articles

img

டிரம்ப்பின் பொருளாதாரக் கொள்கையால் எந்த தொழிலாளர்களுக்கும் நன்மை இல்லை - சஞ்சய் ராய்

டிரம்ப்பின் பொருளாதாரக் கொள்கையால் எந்த தொழிலாளர்களுக்கும் நன்மை இல்லை

“உற்பத்தித் தொழில்களை தெற்குலக நாடுகளிலிருந்து அமெரிக்கா வுக்கே திருப்பி கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறுகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்தியாவில் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக சொன்ன திட்டத்தை அறிந்து, டிரம்ப் தனது ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி யிருக்கிறார். அமெரிக்காவுக்கு இப்போது உற்பத்தித் தொழில்கள் தேவைப்படுகின்றன. ஏனென்றால், குறைந்த மதிப்புள்ள உற்பத்திப் பணிகளை மீண்டும் அமெரிக்காவுக்கு மாற்றுவதன் மூலம், வேலை கிடைக்காமல் தவிக்கும் சாதாரண அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆப்பிள் நிறுவனம் சீனாவில் 3 லட்சம் தொழி லாளர்களையும், இந்தியாவில் 60,000 தொழி லாளர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளது. இந்த உற்பத்திகள் அனைத்தும் அமெரிக்கா வுக்கு மாற்றப்பட்டால், அங்கு நேரடியாக 3.5  லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படும். ஆனால் டிரம்பின் விருப்பப்படியே வேலைகள் உருவாவதில்லை. ஏனென்றால், இத்தகைய முடிவுகளை எடுக்கும்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் லாபம் மற்றும் நட்டத்தைத்தான் முதலில் கணக்கிடும். தொழில்துறை பின்னடைவு முக்கிய விஷயம் என்னவென்றால், இரண் டாம் உலகப் போரின்போது அமெரிக்கா உலகின் உற்பத்தி மையமாக விளங்கியது. பல தசாப்தங்களாக நிதிமயமாக்கல் காரணமாக, அமெரிக்காவின் தொழில்துறையில் பின்ன டைவு ஏற்பட்டது. அதாவது அமெரிக்காவில் செய்யப்படும் உற்பத்தித் தொழில்கள் குறைந்தன அல்லது குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் நிறைந்துள்ள தெற்குலக நாடுகளுக்கு சென்றன.  அதே நேரத்தில் உலகின் நிதி மையமாக அமெரிக்கா வளர்ந்தது. அமெரிக்க நிறுவனங்கள், இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ், மலேசியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் குறைந்த ஊதியத்துக்கு தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தி அதன் மூலம் அதிக லாபங்களைப் பெற்றன. இந்த லாபம் டாலர் மூலம் வர்த்தகம் செய்யப்படும் சொத்து களில் முதலீடு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து அமெரிக்க நிதி நிறுவனங்கள் சொத்து மதிப்பு உயர்வு மூலம் பெரும் லாபம் ஈட்டின. இறக்குமதி வரியின் வரம்புகள் தற்போது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்து அவற்றின் விலைகளை உயர்த்தும் வேலையை டிரம்ப் செய்துள்ளார். ஆனால் இந்தத் திட்டம் அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அதாவது அதிக விலைக்கு விற்கப்படும் வெளிநாட்டுப் பொருட்களுக்குப் போட்டியாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யும்போதே இந்த நடவடிக்கை சாத்தியமாகும். ஆனால் இறக்குமதிக்கு மாற்றுப் பொருட்கள் இல்லாத நிலையில் அதிக வரிகளால் அமெரிக்க மக்களே அதிக பாதிப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். உற்பத்தி மாற்றத்தின் செலவு ஆப்பிள் ஐபோனைத் தயாரிக்க 12க்கும்  அதிகமான நாடுகளில் பணிகள் நடைபெறு கின்றன. ஐபோனின் மொத்த மதிப்பில் சுமார் 45 சதவிகிதப் பங்கு ஆப்பிள் நிறுவனத்திற்குச் செல்கிறது. இது ஆராய்ச்சி, மென்பொருள் மற்றும் வடிவமைப்பு மேம்பாட்டிற்கானதாகும். சுமார் 15 சதவிகிதப் பங்கு