articles

img

சேலம் உருக்காலை வளாகத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் மையம் அமைத்திடுக!

சேலம் உருக்காலை வளாகத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் மையம் அமைத்திட வேண்டும் என சிஐடியு மாநில நிர்வாகக்குழு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு கூட்டம் சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன், மாநில பொருளாளர் மாலதி சிட்டி பாபு, மாநில நிர்வாகிகள் ஆர்.கருமலையான், கே.திருச் செல்வம், எஸ்.கண்ணன், ஆறுமுக நயினார், டி.உதய குமார் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

கூட்டு பேர உரிமையை தடுக்கக் கோரியும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திட்ட பணிகளில் ஈடுபடும் சத்துணவு அங்கன்வாடி ஆஷா பணியாளர்கள், மக்களை தேடி மருத்துவ பணியாளர் கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக உழைக்கும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டம் குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு சக்கரை ஆலையில் 150க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலை யில் ஆலை நிர்வாகம் இதர ஆலை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த முயற்சித்தது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைமை ஏற்பட்டது. தமிழக அரசு இப்பிரச்சனையில் தலை யிட்டு தினக்கூலி தொழிலாளர்களின் பணி பாது காப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வெண்டிங் கமிட்டி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி களில் சாலையோரங்களில் வியாபாரம் செய்பவர்க ளைக் கணக்கெடுத்து பதிவு செய்து அடையாள அட்டை வழங்கப்பட்டு வெண்டிங் கமிட்டிக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. தற்போது ஆளும் கட்சியினர் தலை யிட்டு தேர்தல் விண்ணப்பங்கள் கூட மறுக்கப்படு கின்றன. தமிழக அரசு ஜனநாயகப் பூர்வமாக தேர்தல் நடத்துவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்க ளுக்கு 01.01.2022 முதல் வழங்க வேண்டிய அகவிலைப் படியை, நஷ்டத்தை கணக்கு காரணம் காட்டி வழங்க மறுப்பது, தற்காலிக ஊழியர்களுக்கு வாரிய விலைப் பட்டியல் அடிப்படையில் வழங்க வேண்டிய ஊதி யத்தை குறைத்து வழங்குவது ஆகியவற்றை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பிறப்பிக்கப் பட்ட இடைக்கால தீர்ப்பினை அமல்படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும். மின்வாரிய ஊழியர்களுக்கு 01.12.2017 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும். 56,000 காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பொதுப்பயன்பாட்டிலுள்ள மின் இணைப்பை விதிப்படி ஐ.ஏவிலிருந்து ஐடிக்கு மாற்றி யதை கைவிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்த ரப்படுத்த வேண்டும்.

பஞ்சாலைகளை திறந்திடுக

தமிழகத்தில் 35 மாதங்களுக்கு மேலாக இயக்கப் படாமல் உள்ள தேசிய பஞ்சாலைகளை தமிழக அரசு ஒன்றிய அரசின் அனுமதி பெற்று இயக்கி, தொழிலா ளர்களின் குடும்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடப்பட்ட தமிழக அரசுக்கு சொந்த மான கூட்டுறவு நூற்பாலைகளை திறந்து தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். செயல்படும் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்க ளுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணி புரிந்து வரும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்து வதற்கு மாறாக இடைத்தரகர்களின் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை கைவிட வேண்டும். தமிழகத்தில் முந்திரி தொழிலில் சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகளின் தவறான தொழிற்கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள்கையினால் முந்திரி ஆலை மூடல்கள் அதிகரித்து வருகிறது. தொழிலை பாதுகாத்தி டவும், தொழிலாளர்களை பாதுகாத்திடவும் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவ னத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை பறித்திடும் வகையில் ஊழியர்கள் எந்த  சங்கத்தில் இருக்கின்றனர் என்ற விபரம் சேகரிக்கும் போக்கு கண்டனத்திற்கு உரியதாகும். மேலும் கரூர் கம்பெனி என்ற பெயரில் ஊழியர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை என தமிழக அரசு எடுத்திட வேண்டும்.

ஐடி ஊழியர்களை பாதுகாத்திடுக!

