விபத்தில் அரசியலும் விபத்து அரசியலும்!
அகமதாபாத் விமான விபத்து குறித்து நெஞ்சம் பதறப் பதற ஒவ்வொரு காட்சியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டி ருக்கிறது. மருத்துவக் கல்லூரி விடுதி யின் மேல் மோதி எரிந்துகொண்டிருக் கும் விமானத்திலிருந்து உயிருடன், இறந்து, எரிந்த நிலையில் மனித உடல் கள் விழுந்துகொண்டிருக்கும் காட்சி கள் அவலத்தின் உச்சம். கருகிய உடல்கள் தீயணைப்பு வீரர்கள் பீச்சிய தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பாதி பாதியாய் கிடக்கும் கொடூரம். ஒரு விபத்து இத்தனை கோரமாக நடந்திருக்கக் கூடாது.
விமானத்தின் பின்னணி
ஒரு முறை பெட்ரோல் ஏற்றினால் 13,530 கிலோமீட்டர் இடைநிறுத்தம் இல்லாமல் ஓடக்கூடிய போயிங் 787-8 விமானத்தை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜனவரி 28, 2014 அன்று விலைக்கு வாங்கியது. வாங்கியது முதல் 8000 பயணங்களில் இந்த விமானம் மேலெழும்பிக் கீழி றங்கியிருக்கிறது. கடந்த ஒரு வருடம் மட்டுமே 700 பயணங்களை இந்த விமானம் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது. மொத்தம் 41,000 மணி நேரங்கள் விண்ணில் பறந்து சேவையாற்றி 11.5 வருடங்கள் இடைநிறுத்தம் இல்லாமல் பறந்திருக்கிறது இந்த ட்ரீம் லைனர். ஆனால் தன் இயக்கத்தை அது நிறுத்திய போது 270 மனித வாழ்க்கை தொலைந்து போனது. இது தனிமனித தவறா, இயந்திரத் தவறா, நிறுவன அலட்சியத் தவறா என்பது இனிதான் தெரியும்.
எரிந்துருகிப் போன கனவுகள்
பிரதிக் ஜோஷி கடந்த ஆறு வரு டங்களாக லண்டனில் வசித்து வந்த மென்பொருள் நிபுணர். அவரது மனைவி மருத்துவ நிபுணரான டாக்டர் கோமி வியாஸும் தனது மூன்று குழந் தைகளுடன் விமானத்தில் எடுத்துக் கொண்ட செல்பி படம். தனது மகளைக் காணச் சென்று விமான விபத்தில் உயிர் நீத்த குஜராத் முன்னாள் முதல மைச்சர் விஜய் ரூபானியை கடைசியாக செல்ஃபி எடுத்தசகோதரி ஒருவரின் புகைப்படம். இந்திய சுற்றுலாவை முடித்து லண்டனுக்கு மகிழ்ச்சியுடன் திரும்ப இருந்த பிரிட்டிஷ் சகோதரர் கள் இருவரின் சிறு காணொலி. பக்ரீத் பெருநாள் கொண்டாடிவிட்டு லண்டன் திரும்பிய ஐந்து பேர் கொண்ட குடும்பத்தின் புகைப்படம், விமானம் ஏறும் போது பணிப்பெண்கள் எடுத்ததாக வெளியாகும் வீடியோ, விமானம் கீழே வந்து விழுந்த இடமான மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் பல கனவுகளுடன் படித்துக் கொண்டிருந்த இளம் மருத்துவர்கள் பலி, சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டு கள் மீதம் உணவுகளுடன் அப்படியே கிடக்கும் புகைப்படங்கள். தனது பாட்டி யின் பிறந்த நாளுக்காக வந்து லண்டன் திரும்பிய இரு சகோதரிகளின் புகைப் படம் என இவைகளைப் பார்க்கப் பார்க்க இதயம் கனத்துப் போகிறது. இன்னும் இருநூறு கதைகள், கனவுகள், எதிர்காலம், குடும்பங்களில் ஆதாரம் எல்லாம் எரிந்துருகிப் போனது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட, வாழ்க்கை யில் எல்லாம் கிடைத்தது என ஆசையு டன் விமானம் ஏறிய எத்தனையோ வாழ்க்கைகள் சில நொடிகளில் வெடி த்துச் சிதறியது! இரண்டு தினங்களுக்கு முன்பு வரை போர் என்றால் என்ன வென்று அறியாமல் கிளர்ந்து கொண்டி ருந்த சமூக ஊடக நண்பர்கள் “அய்யோ கடவுளே! உனக்கு இதயம் கிடையாதா? சாவே! உனக்கு சாவே வராதா?” என நெக்குருகிப் பதிவிட்டு வருகின்றனர்.
