“நியூஸ் கிளிக்” இணைய இதழை மோடி அரசாங் கம் சீல் வைத்து முடக்கியுள்ளது. அதன் ஆசி ரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் மனித வள மேம்பாடு அலுவலர் அமித் சக்கரவர்த்தி கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமித் சக்கரவர்த்தி மாற்றுத் திறனாளி என்பது குறிப்பி டத்தக்கது. ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் முக்கியத் தூண். முதலாளித்துவ ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து ஆளும் வர்க்கங்களிடமிருந்துதான் வருகிறது. அவர் கள் வகுத்த எல்லைக்கோட்டைத் தாண்டும் பொழுது ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்க ஆளும் வர்க் கங்கள் தயங்குவது இல்லை. நியூஸ் கிளிக் முடக்கம் மீண்டும் ஒரு முறை அதனை வெளிப்படுத்துகிறது. நியூஸ் கிளிக்குக்கு நேர்ந்த அநீதி வேறு எந்த ஒரு அச்சு அல்லது காட்சி ஊடகத்துக்கும் வரலாம்! எனவே தான் இந்த பாசிச நகர்வுகளுக்கு எதிராக வலுவாக குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
அடிபணிந்த ஊடகங்களும் எதிர்த்து நின்ற ஊடகங்களும்
2014இல் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பின்னர் ஊட கங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்தன. குறிப்பாக 2019க்கு பின்னர் இந்த தாக்குதல்கள் பன்மடங்கா யின. நாட்டின் வளர்ச்சியில் பா.ஜ.க. அரசு எதுவும் சாதிக்க இயலாத சூழல் உருவான பொழுது, அது பற்றிய உண்மைகள் மக்களிடம் செல்வதைத் தடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது. மறு புறத்தில் “இந்துத்துவா ராஷ்டிரா” அமைக்க துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சும், தனது கருத்தாக்கத்தை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டும் என எண்ணியது. இதன் விளைவாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் கடு மையாக மிரட்டப்பட்டன. ஊடகங்களின் உள்ள டக்கங்களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. இதற்காக சலுகைகள்/ மிரட்டல்கள்/ ரெய்டு கள் என பல வழிகள் கையாளப்பட்டன. இதன் விளை வாக பெரும்பாலான ஊடகங்கள் பா.ஜ.க. ஆட்சியின் ஆதரவு ஊதுகுழல்களாக மாறின. இது தமிழ் உட்பட அனைத்து மொழி ஊடகங்களுக்கும் பொருந்தும். எங்கு இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லையோ அங்கு அந்த ஊடகங்களே விலைக்கு வாங்கப்பட்டன. என்.டி.டி.வி. அதானி குழுமத்துக்கு இப்படித்தான் கை மாறியது.
இந்தப் பின்னணியில்தான் அரசை விமர்சிக்கிற, அம்பலப்படுத்துகிற சில இணைய இதழ்கள் தோன் றின. அரசு ஆதரவு ஊடகங்கள் மறைத்த பல விஷயங்க ளையும்; கேட்கத் தயங்கிய அல்லது பயந்த, பல கேள்வி களையும் இந்த இணைய ஊடகங்கள் எழுப்பின. அவற்றில் நியூஸ் கிளிக்/ தி வயர்/ ஸ்க்ரால்/ நியூஸ் லாண்டரி/ குயிண்ட்/ ஆகிய இணைய இதழ்களும் தைனிக் பாஸ்கர் போன்ற அச்சு ஊடகங்களும் குறிப்பி டத்தக்கவை. இந்த இணைய இதழ்களில் ‘நியூஸ் கிளிக்’ தனி இடம் பெற்றது. ஏனெனில் அது பெரும்பாலும் இடதுசாரிக் கருத்துகளை பிரதிபலித்தது. நியூஸ் கிளிக் ஊடகத்தை நிறுவியவர்களுக்கு வணிக நோக்கம் இல்லை. அதில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களும் மிகவும் ‘ஈர்க்கத்தக்க’ ஊதியத்தைப் பெறவில்லை. அவர்கள் இந்த இதழில் பணியாற்றியதற்கு முக்கியக் காரணம் சமூ கத்தின் மீது இருந்த அக்கறை தான்! இந்த அக்கறை தான் பா.ஜ.க. அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரி யத்தை அளித்தது.