தைவானில் ஐபோனுக்கான சிப்களை உற்பத்தி செய்யும் நிறு வனங்களுக்குச் செல்கிறது. அடுத்து தென்கொரி யாவில் உள்ள ஐபோனுக்கான ஸ்கிரீன்கள் மற்றும் மெமரி சிப்புகளை உற்பத்தி செய்யும் நிறு வனங்களுக்கு சுமார் 9 சதவிகிதம் செல்கிறது. இந்தியா மற்றும் சீனா ஒரு யூனிட் அசெம்பிளி ஆலைகளுக்கு சுமார் 3 சதவிகிதம் மட்டுமே பெறுகின்றன. இது மொத்த மதிப்பில் மிகக் குறைந்த பங்காகும். இந்த வேலை முக்கியமாக ஆற்றல் மிக்க அதிக எண்ணிக்கையிலான தொழி லாளர்களையும் உள்ளடக்கியது. ஆனால் போன் உற்பத்தியின் மொத்த மதிப்பில் குறைந்த பட்ச அளவு மட்டுமே இந்நிறுவனங்களுக்குச் செல்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. மிகவும் உடல் உழைப்பை அதிகம் கொடுக்கும் தொழிலாளர்கள் மலிவாக இருக்கும் நாடு களில் இப்படித்தான் இருக்கும். இதுதான் உலக மயமாக்கல் மூலம் உருவாக்கப்பட்ட பொருளா தார நிலைமை. ஊதிய வேறுபாடுகள் இந்தியாவில் இதுபோன்ற செல்போன் அசெம்பிள் செய்யும் ஆலைகளில் பணிபுரியும் ஒரு தொழிலாளி மாதத்திற்கு 230 டாலர்களை (19 ஆயிரம் ரூபாயை) ஊதியமாகப் பெறுகிறார். இதே வேலை அமெரிக்காவின் கலிபோர்னியா போன்ற மாகாணத்திற்கு மாற்றப்பட்டால், குறைந்தபட்ச மாத ஊதியமாக 2,900 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும். இது  இந்தியத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் படும் சம்பளத்தை விட 12.6 மடங்கு அதிகம். தற்போது போன்களை அசெம்பிள் செய்ய 30  டாலர்கள் செலவாகும் நிலையில், அமெரிக்கா விற்கு மாற்றப்பட்டால் 378 டாலர்களாக உயரும். அதாவது இந்திய மதிப்பில் 2,490 ரூபாயி லிருந்து 32,000 ரூபாய் வரை அதிகரிக்கும். இந்தச் செலவு அதிகரிப்பை ஆப்பிள் நிறுவனம் ஈடுகட்டினால், ஐபோனுக்கான லாபம் $450 (38 ஆயிரத்து 400 ரூபாயிலிருந்து) இலிருந்து $102 (12 ஆயிரத்து 800 ரூபாயாக) குறையும். இல்லையெனில், லாபம் மாறாமல் இருந்தால், ஐபோனின் விலை 1,000 டாலரில் (85 ஆயிரம்) இருந்து 1,348 டாலர்களாக (1,15,008) உயரும். அதாவது 35 சதவிகிதம் வரை விலை உயரும். துன்பத்தின் சமப்படுத்தல் கடந்த 30 ஆண்டுகளாக நடந்த உற்பத்தி  மாற்றம், வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பு களை உருவாக்குவதற்காக நடக்கவில்லை. தாராளமயக் கொள்கைகளைப் பயன்படுத்தி, மூலதனம் உலகின் தெற்கு நாடுகளில் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்யும் தொழிலாளர் களின் உழைப்புச் சக்தியை அணுகியது. வேலை வாய்ப்பு என்பது மூலதனத்தைக் குவிக்கும் செயல்முறையின் ஒரு துணை விளைவு மட்டுமே. முக்கியமான கேள்வி என்னவென்றால்: அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகக் குறைவான ஊதியத்தையும், வளரும் நாடுகளில் இருப்பதுபோல அதிக வேலை நேரத்தையும் ஏற்றுக்கொள்வார்களா? இது உண்மையாக வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வேலை வாய்ப்புகளைக் கொண்டுவருவது அல்ல; மாறாக உழைப்பின் மதிப்பை, தொழிலாளர்களின் உரிமைகளை, ஊதியத்தை வலுக்கட்டாயமாகக் குறைக்கும் செயலாகும். இது வளரும் மற்றும் வளர்ந்த நாடு களில் உள்ள தொழிலாளர்களின் துயரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது. இத்தகைய பின்ன ணியில் டிரம்ப் திட்டம் செயல்வடிவம் பெற்றால், அமெரிக்கத் தொழிலாளர்கள் மிகப் பெரிய ஊதிய வெட்டுக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில், தெற்குலக நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் தங்கள் வேலையை முழுமையாக இழந்துவிடுவார்கள். பீப்பிள்ஸ் டெமாக்ராசி (ஜூன் 2) தமிழில் சுருக்கம் : சேது சிவன்