articles

img

அதிகரிக்கவிருக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கலால் வரிகளை குறைத்திடுக!

ரஷ்யாவுக்கும், அமெரிக்க-நேட்டோவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகளாலும், உக்ரேன் மீதான  ரஷ்ய ராணுவத் தாக்குதலாலும்  சர்வதேச எண்ணெய் விலை பெரிய அளவில் உயர்ந்திருக் கிறது. எண்ணெய் விலைகள் அதிகரித்து, பாரல் ஒன்றுக்கு  100 டாலர்களுக்கும் அதிகமாகியிருக்கிறது. எரி வாயு விலை கள் 62 சதவீத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இது இந்தியா வில் எரி பொருள் விலைகள் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி, அதனால் பணவீக்கத்தையும் அதிகரித்திடும். சமீப காலமாகவே மிக அதிக அளவிலான பண வீக்கம், சாமானிய மக்களின் வாங்கும் சக்தியைக் கடுமை யாகப் பாதித்திருக்கிறது. 2019 டிசம்பருக்கும் 2020 நவம் பருக்குமான காலத்தில், சில்லரை நுகர்வோர் விலை வாசிக் குறியீட்டெண் அட்டவணை அல்லது ஒருங்கிணைந்த நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் அட்டவணை (Consumer Price Index-combined) சராசரியாக 7 சத வீதத்திற்குச் சென்றிருக்கிறது. அதன்பின் அது மிதப்படுத்தப் பட்டிருக்கிறது. பின்னர் மீண்டும் 2021 மே மாதத்திற்கும் ஜூலைக்கும் இடையே மேலும் 6 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து, 2022 ஜனவரியில் மற்றுமொரு உச்சநிலைக்குச் சென்றது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 2021-22இன் கடைசி காலாண்டில் நுகர்வோர் விலைவாசி அட்டவணையில் பணவீக்க சராசரி அநேகமாக 5.7 சதவீதமாக இருந்திடும். இது ஒட்டுமொத்த 2022-23ஆம் ஆண்டிற்கு 4.5 சதவீதமாக இருந்திடும்.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காலத்தின்போது சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் புரதச்சத்து உணவுப் பொருள்களின் அதீத விலை உயர்வுகளே நுகர்வோர் விலைவாசி உயர்வுக்கு இட்டுச் சென்றது. இத்துடன் எரிபொருள் விலை  உயர்வு மற்றும் போக்குவரத்துக் கட்டண உயர்வும் இவ்வாறான உயர்வுக்குக் காரணங்களாகும்.   கச்சா எண்ணெய் விலைகளின் உயர்வும் பணவீக்கத்திற்கு இட்டுச்  சென்றது. இவையும் நுகர்வோர் விலைவாசிகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. இடையே உணவுப் பணவீக்கம் படிப்படியாகக் குறைந்தபோதிலும், 2022 ஜனவரியில் மீண்டும் நுகர்வோர் விலைவாசி அட்டவணை 6 சதவீதத்தைக் கடந்துள்ளது.

செங்குத்தாக உயர்வு

மேலும் உற்பத்தி மையங்களில் ஏற்படும் பண வீக்கத்தையே அடிப்படையில் பிரதிபலிக்கக்கூடிய   மொத்த விலைவாசிக் குறியீட்டெண் அட்டவணையும் 2021 ஏப்ரலுக்கும் 2022 ஜனவரிக்கும் இடையிலான காலத்தில்  சராசரியாக 12.6 சதவீதமாக செங்குத்தாக உயர்ந்திருப்ப தைக் காட்டுகிறது. இது, கனிமங்கள், கச்சா எண்ணெய்  மற்றும் உற்பத்திப் பொருள்களுக்கான இடுபொருட்களின் விலைகளிலும் உயர்வினை அளித்திருக்கிறது. ரூபாய்  மதிப்பின் வீழ்ச்சியும் பணவீக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் உற்பத்திச் செலவினங்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. பெரும் கார்ப்பரேட்டு கள் இப்பொருள்கள் தங்களிடம் கணிசமான அள விற்கு இருப்பில் வைத்திருப்பதால் சமாளித்துக் கொண்டாலும், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகள்,  அதிகரித்துக்கொண்டிருக்கும் உற்பத்திச் செல வினங்களால் கடுமையான நெருக்கடி நிலைமைக்கு ஆளாகியுள்ளன. உண்மையில், பலர் தங்கள் பொருள்களின் விலைகளை வரவிருக்கும் காலங்களில் உயர்த்திட இருப்பதாகக் கூறிவிட்டார்கள்.  

