articles

img

ஜனநாயகம் காக்க களத்தில் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் - மு.க.ஸ்டாலின்

ஜனநாயகம் காக்க களத்தில் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள்

திராவிட இயக்கத்திற்கும் பொதுவுடமை இயக்கத்திற்கும் இடையே இருப்பது கொள்கை நட்பு. சமூகத்திற்குத் தேவையான கொள்கை வலுவாக இருப்பதால் நட்பும் வலு வாக இருக்கிறது. “எல்லோருக்கும் எல்லாம்” என்ற லட்சியத்தின் இரு முகங்களாக திராவிட இயக்கங்களும், பொதுவுடமை இயக்கங் களும் திகழ்கின்றன. கருப்பும் சிவப்பும் இணைந்துதான் திமுக.  எங்களின் பாதி நீங்கள்தான். கொள்கை உறவின் ஆழத்தைத் தலைமுறை கடந்தும் எடுத்து செல்ல வேண்டும். கொள்கை முரண்கள் எதிரி களுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது.

வரலாற்று நினைவுச் சின்னம்

1950ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி  சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்குத் தந்தை பெரி யாரும், அறிஞர் அண்ணாவும் கடும் கண்ட னம் தெரிவித்தனர்.  அந்த வரலாற்றைப் போற்றும் விதமாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மனு அளித்தார். அவர் கேட்ட எதை யும் நாம் தட்டிக் கழித்ததில்லை. “முடியாது” என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மாநாட்டிலும் கோரிக்கை வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக ஒரு மணிமண்டபம் அமைக்கப்படும். அதற்கான உத்தரவை அதிகாரிகளிடம் தொலைபேசியில் வழங்கியிருக்கிறேன். வழங்கி விட்டுத்தான் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறேன். நாளை யில் இருந்து இந்தப் பணி தொடங்கப்படுகிறது.

வரலாற்று உறவுகள்

1951இல் நடந்த திமுக முதல் மாநாட்டிற்குப் பேரறிஞர் அண்ணா, ஜீவா அவர்களை அழைத் தார். பொதுவுடமை முகாமாக இருக்க வேண்டும் என்று அண்ணா விரும்பினார்.  நாடு பெரிய பிரச்சினையை எதிர்நோக்கி யுள்ள நிலையில் அனைவரும் ஒரே மேடையில் கூடியுள்ளோம். நம்முடைய ஒற்றுமைதான் சில ரின் கண்ணை உறுத்திக் கொண்டிருக்கிறது. எவ்வளவு சதி செய்தாலும், குழப்பம் ஏற்படுத்தி னாலும், போலி செய்திகளைப் பரப்பினாலும், நாம் ஒற்றுமையாக இருப்பதால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள்.

எதிர்க்கட்சியின்  வெற்று அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசா மிக்குக் கம்யூனிஸ்டுகள் மீது திடீர் பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அடிமைத் தனத்தைப் பற்றி பழனிசாமி பேசலாமா? அதற்கு அவருக்குத் தகுதி இல்லை. எங்களைப் பொறுத்தவரை யாரும் யாருக்கும் அடிமை இல்லை. கொள்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனி சாமி பேசுகிறார். அதற்காகக் கூட்டணித் தலை வர்களைக் கொச்சைப்படுத்திப் பேசக்கூடாது. கம்யூனிஸ்ட் தலைவர்களை விட, திருமா வளவனை விட, எடப்பாடி என்ன தியாகம் செய்து விட்டார்? அதை நிரூபிக்க முடியுமா? ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிக் கொண்டிருப்பது இந்த இயக்கங்கள்தான். மக்கள் பிரச்சினையைத் தீர்க்க நினைக்கா மல், கூட்டணித் தலைவர்கள் மீது புழுதி வாரித் தூற்றுகிறார்கள். கூட்டணியைக் களங்கப் படுத்த வேண்டும் என்ற மலிவான சிந்தனை யுடன் இருக்கிறார்கள்.

ஜனநாயக கூட்டணியின் வலிமை

கூட்டணியில் இருந்தாலும் நியாயமான கோரிக்கைகளை வைக்கக் கம்யூனிஸ்டுகள் தவறியதில்லை. நாங்களும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு தான் வருகிறோம். இதுதான் ஜனநாயகம். அத னால்தான் தோழமைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை சாதியவாதம், வகுப்புவாதம், எதேச்சதிகாரம், மேலாதிக்கம் ஆகியவற்றை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும். ஏனென் றால் எங்கள் லட்சியம் பெரிது. அந்த லட்சி யத்திற்காகத்தான் எல்லோரும் போராடிவருகிறோம்.  ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் நம்மை இணைத்திருக்கிறது. ஜனநாயகத்திற்கு எதி ரானவர்கள் நம்முடைய கூட்டணியை விரும்ப வில்லை. அதனால் நமக்கிடையே பிளவு ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவர்களுடைய சதித்திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது.அதனால்தான் “வெல்க ஜனநாயகம் எழுச்சி மாநாடு” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஜனநாயகம்தான் இறுதியில் வெல்லும். அதை வெல்ல வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது.

