுத்தது.
தென்ஆப்ரிக்கா, பொலிவியா, வெனிசுலா, சிலி, மெக்சிகோ ஆகிய நாடுகள் பிடிஎஸ் இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தன. அன்று, துருக்கியோ, எகிப்தோ, அல்லது பெரும்பாலான அரபு நாடுகளோ பாலஸ்தீனர்களுக்காக பேச முன்வரவில்லை. இஸ்லாமியர்களின் புனித நகரங்களின் காப்பாளர்க ளான சவூதி அரேபியா, வெள்ளை மாளிகையுடன் இணைந்து இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது.
பல பத்தாண்டுகளாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்து வதும், அவர்களைக் கொல்வதும் பொழுது போக்கு போல நடந்தது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஓய்வு பெற்ற இஸ்ரேலிய இராணுவ ஜெனரல்களும், அவர்க ளுக்கு இணையாக (இஸ்ரேலின் உளவுப்படையான) மொசாத் அமைப்பின் அதிகாரிகளும், பாலஸ்தீனர்க ளுக்கு இழைக்கப்பட்ட அநீதி வெட்கப்படத்தக்கது என்கின்றனர்; ஆனால், அவர்கள் ஓய்வு பெற்றபின் இதைச் சொல்வதால் என்ன பயன்? இஸ்ரேலியப் பாதுகாப்பு படையும், மொசாத் அமைப்பும், ஆக்கிர மிப்பு பகுதிகளில் குடியேறுபவர்களில் பாசிஸ்ட்டுக ளை ஆதரிக்கின்றன; ஆகவே அவர்கள், (பாலஸ் தீனர்களின்) வீடுகளை எரிக்கின்றனர், அவர்களின் ஆலிவ் தோட்டங்களை அழிக்கின்றனர், அவர்களின் கிணறுகளில் கான்கிரீட் கலவையை ஊற்றுகின்றனர், ‘‘அரேபியர்களுக்கு அழிவு’‘ என்று கொக்கரிக்கின்ற னர்; இளைஞர்களை குறிவைத்து கொல்கின்றனர்.
இவை எதற்கும் மேற்குலகில் சிறு முணுமுணுப்பு கூட கிடையாது.
பழிவாங்கலை பாலஸ்தீனர்கள் அறிவார்கள்
இத்தனைக்கும் பிறகு ஒரு நாள் தேர்ந்தெடுக் கப்பட்ட பாலஸ்தீன (காசா) தலைமை திரும்பித் தாக்குவது என்று முடிவெடுக்கிறது. இந்த நிகழ்வின் தலைப்பு செய்திகள் மீண்டும் பாலஸ்தீனர்களை செய்திகளில் கொண்டுவருகிறது. அதிர்ச்சி, திகிலூட்டக்கூடியது என்ற தலைப்புகளில். அவர்கள் மீண்டும் தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள். அவர்கள் ஏன் காட்டக்கூடாது? அவர்களுக்கு இதர எல்லோ ரையும் விட நன்கு தெரியும், இஸ்ரேலில் உள்ள அதிதீவிர வலதுசாரி அரசு கொடூரமாக பதிலடி கொடுக்கும் என்பதும், வழக்கம் போல் அமெரிக்கா வும், இரப்பர் வாய் ஐரோப்பிய யூனியனும் அதற்கு துணை நிற்கும் என்பதும். அவர்கள் என்ன யோசித்தார்கள்? இதற்கு எதிர்தாக்குதல் எப்போதும் இருக்காது என்றா நினைத்தார்கள்? நேதன்யாகுவும், அவரது மந்திரி சபையில் உள்ள இதர கிரிமினல்க ளும், மெதுவாக பெரும்பாலான பாலஸ்தீனர்களை வெளியேற்றுவார்கள், கொல்வார்கள் என்று அறியாதவர்களா? இது குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். இஸ்ரேலிய அரசாங்கத்தின் சில பாசிச சக்திகள் வெளிப்படையாகவே பாலஸ்தீனர்க ளை ஒட்டு மொத்தமாக அழிக்க தொடங்கப் போவதாக அறிவித்துள்ளன. அவர்களில் ஒருவன் பாலஸ்தீனர்க ளை ‘மனித மிருகங்கள்’ என்றழைத்துள்ளான். நாஜிக்கள் யூதர்களை, ஸ்லாவியர்களை, ரோமாக்க ளை ஜெர்மனியில் ‘உன்ட்மென்ச்’ என்றழைத்தனர். அதற்கு அர்த்தம் ‘மனிதர்களைவிட கீழானவர்கள்’.