உலகப் பொருளாதார மந்தத்தை காரணம் காட்டி ஐடி ஊழியர்களை சட்டத்திற்கு புறம்பாக நிர்பந்தப் படுத்தி ராஜினாமா செய்யப்படுவதை கண்டித்து கடந்த இரண்டு மாத காலமாக பல்வேறு ஐடி மற்றும் ஐடி சார்ந்த நிறுவனங்கள் தொழிலாளர் சட்டத்திற்கு புறம்பான ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக VIRTUSA, ATOS, HCL, INFOSYS போன்ற ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை தானாகவே ராஜினாமா செய்ய மிரட்டி வருகின்றனர். ஊழியர்கள் நிர்பந்தப்படுத்தி ராஜி னாமா செய்யாவிட்டால் அடுத்த பணிக்கு செல்லும் வாய்ப்பை சிதைத்து விடுவோம் என்று மிரட்டப்படுகின்றனர். ஐடி ஊழியர்கள் தங்களுடைய குடும்பத்தின் பொருளாதார தேவையை மற்றும் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு இத்தகைய மிரட்ட லுக்கு வேறு வழி இன்றி பலியாகின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் உயர்ந்து இருந்தாலும் ஊழி யர்கள் தங்கள் நிறுவனத்தில் குரல் அற்றவர்களா கத்தான் இருக்கின்றனர் என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இத்தகைய நிர்பந்தப்படுத்தி ராஜினாமா செய்யும் முறை இந்திய தொழிற் தகராறு சட்டத்திற்கு எதிரானதும் நியாயமற்றதும் ஆகும். இத்தகைய ஆட் குறிப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும் நிறுவ னங்களை கண்டிப்பதோடு தமிழக அரசு இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இந்திய அரசானது 2019ஆம் ஆண்டில் உத்தரப்பிர தேசம் மற்றும் தமிழகத்தில் தலா ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் மையங்களை (Defence Indus trial Corridors) அமைத்திட முடிவெடுத்தது. தமிழ கத்தில் இந்த இரண்டு திட்டங்களும் கொண்டு வரப்பட் டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் மையங்களை அமைத்திட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய்பட் சமீபத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை யில் தமிழகத்தில் சமீபத்தில் ரூ.3,847 கோடி அளவில் முதலீடுகளை ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 53 புதிய நிறுவனங்கள் சுமார் ரூ.11,794 கோடி அளவில் புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்க ளும் ஏற்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பிற்கான அடித்தளங்கள் மிகுதியாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் மின்சாரம், நீர் வசதி, சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்கு வரத்து உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் நிறைந்துள் ளது. குறிப்பாக 1500 ஏக்கர் நிலம் மற்றும் அனைத்து  உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ள சேலம் உருக் காலை வளாகத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியோடு சேலம் உருக்காலை ஸ்டெயிலஸ் ஸ்டீல் பயன்பாடா னது தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற் பத்திற்கும் ஏதுவாக இருக்கும். சமீபத்தில் தமிழக அரசு கோவை மாவட்டம் சூலூர் அருகில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் மையம் துவங்கிட 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியை துவக்கி யுள்ளது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் சேலம் உருக்காலை வளாகத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் துவங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

ஏற்கனவே சேலம் உருக்காலையை தனியார்மய மாக்கிட ஒன்றிய அரசு மேற்கொண்ட முடிவினை, மாவட்ட தொழிற் வளர்ச்சி வேலை வாய்ப்பு பொதுத் துறை பாதுகாப்பு அடிப்படையில் கைவிட வேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறோம். கூடுதலாக சேலம் உருக்காலை வளாகத்தில் பாது காப்பு உற்பத்தி மையம் அமைப்பது சேலம் மாவட்ட தொழிற் வளர்ச்சிக்கும், நிலம் கொடுத்தோர் குடும் பங்கள் உள்ளிட்ட வேலை வாய்ப்பிற்கும் உறுதுணை யாக அமையும் என சிஐடியு மாநில நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் தொழிற் சங்கம் தொடங்கியதற்காக பழிவாங்கும் அடிப்படை யில் பணிநீக்கம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுக ளுக்கு மேலாக வேலையின்றி தவித்து வரும் 4 தோழர் களுக்கு மீண்டும் பணி வழங்கிட நடவடிக்கை மேற் கொள்ளவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நமது சங்கத்தை அங்கீகரித்து பேச்சு  வார்த்தை நடத்திட வேண்டும் என்றும் நிரந்தரத் தன்மையுள்ள பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்க ளை நியமிக்கக் கூடாது என்றும் 65ஆயிரம் கோடி பொருட்செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்ப டையில் நிரந்தர தொழிலாளர்களை நியமிக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசை சிஐடியு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு வலியுறுத்து கிறது.

தமிழக அரசிற்கு சொந்தமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இ.சேவை மையங்களில் பணிபுரியும் டேட்டா என்ட்ரி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.26,000/- தொழிலாளர் சட்ட உரி மைகள் பலன்கள் முழுமையாக அமல்படுத்திட, அரசு மையங்களை மூடுவதை தவிர்த்து பொது மக்களுக்கு சேவையைஅதிகரிக்க வேண்டும் என்று சிஐடியு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு, மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி களுக்கும், தோட்டத் தொழிலாளர்களுக்கும் அறிவித்த  குறைந்த பட்ச  ஊதிய உத்தரவின் மீது நிறுவனங்கள் நீதிமன்றத்தில் தடைவாங்கி உள்ளதை தமிழக அரசு  உடனடியாக தலையிட்டு நீதிமன்றத்தில் இந்த தடையை ரத்து செய்திட கேட்டுக்கொள்கிறோம்.