திருவள்ளுவர் சனாதனப் புலவரா?
பாஜகவுக்காக திருவள்ளுவரைக் களவாடும் முயற்சியில் தமிழ் நாடு ஆளுநர் தீவிரமாக இறங்கி யிருக்கிறார். அவர் வைகாசி அனுஷத்தில் பிறந்த வர் எனக்கூறிக்கொண்டு பிறந்தநாள் கொண்டாடி யிருக்கிறார், “பாரத சனாதன மரபின் மாபெரும் தெய்வப் புலவர்” என்று இட்டுக்கட்டியிருக்கிறார். அது என்ன சனாதன மரபு? ஆதிஅந்தம் இல் லாதது என்பார்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட தற்கு எப்படி துவக்கம் இல்லாமல் இருக்கும்? இதற்கு மட்டுமல்ல, அதில் வேத-யாக மரபும் வரு ணாசிரமம் எனும் சாதியமும் உண்டா, இல்லையா எனும் கேள்விக்கும் பொதுவாக பதில் சொல்ல மாட்டார்கள். ஆனால் சங்கி ஆளுநர் மறைமுகமாக ஒரு பதில் சொல்லியிருக்கிறார். அது: “திருவள்ளுவர் சனாதன தர்மத்தின் தலை சிறந்த புலவர்களில் ஒருவர், திருக்குறள் தர்ம சாஸ்திரம் மற்றும் நீதி சாஸ்தி ரத்தின் நித்திய சங்கமம்”. (ஆளுநரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம்).
சனாதனத்துக்கு நேர் எதிரானது
தர்ம சாஸ்திரம்-நீதி சாஸ்திரம் என்பவை மனு தர்ம சாஸ்திரம் போன்றவையே.அவற்றில் மண்டிக் கிடப்பது வேத-யாக மரபே, வருணாசிரமமே. அதாவது,பிறப்பின் அடிப்படையில் பேதம் பார்த்து ஒடுக்குவது. அதையே சனாதன மரபு-தர்மம் என்கிறார்கள் என்பது இப்படியாக நிச்சயமாகிறது. ஆனால் வள்ளுவரின் குறள் இந்த சனா தனத்திற்கு நேர் எதிரானது. “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்/ உயிர்செகுத்து உண்ணாமை நன்று” என்றார். அக்னியில் நெய் சொரிந்து ஆயிரம் வேள்வி களைச் செய்வதைவிட ஓர் உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நல்லது என்றார். இது வேதமதத்தின் அடிமடியில் கை வைப்பது. அதன் அடிப்படைச் சடங்கு வேள்வி எனும் யாகம்; அதில் அக்காலத்தில் உயிர்ப்பலியும் தரப்பட்டது. அத்தகைய யாகத்தையே ஒதுக்கித் தள்ளினார். அவர் எப்படி சனாதனி ஆவார்?
பிறப்பில் வருவதல்ல பேதம்
சனாதன தர்மத்தின் மற்றொரு அடிப்படைக் கூறு பிறப்பில் பேதம் பார்க்கும் வருணஅதர்மம். இதை மறுக்கும் வகையில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா/ செய்தொழில் வேற்று மை யான்” என்று ஒரு போடு போட்டார். பேதமா னது பிறப்பில் வருவதல்ல , தரப்படும் அல்லது தரப்படாத வாய்ப்பில் வருவது என்றார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமூகநீதிக் குரல் எழுப்பினார். வருணவாதிகளுக்கு அது நாரா சம். அவர் எப்படி சனாதனி ஆவார்? மனிதர்களையே பிறப்பின் அடிப்படையில் நால் வருணத்தவராக, பஞ்சமராகப் பிரித்தவர் கள் சனாதனிகள். ஆனால் வள்ளுவப் பெருந் தகையோ உயிர்களிடம் சமத்துவம் காட்டுக என்றார்.
அறங்களில் தலையாய அறம்
“பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்/ தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்று அறி வித்தார். கிடைத்ததைப் பகிர்ந்துகொடுத்து, தானும் உண்டு, பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூ லார் கூறியஅறங்களில் எல்லாம் தலையாயது என்றார். கிடைத்த உணவை பகிர்ந்து உண்பது ஆதிப் பொதுவுடமைச் சமுதாய நெறி.அதன் எச்சம் அல்லது தாக்கம் இதில் வெளிப்படுகிறது. ஆனால் அந்த நெறியை எல்லாம் மறந்து, துறந்து சூத்தி ரர்களையும் பஞ்சமர்களையும் அனைத்து வரு ணத்துப் பெண்களையும் மிருகங்கள் போல் பாவித்து நடத்தியது மனுதர்மம். அது எங்கே, வள்ளுவரின் சமநீதி எங்கே? எத்தனை உயர ஏணி வைத்தாலும் எட்டுமோ! அவர் எப்படி சனாதனி ஆவார்?
சித்தாந்த எதிரி
தமிழ்ச் சமுதாயத்திற்குள் ஊடுருவப் பிடி கிடைக்காத நிலையில் வள்ளுவரை சனாதனி எனச் சொல்லி நுழையப் பார்க்கிறார்கள் பாஜக வினர். ஆனால் அவர் இவர்களது சித்தாந்த எதிரி. இவர்கள் வள்ளுவரைத் தங்களவர் எனச் சொல்லச் சொல்ல அவரது சிந்தனைகளுக்கும் இவர்களது செயல்களுக்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பது மேலும் மேலும் தெளிவாகிறது. தானே ஒரு வலை விரித்து, அதில் தானே வந்து சிக்கிக் கொள்கிறார் சங்கி ஆளுநர். “திருவள்ளுவரின் சிறந்த பக்தர்” பிரதமர் மோடி என்கிறார். “அவருடைய நிர்வாகக் கொள்கைகள், கல்வி, பொருளாதாரம் திருக்குறள் ஞானத்தால் ஈர்க்கப்பட்டுள்ளன. அவர் தமிழ்மொழியின் பெரிய அபிமானி” என்று ஓங்கி அடிக்கிறார்.
