விவசாயிகளுக்கு சிபில் பார்த்து கடன் வழங்கும் உத்தரவை உடனே திரும்பப் பெறுக
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 10 - கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு சிபில் பார்த்து தான் வழங்க வேண்டுமென்ற புதிய உத்த ரவை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் தங்களின் தேவைகளுக்காக பயிர்கடன், கால்நடை வாங்குவதற்கான கடன், கால்நடை பராம ரிப்பிற்கான கடன், கோழிப் பண்ணைக் கான கடன் என பெற்று வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகளில் பெரும்பகுதியினர் குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்திவிட்டு புதிய கடன்களை பெற்று வருகின்றனர். பயிர் கடனை பொ றுத்தவரை மாநிலம் முழுவதும் சாகுபடி நிலத்திற்கான ஆவணங்களை (பட்டா, சிட்டா) பெற்றுக் கொண்டு மிக குறைவாகத் தான் கடன் வழங்கப்படுகிறது. நகை யீட்டின் படி தான் பெரும்பகுதி பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கால்நடை பராமரிப்பு மற்றும் புதிய பால் கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன்களும், கால்நடைகளை வைத்து தான் வழங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் மாநிலப் பதிவாளர் க.நத்தக்குமார் ஐ.ஏ.எஸ் 26.5.2025 இல் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கான உத்தரவில், “இனிமேல் விவசாயிகளுக்கு எந்த வகையான கடன் வழங்க வேண்டு மென்றாலும் சிபில் ரிப்போர்ட் அடிப்படை யில் மட்டுமே கடன் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளதை உடனே திரும்பப் பெற வேண்டும். வேளாண் உற்பத்தி செலவுகளும், மூலதன செலவுகளும் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பயிர்கடன் மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்கு தேவை யான முழு கடனையும் கூட்டுறவு வங்கிகள் வழங்காத நிலையில், விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறும் நிலை உள்ளது. இச்சூழலில், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற வரும் விவசாயிகளுக்கு இதுபோன்ற நிபந்தனை களை விதித்திருப்பது, இனிமேல் எந்த விவ சாயியும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முடியாத நிலையை ஏற்படுத்தும். தங்க ளின் தேவைகளுக்காக கந்துவட்டிக்காரர்க ளிடம் கடன் வாங்கும் சூழல் உருவாகும். எனவே, மாநில முதலமைச்சர் தலை யிட்டு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு சிபில் ரிப்போர்ட் கேட்கும் உத்தரவை ரத்து செய்திட வேண்டும். மேலும் கால்நடை பராமரிப்பு மற்றும் பயிர் கடன் உள்ளிட்ட இரண்டு கடன்களை பெறும் விவசாயிகளுக்கு 3 லட்சத்திற்குள் தான் கடன் வழங்க வேண்டும் என்ற நிபந்த னையையும் தளர்த்திட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.