articles

img

காலத்தை வென்றவர்கள் தன்னலமற்ற மருத்துவர் பெத்துன்

தன்னலமற்ற மருத்துவ சேவையாற்றிய ஹென்றி நார்மன் பெத்துன் 1890 மார்ச் 3 அன்று கனடாவில் பிறந்தார். 1914 இல்  முதல் உலகப் போர் வெடித்த பிறகு, ராயல்  கனடியன் ராணுவத்தின் மருத்துவப் படையில்  சேர்வதற்காக படிப்பை பாதியில் நிறுத்தினார்.

திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவின் மிச்சிகனில் குடியேறி, அங்கு மருத்துவம் மற்  றும் அறுவை சிகிச்சை கல்லூரியில் பயிற்று விப்பாளராக பணியாற்றினார். இக்காலக் கட்  டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்ட பெத்துன்,  ஆபத்தான அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்  நலம் தேறினார்.

உயர் பயிற்சி பெற்ற நெஞ்சக நோய் அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்தார் பெத்துன். மருத்துவப் பராமரிப்பு மற்றும் சுகா தார சேவைகளில் தீவிர சீர்திருத்தங்களை முன்மொழிந்த இவர், இலவச கிளினிக் திறந்து  மருத்துவ சேவையாற்றினார்.

1936 இல் கனடா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் பெத்துன். ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர் வெடித்த சிறிது காலத்தில், ஸ்பானிய குடி யரசு அரசாங்கத்திற்கு சேவையாற்றினார். போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விரை வாக ரத்தம் வழங்க, நடமாடும் ரத்த மாற்ற சேவைகளை அமைத்தார். இவரது இந்த சேவை பல உயிர்களைக் காப்பாற்றியது. 

இந்நிலையில், ஜப்பானிய படையெ டுப்பின்கீழ் இருந்த சீனாவுக்குப் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு, சீனப் புரட்சியாளர் மா சேதுங் தலைமையிலான சீனக்  கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்தார். 1939 இல் ஜின் -ஜா-ஜி ராணுவ மாவட்டத்திற்கான மருத்துவ ஆலோசகராக பெத்துன் நியமிக்கப்பட்டார். பல  மாதங்களில், மேற்கு பெய்ஜிங் பகுதி முழு வதும் தற்காலிக மருத்துவமனைகளை உரு வாக்கி, தனது நடமாடும் மருத்துவக் குழுவுடன் மலைப் பகுதிகளுக்கு குதிரையில் சென்று சேவையாற்றினார்.

இடைவிடாது உழைத்ததால், பெத்துனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, 1939 நவம்  பர் 12 அன்று காலமானார். சீனாவில் உள்ள புரட்சித் தியாகிகளின் கல்லறையில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

மருத்துவத் துறையில் ஒரு தனிநபரின் சிறந்த பங்களிப்பு, வீர மனப்பான்மை மற்றும் சிறந்த மனிதாபிமானம் ஆகியவற்றை அங்கீ கரிக்கும் வகையில், சீனாவில் இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை “நார்மன் பெத்துன் பதக்கம்” வழங்கப்படுகிறது.

சீனாவின் தேசிய வீரராக அறிவிக்கப்பட்ட இவரை போற்றும் வகையில், அந்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஹென்றி நார்மன் பெத்துனின் பெயர் சூட்டப்  பட்டிருக்கிறது. மேலும், பெத்துன் நூற்றாண்டு  பிறந்த நாளன்று அவரது நினைவாக கனடா வும், சீனாவும் ஒரே நேரத்தில் நினைவு அஞ்சல்  தலைகளை வெளியிட்டன.

1972 இல் கனடா அரசாங்கம் பெத்துனை, “தேசிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கனடியன்” என அறிவித்தது. மேலும், ‘இன் மெமரி ஆப் நார்மன் பெத்துன்’ என்ற தலைப்  பில் மா சேதுங் எழுதிய கட்டுரை, சீன மக்கள்  அனைவரையும் சென்றடைந்தது குறிப்பிடத் தக்கது.