அசமத்துவம் வளர்க்கும் மோடி
பகுத்து உண்பது பற்றிப் பேசினார் வள்ளுவர் என்பதைக் கண்டோம். மோடியோ கோடானகோடி இந்திய மக்களிடம் ஜிஎஸ்டி வரி மூலம் சுருட்டி, அதை அதானிகள்- அம்பானிகள் போன்ற சில பெரு முதலாளிகளுக்குத் தாராளமாய் தாரை வார்க்கிறார். அவர் சமத்துவம் வேண்டினார், இவர் கொடூர அசமத்துவம் வளர்க்கிறார். அரசு நிர்வாகத்தில் அனைத்துப் பகுதியினருக்கும் வாய்ப்பு வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கச் சொன்னால் அதை 2027க்கு தள்ளிப் போட்டிருக்கிறார்.எப்படி முடித்து, எப்போது முடிவுகள் அறிவிப்பார் என்று எவருக்கும் தெரியாது!
பிறப்பைவிட கல்வியே சிறப்பு
மோடியின் கல்விக் கொள் கையில் வள்ளுவரின் ஈர்ப்பு என்றார் பாருங்கள், அது அவ லச்சுவை கலந்த நகைச்சுவை! “மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்/ கற்றார் அனைத்திலர் பாடு” என்பது வள்ளுவர் வாக்கு. கல்லாதவர் மேல் குலத்தில் பிறந்தவராயினும் கீழ்க் குலத்தில் பிறந்த கற்றவருக்குச் சமமாக மாட்டார் என்றார். ஒரே குறளில் கல்வியை உயர்த்தி, சனாதனத் தின் வருணக் கோட்பாட்டை ஒரு சாத்து சாத்தினார். இப்படி கல்வியே பிறப்பை விடச் சிறப்பு என்றார்.
தமிழ் அபிமானி எனும் மே(ச)டி
ஆனால், மோடியின் தேசியக் கல்விக் கொள்கையோ பிள்ளைகளின் கல்வியைக் கெடுக்க என்னென்ன செய்ய முடியுமோ அவ்வ ளவும் செய்கிறது. 3, 5, 8ஆம்வகுப்புகளுக்கும் பொ துத் தேர்வுகள், பள்ளி-கல்லூரிகளுக்கு மூடுவிழாக் கள், கல்வி நிறுவனங்களைத் தனியார்மயமாக்கு தல் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. மோடியைத் தமிழ் அபிமானி என்கிறாரே, அவரது மொழிக் கொள்கை என்ன? மும்மொழிக் கொள்கை- அதில் இரண்டு இந்தி யாவில் பிறந்திருக்க வேண்டும்.இதன் நடை முறைப் பொருள் இந்தியும், சமஸ்கிருதமும் கட்டா யம். “கல்வியின் அனைத்து மட்டங்களிலும் சமஸ்கிருதம் கற்றுத் தர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்” என்கிறது அந்தக் கொள்கை. மோடியின் வாய்தான் தமிழ் புகழ்பாடும்-அதுவும் தமிழ்நாட்டுக்கு வந்தால். ஆனால் கைகளோ இந்தி, சமஸ்கிருதத்திற்கு ஆவனவெல்லாம் செய்யும். அவரது அரசின் அனைத்து திட்டங்களுக்கும் அந்த மொழிகளில் தான் பெயர்கள். அவற்றை உச்சரிக்காமல் நீங்கள் தப்ப முடியாது என்பதில் அவருக்கு குரூர மகிழ்ச்சி. இந்த மோடி தமிழின் அபிமானி என்பது மகா மோசடி.
குறளுக்கும் ஆபத்து
“திருக்குறளை அதன் முழு ஆன்மிக மகத்து வத்தில் மீட்டெடுக்க வேண்டும்” என்று முத்தாய்ப்பு கொடுத்திருக்கிறார் சங்கி ஆளுநர். இதன் அர்த்தம், தப்பித்தவறி தமிழ்நாட்டின் ஆட்சியில் பாஜக இடம் பெற்றால் திருக்குறளை சிதைப்பார்கள் என்ப தாகும். இவர்களது விருப்பத்திற்கு ஏற்ப உரை எழுதி பாடப்புத்தகங்களில் திணிப்பார்கள், பல குறள்க ளை இடைச்செருகல்கள் எனச் சொல்லிக் கழிப்பார் கள்,மொத்தத்தில் அதன் சனாதன எதிர்ப்பு சாரத்தை அழிப்பார்கள். எந்தக் கட்சி துணையோடு, எந்த வேடம் போட்டு வந்தாலும் பாஜகவை ஆட்சிக்கட்டிலின் அருகே கூட விடக்கூடாது. விட்டால், உழைப்பாளி மக்க ளின் நியாயக் குரலுக்கு மட்டுமல்ல, வள்ளுவரின் திருக்குறளுக்கும் பேராபத்து.