விபத்தில் அரசியல்
நல்வாய்ப்பாக இந்த நிகழ்வில் அவசர வெளியேற்ற ஜன்னல் அருகில் அமர்ந்திருந்து தப்பித்தவர் பெயர் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்றானது. அதே விமானத்தைத் டிராஃபிக் காரண மாக தவறவிட்டு அதனால் உயிர்பிழைத்த சகோதரியும் இந்து. ஒருவேளை இந்த இருவரில் யாருடைய பெயர் முஸ்லிம் என்றாலும் சங்கிகள் இதை இந்த நேரத்தில் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருப்பார்கள். உதாரணமாக ஜெயசந்திர ஹஷ்மி என்ற எழுத்தாளர் தனது முகநூல் தளத் தில் கீழ்கண்ட பதிவினைப் பதிந்துள் ளார்: “அர்னாப் கோஸ்வாமி நேற்று அக மதாபாத் விமான விபத்து குறித்த விவா தத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார்: ‘ஏர் இந்தியா வானூர்திகளை பராமரிப்பு செய்வது ஒரு இஸ்லாமிய நாடான துருக்கியைச் சேர்ந்த நிறுவனம். இந்தி யாவின் எதிரி நாடும், பாகிஸ்தானின் நட்பு நாடுமான துருக்கிய நிறுவனத்தில் துருக்கிய தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி பராமரிப்பு செய்யப்படுவதால் தான் இந்த விபத்து நடந்திருக்கிறதா?’” “நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய ஒரு விபத்திலும் கூட மதத்தைப் புகுத்தி அதன் மூலம் பிரிவினையை ஏற்படுத்தி ஆதாயம் தேடப் பார்ப்பவனைவிட கேவ லமான ஒருவன் இருக்க முடியுமா? எந்த முகாந்திரமுமே இல்லாத இடத்தில் கூட இப்படி இஸ்லாமிய வெறுப்பைப் புகுத்திப் பிரிவினையைத் தூண்டும் ஒரு ஆள், புல்வாமா போன்ற தாக்குதலில் எத்தனை பொய்யைப் பரப்பி என் னென்ன கதைகளைக் கட்டி விற்றிருப் பான் என்று யோசித்துப் பாருங்கள்.”
உண்மையாக துருக்கி நிறுவனமா?
ஆம், விமானங்களையும் விமான நிலையங்களையும் விமானத்தில் ஏற்றப் படும் சுமைகளையும் பராமரிப்பதில் சர்வதேச அளவில் புகழ்பெற்று, நீண்ட அனுபவமும் கொண்ட செலிபி என்னும் நிறுவனம் இந்தியாவில் ஒன்பது விமான நிலையங்களிலும் ஒப்பந்த அடிப்படை யில் பணிகளைச் செய்து வந்தது. அவற்றில் அகமதாபாத் சர்தார் வல்ல பாய் படேல் சர்வதேச விமான நிலைய மும் ஒன்று. இங்கிருந்து புறப்பட்ட விமா னம்தான் வியாழனன்று கீழே விழுந்து சிதறியது. கடந்த 1958-இல் துருக்கியின் செலிபி ஏவியேஷன் நிறுவனம் நிறுவப்பட்டது. உலக அளவில் சுமார் ஆறு நாடுகளில் உள்ள சுமார் 70 விமான நிலையங்க ளின் கிரவுண்ட் ஹேண்ட்லிங் பணியை இந்நிறுவனம் கவனித்து வருகிறது.
ஆனால் உண்மை என்ன?
