articles

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் எம்.பி., சு.வெங்கடேசன்

மும்மொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?” என ஒன்றிய அமைச்சர் கேட்கிறார். ஏனைய பாளையக்காரர்கள் எல்லாம் அடிபணிந்துவிட்டார்கள். நாங்களும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து ஷூவை துடைத்துக் கொடுத்தோம். நீ மட்டும் இன்னும் ஏன் உரிமையை கேட்டுக் கொண்டுள்ளாய்? என்ற கேள்வியின் தொடர்ச்சி தான் இது.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான்,  கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சரே பேசுவது வெளிப்படையான மிரட்டல். 40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் உயிரிழப்பு மூலம் ரயில்வேயின் தோல்வியும், ஒன்றிய அரசின் அலட்சியமும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. நிர்வாக தோல்வியால் இனியும் உயிரிழப்பு ஏற்படுவதை அரசு உடனடியாக தடுத்திட வேண்டும்.

பெயரிட விரும்பாத இகாமர்ஸ் ஊழியர் 

தினமும் 14 மணிநேரம் பணி செய்தேன். எனக்கு பெண் குழந்தை பிறந்த போதும், அதன் பிறகும் மனைவியுடன் நேரம் செலவிடவில்லை. இப்போது நான் ரூ.7.8 கோடி சம்பளத்தில் மூத்த மேலாளராக பதவி உயர்வு பெற்றுவிட்டேன். ஆனால் என் மனைவி என்னிடம் விவாகரத்து கேட்டுள்ளார். இதனால் மனம் உடைந்துவிட்டேன்