மாற்றியும் எழுதப்படும் வரலாறு - எஸ்.வி.வேணுகோபாலன்
தரைமட்டம் ஆக்கினீர்கள் உங்கள் துல்லியத் தாக்குதலில் வீடற்றவர்கள் ஆயினர், முதலில் பின்னர் கண்ணெதிரே கணவன் அல்லது மனைவி குழந்தைகள் உயிரற்று வீழ உறவற்றுப் போயினர் அழுதழுது அழுது கண்ணீருமற்று வறண்டும் போயினர் இப்போது கையேந்தி நிற்கின்றனர் சிறார்கள் ஈத் பண்டிகையின் வரவை நாற்பது பேரைக் கொன்று அறிவித்தீர்கள் பண்டிகையின் தொழுகையை மசூதியில் அல்ல வீடோ பள்ளியோ பள்ளிவாசலோ தகர்த்தெறியப்பட்டிருக்கும் குப்பை மேட்டில் மண்டியிட்டு நிகழ்த்தியாயிற்று. ஒரு திருநாளின் குர்பானி உணவு இனிப்புக் கொண்டாட்டம் குழந்தைகளுக்கான பரிசுப்பொருள்கள் யாவும் மறக்கடிக்கப்பட்ட காஸா வீதியில் விலை கொடுத்து வாங்க முடியாத உயரத்தில் உணவுப் பொருட்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் தட்டுகள் கலயங்கள் இடிபட்டு உடைபட்டுப் போராடிக் கூவுகின்றன உணவு கொடு உணவு கொடு பசி நீக்கு கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர் குழந்தைகள் உலகின் மிகப் பெரிய திறந்த வெளி சிறைச்சாலையை எழுப்பினீர்கள் எஜமானர்களே, இப்போது உலகின் ஆகப் பெரிய பிச்சைக்கார மடமாகவும் உருப்பெற வைக்கிறீர்கள்... நீங்கள் நன்றாக(!) இருப்பீர்கள் உலகக் கனவான்களே! அன்றாடம் காலையில் வீடு வீடாக செய்தித் தாள் வீசுவது போல் நடக்கிறது உங்கள் குண்டு வீச்சு உங்கள் ஆயுதங்களுக்கும் அலுப்பு ஏற்பட்டு விட இப்போது பட்டினியால் கொல்ல ஆரம்பிக்கிறீர்கள் குழந்தைகளது கண்களில் தெறிக்கும் பசியில் இளைப்பாறுதல் அடையும் உங்கள் குரூரம் எப்போதும் பேசப்படும் வரலாற்றில் ! வரலாறு மாற்றியும் எழுதப்படும் துரைமார்களே!