கச்சா எண்ணெய் விலைகள் உயர்வு, போக்குவரத்துக் கட்டணங்களிலும், உற்பத்திச் செலவினங்களிலும் உயர்வினைக் கொண்டுவருவதால் நுகர்வோர் செல வினத்தில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும். பொரு ளாதார ஆய்வறிக்கை 2022-23ஆம் ஆண்டு முழுவதுமே எண்ணெய் விலைகள் ஒவ்வொரு பாரலுக்கும் 70 முதல்  75 அமெரிக்க டாலர்களாக இருந்திடும் என்று மதிப்பிட்டி ருக்கிறது. ஆனால் இது அவர்களின் ஆசையாக இருக்க லாமே யொழிய, நடைமுறையாக இருக்கவாய்ப்பேயில்லை.

செங்குத்தான விலை உயர்வு

தற்போது ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துகொண்டிருப்பதால், பெட்ரோல் மற்றும்  டீசல் ஆகியவற்றின் சில்லரை விலைகளை உயர்த்த வேண்டாம் என்று ஒன்றிய அரசு, எண்ணெய் நிறுவனங் களைக் கேட்டுக்கொண்டிருப்பதால், அவையும் உயர்த்தாமல் நிறுத்தி வைத்திருக்கின்றன. மார்ச் 10 வந்தபின், அம்மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அறி விக்கப்பட்டபின், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளில் செங்குத்தான உயர்வு  இருக்கும் என ஒருவர் எதிர்பார்க்கலாம். இவ்வாறு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும் கூர்மையான பணவீக்கத்திற்கு இட்டுச் செல்லும்.

இத்தகைய சூழ்நிலையில் இதனையும் பயன்படுத்திக்கொண்டு அதிகரித்திடும் எண்ணெய் விலைகள் மீது கலால் வரிகளின் வடிவத்தில் மறைமுக வரிகள் மூலமாக அதிக வருவாயை ஈட்டலாம் என்று கரு திடாமல், ஒன்றிய அரசாங்கமானது மத்திய கலால் வரிகளை உடனடியாக வெட்டி விட வேண்டும். அப்போதுதான் இப்போது சர்வதேசச் சந்தையில் உயர்ந்துள்ள எண்ணெய் விலைகளுடன் ஆட்சியாளர்களும் கலால் வரிகளைச் சேர்த்தார்கள் என்றால், அவற்றை சராசரி நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாது. 2021 நவம்பரில் ஒன்றிய அரசு கலால் வரிகளை டீசலுக்கு லிட்டருக்கு 10 ரூபாயும், பெட்ரோலுக்கு லிட்டருக்கு 5  ரூபாயும் குறைத்தது. இந்த வெட்டுக்குப் பின்னர், மொத்த  கலால் வரி பெட்ரோலுக்கு லிட்டருக்கு 27 ரூபாய் 80 காசு களாகவும், டீசலுக்கு 21 ரூபாய் 80 காசுகளாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.    

மாநில அரசுகளுடன் பகிர்வதில்லை

ஒன்றிய அரசாங்கம் வரிகளை வெட்டும்போது, செஸ் வரிகளுக்கும், சர்சார்ஜ் வரிகளுக்கும் முன்னுரிமை அளித்திட வேண்டும். இந்த வரிகள் மக்களிடமிருந்து வசூலித்தபின்பு, இவற்றை ஒன்றிய அரசு மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்வது கிடையாது. அடிப்படைக் கலால் வரிகளைப் பொறுத்தவரை, இதன்மூலமாகத் திரட்டப்படும் வருவாய், 51 சதவீதம் ஒன்றிய அரசாங்கத்திற்கும், 49 சதவீதம் மாநில அரசாங்கத் த்திற்கும் பகிர்ந்துகொள்ள வேண்டும். தற்சமயம், வசூலிக்கப்படும் கலால் வரிகளில் பெரும்பாலும், பெட்ரோலுக்கு 96 சதவீதமும், டீசலுக்கு 94 சதவீதமும் செஸ் வரிகள் மூலமாகவும், சர்சார்ஜ் வரிகள் மூலமாகவுமே வசூலிக்கப்படுகின்றன.    பணவீக்கத்தின் காரணமாக எரிபொருள்களின் விலைகள் உயர்த்தப்படுமானால் அவை கோவிட் பெருந்தொற்றால் பொருளாதாரத்தின் வீழ்ச்சியின் காரணமாக வேலையிழப்புகள் மற்றும் வருமான இழப்பு களை எதிர்கொண்டுள்ள சாமானிய மக்களுக்கு, மேலும் கடுமையான முறையில் பாதிப்பை ஏற்படுத்தும். மோடி அரசாங்கம் காத்திருக்கக்கூடாது. சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலைகளின் உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்காத விதத்தில், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஏற்றப்பட்டுள்ள செஸ் வரிகள் மற்றும் சர்சார்ஜ் வரிகள் உடனடியாக வெட்டப்பட வேண்டும்.

மார்ச் 2, 2022
நன்றி: ச.வீரமணி