கலீசியாவில் பிறந்த வில்ஹெல்ம் ரீச், வியன்னாவில் மருத்துவம் படித்து 23 வயதில் வியன்னா உளவியல் பகுப்பாய்வு சங்கத்தில் இளம் ஆய்வாளர்கள் குழுவில் இணைந்து சிக்மண்ட் பிராய்டின் கருத்துக்களுடன் முரண்பட்டு விமர்சித்தார்.
ரீச் தீவிரமாக உளவியல் பகுப்பாய்விலிருந்து படிப்படி யாக மார்க்சியத்தை நோக்கி நகர்ந்தவர்.
1928 இல், அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 1929 இல் சோவியத் யூனியனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள கல்வி மையங்களுக்குச் சென்றார்.சிக்மண்ட் பிராய்டின் உலகக் கண்ணோட்டம் குறித்து மாஸ்கோவில் விரிவுரை ஆற்றிய அவர் அக்கண்ணோட்டத்தை கடுமையாக விமர்சித்ததோடு, சோவியத் யூனியன் ஏற்றுக்கொள்ள வேண்டிய உளவியல் மனோதத்துவ கோட்பாட்டை வேறு படுத்திக் காட்டினார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பல உயர் மட்ட தலைவர்களை சந்தித்து உரையாடினார்.
இந்த பயணம் குறித்து அவர் எழுதிய குறிப்பில் கூட்டுப் பண்ணை திட்டம் எப்படி ஆணாதிக்க அதிகாரத்தை உடைக்கிறது என பாராட்டியுள்ளார்.சமூக மாற்றம் என்பது மனோதத்துவ பகுப்பாய்விற்கு முன்னதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அவரது அனுபவம் வலுப்படுத்தியது.
வியன்னாவுக்குத் திரும்பிய பிறகு, ஆயுதப் போராட்டத் திற்குத் தயாராகும் நோக்கில் புரட்சிகர சோசியல் டெமோக்ர டென் என்ற கட்சிப் பிரிவை நிறுவ உதவினார். மேலும் பாசிசத்தின் வெகுஜன உளவியல் குறித்து எழுதியுள்ளார்.
.