பொம்மையாக மாறிவிட்டது தேர்தல் ஆணையம்

ஆனால் ஜனநாயகத்திற்கு அடிப்படை யான தேர்தலையே பாஜக அரசு கேலிக் கூத்தாக மாற்றி விட்டது. தேர்தல் ஆணை யத்தைத் தங்களது கிளை அமைப்பாகப் பாஜக அரசு மாற்றி விட்டது. சாவி கொடுத் தால் ஆடும் பொம்மையாகத் தேர்தல் ஆணை யத்தை மாற்றி விட்டார்கள். தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் தான் சதி செய்கிறார்கள் என்று பார்த்தால், வாக்காளர் பட்டியலிலும் சதி செய்யத் தொடங்கி விட்டார்கள். மக்களாட்சியைக் காக்க இந்தச் சதியை அம்பலப்படுத்தியிருக்கக் கூடிய ராகுல் காந்திக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு முறை யான பதிலளிக்காமல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையம் சொல்லி யுள்ளது. தேர்தலுக்கு அடிப்படை ஆதாரமே வாக்காளர் பட்டியல்தான். சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு அடிப்படையான வாக்காளர் பட்டியலை நேர்மையாகத் தயாரிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள கடமையில் இருந்து தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநி லங்களில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கு வதற்கு முன்பாகச் சுதந்திரமாக நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரி பார்க்க வேண்டும்.

மத்திய அரசின் அந்நிய கொள்கைகள்

பாஜக ஆட்சி அமைந்தால் என்ன நடக்கும்  என்று சொன்னதெல்லாம் தற்போதும் நடை பெற்று வருகிறது: -    சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிப்பது -    பாரம்பரிய குருகுல முறையில் படிப்பவர்களுக்கு ஐஐடியில் இடம் -    ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பற்றி சுதந்திர தின விழாவில் பேச்சு -    அரசு வெளியிடும் விளம்பரத்தில் காந்தி படத்திற்கு மேலாகச் சாவர்க்கர் படம் இதுதான் இன்றைய அவல நிலை. அமலாக்கத்துறையை வைத்துத் தங்களுக்கு ஒத்துவராத எதிர்க்கட்சிகளின் வீடுகளில் ரெய்டு நடத்துகிறார்கள். உறவினர் வீட்டில் ரெய்டு வந்தவுடன் ஓடி வந்து கூட்டணி சேர நாங்கள் என்ன பழனி சாமியா? எங்களை மிரட்ட நினைப்பவர்கள்தான் மிரண்டு போய் இருக்கிறார்கள். இதைவிட அதிக மிரட்டல்களைப் பார்த்த இயக்கம்தான் திமுக. வழக்கம்போல தமிழ்நாடு மக்கள் உங் களுக்குத் தோல்வியைத்தான் தருவார்கள்.

மக்களின் அரசியல் தெளிவு

தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவு பெற்றவர்கள். தங்களுக்கு உண்மையாகப் பணியாற்றுபவர்கள் யார் என்று அவர் களுக்குத் தெரியும். நவீன தமிழ்நாட்டின் அனைத்து வளர்ச்சிக்கும் காரணம் யார் என்று அவர்கள் அறிவார்கள். 2021இல் வெற்றி பெற்றதுபோலவே 2026இ லும் மீண்டும் நாங்களே வெற்றி பெறுவோம். திராவிட மாடல் 2.0 ஆட்சி உருவாகும். அதற்குக் கம்யூனிஸ்ட் தோழர்கள் உடன் இருக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் களம் இறங்கினால் எப்படித் தேர்தல் வேலை செய்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஜனநாயகம் காக்கக் களத்தில் நிற்கும் கம்யூனிஸ்டுகளுக்கு என்னுடைய ரெட் சல்யூட்! இன்றைக்கு ஆட்சியைப் பொறுத்தவரை எல்லாத் துறைகளிலும் முதலிடம் என்பதை மத்தியில் இருப்பவர்கள் ஆய்வு செய்து வெளி யிட்டு வருகிறார்கள். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். வாழ்க கம்யூனிசம்! வெல்க ஜனநாயகம்!