இடது ஜனநாயக முன்னணி நாங்கள் மக்களோடு! மக்கள் எங்களோடு!
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சராக இரண்டாவது முறை பதவியேற்று நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு விரிவான நேர்காணல் அளித்தார். இந்தப் பிரத்யேகப் பேட்டியின்போது, நிதி நெருக்கடியை கேரள மாநிலம் எவ்வாறு சமாளித்தது, இந்தியா கூட்டணியை வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்ல காங்கிரஸ் கட்சியின் தலைமை தவறியிருப்பதாக அவர் ஏன் கருதுகிறார் என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பினராயி விஜயன் விரிவாகப் பேசினார்
தமிழில் : எம்.கிரிஜா
Hஅரசியல் விமர்சகர்களில் பலர் வேறு ஒன்றை எதிர்பார்த்திருந்தபோது, 2021இல் இரண்டாவது முறையாக இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இரண்டாவது பதவிக் காலத்தின் கடைசி ஆண்டில் நீங்கள் என்னவெல்லாம் செய்ய நினைக்கி றீர்கள்?
இடது ஜனநாயக முன்னணி யின்(எல்டிஎப்) தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதிகளில் இன்ன மும் நிறைவேற்றப்படாமல் இருப்ப வற்றை செய்து முடிப்பதிலேயே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மிகுந்த அக்கறையோடு திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றி முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதனை எங்களால் செய்து முடிக்க இயலுமென நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.
Hவிழிஞ்ஞம் துறைமுகத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பெரிய திட்டங் களை இந்த அரசு செய்து முடித்துள் ளது. எந்த திட்டத்தை செய்து முடித்த போது நீங்கள் மிகுந்த திருப்தியை அடைந்தீர்கள்?
விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்தை எடுத்துக் கொண்டீர்களேயானால், அதை கேரள மாநிலத்திற்கு மட்டுமான திட்டம் என்று நாம் கூற முடியாது. இது தேசிய அளவிலான முக்கியமானதொரு திட்டமா கும். இத்திட்டத்தை செயல்படுத்துவது என்ற முடிவை எடுத்தபோது, இதற்கு எதிராக சில சுயநலவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை நாங்கள் உணர்ந்தோம். இந்த திட்டத்தை எங்க ளால் செய்து முடிக்க முடிந்தது. இதில் எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தது என்பதை நான் குறிப்பிட வேண்டும். இத் திட்டத்திற்கான உதவிகளை ஒன்றிய அரசு அளித்த போது, மாநில அரசின் முயற்சிகளால் இது செய்து முடிக்கப் பட்டது. இத்திட்டம் தற்போது நிறைவேற் றப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், மகத்தான வளர்ச்சியின் வாய்ப்பு களுக்கான கதவுகளைத் திறந்துள்ளது.
Hதேசிய நெடுஞ்சாலை குறித்த பணி யில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?
இப்பணி கணிசமான வேகத்தில் முன்னேறி வருகிறது. வேலை முடிந்துள்ள சில பகுதிகள் போக்குவரத்திற்குத் திறந்து விடப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்திற்குள் இந்த வேலை செய்து முடிக் கப்படுமென மாநில அரசு எதிர்பார்க் கிறது. Hஒட்டுமொத்த நெடுஞ்சாலைக்கான திட்டப் பணிகளுமா? முழுவதுமல்ல, ஆனால் ஒரு பெரும் பகுதி வேலை செய்து முடிக்கப்படும். Hஒன்றிய அரசால் நிதி நெருக்கடி தொ டர்பான பிரச்சனைகளும் உள்ளன. இதனை நீங்கள் எவ்வாறு எதிர் கொள்வீர்கள்? எப்போது ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒன்றுபட்டு செயல்படுகின்றனவோ அப்போதுதான் தேசத்தில் வளர்ச்சி ஏற்படும் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, ஒன்றிய அரசு இத்தகைய கொள்கையை கடைப் பிடிக்கவில்லை. கேரள மாநிலத்தை அவர்கள் விரோதத்துடன் நடத்துகிறார் கள். ஆனால், ஒரு விஷயத்தில் நாங்கள் எங்களது கருத்து வேறுபாட்டை வெளிப் படுத்துகிறோம் என்பதால், நாங்கள் அவர்களோடு ஒத்துழைத்துச் செயல்பட மாட்டோம் என்று பொருளல்ல. இத்தகைய இறுக்கம் நிதித்துறையில் மட்டுமல்ல. கேரள மாநிலத்தின் சுகாதா ரத் துறை முன்மாதியாக உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், எங்கள் மாநிலத்தில் ஒரு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கூட கிடையாது. பிரத மர் உள்ளிட்டு மத்திய அமைச்சர்களோடு இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். எங்கள் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை ஒன்று நிறுவப்படும் என்ற எதிர் பார்ப்பு எங்களுக்கு ஏற்பட்டது. ஆனால், இது குறித்த அறிவிப்பு வெளிவருகிற போது, கேரளத்திற்கு எய்ம்ஸ் மருத்துவ மனை இல்லை. இவ்வாறு ஒரு முறை அல்ல, பலமுறை நடந்திருக்கிறது. ஆனால், நாங்கள் எங்களது முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம். H2018 பெருவெள்ளம், கோவிட், நிபா வைரஸ் நோய்த்தொற்று, வயநாடு பேரழிவு போன்ற இதுவரை கண்டிராத சவால்களை கடந்த 9 ஆண்டுகளில் நீங்கள் முதலமைச்சராக சந்தித்தீர் கள். இவற்றில் மிகப் பெரிய நெருக் கடியாக எது இருந்தது? ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு நெருக்க டியே. அவை ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டால், எல்லாமே மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. நிபா நோய்த்தொற்று ஏற்பட்டபோது, யாருமே அதுபற்றி அறிந்திருக்கவில்லை. அது இவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்று ஒருபோதும் கற்பனை செய்துகூட பார்த்திருக்கவில்லை. பெருவெள்ளம் என்பது நூற்றாண்டிலேயே மோசமான தாகும். கேரளா முழுவதையுமே அது உலுக்கியது. கோவிட் காலத்தில், ஒட்டு மொத்த உலகமுமே நடுநடுங்கியது. இந்த சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு நாங்கள் மீண்டு வந்ததற்கு கேரளத்தின் தனித்தன்மையான எங்களது மக்களின் ஒற்றுமையும், இணக்கமும்தான் காரண மாகும். நெருக்கடியான நேரத்தில் மண் ணும், மக்களும் ஒன்றிணைந்தனர். யார் எங்களுக்கு உதவினார்கள், யார் உதவ வில்லை என்பது ஒருபோதும் எங்கள் மன தில் தோன்றியதில்லை. ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், ஒட்டுமொத்த உலகமும் எங்களை பிரமிப்புடன் பார்த் துக் கொண்டிருந்தது. யார் எங்களுக்கு உதவிட வேண்டுமோ அவர்களிடமிருந்து எந்தவொரு உதவியும் வராதபோதும் எப்படி எங்களால் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடிந்தது என்று அனை வரும் ஆச்சரியப்பட்டனர். எங்களுக்கு உத விட முன்வந்தவர்களது ஆதரவையும் கூட ஒன்றிய அரசு மறுத்த சூழல்களும் கூட இருந்தன. நாங்கள் உடைந்து போக வில்லை. Hஅதனால் தான் உங்களை ‘கேப்டன்’ என்றழைக்கிறார்கள் …. (சிரிக்கிறார்) Hஎந்தவொரு நெருக்கடியிலும் ஒரு வாய்ப்பினை நீங்கள் காண்கிறீர்கள் என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படியா? (சிரித்துக் கொண்டே) இவற்றைப் பற்றி மக்கள் முடிவு செய்யட்டும். Hரயில்வே துறைக்கு கேரளா பெரும் பங்களிப்பை செய்கிறது. இருந்த போதும் கேரளத்தில் ரயில்வே துறையின் வளர்ச்சி பாதிக்கப்படு கிறதே ... எல்லா இடங்களிலும், அதிவேக ரயில் கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தகை யதொரு திட்டத்தை கே-ரயில் வாயி லாக நாங்களும் கூட திட்டமிட்டோம். சாதா ரண நிலையில், இதற்கான அனுமதியை ஒன்றிய அரசு அளித்திருக்க வேண்டும். ஆனால், இங்குள்ளவர்களில் சிலர் இதை எதிர்த்தவுடன், இத்தகைய சக்திகளின் பக்கம் ஒன்றிய அரசு சென்றது. இத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எங்களால் இயலாது என்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே இதனை நாங்கள் நிறுத்தி வைத்தோம். அதன் பின்னர், ஒரு மாற்றுத் திட்டத்தை ஈ.