இஸ்ரேலியர்களின் மனநிலை
இஸ்ரேலில் உள்ள யூத தாராளவாதிகள் (லிபரல் கள்) நேதன்யாகு அந்த நாட்டின் உச்சபட்ச நீதி மன்றத்தை நீர்த்து போகச்செய்து மோசமான ஊழல் வழக்குகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முயன்ற போது, அதற்காக வருத்தப்பட்டனர். ஆனால் டெல் அவிவ் நகரில் அந்த நாட்டின் உச்சநீதிமன் றத்தை அதிதீவிர வலதுசாரி அச்சுறுத்தலிடமிருந்து காப்பதற்காக மிக பிரம்மாண்ட போராட்டங்களை நடத்தியவர்கள், பாலஸ்தீனர்கள் பிரச்சனை என்றால் மிக சிறிய அசைவையே கொடுக்கின்றனர். அவர்க ளுக்கு நன்கு தெரியும், யூதர்களின் சிவில் உரிமை களை பாதுகாக்க பேரணி சென்றவர்கள், பாலஸ்தீ னர்கள் உரிமைகளுக்காக சிறு துளியும் கவலை கொள்ள மாட்டார்கள். அந்த உச்சநீதிமன்றமே ஆக்கிர மிக்கப்பட்டுள்ள, முற்றுகையிடப்பட்டுள்ள மேற்குக் கரை மற்றும் காசா பகுதி பாலஸ்தீனர்களை அமைப்பு ரீதியான அடக்குமுறைகுட்படுத்த நிறவெறி அரசின் ஒரு அங்கம் என்பதை அவர்கள் அறிவார்கள்.
அடக்குமுறைக்கு உட்பட்டுள்ள பாலஸ்தீனர்கள், தங்கள் மீது தொடர்ந்து ஏவப்படும் இடையில்லா ஆக்கிரமிப்பை எதிர்க்க உரிமை கொண்டவர்களா இல்லையா? இதற்கு ஒரே ஒரு விடைதான் இருக்க முடியும்: ஆம். அடிபணியவைக்கப்பட்ட மனிதர்கள் நீண்ட காலமாக, அதை எதிர்க்க தங்களுக்குள்ள உரி மையை வெளிப்படுத்துகின்றனர். இந்த உரிமை அவர்களுக்கு அவர்களே கொடுத்தது. இந்த உரி மையை சற்று பின்னோக்கி ஆராய்ந்தால், ஸ்பார்ட்ட கஸ், டூசான்ட் லாவர்ட்டூர் ஆகியோர் காலத்திற்கு செல்லும். ஸ்பார்ட்டகஸ் ரோமானியர்களுக்கு எதிராக போராடிய வெள்ளை அடிமை. டூசான்ட் லாவர்ட்டூர் (ஹைப்டி) பிரெஞ்சு நாட்டிற்கு எதிராகப் போராடிய கருப்பு அடிமை. இதையே காலனியாதிக்கத்திற்கு எதி ரான போராளிகள் 20ஆம் நூற்றாண்டு முழுவதும் செய்து வந்தனர், சீனாவில், வியட்நாமில், கொரியா வில், அல்ஜீரியாவில், அங்கோலாவில், மொசாம் பிக்கில் இது போன்ற இன்னும் பிற நாடுகளில்…
முதன்மைப் பிரச்சனையாக மாறிய பாலஸ்தீனம்
இஸ்ரேலியர்கள் காசா பகுதியில் தரை வழி தாக்குதல் நடத்தி இன்னமும் அதிக கட்டிடங்களை அழிக்கவும், மேலும் அதிக மக்களை கொல்லவும், அமெரிக்காவின் பச்சைக் கொடிக்காக காத்திருக்கின்ற னர். அவர்களுக்கு இன்னமும் வெள்ளை மாளிகையிலி ருந்து லெபனானின் ஹிஸ்புல்லாவுடன் சண்டையிட அனுமதி கிடைக்கவில்லை. அமெரிக்கா கவலைப்படு வது, ஈரானும் சீனாவும் நெருக்கமாக இருப்பது பற்றி யதே. ஆகவே அது டெஹ்ரானுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது, தற்போதுள்ள நிலையை குலைக்க அது விரும்பவில்லை.