செலிபி ஏவியேஷன் நிறுவனத்துடன் 2008-இல் போடப்பட்ட ஒப்பந்தம் 2032 வரையிலானது. ஆனால் கடந்த மே மாதம் 15 ஆம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, செலிபி ஏவியேஷன் நிறுவனம் வெளி யேற்றப்பட்டது. ஒப்பந்தக் காலம் முடிவதற்கு ஏழாண்டுக்கும் முன்னரே வெளியேற்றப்பட்டதற்குக் காரணம் என்ன? புல்வாமாவில் நடைபெற்ற தாக்கு தலை ஒட்டி ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து துருக்கி மீது சங்பரிவார் கும்பலுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வு. அதை லாப மாக்க அதானி போட்ட திட்டம். அந்நிறுவனம் பார்த்து வந்த விமான-விமான நிலையங்கள் மற்றும் விமானத்தில் ஏற்றப்படும் சரக்குகளின் எடைப் பராமரிப்பு பணிகளை ஏஏஎச்எல் (AAHL )என்னும் நிறுவனத்திடம் அதே நாளில் ஒப்படைத்தது மோடி அரசு. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது 2019 ஆம் ஆண்டு. அதாவது 67 ஆண்டுகால அனுபவம் உள்ள நிறுவனத்தை விரட்டி விட்டு 6 ஆண்டுகால அனுபவமற்ற நிறு வனத்திற்கு அனுமதி. அகமதாபாத் விமான நிலை யத்தைக் கடந்த மே-15 முதல் பராமரித்து வருவது இந்த நிறுவனம்தான்.ஏஏஎச்எல் என்பதன் விரிவாக்கம் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் லிமிடெட் (‘Adani Airport Holding Limited.’) அதாவது விமானம் டாடாவுக்கு, பராமரிப்பு அதானிக்கு! சொல்லுங்கள், இப்போது யாரிடம் விசாரணை நடத்த வேண்டும்? அதிக எடையின் கார ணமாக லேண்டிங் ஆவதில் பிரச்சனை இருப்பதாக வருகின்ற தகவல்கள் உண் மையா? இது குறித்து அர்னாப் கோஸ்வாமிகள் வாய் திறப்பார்களா?
வெட்கமற்றவர்கள்
ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கப் பட்டது சுதந்திரத்துக்கு முந்தைய இந்தி யாவில். 1932-இல் ஜே.ஆர்.டி. டாட்டா வால் டாட்டா ஏர்லைன்ஸாகத் தொடங்கப்பட்டு, தேசம் சுதந்திரம் பெற்ற பின் 1953 ஆம் ஆண்டு நாட்டு டமையாக்கப்பட்டது. ஏர் இந்தியாவாக மாறி நாட்டின் அடையாளமாகவே பொ துத்துறையாக இருந்தது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு மோடி அரசாங்கம் இதை மீண்டும் டாடாவிடம் 2.4 பில்லி யன் டாலர் விலைக்கு விற்றது. இந்தியாவுக்கு என தனியான விமான போக்குவரத்து இல்லை. அதனை விற்றுத் தின்றாகிவிட்டது. ஆனால் விமானத் துறைக்கு என அமைச்சர் இருக்கிறார். அவரின் பெயர் ராம்மோ கன் நாயுடு. இந்தியாவுக்கு என விமா னமே இல்லாத நிலையில் அவரின் வேலை என்ன இருக்கும்? தனியார் விமானங்களின் கட்டணங்களை, அதன் தரத்தைக் கண்காணிப்பது தானே. ஆனால் அதற்கெல்லாம் இவர்களுக்கு ஏது நேரம்? அதைவிட கொடுமை விமான விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்த போது ராம் மோகன் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவேற்றி னார். அதுவும் பின்னணி இசையைக் கொண்ட ஒரு வீடியோ. கொடிய துயரச் சம்பவத்தில் ரீல்ஸ் பதிவேற்றிய ராம் மோகன் நாயுடுவுக்கு நாடு முழுவதும் கண்டனம் குவிகிறது. ஆனால் மேலும் கொடுமை, அங்கே நடந்த மோடியின் போட்டோ ஷூட். “இந்த மனிதரிடம் அடிப்படையாகவே ஏதோ ஒரு பயங்கரச் சிக்கல் இருக்கி றது. ஒரு பெருந்துயரம் நிகழும் நேரத் தில் இது போன்ற அளவுக்கு ஆங்கிள் வைத்து தன்னைப் புகைப்படம் எடுப்ப தற்கு முக்கியத்துவம் யார் கொடுப்பார் கள்? மோடி அவர்களே அவமானம் அடைந்தது போல் ஒரு முறையாவது, நடிக்கவாவது செய்யுங்கள்” என்று திரு வனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பதிவிட்டிருப்பது எத்தனை நிஜம். உண்மைகள் எப்போதும் அடங்கிக் கிடப்பதில்லை. அவை மேலெழும். பொய்கள் தீய்ந்து உதிரும். இவை தானாக நிகழ்வதில்லை. மக்கள் போ ராட்டங்களே நிகழ்த்தும். விபத்திலும் அரசியல் செய்வோர் முகத்தில் உமிழ்வோம்!