articles

img

‘இடதுசாரிகளே இந்தியாவின் மாற்று சக்தி’ மேடவாக்கத்தில் கே.சாமுவேல்ராஜ்

‘இடதுசாரிகளே இந்தியாவின் மாற்று சக்தி’ மேடவாக்கத்தில் கே.சாமுவேல்ராஜ்

மக்களை பாதிக்கும் ஒன்றிய அரசின் கொள்கைகளை எடுத்துக்கூறி மக்களிடம் பிரச்சாரம் செய்கிறோம். ஒரு இடத்தில் கூட, ஒருவர் கூட பாஜகவுற்கு ஆதரவாக பேசவில்லை. மாறாக, மக்களும் பாஜக கடுமையாக விமர்சிக்கின்றனர். தாங்கள் பெரிய அளவுக்கு வளர்ந்துவிட்டதாக பாஜகவினர் பேசி வரும் நிலையில் கள எதார்த்தம் இதுதான். முதலாளித்துவம் அதன் விதிகளை அமல்படுத்தும் போது தோல்வியை தழுவும் என்பது விதி. முதலாளித்துவம் அமைப்பு ரீதியான தோல்வியை சந்தித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கணித்துள்ளது. இத்தகைய சூழலில், இடதுசாரிகளை மாற்றாக முன்னிறுத்திய இடங்களிலெல்லாம் வெற்றி பெற்றுள்ளார்கள். அதுதான் இலங்கையில் நடந்தது. இந்தியாவிலும் இடது ஜனநாயக சக்திகளையும், மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளையும் மாற்றாக முன்னிறுத்துவோம். ‘போராட்டங்களை நாம் மட்டுமே நடத்தக்கூடாது; அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி அழைத்து வர வேண்டும்’ என்பது மக்களிடம் உரையாடியதில் புரிகிறது. மக்களை தினசரி சந்தித்து முகம்பார்த்த உரையாடுகிற செயல்பாட்டை தினசரி தொடர்வோம்.  - மக்கள் கோரிக்கைகளை உரத்து முழங்குவோம்! தென்சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் பேசியதிலிருந்து...