இடையில் காத்திருக்கும் இஸ்ரேலிய ராணுவத்தி னர், தினம் தினம் காசாவை சித்ரவதை செய்கின்றனர். அவர்கள் காசா பகுதியிலிருந்தும், இதர ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்தும், பணயக் கைதிகளை பிடித்துச் செல்கின்றனர். அவர்களுக்கு நுரை தள்ளுகிறது, ஆத்திரத்தில் பொங்குகின்றனர், ஏனெனில் அவர்க ளுக்கு தெரியும் ஹமாசால் திட்டமிடப்பட்ட தாக்குதல் சர்வதேச அளவில் பாலஸ்தீன ஆதரவை பற்றியெரி யச் செய்துள்ளது என்பதை ஜோர்டான் அரசர், அமெ ரிக்க-இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அரண் என்பதை விட சற்று அதிகமாக செயல்படும் நாட்டின் தலைவர், அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க மறுத்து விட்டார். அதன் பின் நடந்த பிராந்திய உச்சிமாநாட்டில், அவர், பாலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்த தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்ததும் தெளிவா கக் காட்டுவது என்னவெனில், பாலஸ்தீன பிரச்சனை இனியும் இரண்டாம் பட்சமாக கருத முடியாது. அந்த பிரச்சனை முன்னுக்கு வந்துள்ளது என்பதுதான்.
அரபு உலகில் நடைபெற்றுள்ள பிரம்மாண்ட ஆர்ப்பாட்டங்கள் கவனத்தைக் கவரக் கூடிய அரபு ஒற்றுமையை கீழிருந்து ஏற்படுத்தியுள்ளது. மொரோக்காவின்(இஸ்ரேலை அங்கீகரித்த நாடு) வீதிகளில் 5 லட்சம் பேர் (பாலஸ்தீனர்களுக்கு ஆதர வாக) திரண்டுள்ளனர்; அம்மானில் (ஜோர்டான் தலை நகர்) இரண்டு தெருக்களில் சுமார் இரண்டரை லட்சம் பேர் திரண்டுள்ளனர். கெய்ரோவில் தஹ்ரி சதுக்கம் மீண்டும் நிரம்பியது. அதற்கு இரண்டு பக்கங்களிலும் உள்ள சாலைகளிலும் லட்சக்கணக்கானவர்கள் திரண்டனர். அல்ஜீரிய அரசாங்கம் முழுமையாக அனைத்து மட்டங்களிலும் முழு ஆதரவை அளிக்க முன்வந்துள்ளது.
எகிப்தில் பிரபலமான ஜவஹர்
ஆட்டோமான் பேரரசு வீழ்ந்தவுடன் அரேபியர்க ளின் தேசம், பல சிறு நாடுகளாக, அவை பெரும் பாலும் முதலாம் உலகப் போரின் முடிவில், பிரிட்ட னாலும், பிரான்சாலும் உருவாக்கப்பட்டவை. ஆனால், அரபு தேசியவாதம் எகிப்தின் கமால் அப்துல் நாசரால் உத்வேகம் பெற்று வளரத் தொடங்கியது. நாசரை வீழ்த்த, இஸ்ரேல், பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகள் அமெரிக்காவின் ஒப்புதலின்றியே 1956ல் எகிப்தின் மீது படையெடுத்தன, ஆனால் நாசர் அரசை தூக்கி யெறிய முடியவில்லை. அந்த காலத்தில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்திற்கு பலமான ஆதரவு அளித்தார். அதே சமயம் பாகிஸ்தான் பிரிட்ட னுக்கு ஆதரவாக இருந்தது. அந்த ஆண்டு எகிப்தில் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் பிரபலமான பெயர் ஜவஹர் என்பதாக இருந்தது. அந்த 1956 ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவை தாக்கி அதனை நான்கு மாதங்கள் ஆக்கிரமித்திருந்தது. அடுத்து நடந்தது, தற்போதுள்ள நிலைமைக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். மார்ச் 1957ல் அமெரிக்கா, இஸ்ரேலை காசாவிலிருந்து பின்வாங்குமாறு பணித்தது. அதிபர் டூவெயிட் ஐசன்ஹோவர் அதிகமாக கடிந்தும், அதிகமான ராஜீய அழுத்தங்களை கொடுத்தும், தவறினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அறிவித்ததால் இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேறியது.
போரை நிறுத்துக!
சமீபத்தில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுக்கும், சவூதி இள வரசர் முகம்மது பின் சல்மானுக்கும் இடையே நடை பெற்ற பேச்சுவார்த்தையில், இளவரசர் மிகவும் கடு மையாக பேசியதாகவும், அமெரிக்கா போர் நிறுத்தத் திற்கு உத்தரவிட வேண்டும் என்றும், காசா முற்று கையை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கர்கள், ஆப்கானிஸ்தானில் அவர்களின் சொந்த அனுபவத்திலிருந்து குண்டு போடுவது, ஆக்கிரமிப்பு செய்வது ஆகியவை அரிதாகவே பலன் கொடுக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். அவர்கள் ஜெருசலேத்தில் உள்ள தங்களின் ‘வாடிக்கையாளர்’ நாட்டிற்கு இதனை விளக்கிக் கூற வேண்டும்.