நியூஸ் கிளிக் இதழை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவுதான்! சமீப காலமாகத்தான் நியூஸ் கிளிக், இந்தி மொழியில் தனது செய்திகளை வெளியிடத் தொடங்கியது. எனினும் இந்த இதழ்கள் எழுப்பும் கேள்விகள் மிக ஆழமான தாக்கத்தை உருவாக்கின. இது ஆட்சியாளர்களை மிரள வைத்தது. மிரட்டிப் பணிய வைக்க முடிய வில்லை; இவர்களை விலைக்கு வாங்கவும் முடிய வில்லை. எனவேதான் சீன ஆதரவு இதழ் என்று தேச விரோத முத்திரை குத்தி, நியூஸ் கிளிக் இதழை பாஜக அரசு முடக்கியுள்ளது.
தில்லி காவல் துறையின் கேள்விகள்!
நியூஸ் கிளிக் மீது கொடூரமான உபா (UAPA) சட்டத் தின் கீழ் “சதித் திட்டம் வகுத்தல்(120பி); மதம்/ இனம் அடிப்படையிலான வேறுபட்ட பிரிவினரிடையே பகைமை உருவாக்குதல்(153ஏ); மற்றும் ஒற்றுமையைப் பராம ரிப்பதற்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை எதுவும் நியூஸ் கிளிக் இதழுக்கு பொருந்தாது என்பதை அனை வரும் அறிவர். எனினும் ஏன் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன?
தில்லி காவல்துறையின் விசாரணையில் கேட் கப்பட்ட கேள்விகள் இதனை தெளிவாக்குகின்றன:
• “நீங்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டசெய்திகளை வெளியிட்டீர்களா?”
• “விவசாயிகள் போராட்டம் குறித்து செய்திகளை வெளியிட்டீர்களா?”
• “அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளை ஏன் முன்வைத்தீர்கள்?”
• “வெளிநாடுகளுக்கு தொலை பேசியில் பேசினீர்களா?”
• “கோவிட்19 குறித்து அரசுக்கு எதிராக ஏன் எழுதினீர்கள்?”
• “வடகிழக்கு மதக்கலவரங்கள் பற்றி என்ன எழுதினீர்கள்?”
இந்த பிரச்சனைகள் அனைத்துமே அரசுக்கு எதி ராக எழுப்பப்பட்டவை. எனவே இந்த விசாரணைக ளின் முக்கிய நோக்கம் அரசுக்கு எதிரான குரலை ஒடுக்குவதுதான்! தனது ஆட்சிக்கு எதிராக எவரும் சுட்டு விரலைக் கூட நீட்டக்கூடாது என மோடி அர சாங்கம் எண்ணுகிறது.
ஏன் இந்த பத்திரிகையாளர்கள்?
அமித்ஷாவின் தில்லி காவல்துறையினர் வன்மத்து டன் விசாரித்த சில பத்திரிகையாளர்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகிறது. பிரபீர் புர்காயஸ்தா: இவர் மிகச்சிறந்த இடதுசாரி செயற்பாட்டாளர். அறிவியல்/ நவீனத் தொழில் நுட்பம்/ சர்வதேச நிகழ்வுகள்/ உக்ரைன்- ரஷ்யா போர் ஆகி யவை குறித்து இவரது கட்டுரைகள் பீப்பிள்ஸ் டெமாக் ரசி மற்றும் ஆங்கில மார்க்சிஸ்ட் இதழில் வெளிவரு கின்றன. நியூஸ் கிளிக் இணைய இதழை நிறுவியவர். மாற்று ஊடகங்களில் தனக்கென ஒரு இடத்தை நியூஸ் கிளிக் பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர். அபிசர் சர்மா: இவர் நியூஸ் கிளிக் இதழ் மூலம் அநேகமாக தினமும் காணொலி மூலம் நடப்பு அரசியல் செய்திகளை வெளியிடுபவர். 2008/2018 இரு முறை ராம்நாத் கோயங்கா விருதை பெற்றவர். “ரெட் இங்க்” விருதை 2017ஆம் ஆண்டும், இந்தி அகாடமி விருதை 2018ஆம் ஆண்டும் பெற்றவர். மற்ற ஊடகங்க ளில் வெளிவராத செய்திகளை மாறுபட்ட கோணத்தில் தருபவர். இவரது யூ டியூப் ஊடகத்தை 30 லட்சம் பேர் காண்கின்றனர். பரஞ்சோய் குஹா தாகுர்தா: இவர் புகழ் பெற்ற “எக்னாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி” ஆசிரியராக பணியாற்றியவர். இவரது யூ டியூப் காணொலியை 13 லட்சம் பேர் பார்க்கின்றனர். ரபேல் ஊழல் குறித்து பல ஆதாரங்களுடன் புத்தகம் வெளியிட்டுள்ளார். அதானி ஊழல் குறித்து பல உண்மைகளை தொடர்ந்து வெளி யிட்டு வருகிறார். பாஷா சிங்: பெண் பத்திரிகையாளரான இவர் பல் வேறு மக்களின் போராட்டங்களின் பொழுது களத்துக் குச் சென்று உண்மைச் செய்திகளை வெளியிடுபவர். விவசாயிகள் போராட்டத்தின் பொழுது மிகவும் ஆழ மாக அவர்களிடையே இருந்து அவர்களின் எண்ணங் களை வெளியிட்டவர். ஊடக உலகில் இன்று செயல் படும் பெண் பத்திரிகையாளர்களில் மிகவும் தைரிய சாலிகளில் ஒருவர். இவரது காணொலிகளும் மிகவும் பிரபலமானவை!
