திருச்சிராப்பள்ளி, ஜூலை 24- பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனி யார் மயமாக்க கூடாது. கூட்டுறவு வங்கிகளை மாநில கட்டுப்பாட்டில் இருந்து மாற்றக் கூடாது. கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது. மேம்பட்ட வாடிக்கையாளர் சேவையை உறுதிப்படுத்த வேண்டும். பொதுத் துறை வங்கிகளை பாதுகாக்கவும், தனியார் வங்கிகளை தேசியமயமாக்க வலியுறுத்தியும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் வங்கி ஊழியர்கள் தமிழகத்தின் நான்கு முனை களிலிருந்து புறப்பட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தனர். சென்னையில் இருந்து மாநிலச் செய லாளர் எஸ்.பிரேமலதா, கோவையில் இருந்து எஸ்.சிவலிங்கம், ஓசூரில் இருந்து எஸ்.அரி ராவ், தூத்துக்குடியில் இருந்து ஆண்டோ கால்பர்ட் ஆகியோர் தலைமையில் கடந்த ஜூலை 19 அன்று பிரச்சாரத்தை துவங்கிய இந்த குழுக்கள் 4000 கிலோமீட்டர் கடந்து சனிக் கிழமை திருச்சியில் சங்கமித்தனர். இக்குழுவினருக்கு திருச்சியில் சிஐடியு புறநகர் மற்றும் மாநகர குழுக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வங்கி ஊழியர்களின் 4000 கி.மீ. பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம் உறையூர் குறத்தெரு வில் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு தலைவர் எஸ். சுனில்குமார் தலைமை வகித்தார். இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மாநில பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார், அகில இந்திய தலைவர் சி.ஜெ. நந்தகுமார், ஆலோசகர் டி. தமிழரசு, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் எஸ்.ரெங்கராஜன், சிஐடியு மாநில தலை வர் அ.சவுந்தரராசன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் பேசு கையில், “ஒன்றிய அரசு பொதுத்துறை நிறு வனங்கள் மட்டுமின்றி காடு, மலை, நிலங்கள், வங்கி என அனைத்தையும் விற்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகிறது. இதனை முறியடிக்க வேண்டும். இந்த பிரச்சாரம் இன்னும் பரவலாக வேண்டும்” என்றார். ஆலோசகர் டி.தமிழரசு பேசுகையில், “27 பொதுத்துறை வங்கிகள் 12 வங்கிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கிளைகள் மூடப்பட்டுள்ளன. மாநில கூட்டுறவு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வங்கிகளை கொல்லைப்புற வழியாக, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப் பார்க்கின்ற னர். இதனை தடுக்க வங்கி ஊழியர்கள் போராட வேண்டும். மக்களிடம் செல்லாத எந்த இயக்க மும் வெற்றி அடையாது. எனவே இதனை மக்க ளிடையே விரிவாக எடுத்துச் செல்வோம்” என் றார். அகில இந்திய தலைவர் சி.ஜே.நந்தகுமார் பேசுகையில், “ஒன்றிய அரசு மக்களுக்கு அறி விக்கும் சலுகைகளை பொதுத் துறை போன்ற அரசுத்துறை நிறுவனங்களால்தான் செயல் படுத்த முடியும். அனைத்தையும் தனியார் மய மாக்கினால் செயல்படுத்த முடியுமா? மோடி ஆட்சி நடப்பதே 5 மிகப்பெரிய தேசிய அளவி லான கார்ப்பரேட் ஜாம்பவான்களை வளர்க்கத் தான். அந்த ஜாம்பவான்கள் அம்பானி, அதானி, டாடா, பிர்லா, சுனில்மிட்டல் ஆகியோர்தான். இதனால்தான் நமது நாட்டிற்கு முதலீடு கிடைப்பதில்லை. இதற்கு மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவே முக்கிய காரணம்.
இந்தியா, உலக அளவில் பொருளாதாரத் தில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆனாலும் விவசாயிகள், தொழிலாளர்கள் தொடர்ந்து ஏழையாகவே உள்ளனர். பொதுமக்கள் வாங்கும் திறனும், வேலையில்லாமலும் உள்ள னர். இதற்கு ஒன்றிய அரசின் கொள்கைதான் காரணம். இதனை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது” என்றார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் பேசுகையில், “நாட்டுடைமையாக் கப்பட்ட வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என ஒன்றிய அரசு கூறுகிறது. தனியார் வங்கி கள் திவால் என்று அறிவித்தால் ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் சேமிக்கும் பணம் அரசின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்பட்டால்தான் அந்த நாடு முன்னேற முடியும். பொதுத்துறை மூலம் மக்களுக்கு வழங்கும் சலுகைகள் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வும், பொருளாதாரத்திற்கும் ஓர் உந்துதலாக இருக்கும். ஆகவே பொதுத்துறையை காப் பாற்ற மக்கள் ஒன்றிணைந்து போராட வேண் டும். தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ஒன்றிணைத்து ‘தமிழ்நாடு வங்கி’ என்ற ஒன்றை உருவாக்க வேண்டும். பொதுத்துறையை காப்பாற்ற இவர்கள் மேற்கொண்டுள்ள பிரச்சாரப் பயணம் இந்த சமூகத்தை காப்பாற்றுகின்ற பயணம்” என்றார். பின்னர் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் சி.பி.கிருஷ்ணன், என்.ராஜ கோபால், டி.ரவிக்குமார் ஆகியோர் உரை யாற்றிய தலைவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். பிரச்சாரப் பயணத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் கலைக்குழுவின ருக்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் நினைவுப் பரிசு வழங்கினார். முன்னதாக ஹேமந்த்குமார் வரவேற்றார். திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழி யர் சங்க பொதுச் செயலாளர் டி.ரகுராமன் நன்றி கூறினார்.