விலைவாசியை குறைப்போம், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என வீர வசனம் பேசி மோடி – அமித்ஷா சங் பரிவார கும்பல் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், விழிபிதுங்கும் விலைவாசி உயர்வால் மக்கள் வேத னையில் உள்ளபோது வெறுப்பு அரசியல் பேசி திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட சமைய லுக்கு தேவையான அனைத்துப் பொருட்களின் விலைகளும் விண்ணுயரப் பறந்து கொண்டிருக்கிறது. ஆனால், உழைக்கும் மக்கள் பெறும் ஊதியத்தின் உண்மை மதிப்பு சொற்பமாகவே உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை 65% அதிகரித்துள்ளது. ஆனால் உழைக்கும் மக்களின் ஊதியம் 28% மட்டுமே உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு சில பொருட்களின் விலை உயர்வு விபரங்கள்:
இவ்வாண்டு இறுதிக்குள் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதை மனதில் வைத்து மோடி அரசு சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.200 குறைத்துள்ளது. இதுவொரு ஏமாற்று வித்தை யே. அனைத்துப் பொருட்களின் விலைகளும் தாறு மாறாக அதிகரித்து வாழ்க்கைத் தரம் சரிந்து மக்கள் துயரத்தோடு இருக்கும் வேளையில், கொஞ்சம் கேஸ் விலையை குறைத்து மோடி அரசு மார்தட்டிக் கொள்கிறது.
வரியே விலையாக மாறியது
2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோலிய பொருட்களின் விலை ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய உற்பத்தி செலவு ரூ.36, டீலருக்கு செலுத்தும் தொகை ரூ. 6. ஆக மொத்தம் பெட்ரோல் விலை ரூ. 42 மட்டுமே. வரி போட்டு வரி போட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை யை 102 க்கு உயர்த்திவிட்டார்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் மோடி அரசு பெட் ரோலிய பொருட்களின் விலையை குறைப்பதில்லை.
183% எங்கே? வெறும் 83% எங்கே?
ஒரு நாட்டில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும்; ஆனால் உற்பத்தி மட்டுமே மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திவிடாது. நாட்டின் மொத்த உற்பத்தியில் ஒரு தனிநபரின் பங்கு – தனி நபர் வருமானம் எவ்வளவு – என்பதை வைத்தே மக்களுடைய செல்வ வளத்தை அளவிட முடியும். அந்த அளவுகோலில் பார்த்தால் இந்தியா 142 வது இடத்தில் இருப்பதை புரிந்துகொள்ளலாம். பிரிட்டன் 46,000 டாலர், இத்தாலி 37,000 டாலர், பிரேசில் 10,000 டாலர்; இந்தியாவோ 2600 டாலர் கள் மட்டுமே என்ற கவலையளிக்கும் நிலையில் உள்ளது. அமெரிக்கா, சீனாவை இங்கே குறிப்பிட வில்லை. 2004 – 2014 ஆண்டுகளில் நமது ஜி.டி.பி., (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 183% உயர்ந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014 – 2023 ஆகிய ஒன்பது ஆண்டுகளில் 83% மட்டுமே உயர்ந்துள்ளது. உண்மையை மறைத்து ஊரை ஏமாற்ற, மோடி பொய்யுரைத்து வருகிறார்.