சொகைல் ஹாஷ்மி: சப்தர் ஹாஷ்மியுடன் இணைந்து “சஹமத்” அமைப்பை நிறுவியவர். நீண்ட கால செயற்பாட்டாளர். சமீபத்தில் பத்திரிகையாளர் நிலஞ்சன் முகோபாத்யாயுவுடன் இணைந்து இவர் நடத்திய காணொலிப் பேட்டியில் பிரதமர் மோடிக்கு வரலாறு பற்றி எள்ளளவும் தெரியாது என விமர்சித்து இருந்தார். உர்மிளேஷ்: மிகவும் மூத்த பத்திரிகையாளரான இவர் நியூஸ் கிளிக் இதழில் காணொலி மூலம் பல முக்கியச் செய்திகளை முன்வைப்பவர். உத்தரப்பிர தேசத்தில் யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட மக் களை தன் பின்னால் பா.ஜ.க. அணி திரட்டுவதன் மூலம் வெற்றி பெறத் திட்டமிடுகிறது என்பதை முதலில் கணித்தவர். தற்போதைய சட்டமன்ற தேர்தல்களில் சிவராஜ் சௌகான்/ வசுந்தர ராஜே சிந்தியா/ ராமன் சிங் ஆகியோரை பா.ஜ.க. தலைமை ஓரம் கட்ட முனைந் துள்ளது என்பதையும் அம்பலப்படுத்தியவர். இவரது கட்டுரைகள் இந்து/ எக்ஸ்பிரஸ் ஆகிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. அனிந்தோ சக்கரவர்த்தி: இவர் பொருளாதார நிகழ்வுகள் குறித்து நியூஸ் கிளிக் இதழில் காணொலி களை வெளியிடுபவர். மிகவும் சிக்கலான அரசியல் பொருளாதார நடப்புகளை மிக எளிதாக ஆங்கிலத்தி லும் இந்தியிலும் காணொலிகளாக வெளியிட்டு வந்தார். இந்தியப் பொருளாதாரத்தை மோடி அரசு எப்படிச் சிதைத்துள்ளது என்பதை இவரது காணொலி கள் அம்பலப்படுத்தின.
இத்தகையவர்களையும் இவர்கள் பணியாற்றும் நியூஸ் கிளிக் இதழையும் முடக்க பா.ஜ.க. அரசு முனை வதில் எதுவும் ஆச்சரியம் உள்ளதா? ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொள்கைகளுக்கு எதிராக வலுவாக கருத்தாக்கத்தை முன்வைப்பதாலும் அத னால் தாக்கம் உருவாகிவருதாலும்தான் நியூஸ் கிளிக் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பிரபீர் புர்காயஸ்தா ஏற்கெனவே 1975 அவசர நிலை காலத்தில் 18 மாதங்க ளுக்கு மேல் சிறையில் இருந்தவர். இத்தகைய பய முறுத்தல்கள் மூலம் பணியவைக்க முடியும் என பா.ஜ.க. நினைத்தால் அது இயலாத ஒன்று. எனினும் அரசு எதிர்ப்பு ஊடகங்களை முடக்க முனைவது ஆட்சி யாளர்கள் பயம் கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்ப தையே குறிக்கிறது. அதிகாரம் போய்விடுமோ எனும் எண்ணம் ஆளும் வர்க்கங்களுக்கு வரும் பொழுது அவர்களை பாதுகாக்கும் அரசியல் இயக்கம் பாசிசப் பாதையை தேர்வு செய்யும் என்பதற்கு பல உதார ணங்களை வரலாறு கண்டுள்ளது.