சென்னை, நவ.21- முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை டிச. 24 ஆம் தேதி பிரமாண்ட மாக நடத்த தமிழ் திரைப் படத் துறை திட்டமிட் டுள்ளனர்.
அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு, விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படத் துறை சங்கம் சார்பில் ஆர்.கே செல்வமணி,இயக்குநர்கள் பேரரசு, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, ராஜன், நடிகை லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ் திரைத் துறை அனைத்து சங்கங்கள் சார்பாக பல்வேறு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்கு நர்களும் கலந்து பங்கேற்ற னர்.
அப்போது செய்தி யாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல் வமணி கூறியதாவது:-
கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதி களில் நடத்த முடிவு செய்திருக்கிறோம். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த நடி கர்களான நடிகர் ரஜினி காந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பல முக்கிய நபர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.
இந்த விழா நடைபெறும் தினத்தன்று இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழ் திரைப்படங்களின் படப் பிடிப்புகள் நடைபெறாது. அவர் வருவாரா, இவர் வருவாரா என இல்லாமல் திரைத்துறையினர் 100 விழுக்காடு அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.
கலைஞர் நூற்றாண்டு விழாவில் 20 நிகழ்ச்சிகள் வடிவமைத்துள்ளோம். திரைப்படம் மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கு சமூக நீதி, சமத்துவபுரம், உழவர் சந்தை, கை ரிக்ஷா ஒழிப்பு போன்ற சிந்தனைகளை சிந்தித்து அமல்படுத்திய கலைஞருக்கு இந்த விழாவை முன்னெடுப்பது தான் நாம் அவருக்கு செலுத்தும் நன்றி.
கலைஞர் நூற்றாண்டு விழாவில் 20 நிகழ்ச்சிகள் வடிவமைத்துள்ளோம். திரைப்படம் மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கு சமூக நீதி, சமத்துவபுரம், உழவர் சந்தை, கை ரிக்ஷா ஒழிப்பு போன்ற சிந்தனைகளை சிந்தித்து அமல்படுத்திய கலைஞருக்கு இந்த விழாவை முன்னெடுப்பது தான் நாம் அவருக்கு செலுத்தும் நன்றி.
இவ்வாறு அவர் தெரி வித்தார்.
இதனைத் தொடர்ந்இவ்வாறு அவர் தெரி வித்தார்.து பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி கூறுகையில், “கலை ஞர் நூற்றாண்டு விழா நடத்துவதற்கு பாதுகாப்பாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை தேர்வு செய்திருக்கிறோம். திறந்த வெளியாக இருந்தாலும் இந்த மாதிரியான ஒரு விழா சிறப்பாக எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு இலவசமாக அடையாள அட்டை கியூ ஆர் கோடு வசதியுடன் வழங்கப்படும். பத்திரிகை யாளர்களுக்கு அனுமதி உண்டு. கலைஞர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.