அம்பானி லாபத்திற்காக வேலை பார்க்கும் மோடி
குறிப்பாக ரஷ்ய-உக்ரைன் யுத்தம் தொடங்கிய பிறகு ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண் ணெய்யை குறைந்த விலையில் இறக்குமதி செய்கிறது. இதனை அம்பானி நிறுவனம் சுத்திகரிப்பு செய்து பெட்ரோலும், டீசலுமாக அப்படியே வெளிநாடுக ளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஒரு சொட்டு பெட்ரோல் கூட இந்தியாவில் விற்பனை செய்வதில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 85.86 டாலர். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை 68.17 டாலர். ரஷ்யாவில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையின் விலையை விட 14.5 டாலர் (சுமார் 1250 ரூபாய்கள்) குறைவு. விலை குறைவாகக் கிடைக்கும் ரஷ்யா கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து இந்திய மக்களுக்கு பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் வினியோகம் செய்ய முடியும். ஆனால், மோடி அரசு அம்பானி கார்ப்பரேட் கம்பெனி கொள்ளை யடிப்பதற்கு துணை போகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள கச்சா எண்ணெய், ஒரு நாளைக்கு 19 கோடி பேரல்கள் என்று ‘வார்டெக்ஸ் கார்கோ’ விபரங்கள் சொல்கின்றன. அதாவது, ரஷ்யா வின் முதன்மையான கச்சா எண்ணெய் இறக்குமதி யாளர் இந்தியாதான். ரிலையன்ஸ் அம்பானிக்காக அதி காரத்தை பயன்படுத்தும் மோடி, நாட்டு மக்களை நடுத்தெருவில் தவிக்கவிட்டுள்ளார். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வினால், சங்கிலித் தொடர் போல, அனைத்து பொருட்களின் விலைகளும் சடசடவென உயர்கின்றன. பெட்ரோல் – டீசல் – எரிவாயு உள்ளிட்ட பொருட்க ளுக்கு மானியம் வழங்கி மக்களின் துயர் துடைக்க மறுத்து வரும் மோடி அரசு, அதானி- அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கிய கடன் சுமார் 15,00,000 கோடி ரூபாயை ரத்து செய்துள்ளது. இதிலிருந்தே இது யாருக்கான அரசு என்பதைப் புரிந்துகொள்ள முடியும். விலைவாசி உயர்கிறது, மக்கள் வேதனையில் உள்ளார்கள் என்று நாம் சொன்னால் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு வரப்போவதாக பிரதமர் மோடி மார்தட்டிக்கொள்கிறார். இதுவும் மக்களை ஏமாற்றவே!
கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம்
கடந்த ஆகஸ்ட் 15 செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவிட்டு பேசிய மோடி, ஊழலை ஒழிப்பேன் என்றார். ஆனால், கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொட ரின் கடைசி நாளன்று (முன்கூட்டி சமர்ப்பித்திருந்தால், கடுமையான எதிர்ப்பு வரும் என்பதால்) சமர்ப்பிக் கப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கை பல லட்சம் கோடி ரூபாய் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது.அதில் வெளிப் பட்டுள்ள ஊழல்களில் ஒன்று, தில்லி – குர்கான் விரைவுச் சாலை அமைப்பதில் நடந்துள்ளது. இந்த சாலைக்காக அரசு அனுமதித்த செலவு ஒரு கி.மீட்ட ருக்கு ரூபாய் 18 கோடி. ஆனால் ஒப்பந்ததாரர்கள் பெற்றது ஒரு கி.மீட்டருக்கு ரூபாய் 250 கோடி. தணிக்கை குழு பரிசீலித்த ஐந்து டோல்கேட்களில் தமிழ்நாட்டில் செயல்படும் பரனூர் டோல்கேட்டும் உள்ளது. இந்த ஐந்தில் மட்டும், சாலைக்காக செல விட்டதை விட கூடுதலாக ஒப்பந்ததாரர்கள் வசூலித்த தொகை ரூ.128 கோடிகள் ஆகும். இத்தகைய கூட்டுக் கொள்ளை அம்பலமான பிறகும், தற்போது டோல்கேட் கட்டணத்தை ஒன்றிய அரசாங்கம் உயர்த்தியுள்ளது. பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டவர்கள் இறந்த பின்னரும் சடலங்க ளுக்கு சிகிச்சை அளித்ததாக பல கோடிகள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்த லில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளன. அதிலும் பாஜகவுக்கு படுதோல்வி காத்தி ருக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த பின்னணியில்தான் மத மோதலை உருவாக்கி, மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஹரியானா, தில்லி, மராட்டியம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் மதக் கலவரங்களை உருவாக்கி மனித உயிர்களை காவு கொடுத்து வருகிறது. பருப்பு விலையை குறைக்கக் கேட்டால், வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறது மோடி அமித்ஷா சங் பரிவார கும்பல். இப்பின்னணியில், விலைவாசி உயர்வுக்கு எதி ராக, வேலையின்மைக்கு எதிராக நாடுதழுவிய அளவில் மக்களைத் திரட்டி மகத்தான இயக்கங்க ளை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகத்தில் ரயில் நிலையங்கள் உள்ளிட்டு ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்னாள் செப்டம்பர் 7 அன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் மறியல் போர் நடைபெற உள்ளது. மக்களை திரட்டுவோம் ! மறியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்!