ஸ்ரீதரன் முன்வைத்தார். ஒன்றிய அரசின் கருத்தை அறிந்து கொள்வது அவசியம் என்று நாங்கள் கருதினோம். எனவே, இதனை அவர்கள் முன் சமர்ப்பித்தோம். எங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை. Hஅதிவேக ரயில் கேரளத்திற்குத் தேவை என்பதில் கருத்தொற்றுமை உள்ளபோதும், அதை நீங்கள் சற்று யோசிக்காமல் செயல்படுத்த முயற்சித்து விட்டீர்களோ? இது எங்களது மாநிலத்திற்கே உள்ள குறிப்பான பிரச்சனை ஆகும். திட்டத் திற்கான நிலத்தை நாங்கள் கையகப் படுத்த வேண்டியிருந்தது. மேலும், திட் டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இதனை செயல்படுத்துவ தற்கான அனுமதி மறுக்கப்படும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது மாநிலத்திற்கு ஏற்பட்ட ஓர் இழப்பாகும். தற்போது இது தேவையற்றது என சிலர் நம்புகிறார்கள். ஆனால், இதற்கான அவசியம் எப்போது எழும்? மேம்பட்ட போக்குவரத்து வசதிகளை மக்கள் எதிர் பார்க்கிறார்கள். தற்போது பயணத்தின் போது சிரமங்களை அவர்கள் எதிர் கொள்கிறார்கள். பிரத்யேகமான ஒரு அதி வேக ரயில் பாதை என்பது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். Hநிதியளிப்பதில் ஒன்றிய அரசின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, நிதியாதாரத்தைத் திரட்ட நீங்கள் புதிய முயற்சிகளுக்குத் திட்டமிடு கிறீர்களா? மாநிலத்தின் சொந்த வருவாயை - வரி மற்றும் வரி அல்லாத வருவாயை – கணிசமாக அதிகரிக்கச் செய்ய எங்க ளால் முடிந்துள்ளது. இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிச மான வளர்ச்சிக்கு வழி வகுத்தது. மாநி லத்தின் நிதி நிலைமையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தடைகள் இருந்தபோதும், பொருளாதாரத்தையும், நிதியையும் எங்களால் திறம்பட நிர் வகிக்க முடிந்துள்ளது. சராசரி தனிநபர் வருமானத்தையும் நாங்கள் வெற்றிகர மாக அதிகரிக்கச் செய்துள்ளோம். உண் மையில், மாநிலத்தின் நிலை மிகவும் நன்றாக உள்ளது. மேலும், ஒட்டுமொத்த நிலைமை தற்போது மிகவும் சாதகமாக உள்ளது. Hஇதர மாநிலங்களும், ஒன்றிய அர சும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய கமிஷனை நியமிக்கும் நடை முறையை செயல்படுத்தி வருகிறது. நிதி நெருக்கடி இருந்தபோதிலும், மற்ற மாநிலங்கள்/ஒன்றிய அரசைப் போல் இல்லாது, கேரளா ஐந்தாண்டு களுக்கு ஒரு முறை சம்பள கமி ஷனை தொடர்ந்து அமைத்து வரு கிறது. மேலும், அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் வயதை உயர்த்தவும் மாநில அரசு தயக்கம் காட்டி வரு கிறதே .. .. இது ஒரு நடைமுறைப் பிரச்சனை யாகும். அரசு வேலைகளுக்கான இத்த கைய விருப்பமானது, பணி ஓய்வு பெறும் வயதை திடீரென மாற்றுவதை சவாலா னதாக ஆக்குகிறது. இவ்வாறு செய்வது ஏமாற்றத்தையே அதிகரிக்கச் செய்யும். உலகளவில் பல தனிநபர்கள் தங்களது 60 வயது அல்லது அதனைத் தாண்டிய வயதிலும் கூட உற்பத்தித் திறன் மிக்க வர்களாக உள்ளனர். எனவே, 56 வய துக்கு மேற்பட்டவர்களை திறமையற்ற வர்கள் என்று நாம் முத்திரை குத்த இய லாது. தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, இத்தகையதொரு அரசியல் முடிவை எடுப்பது என்பது சிரமமான தாகும். அதற்குப் பதிலாக, அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்திட நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். Hதற்போதைய பினராயி அரசை விட இதற்கு முந்தைய பினராயி அரசு மேம்பட்டதாகச் செயல்பட்டு வந்ததாக மக்களில் சிலர் குறிப்பிடு கின்றனர். இந்த அரசை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பில் இருப்பவ ராக இது பற்றி தங்களது கருத்து என்ன? எனக்கு அத்தகைய கருத்து இல்லை. முந்தைய அரசின் அமைச்சரவையில் இருந்த சில முக்கியமான தலைவர்கள் தற்போதைய அரசில் இல்லாததையும், சாத்தியமான குறைபாடுகள் பற்றிய ஊகங்களையும் முன்னிறுத்தி சில பத்திரி கையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்க ளால் இத்தகைய கருத்து பெரும்பாலும் உருவாக்கப்படுகிறது. எனது கருத்துப்படி, தற்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஒரு அணியாக விஷயங்க ளை திறமையாக எங்களால் முன் னோக்கி நகர்த்த முடிந்துள்ளது. Hமனிதர்கள்-விலங்குகள் இடையே யான மோதலில் கேரள மாநிலம் சிக்கித் தவித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வைக் காண அரசு என்ன செய்கிறது? பூமி அனைவருக்கும் சொந்தமானது. மேலும், இயற்கையின் சமநிலையைப் பேணுவது அவசியமாகும். ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்காக கணிசமான நிதியை நாங்கள் ஒதுக்கி வருகிறோம். மேலும், கூடுதல் நிதியையும், உதவியை யும் கோரி ஒன்றிய அரசையும் அணுகி யுள்ளோம். Hபினராயி அரசு மூன்றாவது முறை யாக ஆட்சியமைக்கத் தவறினால் அதற்கு வனத்துறைதான் காரணம் என மக்கள் பலர் நம்புகிறார்களே … (சிரித்துக் கொண்டே) நான் அவ்வாறு நினைக்கவில்லை. சில உயிரினங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள் ளது. அதைக் கட்டுப்படுத்த நாங்கள் போ ராடி வருகிறோம். உலகளவில், வன விலங்குகளின் எண்ணிக்கையை நிர்வ கிக்க வழிமுறைகள் உள்ளன. எனினும், நமது சட்டங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து தற்போது நம்மைத் தடுக்கின்றன. இந்த உயிரி னங்களின் அதிவேக எண்ணிக்கை அதிக ரிப்பை கட்டுப்படுத்துவது அவசியமாகும். “நான் போன பிறகுதான் எனது அருமை உங்களுக்குப் புரியும்” என வீரப்பன் நகைச்சுவையாக சொன்னதாகச் சொல் லப்படுகிறது. Hஅப்படியானால் வனவிலங்குகளை நாம் கொல்ல வேண்டும் என்று அர்த்தமா? ஆம். சிறிது காலம் கழித்து, நாம் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். எனது குழந்தைப் பருவ நாட்களில் நமது கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் அச்சுறுத்தல் இருந்ததில்லை. ஆனால், தற்போது அது எல்லா இடங்களிலும் உள்ளது. காடே இல்லாத ஆலப்புழா பகுதியில் கூட, காட்டுப் பன்றிகள் பயிர்க ளை அழிப்பதாக விவசாயிகள் முறை யிடுகிறார்கள். தற்போது, பன்றிகளை கொல்வதற்கான உத்தரவிட பஞ்சா யத்து தலைவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம். கொல்லப்பட்ட பன்றியின் உடலை என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க இப்போது வனத்துறை அதிகாரிகள் இவர்களைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். இறந்த பன்றிகளின் உடல்களின் பின்னே செல்வதை நிறுத்துமாறு நான் அவர்களிடம் கூறி யுள்ளேன். வனவிலங்குகளின் எண்ணிக் கையை கட்டுப்படுத்த ஒரு சட்டம் நமக்குத் தேவையாக உள்ளது. இதற்கான சட்ட திருத்தத்தை மேற்கொள்ள நாங்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளோம். Hகேரள தொழில்நுட்ப பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தரை மாநில அரசு சமர்ப்பித்துள்ள பட்டியலில் இருந்து தேர்வு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித் துள்ளது. மாநில அரசின் நிலைபாடு சரியானது என நீங்கள் நினைக்கி றீர்களா? முன்னாள் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைபாட்டை உயர்நீதிமன்றம் எடுத்துள்ளது. எனினும், கான் தனது நிலை பாட்டில் பிடிவாதமாக இருந்தார். இவ்விஷ யத்தில் ஏற்பட்டுள்ள இத்தகைய முன்னேற் றத்தால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Hராஜேந்திர அர்லேகர் கேரள ஆளு நராக பொறுப்பேற்ற பின் ஆளுநர் அலுவலகத்தின் அணுகுமுறையில் மாற்றம் எதுவும் உள்ளதா? இவர் ஆரிப் முகம்மது கான் போலல்ல. புதிய ஆளுநர் ஒரு முதிர்ந்த நபர் ஆவார். Hமேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் கட்சிக்கு ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ன பாடங்களை கற்றுக் கொண் டது? (சிரித்துக் கொண்டே) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநி லக்குழு எந்த சிறப்பு ஆய்வையும் நடத்திட வில்லை. திரிபுராவில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு தனது அணுகுமுறையில் மக்கள் நலன் காக்கும் அரசாக இருந் தது. ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகள் பற்றி கட்சியின் அகில இந்திய தலைமை ஆய்வு செய்துள்ளது. மேலும், அந்த அறிக்கை திரிபுரா மாநில கட்சியால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திரிபுராவில் மிக நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும் அரசின் மீது எந்த புகாரோ அல்லது குற்றச்சாட்டோ இல்லை. Hமூன்றாவது முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்கு வங்க மற்றும் திரிபுரா மாநில கட்சிகளின்