articles

img

அதிமுக-பாஜக மக்கள் விரோத கூட்டணியை வீழ்த்துவோம்!

அதிமுக-பாஜக மக்கள் விரோத கூட்டணியை வீழ்த்துவோம்!

தாமரைப்பாக்கத்தில் பெ.சண்முகம் அதிரடி

ஏர் இந்தியா டாட்டாவுக்கு  - விபத்து மக்களுக்கு! குஜராத் விமான விபத்து இந்தியாவை மட்டு மல்ல, உலகின் பல்வேறு நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏர்இந்தியா சில ஆண்டுக ளுக்கு முன்பு வரை இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அது இப்போது டாட்டா நிறுவனத்திற்கு சொந்த மாக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நேர்மையான, சுதந்திரமான நீதி விசாரணை நடத்த வேண்டும். முருக பக்தர் மாநாடு = அரசியல் மாநாடு! தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற நோக்கத் தோடு பாஜக பல்வேறு தந்திரங்களில் ஈடுபட்டு வருகிறது. ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில், ஆன்மீக மாநாடு என்ற பெயரில், அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று வழக்கு வரும் போதெல்லாம் “இது ஆகம விதிக்கு உட்பட்டது” என இந்துத்துவ சக்தி கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இப்போது அறுபடை வீட்டை ஆகம விதிமுறைக்கு எதிராக, எந்த அடிப்படையில் மைதானத்தில் அமைக்கிறார்கள்? ஒரு வாரத்தில் என்ன மாறுதல்? பாஜகவுடன் கூட்டணி சேருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வக்பு  வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதிமுக-வினர் வாக்களித்தனர். “இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படுவார்கள், சொத்துக்கள் பறிக்கப் படும்” என்று சொல்லித்தான் வாக்களித்தனர். ஆனால் ஒரு வாரத்தில் என்ன மாறுதல் ஏற்பட்டது? அதிமுக தொண்டர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக, பாஜக என்பது சந்தர்ப்பவாத கூட்டணியாகும். கலவரம் உருவாக்கத் திட்டம்! ஏதாவது ஒரு கலவரத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் ஆட்சி யைப் பிடிக்க வேண்டும் என்ற முறையில்தான் சதித்திட்டம் தீட்டுகி றார்கள். இதைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு அரசாங்கம் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது என திட்டவட்டமாக கூறுகிறோம். அதிமுக-பாஜக மக்கள் விரோத கூட்டணியை அனைத்து தரப்பினரும் புறக்கணிப்பார்கள்!